15 ஜூலை 2006 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தினமலர், தினமணி, தமிழ் முரசு


நிகழ்வு

நிகழ்வின் சாரம்: "உலக அமைதிக்காகவும், சேலம் மற்றும் தமிழகத்தில் குற்ற எண்ணிக்கையை குறைக்கவும், மனிதர்களின் மனநிலையை மாற்றி ஒழுங்குபடுத்தவும் தியானபீடம் சார்பாக சேலம் மாநகரில் நடத்தப்படும் மஹாசப்தயாகம்"

நாள்: 15 ஜூலை 2006

தலைப்பு: ஆன்மிக குரு பரமஹம்ஸ நித்யானந்தர் பங்கேற்கும் மகா சப்தயாகம் சேலத்தில் நாளை துவக்கம்


"மஹாசப்தயாகம் சேலத்தில் 3 நாட்கள் நடக்கிறது . தியானபீடம் சார்பில் யாகம் - குபேர பூஜை - பரமஹம்ஸ நித்யானந்த சுவாமிகள் கலந்து கொள்கிறார்கள்.

நடைபெறும் நாள்: 16, 17, 18 - ஜூலை 2006
இடம்: சேலம், அம்மாப்பேட்டை, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடல் .

16 ஜூலை, 2006:

மாலை 3 மணி: ஆனந்தா இறக்கம், காமராஜர் சிலையிலிருந்து ஊர்வலம் துவங்கி முக்கிய தெருக்களின் வழியாக சென்று விழா நடைபெறும் அம்மாபேட்டை மாநகராட்சியில் அடைதல்.

7.30 - 8 .30 மாலை: கணபதி ஹோமம்
8.30 - 9. 30 மாலை: ஆனந்த உரை

17 ஜூலை, 2006:

காலை
9 - 11: ஸ்கந்த ஹோமம்
11.30 - 1.30: சூரிய ஹோமம்
மாலை
4 - 6: விஷ்ணு ஹோமம்
6 - 7: 108 குரு ஹோமம்

18, ஜூலை, 2006:

காலை
9-11: தேவி ஹோமம்
11.30 - 1.30: ஆனந்தீஸ்வரர் ஹோமம்
மாலை
4 - 6.30: சத்குரு ஹோமம்
7 - 8: குபேர பூஜை
9 மணிக்கு: தமிழ்நாடு தியானபீட பூஜை

7 சக்கர தெய்வங்களுக்கான 7 சிறப்பு யாக குண்டங்களும், குபேர பூஜைக்காக 21 யாக குண்டங்களும், குரு ஹோமத்திற்காக 108 யாக குண்டங்களும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது

பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் மக்களின் உடல் நோய்கள், மன நோய்கள் நீங்கவும், வாழ்வில் ஊக்கமும் உற்சாகமும் பொங்கும் ஆனந்த வாழ்வை அடையும் வகையில் இந்த மஹா சப்தயாகத்தை நிகழ்த்துகிறார் எனும் செய்திகளை தியானபீடத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்."

15 ஜூலை 2006

15 ஜூலை 2006 - பத்திரிகை செய்தி



வெளியீடு

வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம்: உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர்

நாள்: 15 ஜூலை 2006

தலைப்பு: எங்கே ஓடுகிறீர்கள்?


"மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் 'உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர்.

15 ஜூலை 2006 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 'எங்கே ஓடுகிறீர்கள்?' எனும் தலைப்பில்வாழ்க்கையில் பரபரவென்று ஓடிக்கொண்டிருக்கும் நீங்கள் சற்று நிதானித்து வாழ்க்கையில் எந்த சிந்தனை ஓட்டத்தில் இருந்து செயல்படுகின்றீர்கள் என்பதை நிதானமாக பாருங்கள். தெளிவில்லாத எண்ண நிலையிலிருந்து தெளிவான சிந்தனைக்கு வாருங்கள், அதன்பிறகு உங்கள் ஓட்டத்தை தொடருங்கள் என்ற அறிவுத் தெளிவை தந்து, ஆன்ம பலம் தரும் ஆன்மிக ஞானத்தையும், ஆனந்தமான வாழ்வு வாழ்வதற்கான அருட் சிந்தனைகளையும் வழங்கினார்."

15 ஜூலை 2006

15 ஜூலை 2006 - பத்திரிகை செய்தி