August 10 2016

From Nithyanandapedia
Revision as of 22:18, 21 August 2020 by Rajan (talk | contribs)
Jump to navigation Jump to search

Title

Take a U-Turn to Enlightenment

Link to Video:


Description:

Paramahamsa Nithyananda decodes the sacred secrets of 5th sutra of Kena Upanishad in the Nithya Satsang of 10th August 2016 – leading us to take a U-turn to Enlightenment, taking us to the right direction ….our senses to look in. “Not through which the words, visualization can describe but the Source from which the visualization and verbalization gets life. IT cannot be revealed by the visualization and verbalization, but what is THAT which reveals your visualization and verbalization. This is the subject for MANANA, subject to be meditate.” Decoding the beauty of Samskrit coded in this verse, Swamiji reveals – "speech and verbalization, all this put together is called KARANA. Manaḥ, mind which is the base on which all this is dancing, if you are soaked in the dance of all these senses, you will miss the power which is empowering all these KARANAS. The moment you looking towards the SOURCE, which makes you experience the Karanas and experiences through the KARANAS, the Karana dissappears into KĀRAṆA (Source, Cause). The sacred truth need to be decoded from this verse – Enlightenment is not difficult, it is just change of direction - U-TURN. The man who stands and shows you the board, U-TURN is GURU. He tells in such a way, all your KARANAS start listening, that’s all. Because he has mastered all his KARANAS, he can command all your karanas. Only a person who has mastered his karanas can say about turn, can say U-TURN. YOU-TURN is U-TURN." 5th verse of Kena Upanishad for Pure Questioning: yad-vācānabhyuditaṁ yena vāgabhyudyate tadeva brahma tvaṁ viddhi nedaṁ yadidamupāsate || 5 || That, which speech does not illumine or reveal, but by which the speech is illumined or revealed and expressed—you must know That alone as Brahman, the Absolute existence, and not what people worship and cherish here as this finite, limited object. Watch, share and like the video's and Subscribe to our channel to be notified of the next upload. click http://bit.ly/20j90wr to subscribe. Website and Social Media: http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda

Tags:

Paramahamsa Nithyananda, Nithyananda, Kena Upanishad, Kenopanishad, Chakshu Defined, manana, Vishnu, Vizualization, Brahma, verbalization, Veda, Shiva, Sadashiva, Thirumoolar, have you had Inner Awakening, Outer world, Inner Awakening, Kārana, Karana, Jnanendriya, Karmendriya, Brahman, Absolute Existence, Nirvikalpa Samadhi, U-Turn To Enlightenement, Guru Defined

Transcript:

nithyānandeśvara samārambhām nithyānandeśvari madhyamām | asmat āchārya paryantām vande Guru paramparām ||

I welcome all of you with My love and respects. I welcome all the Devotees, Disciples, Samajis, Satsanghis, SriMahants, Mahants, Visitors, Viewers, sitting with us through Nithyananda TV, Facebook live, YouTube live, two-way video conferencing, having Nayana Deeksha. I welcome all of you with My love, and respects.


Let me decode some more sacred truths:


na tatra cakṣurgacchati na vāg gacchati no manaḥ

na vidmo na vijānīmo yathaitadanuśiṣyāt |

anyadeva tadviditādatho aviditādadhi

iti śuśruma pūrveṣāṁ ye nastad vyācacakṣire || 3 ||


Recite along with me.


na tatra cakṣurgacchati na vāg gacchati no manaḥ

na vidmo na vijānīmo yathaitadanuśiṣyāt |

anyadeva tadviditādatho aviditādadhi

iti śuśruma pūrveṣāṁ ye nastad vyācacakṣire || 3 ||


Listen, there’s some more sacred secrets I want to decode from this great sutra. Let me read out the translation for you and then I will decode.

Where the eyes goes not, the speech goes not, nor the mind, and intellect, we do not know, we do not understand, how That can be taught, It is distinct from the known. Means, objective, it is far beyond man’s finite objective nature that is what the mind, eyes, ears or speech, the senses can perceive. And It is beyond the unknown, as it can be known by the man’s divine, infinite, subjective nature. Thus, we have heard from the ancient masters who revealed and explained That to us.


Listen, eyes which can see and the eyes which can visualize, both together is called chakshu in Sanskrit. Visualization, verbalization both cannot reach it. That is why the beautiful story, actually Brahma is verbalization, Vaak, Veda. Vishnu is Visualization, celebration, energy, Lakshmi, wealth, but both cannot find Shiva. One goes down, one goes up, both cannot find Shiva. Both cannot experience, both does not know.

It is distinct from the known and it is beyond the known and unknown, thus we have heard from the ancient masters who revealed and explained That to us.

Please understand, Upanishad is saying somebody is ancient. It is like, it can’t be commented or interpreted, very funny. Upanishad, the oldest revelation says, ancient masters told us. It is only Sadashiva, trying to make us understand, the truth is much more ancient than the person, who is spelling it out. The truth is more ancient than the person who is verbalizing in this form. Whoever has caught this frequency, understand, this Upanishad gets revealed in minds which is vibrating in certain frequency.

Truths are ancient than the person through whom it is vibrated. Truths are ancient than the person to whom it is revealed. Truths are ancient than the person through which it is spelled out. Truths are ancient than the person through whom it is manifested. Just to give the authority to the truths, just to give the authority to the truths, the Upanishads declare – we heard from the ancient who revealed and explained That to us.”

I will enter into the next verse, because the next verse is connected, that will help you to decode this verse also, now we are in the 3rd and 4th verse of the Kenopanishad. If I explain the 5th verse, you will understand, you will be able to have, more sacred truths decoded, from 3rd and 4th. I will recite, please recite along with me:


yad-vācānabhyuditaṁ yena vāgabhyudyate

tadeva brahma tvaṁ viddhi nedaṁ yadidamupāsate || 5 ||

yad-vācānabhyuditaṁ yena vāgabhyudyate

tadeva brahma tvaṁ viddhi nedaṁ yadidamupāsate || 5 ||


The translation:

That which speech does not illumine or reveal, but by which the speech is illumined or revealed and expressed, you must know That alone as Brahman, the Absolute Existence, and not what people worship and cherish here as this finite, limited object.

Listen. That which speech does not illumine or reveal, but by which the speech is illumined or revealed and expressed, you must know That alone as Brahman, the Absolute Existence, and not what people worship and cherish here as this finite, limited object.

If you read, third, fourth, fifth, all three verses together, only then certain sacred truths can be decoded. Now I will decode them, listen.

Not through which the words, visualization can describe, but— the Source from which the visualization and verbalization itself gets life. Listen, it cannot be revealed by the visualization and verbalization, but — what is That reveals even visualization and verbalization to your perception. Listen, this is the most important truth you need to meditate, this is the subject for MANANA to embody the state of Nirvikalpa Samadhi, this is supposed to be meditated.


