January 24 2015

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

Title

அருணகிரியோகீஸ்வர் அருளிய அத்வைதம் (The Advaita given by Arunagiri Yogeshwara in Tamil)

Description

The sharing by Swamiji Paramahamsa Nithyananda about the experience of Arunagiri Yogeshwara (the Incarnation of Shiva in Thiruvannamalai Temple) Excerpts from Nithya Kriya Yoga Session that happened on the 24th of January, 2015 at Bidadi in Tamil

Video and Audio - அருணகிரியோகீஸ்வர் அருளிய அத்வைதம் (The Advaita given by Arunagiri Yogeshwara in Tamil)

Video Audio


Transcript

எனக்கு அருணகிரி யோகீஸ்வரர் இருந்தாரு,உங்களுக்கு இப்போ நான் இருக்கேன். ஆனா அவர மாதிரி ஒரு ஊயசபைெ ஆன ஒரு குருவையே நான் பாத்ததே இல்ல. அருணகிரி யோகீஸ்வரர் பெயர சொன்னா மட்டும்,ஒன்னு ரெண்டு மூணு நிமிஷம் ளடைநவெ ஆயிருவேன் .ஏன்னா, அந்த உள்ள பொங்குறது, அதாவது அன்புடைய குருமார்கள் பல பேர பார்த்துருக்கேன். ரகுபதி யோகி,என்னுடைய குரு யோகனந்தபுரி, விபுதனந்தபுரி, இசக்கி சாமி இவங்கள்லாம் அன்புடையவர்கள்.ஆனா இவர் அன்பு மட்டும் அல்ல, (ிாலளைஉயட) அத காட்டுவாரு. ஒரு சின்ன சாப்பாடு அத எடுத்து ,வாயில வைப்பாரு. அந்த ாரப பண்ணிக்கறது.நான் பக்கத்துல ஒக்காந்தேன்னா என்ன பண்ணுவேன்,அவர் கால், கட்டைவரல புடிச்சுகிட்டே இருப்பேன் ,ஏன்னா அந்த நநெசபல போகும்னு. தொட்டுகிட்டே இருப்பேன். அதாவது சிறு பிள்ளைத்தனமான அன்பிற்கும்,தன்னை வளைத்துக்கொண்டு, அதை சகித்துக்கொள்பவர். அந்த சிறு பிள்ளைத்தனமான அன்பையும் கூட, பொறுத்துக்கொள்ளும் தன்மை. அதுக்கு ஒரு பெரிய பொறுமை வேணும், எத்தன தரவ அவர் சாப்பாட்ட வாயில வைக்கும்போது, கடிச்சு பாப்பேன் விரல, அது உண்மையான விரல் தானான்னு. ஏன்னா என்னக்கு ரொம்ப சந்தேகம் இருந்தது, அவர் அந்த பேசறது, டிநாயஎழைரச பாத்தீங்கன்னா இந்த திருவிளையாடல் படத்துல வர்ற,அந்த சிவன் வந்து யளெறநச பண்ணுவாருல்ல. அந்த விறகு வெட்டி, அத தூக்கிட்டு வரும்போது,

எந்த ஊரு?

நமக்கு மலை ஊருங்க

கல்யாணம் ஆயிருச்சா?

ரெண்டுங்க .ஒன்னு தலைமேல ஒக்காந்துட்டு உயிரை வாங்குது,ஒன்னு உடம்புல பாதிய புடிச்சிட்டு உயிரை வாங்குது. அந்த இருபொருள் படவே பேசுவாருல. இவர் அதே மாதிரியே பேசுவாரு.அப்பறமா நினச்சு பாக்கும்போது ,அதெல்லாம் தோணுது அப்படியே அந்த இருபொருள் படவே பேசுவாரு. ஆனா உழகெசைஅ பண்ணவும் விடமாட்டாரு. அதாவது இந்த பக்கம் சாஞ்சு, சிவன் தான்னு உழகெசைஅ பண்ணவும் முடியாது. இல்லேல்ல, மனிதன் தான்னு, உழகெசைஅ ஆகவும் முடியாது. ஒரு சளைம லியே விளையாட விட்டுகிட்டு இருப்பாரு. அந்த கயிறு மேல நடக்கற மாதிரியே இருக்கும்.