Listen. There is a beautiful verse by Thirumoolar:

ponnai maraithathu ponnani booshanam, ponnil marainthana ponnani booshanam;

thannai maraithathu than karanangale; thannil marainthathu than karanangale;

marathai maraithathu mamatha yaanai, marathil marainthathu Mamatha Yaanai;

parathai maraithathu paar-muthal-bootham; parathil marainthathu par-muthal-bootham

I’ll translate. The senses, jnanendriya and karmendriya cannot show you the Self, but, if you start looking – what makes you experience, your senses, that Source is Self.


ponnai maraithathu ponnani booshanam, ponnil marainthana ponnani booshanam


If you see the beauty of the jewelry, you will miss, it is gold for a second. If you see the gold, the visual presentation of the jewelry will be lost for a second. Understand, if you see the visual beauty of the jewelry, for a moment, when you are enjoying the beauty of the jewelry, you will forget it is gold. If you remember, the beauty of the gold, you will forget the form it is in. Seller sees the gold, buyer sees the jewelry. Seller sees the gold, buyer sees the jewelry.


ponnai maraithathu ponnani booshanam, ponnil marainthathu ponnani booshanam;

thannai maraithathu than karanangale; thannil marainthathu than karanangale


Jnanendriya and Karmendriya and mana put together, is called Karaṇa. Listen carefully, your eyes which can see and which has the ability to visualize; your ears which can listen, which has the ability to process whatever you listen, the ten things you listened at different times, you can put them together, cut paste, do edit and you can verbalize something on your own; the ‘Vaak’ which can create words, and spell it out or create words and swallow it, speech and verbalization; all these put together is called KARAṆA.

‘Mana’ which is the base on which all this is dancing, listen, if you are soaked in the dance of all this, as long as you are soaked in the dance of all this senses, you will miss the power which is empowering all these KARAṆAS. And I tell you, the moment you start looking towards the Source, which makes you experience all these Karaṇas, and the experiences through Karaṇas, this karaṇas disappear into karaṇas, KARAṆA disappearing into KĀRAṆA.

15.34

Listen carefully, either you can see it as a jewelry or gold. For a moment you see it as a gold, it is no more jewelry. For a moment you see it as a jewelry, it is no more gold. Seller always sees that as gold, because he has tons of jewelry. Buyer always sees it as jewelry because he is going to wear it, he or she is going to use it, wear it as jewelry. Buyer, if he can see that as a gold, he will win the bargain. Seller, if he sees that as a jewelry, he will lose the bargain, he may not want to sell it.

Understand, in dance, if your eyes has the shade of lust, you will not enjoy pure dance; if you enjoy pure dance, the eyes will become beautiful, without lust.


If the senses are perceived, you will see the world;

if the Kāraṇa is perceived Kāraṇa will merge into it;

if the Karaṇa is perceived Kāraṇa will merge into it.


karanam kāraṇam aadhalaum kaaranam karanam aadhalum appan karanamai eruthalale

The karaṇa can become kāraṇa and kāraṇa can be forgotten and misconstrued as karaṇa.

marathai maraithathu mamatha yaanai, marathil marainthathu mamatha yaanai;

parathai maraithathu paar-muthal-bootham; parathil marainthathu par-muthal-bootham

Listen carefully. Listen, there is a beautiful elephant carved in sandalwood tree, the man who sees that as sandalwood tree will not see the beauty of the elephant; if he sees as elephant he will not remember it is sandalwood tree.

Actually this verse is trying to tell you, Enlightenment is not that difficult; how much energy you need to see everything as the form and name, that same energy if you divert it, you will see the Formless, Nameless Subjective Truth, that’s all. It is only a direction change, not change in the effort. There is no need for any extra effort, manipulation. No, it is all about direction change. Are you awakened to outer world or have you had inner awakening, that’s all.

The whole verse is all about change of direction of your perception. You can actually do it in every day in your life. Whenever your emotions appears as a glass, as a screen, as a veil, and makes you perceive things, as ‘my world’, just break those glasses and perceive ‘the world’, suddenly you will see:


thannai maraithathu than karanangalam; thannil marainthana than karanangale;

kaaranam kanda karai karanangale; karanangal karaithal kaaranam thannile


Karanangal – the karaṇas, karmendriya, jnanendriya and mana – means the organs, intra-organs with which you perceive, tiredness, boredom, good, bad, right, wrong, excitement, boring, whatever you perceive through the karaṇas will make you forget, the KĀRAṆA. If you turn towards KĀRAṆA, it’s actually a simple understanding, just you can sit and casually contemplate, the hill I am seeing, the plants I am seeing, the body I am seeing, the perception I am having about me; what is it that makes me experience, perceive all these, me, what is it that lightens this whole thing, what is it that lightens my KĀRAṆA. You will see – KĀRAṆA .

I wanted, this manana as a practice. Do Vaakyartha Sadas, do manana, do this practice.

ponnai maraithathu ponnani booshanam, ponnil marainthathu ponnani booshanam;

thannai maraithathu than karanangalam thannil marainthathu than karanangale;


It’s all about U-TURN, that’s all. The man who stands and shows you the board, U-TURN, is GURU, that’s all. He tells such a way, all your karaṇas starts listening, that’s all, because he has mastered all his karaṇas, he can command all your karaṇas. Actually you are not a person, when you are walking on the road, you are a crowd. Some are a joint family home, some are even apartment complex. So many walking together, only a person who has mastered his karaṇas, can say about – turn, about-turn, can say U-TURN, YOU-TURN is U-TURN.

The sacred truth need to be decoded from this verse is – Enlightenment is not difficult, it is just change of direction, U-TURN. This should be your facebook status, and subject for Vaakyartha Sadas, subject for contemplation. U-TURN. Contemplate and come back.


I bless you all. Let you all radiate with integrity, authenticity, responsibility, enriching, causing Living Shuddhādvaita Saivam, the eternal bliss Nithyananda. Thank you. Be blissful.

Description

Link to Video:


Transcript in Tamil

இன்றைய சத்சங்கத்தின் எழுத்தாக்கம்! 10-ஆகஸ்ட்-2016 நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்... உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்..... நித்ய சத்சங்கத்தின் மூலமாக பக்தி எனும் சத்தியத்தைப் பற்றியும், பக்திக்கு இலக்கணம் வகுத்த மாணிக்க வாசகப்பெருமானின் வாழ்க்கையைப் பற்றியும் ஆழ்ந்த சில சத்தியங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தேன். தொடர்ந்து பக்திக்கு எப்படி மணிக்க வாசகப்பெருமான் இலக்கணம் வகுத்தார், என்பதை ஆழ்ந்து தெரிந்துகொள்வோம். எந்த ஒரு மனிதனுக்கும் மூன்று நிலை வாழ்க்கை உண்டு, சமூக வாழ்க்கை, சமூகத்தில் எல்லோரும் ஏற்றுக்கொள்கின்ற சரி, தவறு, நீதி, நியாயம், நல்லது, கெட்டது போன்றவைகளைச் சார்ந்து இயங்கும் உறவுகள், சமூக விதிகளைச் சார்ந்து இயங்கினால், சமூகம் அவனை ஏற்கும். நம்முடைய பெரும்பாலான உறவுகள் சமூக உறவுகள். இதற்கு அடுத்தப்படியாக தனிப்பட்ட வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் உறவுகள், இரண்டாவது நிலை - தனிப்பட்ட வாழ்க்கை. இந்த இரண்டாவது நிலையில் சமூகத்தின் எல்லாவிதிகளும், எல்லா சரி தவறுகளும் பாகமாக இருப்பதில்லை, ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் சில விதிகள் கலக்கப்பட்டு, தனிமனிதனுக்குள்ளே இருக்கின்ற சில ஒப்பந்தங்கள், சில புரிதல்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள். சட்டம் என்பதைவிட புரிந்துணர்வு ஒப்பந்தங்களே அதிகமாக இருந்தது. சட்டத்தை வைத்து இருவரையும் கணவன் மனைவியாக வாழவைக்க இயலாது. சட்டத்தை வைத்து இரு நபர்களை ஒரு நிருவனத்தின் பங்கு தாரர்களாக இருக்க வைக்க முடியும், ஒரு முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருக்க வைக்க முடியும், ஆனால் சட்டத்தை வைத்து இருநபர்களை கணவன் மனைவியாக வாழ வைக்க முடியாது. ஏனென்றால் தனிப்பட்ட வாழ்க்கையில் சட்ட திட்டங்களைவிட புரிந்துணர்வு ஒப்பந்தங்களே அதிகம். இந்து புரிந்துணர்வு என்பது தனிப்பட்ட வாழ்க்கையின் முக்கியமான பாகமாக மாறுகின்றது. ஆழ்ந்துகேளுங்கள். பொது வாழ்க்கையின், சமூகத்தின், நாட்டின் சரிதவறு, விதிகள், செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை என்பதைச் சார்ந்து உறவுகள் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சமூகத்தின் விதிகள், சரி தவறுகள் சார்ந்து இல்லாமல் தனிப்பட்ட புரிந்துணர்வுகள் அதைச் சார்ந்ததாக நம் உறவுகள் அமையும். தனிப்பட்ட வாழ்க்கையின் உறவுகள் நட்பு ரீதியாலும், விதிகள் மற்றும் சட்ட திட்டங்களைக் கடந்து தனிப்பட்ட புரிந்துணர்வுகளைச் சார்ந்ததாக இருக்கும். மூன்றாவதாக அந்தரங்க வாழ்க்கை, இரகசிய வாழ்க்கை. ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த 3 வாழ்க்கை நிச்சயம் இருந்தே தீரும். 1 சமூக வாழ்க்கை. 2. தனிப்பட்ட வாழ்க்கை 3. அந்தரங்க வாழ்க்கை சமூக வாழ்க்கையில் உங்களின் பெரும்பாலான உறவுகள் பாகமாக இருக்கும், தனிப்பட்ட வாழ்க்கையில் உங்கள் குடும்பம், அல்லது குடும்பத்தில் சிலர் பாகமாக இருப்பார்கள், மிக மிக மிக சில, அதிகபட்சமாக ஒருவரோ அல்லது இருவரோ தான் அந்தரங்க வாழ்க்கையின் துணையாக இருப்பார்கள். இரகசிய வாழ்க்கையின் துணையாக இருப்பார்கள். பல பக்தர்கள் பெருமானை தங்கள் சமூக வாழ்க்கையின் துணையாக ஏற்றிருக்கிறார்கள். நான் நேற்றே சொன்னதுபோல, அப்பர் பாடினார், சம்பந்தர் பாடினார் கதவு திறந்தது, கதவு மூடியது. இது எல்லாமே பெருமானின் சமூக வாழ்க்கைத் துணையாக வைத்திருக்கிறார்கள். சுந்தரமூர்த்தி நாயனாருக்குத் தன் வாக்கை மீறி, காதலில் விழுந்தபொழுதுகூட அந்தக் காதலுக்குத் துணை செய்து தூது செல்கிறார் பெருமான். அப்படியானால் தனிப்பட்ட வாழ்க்கைத் துணையாக சுந்தரமூர்த்தி நாயனார் சதாசிவனை அடைந்திருக்கின்றார். ஆனால், மாணிக்க வாசகப் பெருமானோ, பொது வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை எல்லாம் தாண்டி தன் அந்தரங்க வாழ்க்கையின் பாகமாகவே அம்பல வாணனை அடைந்திருக்கின்றார். ஆழ்ந்துகேளுங்கள்.. எப்படி என்பதைக் காண்போம்.. பொது வாழ்க்கையில் நாட்டின் சட்ட திட்டங்கள் சார்ந்த உறவு. தனி வாழ்க்கையில் புரிந்துணர்வுகள் சார்ந்த உறவு, அந்தரங்க வாழ்க்கை காதலின் நேர்மை மட்டுமே சார்ந்த உறவு. காதலின் நேர்மை! மாணிக்க வாசகப்பெருமானின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைப் பார்த்தோமானால், தனிப்பட்ட வாழ்க்கையின் புரிந்துணர்வுகளையும் தூக்கி எறிந்துவிட்டு, அந்தரங்க வாழ்க்கைக்கே உரிய காதிலின் நேர்மையை மட்டுமே வைத்து சதாசிவனை தன் இரகசிய வாழ்க்கைத் துணையாக அடைந்து வாழ்ந்திருக்கின்றார். வாழ்ந்திருப்பது மட்டுமல்ல, அந்த தைரியத்தினாலே, அந்த பலத்தினாலே மிகுந்த சர்ச்சைக்குரிய, கடினமாக, ஆபத்தான செயல்களைச் செய்திருக்கின்றார். கதையாகப் படிக்கும்பொழுது புரியாது, கருத்தில் ஆழ்ந்து பார்த்தால் புரியும். சிறுவயதிலிருந்தே அவருடைய நேர்மையின் காரணமாக, நீதி நெறியின் காரணமாக, பாண்டிய நாட்டு அரசன் அவரை அமைச்சராக முந்திரியாக, முதல் மந்திரியாக வைத்திருக்கின்றார் . நாட்டிலே திடீரென்று ஒரு பிரச்சினை, வியாதி பரவி குதிரைகள் எல்லாம் இழந்து குதிரைப்படை அழிந்துவிடுகின்றது. நாட்டின் பாதுகாப்பிற்கு குதிரைப்படை மிகவும் முக்கியம். பாதுகாப்பு சம்மந்தமான ஒரு மிகப்பெரிய முடிவை எடுத்து, குதிரைகளை வாங்கி வருவதற்காக பொக்கிஷத்தை மாணிக்கவாசகப்பெருமானோடு பூட்டி வைத்து அனுப்புகின்றார். ஆழ்ந்து தெரிந்துகொள்ளுங்கள். போன மாணிக்க வாசகரோ பாதிவழியிலே, குருந்த மரத்தடியிலே குருநாதனை, சதாசிவனைக் காணுகின்றார். கண்டதும் காதல், கரைந்தார்,. தன்னிலை மறந்தார்.. எம்பெருமான் வடிவாய் நிறைந்தார். சதாசிவனையே இரகசிய வாழ்க்கைத் துணையாகவும் கொண்டார். ஜீவன் சிவனானது, பொங்கிய பரவசம் எங்கும் நிறைந்தது! தீக்கை, ஆக்கையுள் மலர்ந்து ஞானம் நிறைந்த, ஆனந்த அனுபூதி நிறைந்த ஞானப்பெறுவாழ்வு கைவரப் பெற்றது. எல்லாமே சரி, குருநாதனாய் குருந்த மரத்தடியில் இருந்து அருளிய பெருமானுக்கு ஆவுடையார் கோவிலில் ஆலயம் நிர்மாணிக்கத் தீர்மாணிக்கின்றார். யார் பணத்தில், பாண்டியன் பணத்தில், கொடுத்தது எதற்காக? குதிரை வாங்கி வரச்சொல்லி. குதிரை எதற்காக? நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை. அழ்ந்து கேளுங்கள், பாண்டியன் தன்னுடைய பகட்டிற்காக ஒரு மாளிகைக் கட்டச் சொல்லி பணம் கொடுத்திருந்தாலோ, அல்லது தன் பத்தினி மார்களின் தேவைக்காக சீலையும், நகையும் வாங்கச் சொல்லி பணம் கொடுத்திருந்தாலோ, அல்லது அழகு அலங்காரப் பொருட்களோ, மது, மாது போன்ற சுகபோகப் பொருட்களுக்காகவோ பணம் கொடுத்திருந்து அதில் ஒரு தவறோ ஊழலோ நடந்திருந்தால்கூட பாண்டியன் என்கிற அரசனுக்கு தனிப்பட்ட விதத்தில் செய்த ராஜ துரோகம். ஆனால் இங்கு நிகழ்ந்ததோ அரசனுக்கு மாத்திரம் அல்ல, நாட்டின் பாதுகாப்பிற்கே நடந்த துரோகம். சமூகத்தின், நாட்டின் விதிமுறைகளான அரசன் பணத்திற்கு நேர்மை என்கிற விதியைத் துறந்தார். அது மட்டுமல்ல, பாண்டிய மன்னனின் முதலமைச்சராக, பக்கத் துணையாக பல்லாண்டு காலம் இருப்பதனால் பாண்டிய மன்னன் இவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் பாகமாக மாறியிருந்தார். இவரும் பாண்டிய மன்னனின் தனிப்பட்ட வாழ்க்கையின் பாகமாக மாறியிருந்தார். இருவருக்கும் மிகப்பெரிய அந்யோன்யமும், நட்பும் நிலவி வந்தது. அதனால்தான் அவரை நம்பி பொக்கிஷத்தையே அனுப்பினான். பொக்கிஷத்தை வேறு ஒரு காரணத்திற்காக செலவிடுவது நம்பிக்கைத் துரோகம் அல்லவா? நம்பியிருக்கும் நாட்டிற்கு துரோகம், நம்பியிருக்கும் மன்னருக்கு துரோகம், மன்னனுக்குத் தெரியாத விதத்திலே இந்தப் பொன்னையும், பொருளையும் எங்காவது ஔித்து வைத்தால்கூட தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உண்டு.