ஒரு தரம், நல்லாவே கடிச்சு பாத்துட்டேன். அது விரல்தானா, இல்ல ஷக்தி உடலான்னு பாக்கறதுக்காக. எனக்கு அடிக்கடி சந்தேகம் வந்துகிட்டே இருக்கும். ஏன்னா சில நேரத்துல,நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டுருக்கும் போது, அந்த வாட்சுமேன், கோயில் ஆளுங்க யாராவது ,வந்தாங்கன்னா,அவங்க இவர பாத்துருக்காங்க.ஏன்னா அவங்க இவர பாத்துட்டு, ஏய் கிளம்புங்கய்யா ,அப்படிம்பாங்க. அப்பா எனக்கு தெரியும், இவங்களும் இவர பாக்கறாங்க அப்படின்னு. ளுழ அப்பா மனிஷந்தான் அப்படின்னு செட்டிலாகிப்பேன்.

சுில நேரத்துல அவர் டீநாயஎந பன்றதல்லாம் பாத்தோம்னா, அந்த மனிதத்தன்மைக்கு ஒரே ஒரு ைஉோ கூட சம்பந்தம் இருக்காது. இந்த அத்வைதம் பத்தி ஒரு தரம் நுஒிடயைெ பன்றாரு.

நாம எல்லாத்தோடையும் ஒன்னு ஒக்காந்து ,உணரும்போது, நம்ம சொல்றத எல்லாமே கேக்கும். பாக்குரியா. அப்படின்னு அவர் வந்து, அவருக்கு இடது பக்கம் மலை இருந்தது. வலது பக்கம் கற்பகிரகம். நடுவுல ஒக்காந்துருக்காரு .இத சொல்லிட்டு அந்த ரெண்டு கையையும் சேக்கறாரு, அப்படியே சாமி பாத்தேன், அந்த மலையும், அந்த லிங்கமும் அப்பிடியே ஒன்னோடு ஒன்னு தொட்டுட்டு அப்படி திரும்பி போய் ஒக்காருது. இந்த பக்கம் அண்ணாமலையார் கர்ப மந்திர்,கர்ப க்ரஹம்.இந்த பக்கம் அண்ணாமலை மலை .இந்த பாரு கண்ணு நம்ம அத்வைதமா இருக்கோமுல, அந்த மலை,நீ,நானு ,இந்த லிங்கம் எல்லாரும் அத்வைதமா இருக்கோமுல, பாரு நாம சொன்னா கேக்குதுபாரு, அப்படின்னா,நான்,அவரு,மலை,லிங்கம் ,எதுவுமே, அத்தனையும் அப்படியே ஒன்னா அப்படி குமிஞ்சு அப்படி திரும்பி போகுது, இது அப்படியே சினிமா ளஉநநெ மாதிரியே இருக்கு, ரொம்ப சந்தேகம் வந்ததுனால கடுச்சுபுட்டேன். அவர் விரல.நம்மலமாரி எல்லாம் கடிச்சா, அது அதென்ன எலும்பும் ,சதையும் மாதிரி இருக்கா,இல்ல சக்திமயமான அந்த ஷக்தி உடல் மாதிரி இருக்காங்கறது.நல்ல சாதரணமான மனிதர் மாதிரி "ஆ"ன்னு கத்தினாரு,கையையும் எடுத்துட்டாரு.

ஏண்டா கடிக்கிற ,என்னடா வேணும்னு கேட்டாரு?