ஆனால் ஊருக்கேத் தெரியும்படி ஆலயம் சமைத்து வைக்கின்றான். 

ஐந்து நாட்களில் அரசனுக்குத் தெரிந்துவிடும், தலை உருளும். இந்தக் குற்றத்திற்கு மரண தண்டனை தவிற வேறு ஒரு தண்டனை கிடையாது. ஏனென்றால் நாட்டிற்கும் துரோகம், மன்னரின் தனிப்பட்ட நம்பிக்கைக்கும் துரோகம். இந்தத் துரோகத்தை மன்னனேகூட செய்ய முடியாது நாட்டிற்கு. அரசனேகூட நாட்டின் பாதுகாப்பு சார்ந்து ஒரு விஷயத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை வேறு ஒரு காரணத்திற்கு உபயோகப்படுத்த முடியாது. ஆழ்ந்து சிந்தியுங்கள்.. அவர் எடுத்த முடிவின் ஆழத்தைக் கண்டால்தான் அவர் இருந்த உணர்வின் அழத்தைப் புரிந்துகொள்ள முடியும். அவர் எடுத்த முடிவின் ஆழத்தைக் காணாவிட்டால், அவர் இருந்த உணர்வின் ஆழத்தைப் புரிந்துகொள்ள முடியாது. நாட்டின் விதிகள், நட்பின் விதிகள் அனைதும் காதலின் நேர்மையின் முன் கழண்டு போயின. சதாசிவனோடு, குருவுருவாய் வந்த பெருமானோடு, அவர் அனுபவித்த ஆனந்தத்தின் அளவு சுத்தாத்வைதத்தில் சங்கமித்த சக்தி, ஊண் மறந்து, உயிர் மறந்து, உறவு மறந்து, பாதுகாப்பு எனும் கொள்கை மறந்து, குடியரசுக்கு செய்யும் துரோகம் எனும் கதி மறந்து, எதிர் விளைவு என்ன எனும் எண்ணம் மறந்து, தன்னையேத் தான் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு காதலின் நேர்மை பொங்கயிது. ஆழ்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.. தன்னையே தான் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பொங்குகின்ற காதல் உணர்ச்சி காமம்.. தன்னையே தான் கட்டுப்படுத்த முடியாத அளிவிற்குப் பொற்குகின்ற காதலின் நேர்மை பக்தி. இரண்டிற்கும் என்ன வித்யாசம் என்றால், தன்னையே தான் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு காதல் சில நேரத்தில் பொங்கும், அதில் நேர்மை இருக்காது. அவனோ அவளோ முடிந்த பிறகு தூக்கி எரிந்துவிடுவது காமம். தன்னையே தான் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பொங்கினாலும் அதில் வெறும் உபயோகப்படுத்திவிட்டுத் தூக்கி எறிந்துவிடுகின்ற தன்மை இல்லாமல் நேர்மை பொதிந்திருக்குமானால், அந்த் காதலின் நேர்மை பக்தி. பக்திக்கே காதலின் நேர்மை உண்டு! ஒரு மனிதன் காமத்தின் வசப்பட்டாலும்கூட பின் விளைவு, எதிர்விளைவு, பக்க விளைவு அறியாமல் எவ்விளைவைப் பற்றியும் கவலைப்படாமல் செயலில் இறங்குவான். அந்த வேகத்தோடு, அந்தக் காதலோடு நேர்மை கலந்திடுமானால் அது பக்தி. மாணிக்க வாசகப் பெருமான் இதுபோலே பெருமானுக்கு ஆலயத்தைச் செய்து வைத்துவிட்டு, அரசன் சிறைப்படுத்தியவுடன், ஐயோ! சொக்கநாதா, உன்னை நம்பி ஆலயம் செய்தேனே.. அரசன் என்னைப் இப்படிப் படுத்துகிறானே என்று புலம்பியிருந்தால் அது காமம். இல்லை, புலம்பலும் இல்லை, அலம்பலும் இல்லை, உலம்பலும் இல்லை. சதாசிவன் தன்மையில் ஒருமையில் சங்கரா என்று சாயுஜ்ய நிலையிலேயே இருதார். அதனால்தான் காதலின் நேர்மை. அது பக்தி. சிறைக்கு ஆட்படுத்திய பொழுதும், கொள்கையில் வளையாத குருநாதன். ஒரே சுடுநீரில் உருளைக்கிழங்கைப் போட்டால், மெதுவாகிவிடும். முட்டையைப் போட்டால் கடினமாகிவிடும். சுடுநீர் உங்களை மெதுவாகவே, கடினமாகவோ ஆக்குவதல்ல, உங்கள் உள்ளுக்குள் என்ன இருக்கின்றதோ அதுதான் நீங்கள் மெதுவாகப் போகின்றீர்களா, கடினமாகப்போகின்றீர்களோ என்று முடிவு செய்யும். வௌிச்சுழல் அல்ல, உள்ளிருக்கும் பொருளே விளைவை முடிவு செய்யப்போவது. பெருமான் மாணிக்கவாசகன் ஊதிப்போவதற்கு உருளைக்கிழங்கு அல்ல.. ஞானக்கருவை உள் தாங்கியவன், வெந்நீரில் இட்டாலும் வெந்து இறுகித்தான் போவோமே தவிற, பிசுபிசுத்தோ, பசபசத்தோப் போவதற்கு உருளைக்கிழங்கல்ல இந்த உத்தம பக்தர்கள். காமத்திற்கும், பக்திக்கும் ஒரே ஒரு வித்யாசம் தான் - நேர்மை! இரண்டிலுமே தன்னையேத் தான் கட்டுப்படுத்தாத பேருணர்வு பொங்கும், ஆனால் காமத்தில் உபயோகம் முடிந்ததும் அதைத் தூக்கி எரிந்துவிடுவார்கள். தானகவே விலகிவிடும். பக்தியில் பக்தியே உபயோகம், வேறு ஒரு உபயோகம் இல்லை. மாணிக்க வாசகப் பெருமான், குருந்த மரத்தடியிலே இருந்த இடத்திலே, மௌன குருநாதனை, ஞான சத்குருவை, சச்சிதானந்தப் பரம்பொருளை ஞானகுருவாக தரிசிக்கின்றார். கண்ட மாத்திரத்தில் காதல். 9 விதமான தீட்சைகளும், சமய, விசேஷ, நிர்வாண என்று ஆகமங்கள் விவரிக்கின்ற 9 வகையான தீட்சைகளும் விரைந்து நிறைவேறுகின்றது. ஒவ்வொரு தீட்சையின் பொழுதும் வெறும் மந்திரம் அல்லாது, தந்திரம் அல்லாது அனுபூதியே மலர்கின்றது. சொல்லொணாத பிறான்.. சுகப்பரம்பொருள், சுத்தாத்வைத சத்தியத்தில் திளைத்திருப்பவர். சாயுஜ்யத்தில் சங்கமித்தார்.. சங்கமித்த பரவசத்தில், நான் எனும் தன்மை மறந்தார், பொறுப்பையும், கடனையும்,தன்னிலையையும் மறந்தார். தன்னையே மறந்து சாயுஜ்யத்தில் கரைந்தார்,மறைந்தார். இந்த நிலையிலே அவருக்குத் தோன்றிய முதல் எண்ணம், திருமேனி தாங்கி குருவாய் வந்த பரமசிவப் பரம்பொருள் தீக்கை அருளிய இடத்தில் கோயில் எழுப்புவோன் என்ற எண்ணம் தோன்றியது. சைவத்தை வாழும் யாராவது, தன்னை மறந்து உச்ச நிலையை அடைந்தால் அவர்கள் முதலில் செய்வது உலகிற்கு சேவை செய்வது. ஆலயம் செய்து வைப்பது, சேவைகள் செய்து வைப்பது, வேத நெறி தழைத்தோங்க, மிகு சைவத் துறை விளங்க பூதப் பரம்பரைப் பொழிய, மாணிக்க வாசகர் உடன் வந்த அமைச்சர்களுக்கு ஆலயம் சமைக்கத் துவங்குங்கள் என ஆணையிடுகின்றார். அமைச்சர்கள் நடுநடுங்கினார்கள்.. என்னய்யா.. வந்த வேலை முடியாமல் யாரோ சாமியாரைப் பார்த்து காலையும், மாலையும் எதையோ பேசிக்கொண்டிருக்கின்றிருக்கின்றீர்கள்.. ? அதையும் பொறுத்துப்போவோம் என்றால்.. இப்பொழுது பாண்டியன் அளித்து கொண்டுவந்த பெருஞ்செல்வத்தையும் ஆலயம் செய்ய ஆணையிடுகின்றீர்களே? உங்களுக்கு பித்தா பிடித்தது? ஏன் இப்படி வாழ்க்கையை அழித்துக்கொள்கிறீர்கள்? என்று வினவினார்கள். மாணிக்கவாசகப் பெருமானோ.. எனக்குத் தெரியும், சொன்னதைச் செய்யுங்கள் என்று கட்டளையிட்டு நேரடியாகத் தானே நின்று ஆலயம் சமைக்கத் துவங்கினார். உடன் வந்த அமைச்சர்கள் அஞ்சி நடுங்கினார்கள். அரசு ஊழியர்கள் அஞ்சி நடுங்கினார்கள், பாண்டியன் குதிரைக்காக காத்திருக்கின்றான். ஏற்கனவே காலம் கழிந்துவிட்டது, குதிரைச் சந்தை மூடும்நேரம் வந்துவிட்டது. வருடத்தில் குறிப்பிட்ட ருதுவில் மட்டும் நடக்கின்ற சந்தை அந்த குதிரைச்சந்தை. காலம் கழிந்துபோனால் நல்ல குதிரைகள் கிடைக்காது. அயல்நாட்டு அரசர்கள் கொண்டுபோய் இருப்பார்கள். வெறும் கையோடு திரும்பினால் தலை கழுத்தோடு இருக்காது, ஒருவோளை கொண்டு வந்த செல்வத்தைத் திருப்பி எடுத்துச் சென்றால் அரசன் கோபத்திற்கு ஆளாகாமல், அரசே குதிரைகள் கிடைக்கவில்லை, நன்றாக இல்ல, ஜாதிக்குதிரைகள் இல்லை, ஜாதிக்குதிரைகளில் குறை உள்ளது என்றெல்லாம் சொல்லியாவது தப்பித்துக்கொள்ளலாம். இந்த மனிதனோ, முதலமைச்சரோ வந்த வேலையைச் செய்யாமல் எடுத்து வந்த செல்வத்தை ஆலயம் சமைக்க உத்தரவிடுகின்றார். என்ன ஆயிற்று? பாண்டிய மன்னனுக்கு யார் பதில் சொல்வார்கள்? மாணிக்க வாசகப் பெருமானுக்கு எதிர்காலத்தைப் பற்றிய எண்ணமே இல்லை. சரி, தவறு எனும் சட்டதிட்டங்களைச் சார்ந்த சமூக வாழ்க்கையைக் கடந்து விட்டிருந்தார். தர்மம் - ஞாயம் எனும் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த நட்பு ரீதியான விதிமுறை கடந்து விட்டிருந்தார். பொங்கிய பெருமான் மீதுகொண்ட காதலின் நேர்மை தவிற.. வேறு ஒரு உணர்விற்கும் சிந்தனைக்கும் அவருக்குள் இடம் இல்லை. பெருமானையே இரகசிய வாழ்க்கைத் துணையாக அடைந்த அந்தரங்க வாழ்க்கைத் துணையாக அம்பலவாணனையே உற்ற பேரானந்தப் பெரும்சுகம். அரசனின் ஆணையும், நட்பாய் அரசன் தன் மீது வைத்திருந்த நேர்மைக்கான நாணயம், வாழ்க்கையில் தன் பலத்தை இழந்துவிட்டு, பெருமான் மீது கொண்ட காதலின் நேர்மை தலைப்பட்டு அதன் முன்னிலையில் இவை எல்லாம் இல்லாமல் கரைந்து போய் இருந்தது. ரிஸ்க் எடுக்கின்றோம் என்று தெரியாமலேயே ரிஸ்க் எடுத்திருக்கின்றார். மிகப்பெரிய ஆபத்தான ஒரு காரியத்தைச் செய்கிறோம் என்று தெரியாமலேயே அந்த ஆபத்தான காரியத்தில் இறங்குகின்றார். கொண்டு வந்த பொன்னையும், பொருளையும், உடன் இருந்த ஊழியர்களை மேலாளர்களாக்கி ஊரையேத் திரட்டி ஆலயம் நிர்மாணித்தாகிவிட்டது. அரசனுக்கு செய்திபோவதற்கு முன்பாக ஆலயத்தைச் செய்துவிட்டார். இரகசியமான உளவாளிகள் அரசனுக்குச் செய்தியைச் சாத்தினார்கள். அரசே கொண்டுபோன செல்வம் எல்லாம் குதிரை ஆகவில்லை, ஆலயமாகியிருக்கின்றது. அதிர்ந்தான் பாண்டிய நாட்டு அரசன், வெகுண்டெழுந்து கொண்டு வா.. வாதவூரனை! என்று கூக்குரலிட்டான். வாதவூரரைக் கைது செய்து இழுத்து வந்தார்கள். அப்பொழுதும் வாதவுரரோ அம்பலவாணனை குறையும் சொல்லவில்லை, தன்னையும் நொந்துகொள்ளவில்லை. தன்னைநொந்துகொள்ளவோ, இறைவனை நொந்துகொள்ளவோ இடமே இல்லாத உணர்வுதான் காதலின் நேர்மை. தன்னை நொந்துகொள்பவன்கூட காதலின் நேர்மையில் இல்லை, காதலின் நேர்மையின் நிறைவுத் தன்மையில் தன்னையும் நோகாது, பிறரையும் நோகாது, யாரையும் நோகாது பரமானந்த பெருநிலையில் இருந்த பெருமானோ ஏன் சொல்கிறோம் என்றகூடத் தெரியாமல் உள்ளிருந்த வந்த வார்த்தையான ‘வரும் குதிரை எல்லாம் சில நாட்களில்,வந்துகொண்டிருக்கின்றன’ என்று வாக்களிக்கின்றார். ஐயோ.. ! மூடத்தனத்திற்கு அளவே இல்லையா? சுற்றிருந்த ஊழியர்கள் நடுநடுங்குகின்றார்கள். பாண்டியனுக்குச் சொல்கின்றார்கள்.. அரவே வாதவூரருக்குப் பித்துப்பிடித்ததோ அல்லது புத்திபோயிற்றோத் தெரியவில்லை. சத்தியமாய் குதிரைகள் வராது, சொத்து முழுவதும் அங்கு ஆலயமாக ஆவுடையில் நின்றுகொண்டிருக்கின்றன. கொண்டுபோன பொன்னும் பொருளும் வணிகச் சந்தைக்கே செல்லவில்லை எப்படி குதிரை வரும்? உண்மையை ஒத்துக்கொள்ளாமல் உங்கள் முன் பொய் சாதிக்கின்றார். ஐயா.. ஆகம் எனும் நிலையில் இருந்து ஒருவன் உண்மையேச் சொன்னாலும் அது பொய்யே! சிவோகம் எனும் நிலையிலிருந்து ஒருவன் பொய்யே சொன்னாலும் அது சத்தியம்! சத்தியமாய் ஆக்க வேண்டியது சங்கரன் கடமை! பிஞ்சுக்குழந்தை தன் தூக்க முடியாத விரலைத் தூக்கி, தூணிலும் இருப்பானா? துரும்பிலும் இருப்பானா? என்று