அந்த பல்லு எனக்கு விழவே கூடாது,எங்கூடயே இருக்கனம்னே. உங்கள கடிச்சதுனால இந்த பல் விழாம எப்பவுமே எங்கூட இருக்கனம்னே. சரி அப்படினுட்டாரு. அந்த சிறு பிள்ளைங்களுக்கு பல்லு மொளச்சு ,பல்லு கீழ விழுந்து ,திருப்பி மொளைக்கும் இல்லையா,சாமிக்கு அந்த முன் நாலு பல்லு மட்டும் விழவே இல்ல. அவர் டீடநளள பண்ணதுனால, பின்னாடி இருந்த பல்லெல்லாம் விழுந்து மொலச்சுது, முன்னாடி இருந்த பல் அவர் ஆசிர்வாதம் பண்ணப்புறம் விழவே இல்ல.திரும்ப ரெண்டாவுது மொளைக்கவும் இல்ல.ஒருவேளை, ஏதாவது மெடிக்கலா ஆராய்ச்சி பண்ணா, கண்டுபிடிக்கலாம்னு நினைக்குறேன். முதல்வளந்த பல்லேதான்,அப்படியே இருக்குன்னு. குறைந்தபட்சம் இந்த முன்னடிப்பல், இந்த மேல நாலும், கீழ நாலும். அப்பறம் விழவே இல்ல. அந்த அத்வைத்த உணர்வுக்குள்ள போயிட்டு வரும்போதெல்லாம், நம்ம உயிரே போறாமாரி. அது ஏன்னா, எதுன்னு உங்கள நினைச்சு புடிச்சு வச்சுருக்கீங்களோ, அது கரைஞ்சு போயிருது இல்லையா. அது பிரசவம் மாதிரி தான். அந்த பிரச்சனை எல்லாம் எதுவுமே இல்லாம,அவ்வளவு ஸ்மூத்தா அதுக்குள்ள போய் ,எடுத்துட்டு வருவாரு. தாயின் மடியெனதாங்கி, தந்தையின் வேலையான தயார்படுத்துதலை செய்தார். அப்பாவோட வேல பயிற்சி. அம்மாவோட வேல அணைக்கறது. ரெண்டையும் அவ்வளவு அருமையா பண்ணாரு. உங்களுக்கு எல்லாம் அருணகிரியோகீஸ்வரர் யாருன்னு அறிமுகம் பண்ணிறேன். திருவண்ணாமலைல கருவறைக்கு பின் பக்கத்துல,அவருடைய ஜீவ சமாதி இருக்கு. பெரிய ஷக்தி மண்டலம் அதாவது ஷக்தியினுடைய அடிப்படை அந்த இடம். சிவா பெருமானே திருமேனி தாங்கி, அருணகிரியோகீஸ்வரரா திருவண்ணாமலைல இருக்காரு. அவருடைய ஜீவ சமாதி. அவருடைய ஜீவ சமாதி, திருவண்ணாமலைல அண்ணாமலையாருடைய கருவறைக்குப்பின் பக்கம் இருக்கு.எத்தன பேர் பாத்துருக்கீங்க.நல்லது. அடுத்த தரவ திருவண்ணாமலை கோயிலுக்கு போனா தவரவிற்றாதீங்க .பார்த்து தரிசனம் பண்ணிட்டு வாங்க. இந்த(சமாதி படத்தை காண்பித்து) மண்டபத்துக்கு கீழ அவருடைய ஜீவ சமாதி இருக்கு.அதாவது அவருடைய திருமேனி,இந்த மண்டபத்துக்கு கீழ ஒரு குகை மாதிரி இருக்கு, அதுல எடுத்துட்டு போய்தான், நேரா அண்ணாமலையார் லிங்கத்துக்கு கீழ வச்சுருக்காங்க. திருமேனி அண்ணாமலையார் லிங்கத்துக்கு கீழதான் இருக்கு. பொதுவா என்ன பண்ணுவாங்க, அந்த ஞானிகள் இருக்கும் பொழுதே கோயில் கட்டறதுனால,இவர்கள் உடம்ப விட்டபிறகு,அந்த மூர்த்திய நகர்த்தி,திருமேனிய வச்சு ,திரும்ப வச்சு பிராண ப்ரதிஷ்ட பண்றதுக்கெல்லாம் வேர யாராலையும் முடியாதுங்கறதுனால, திருமேனிய தொடாமலேயே தனியா ஒரு சுரங்கம் வச்சு,அதுல எடுத்துட்டு போய் உடம்ப வச்சுர்ற மாதிரி பண்ணுவாங்க. இப்போ பிடதிலியும் அப்படிதான் பண்ணிட்ருக்குறேன். யாரும் லிங்கத்த அசைக்கவோ எதுவுமே பண்ண வேண்டியதில்ல. சாமியோட திருமேனிய வைக்கணும்னா.பிற்காலத்துல, ஜஸ்ட் தனியா ஒரு சுரங்கப்படிக்கட்டு இருக்கும்,அத அந்த பலகைய திறந்தா போதும், அழகா எடுத்துட்டு போய் உள்ள வச்சுற முடியும். இந்த மண்டபத்துக்கு கீழ தான் அந்த சுரங்கம்,அந்த படிக்கட்டு எறங்குது,எடுத்துட்டு போய் அந்த மூலவருடைய, திருமேனிக்கு கீழ, அதாவது மூலவருடைய லிங்கத்துக்கு கீழ, இவருடைய திருமேனி ஜீவ சமாதில இருக்கு.எல்லாப்பெரிய கோயில்லையும், இந்த மாதிரி கர்ப்ப மந்திருக்கு பின் பக்கம், அந்த ஜீவ சமாதிக்கான படிக்கட்டு இருக்கும். தஞ்சாவுர்ல பாத்திங்கன்னா கருவுரார்து இருக்கும்.அந்த மண்டபத்துலேர்ந்து தான் அந்த சுரங்கம் போகுது,அந்த திருமேனிய எடுத்துட்டு போய் அவருடைய ப்ரஹதீஸ்வர்க்கு கீழ சாத்தி வச்சுருக்கு. அதே மாதிரி மதுரைல்ல,சுந்தரர் எல்லாம் வல்ல சித்தர் சந்நிதின்னு இருக்கும். அந்த சந்நிதிக்கு கீழ தான்,அந்த சுரங்க படி போய்,சொக்கநாதருக்கு கீழ,சோம சுந்தரருக்கு கீழ,சொக்கநாதருடைய அந்த திருமேனி இருக்கு. எல்லாப்பெரிய ஆலயங்கள்ளேயும்,பக்கத்துலையே அந்த ஞானியினுடைய, அந்த இறைவன் திருமேனி தாங்கி வந்து,அந்த திருமேனிய விடும்பொழுது,வைக்கிற அந்த ஜீவ சமாதி மண்டபம் இருக்கும். இதுக்கு கீழஅந்த படிக்கட்டு இருக்கு,எடுத்துட்டு போய்,உள்ள வச்சுருக்காங்க,அவருடைய திருமேனிய. மீனாட்சி சந்நிதிக்கும் அதே மாதிரி தான்,பக்கத்துலேயே அந்த கர்ப மந்திருக்குல்லையே பக்கத்துல ஒரு சின்ன பள்ளம் இருக்கு. பள்ளம்னா ஒரு சின்ன அரை மாதிரி இருக்கு .இப்போ பள்ளி அரையா உபயோகம் பண்றாங்க.அந்த பள்ளியறையா உபயோகிக்குற அரையோட தரப் பலகையதறந்தா, அந்த படிக்கட்டு இருக்கு. எடுத்துட்டு போய் வச்சது. மீனாட்சி பெரிய திருமேனி,எட்டர அடி உயரம்.