தந்தைக் கேட்டதும். ஆம்! இத்தூணிலும் இருக்கின்றான் என்று காட்டியதும் தூணுக்குள் ஓடி ஔிந்தான் நாரணன். பாதம் பற்றியிருந்த லக்ஷ்மி அஞ்சி, ஐயனே தாங்களோ ஓடும் அளவிற்கு என்ன துக்கம் வந்தது வைகுண்டத்திற்கு? என்று கேட்க.. இல்லப் பெண்ணே.. வைகுண்டத்திற்கு துக்கம் வரவில்லை, என் பக்தன் சுண்டுவிரலைத் தூக்கிக் காட்டுகின்றான். அது சிறுகுழந்தை அதன் கை எந்த தூணைக் காட்டும் என்று எனக்குத் தெரியாது. அதன் கை எந்த தூணைக் காட்டுகின்றதோ, அதற்குள் நான் நுழைந்தாகவேண்டும். பிறகு பேசுகின்றேன் உன்னோடு என்ற பின்னங்களால் பிடரியில் பட விரைந்து ஒடினான் நாரணன். சிவோகத் சிந்தையிலே உற்றிருக்கும் மக்களுக்கு, சத்தியம் அசத்தியம் இல்லை, நித்யம் அநித்யம் இல்ல, பொய்யும், உண்மையும் இல்லை, சொன்னதெல்லாம் சத்தியம், நினைத்ததெல்லாம் நித்யம். சதாசிவத் தன்மையிலே சாயுஜ்ய நிலையிலே வீற்றிருக்கும் பெருமான்.. குதிரைகள் வரும் அங்சேல் அரசே! என்று அரசருக்கு அபயம் அளிக்கின்றான். உடன் சென்ற மந்திரிகளோ இல்லை அரசே சத்தியமாய் குதிரைகள் வராது, செல்வம் எல்லாம் ஆலயத்திற்கு செலவானது என்கிறார்கள். அரசனுக்கு உள்ளுக்குள்.. புரிந்துகொள்ள முடியாத குழப்பம். ஏனெனில் மிகுந்த நேர்மையே வடிவானவர் மாணிக்க வாசகப் பெருமான், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்காக அரைக்காசும் தொடாதவர். நேர்மையின் உச்சம், நீதியின் வடிவம். நெருப்பைப் போல் கற்கு. இவர் ஒரு தவறு செய்ய மாட்டாரே.. ஆனால் சுத்தியிருப்பவர்கள் சத்தியம் செய்ய மாட்டார்கள், ஆலயம்தான் ஆகியிருக்கின்றது.. பணம் சந்தைக்குச் செல்லவில்லை, குதிரையும் வராது, கழுதையும் வராது என்கிறார்கள். குழம்பினான் அரசன்.. ஏற்கனே கண்ணகியின் கதையில் வேகமாய் தலையை வெட்டச் சொல்லி தன் உயிரைத் துறந்த தன் முன்னோர் பாண்டியனை மனதில் நினைத்தான். இன்னொருமுறை இந்த சிம்மாசனத்திற்கு இழுக்கு வேண்டாம், தலை வெட்டும் அளவிற்கு இப்பொழுது முடிவெடுக்காமல் சிறை வைப்போம் என்று நினைக்கின்றான். அதனால், ஆகட்டும் இவர் சொல்லிய தினத்திற்குள் குதிரை வரட்டும், அதுவரை சிறையில் வையுங்கள் என்று உத்தரவிட்டான். மற்றவர்களுக்கு எல்லாம் நாள் மெதுவாக கழிகின்றது, மாணிக்க வாசகருக்கு நேரம் பறக்கின்றது. ஏனென்றால் பரமானந்தத்தில் இருக்கின்றார். காலத்தை உண்ணும் காலகாலத்தை சிந்தையில் வைத்திருக்கும் சிவ பக்தர்களுக்கு காலம் கவலை இல்லை. துக்கத்திலே காலம் நகராது, சுகத்திலே காலம் நிற்காது. ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்.. காலத்தின் அடிப்படையான குணங்களில் ஒன்று, துக்கத்திலே காலம் நகராது, சுகத்தில் காலம் நிற்காது. ஐயோ.. காலம் பறக்கிறதே என்றால், நீங்கள் சுகத்தில் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். ஐயோ.. காலம் நகரவில்லையே என்றால் துக்கத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். துக்கத்தில் இருக்கும் பொழுது காலம் உங்களைத் தின்னும், சுகத்தில் இருக்கும் பொழுது நீங்கள் காலத்தை உண்பீர்கள். மற்றவர்களை காலம் தின்றால், இவரோ காலத்தைத் தின்றுகொண்டிருக்கின்றார். குறித்த நாள்.. சுரியன் உதிக்கின்றது, அங்கையற்கன்னி மீனாட்சி அமைத்து வைத்து மாளிகையின் மீது இருந்து சுரிய உதயத்தை கண்டுகொண்டிருக்கின்றான். 16000 குதிரைகள் பறந்து வருகின்றன.. குதிரைப் புழுதி மதுரையையே மறைக்கின்றது. அரண்டுபோனான் பாண்டிய நாட்டு அரசன்.. பறக்கும் குதிரைப் புழுதி 8 அடுக்கு மாளிகையை மறைக்கின்றது. வாதவூரன் சொன்னபடி ஜாதிக்குதிரைகள் நாட்டையே மறைக்கும்படி வந்துகொண்டிருக்கின்றது. ஒவ்வொரு குதிரைமீதும் 8 அடி அங்க லட்சணத்தோடு குதிரையின் வீரர்கள். அரண்டு போனான் அரசன்.. உளவாளிகள் சொன்ன தகவல் உண்மை, கொண்டுபோன பொன்னும், பொருளும் ஆவுடையார் கோவிலாக மாறியிருக்கின்றது. சந்தையின் பக்கமே யாரும் செல்லவில்லை. தரகு பேசவில்லை, குதிரை ரகம் பார்க்கவில்லை, அடி சேர்க்கவில்லை, ஆனால் அணி அணியாக பாண்டிநாடே கண்டறியாத குதிரைப் படைத் திரண்டு வருகின்றது. 10 அடி உயரம் குதிரைகள், 8 அடி தூரம் வீரர்கள், அங்க லட்சணத்தோடு அணிகலன்கள் புட்ட அசைந்தாடும் முரட்டு குதிரைகள் எங்கிருந்து வருகின்றன இத்தனையும்? ஒருவேளை வேறு நாட்டிற்கு செல்கின்ற வழித்தடத்தில் பாண்டிநாட்டைக் கடக்கின்றதா என்று.. மன்னன் சற்றே மயங்கினான். ஓடி வந்த உளவாளிகள் .. அரசே இல்லை, இல்லை, சத்தியமாக அவை பாண்டிநாட்டுக்கு வந்த குதிரைகள்தான். பாண்டி நாட்டு முத்திரையோடு வருகின்றன. வழியில் சுங்கச் சாவடியில் நிறுத்தி விசாரித்த பொழுது வாதவுரர் அனுப்பி வைத்தப் பொருளுக்குச் சமமான குதிரைகள் இவை என்றும், குறித்த நாளில் அவைகளை கொண்டு சேர்ப்பது எங்கள் கடமை என்றும் குதிரை லாயத்திற்கு வழிகேட்டு வந்துகொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு எல்லாம் ஒரு தலைவன் இருக்கின்றான். துடுக்கான பேச்சு.. எடுக்கான நடை.. மிடுக்கான நோக்கு.. அடுக்கான உடுப்போடு.. எதற்கும் அடங்காத் தன்மையோடு மிடுக்கான முருக்கு மீசையும், தாடியும் தாங்கி சாட்டையோடு வந்திருக்கின்றான். பார்ப்பதற்கு சக்திமான் போலவேத் தெரிகின்றான். அவனோடு அரசன் சற்று பதமாக பார்த்து உரையாடுவது நல்லதோ என்று தோன்றுகிறது. அரசன் உளவாளரிடம் பார்த்து கேட்கின்றான்.. அப்படி என்ன அவனிடம் கண்டீர்கள்.. ? சுங்கச் சாவடியில் நிறுத்தி அவனிடம் கேட்ட கேள்விகளுக்கு, அவன் பதிலளித்த விதத்தை, அரசன் சாவடி அதிகாரிகளிடம் நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள, அவனைப் பற்றி உங்களுக்கு ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தும் நன்மை செய்யும் என்கிறார்கள். அரசன் சுங்கச்சாவடி அதிகாரிகளை அழைக்கின்றார்கள். . சுங்கச்சாவடி அதிகாரிகள் வந்து, அரசனுக்கு ஜெயகோஷம் இட்டு, அரசன் வாழ்க! பாண்டி நாடு வாழ்க! இந்த பாண்டி நாட்டை தாங்கி நிற்கும் அங்கையற்கன்னியைத் தாங்கும் சுந்தரேசப் பெருமான் வாழ்க என்று பெருமானை வாழ்ந்தி, சாவடியில் நடந்ததை சங்கடமில்லாமல் சொல்கின்றார்கள். அரசன் ஆணையிட்டான்,. மேலே சொல்.. அரசே 60000 குதிரைகள் வந்திருக்கின்றன.. ஒவ்வொன்றும் தரமான குதிரைகள்.. 10 அடி குதிரைகள், 8 அடி வீரர்கள், ஆடை அணிகலன்களோடு, முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டு, போருக்கும், தந்திரத்திற்கும், சாகசத்திற்கும் மூன்று நிலைப் பயிற்சிகளையும் முழுமையாய் முடித்த குதிரைகளாய் இருக்கின்றன. இத்துனை தரமான குதிரைகளை இதுவரைப் பாண்டிநாடு கண்டதில்லை. வந்திருக்கும் வீரர்கள் ஒவ்வொருவரும் அச்சடித்தார்போல, ஒருவனுக்கேப் பிறந்தார்போல இருக்கின்றார்கள். அவர்கள் தலைவனோ, நடையும், உடையும், அசைவும் அங்க லக்ஷணமும், குதிரைகளின் அழகிற்கே அழகாய் இருக்கின்றது. சுங்கத்தில் நிறுத்தினோம், வரி தங்கமாய் வேண்டுமா? எவ்வாறு வேண்டும் என்று தலைவன் கேட்டான். குதிரைகள் எங்கு செல்கின்றனவோ அதைச் சார்ந்தே வரி விதிக்க முடியயும் என்று கேட்டோம். உங்கள் பாண்டி நாட்டு அரசனுக்கு வேண்டும் என்று வாதவூரார் அனுப்பி வைத்து பொன்னும், பொருளும் பெற்றுக் கொண்டு மாற்றாகக் கொண்டுவந்திருக்கும் குதிரைகள் இவைகள் என்று சொல்ல, நாட்டிற்காக லாயத்திற்கு வரும் குதிரைகளுக்கு வரியில்லை, வழிச்சீட்டு மட்டுமே பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லி அவரிடம் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் பார்த்தால் இதில் ஏதோ சுது இருப்பதுபோன்று மனம் மயங்குகின்றது. ஆனால் அதைக் கண்டு பிடிக்க முடியாததனால் அதைச் சொல்லவும் தயங்குகின்றது. அடேய்.. மூடர்களே.. குதிரை வரும் முன் சுது, வாது என்றெல்லாம் வாதிட்டால் பரவாயில்லை. 10 அடி குதிரையும், 8 அடி வீரர்களும் கண் முன்னே நிற்கின்றார்கள். இன்னமும் என்னடா சுது? வாதவூராருக்கு நாம் செய்ததே சுது என்ற மன்னன் மணம் வருந்தி, குதிரைத் தலைவனை வாதவூராரோடு கொண்டு வருக.. என்று உத்தரவிடுகின்றான். வாதவூராரைக் சிறையிலிருந்து விடுவித்து, குதிரைத் தலைவனையும் அழைத்து வருகின்றார்கள். கண்டவுடன் பெருமானுக்குத் தெரிந்தது, ஐயகோ.. குருந்த மரத்தடியில் குருவாய் இருந்த திருமுகம் அல்லவா? இன்று தாடியும், மீசையும் வைத்து மறைத்துக்கொண்டு குதிரை மீது ஏறி சாட்டி வீசி வருகின்றதே, ஐயனே.. சாட்டை வீசி வலக்கரம் வலிக்கவில்லையா என்று வலக்கரம் பற்றிப் பார்க்கின்றான். சாட்டை நாம் வீசினாலும், குதிரை நம்மை வீசினாலும் வலக்கரத்தில் வலி வருவதில்லை அப்பனே என்று.. மணிவாசகப் பெருமானுக்கு தன் வாய் மலர்ந்து மொழிகின்றார். தன்னையும் மறந்து, தன்மையானந்தத்தில், சின்மயானந்தத்தில் சிந்தை நிறைந்திருந்த மணிவாசகப்பெருமான் குதிரைத் தலைவனோடு அரசன் முன் நிற்கின்றார். வாசகனும் வணங்கவில்லை, வந்த குதிரைத் தலைவன் தலையும் வணங்கவில்லை. அரசன் துடுக்குற்றான்.. ஒரு குதிரை ஓட்டிக்கு இவ்வளவு தைரியமா? அவன் ஒட்டுவது சாதாரண குதிரை அல்ல! சுரியனையும், சந்திரனையும் இழுத்து இயக்கும் குதிரைகள். வாதவூரன் தலையும் வளையவில்லை, குதிரைத் தலைவனின் தலையும் வணங்கவில்லை. இவருவர் தலையும் வளையவிலலை என்பது மட்டுமல்லாமல் குதிரையை ஒட்டிவந்த தலைவனின் முகத்தைக் கண்ட அரசனின் தலை குனியவில்லை. தன்னை மறந்து வைத்த கண் வாங்காமல் குதிரைப்படையை ஒட்டி வந்த தலைவனின் திருமுகத்தைப் பருகிக்கொண்டிருக்கின்றான் பாண்டி நாட்டு அரசன். ஆயிரம் ஆனாலும் அவன் சொக்கனுக்கு அடிமை செய்து ஆளும் அரசன். தன் ஆண்டானைக் கண்டால் அடி உள்ளத்தில் தெரியாமலா இருக்கும்? கண்கள் ஐந்தும் சங்கமித்தன.. நான்கு அல்ல.. அரசனுடையது இரண்டு., பெருமானுடையது மூன்று.. கண்கள் ஐந்தும் சங்கமித்தன.. கண்கள் நான்கு சங்கமித்தால் அது காதல், கண்கள் ஐந்து சங்கமித்தால் அது பக்தி. மூன்றில் இரண்டு கலந்தால் பக்தி, இரண்டில் மூன்று கலந்தால் சக்தி. இங்கு ஐந்தும் சந்தித்தது.. அடுத்து என்ன நடந்தது..? பொறுத்திருந்து பாருங்கள்.. நீங்கள் எல்லோரும் நித்யானந்ததில் நிறைந்து, நித்யானந்தத்தில் மலர்ந்து, நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்க