Photos


Nithya Kriya Yoga Day-2

Nithya Kirthan http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-01jan-24th-nithyananda-diary_IMG_0663_bidadi-satsang-kirthan_0.JPG Yoga session for NKY (Nithya Kriya Yoga) Participants Breakfast for NKY (Nithya Kriya Yoga) Participants http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-01jan-24th-nithyananda-diary_IMG_0682_bidadi-nky-day-2-breakfast.JPG Swamiji during the NKY session http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-01jan-24th-nithyananda-diary_IMG_0712_bidadi-nky-day-2--session-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-01jan-24th-nithyananda-diary_IMG_0713_bidadi-nky-day-2--session-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-01jan-24th-nithyananda-diary_IMG_0723_bidadi-nky-day-2--session-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-01jan-24th-nithyananda-diary_IMG_0738_bidadi-nky-day-2--session-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-01jan-24th-nithyananda-diary_IMG_0748_bidadi-nky-day-2--session-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-01jan-24th-nithyananda-diary_IMG_0749_bidadi-nky-day-2--session-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-01jan-24th-nithyananda-diary_IMG_0753_bidadi-nky-day-2--session-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-01jan-24th-nithyananda-diary_IMG_0754_bidadi-nky-day-2--session-swamiji.JPG

Video - Nithyananda Times - 24th January, 2015