Photos From The Day:


Satsang

Nithyananda Morning Satsang Nithyananda Morning Satsang Nithyananda Morning Satsang Nithyananda Morning Satsang Nithyananda Morning Satsang Nithyananda Morning Satsang Nithyananda Morning Satsang Nithyananda Morning Satsang Nithyananda Morning Satsang Nithyananda Morning Satsang Nithyananda Morning Satsang Nithyananda Morning Satsang

Tamil Satsang

Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang Aadi Shaivam - Tamil Evening Satsang


Construction Work happening at Adhi Kailaasa, Bengaluru

Construction Work - IMG_20160809_110725_watermarked.jpg Construction Work - IMG_20160809_110759_watermarked.jpg Construction Work - IMG_20160809_110809_watermarked.jpg Construction Work - IMG_20160809_113030_watermarked.jpg Construction Work - IMG_20160809_121815_watermarked.jpg Construction Work - IMG_20160809_124544_watermarked.jpg Construction Work - IMG_20160809_160822_watermarked.jpg Construction Work - IMG_20160809_160837_watermarked.jpg Construction Work - IMG_20160809_181608_watermarked.jpg Construction Work - IMG_20160809_181620_watermarked.jpg Construction Work - IMG_20160810_130838_watermarked.jpg Construction Work - IMG_20160810_130856_watermarked.jpg Construction Work - IMG_20160810_142230_watermarked.jpg Construction Work - IMG_20160810_150825_watermarked.jpg Construction Work - IMG_20160810_181136_watermarked.jpg Construction Work - IMG_20160810_182230_watermarked.jpg