14 ஜனவரி 2018 வளப்படுத்தும் பிரசுரம்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வளப்படுத்தும் பிரசுரம்

"18-வது ஆண்டு துவக்க விழாஅழைப்பிதழ்"


வருடம் :2018

நாள் :14 ஜனவரி 2018

நாட்கள் : ஒரு நாள்

நிகழ்வு : 18-வது ஆண்டு துவக்க விழாஅழைப்பிதழ்

பங்கேற்பாளர்களின் விபரம் : பொது மக்கள்

நிகழ்வின் பெயர் : ஆண்டு விழா

நடைபெற்ற இடம் : நித்யானந்த பீடம்,ஆதி நித்யானந்தேஸ்வரதேவஸ்தானம்,காவேரிப்படித்துறை,ஈரோடு

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : நித்யானந்த பீடம்,ஆதி நித்யானந்தேஸ்வரதேவஸ்தானம்,காவேரிப்படித்துறை,ஈரோடு

நிகழ்வினை நடத்தியவர் : பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களிடம் தீட்சை பெற்ற சீடர்

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 1 லட்சம்

வளப்படுத்தும் பிரசுரத்தின் நோக்கம் :

" தனிமனித வாழ்க்கையையும் உலகையும் வளப்படுத்தும் பிரசுரம்:

ஒரு ஆன்ம உணர்வாக இந்த உலகத்திற்கு வந்து பிறந்த முழுமையான ஜீவன்கள் நீங்கள். உங்களை நித்யமான ஆன்ம உணர்வாக உணராமல், உணரும் வழித்தெரியாமல்... அநித்யமான உடலாகவும் மனதாகவும் உணர்வதால் உங்களைப்பற்றி நீங்களே பல தவறான கருத்துக்களை, அஞ்ஞானத்தை உருவாக்கிக் கொள்கின்றீர்கள். அதனால்தான் நீங்கள் என்ன முயற்சிகள் எடுத்தாலும், செயல்கள் செய்தாலும் அது வெற்றியை நோக்கி அழைத்து செல்வதில்லை.

நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைப்பற்றிய உணரும் தவறான கருத்துக்களை, அஞ்ஞானத்தை அழித்து உங்கள் வாழ்வில் உண்மையான வெற்றி பெறலாம். இந்துமதம் யுகம் யுகமாக எல்லா நிலையிலும் இருக்கும் உயிர்களும் உய்வு பெற வழிகாட்டுகிறது. இந்து மதத்தின் சாஸ்திரங்கள் அனைத்தும் குருவின் தீட்சையே அஞ்ஞானம் அழிவதற்கான ஒரே வழி என்றும் குருவின் உபதேசத்தால் மலரும் ஞானத்தெளிவே வாழ்வின் வெற்றிக்கு ஆதாரம் என்று தெரிவிக்கின்றன.

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் தம் பரம கருணையால் அனைவருக்கும் நல்வாய்ப்பினை அளிக்கின்றார். பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் உங்கள் ஒவ்வொருடைய வாழ்வும் வெற்றி பெற வழிகாட்டுகிறார்.

உங்களின் விழிப்புநிலையையும், செயல்படுநிலையையும், செயல்படு திறனையும் - இவைகளின் ஆழத்தையும், வேகத்தையும், அகலத்தையும் அதிகமாக்கி, நீங்கள் உயர் உயிர் விழிப்பு (Super Conscious Breakthrough - ஞானசக்தி அலை) நிலையில் நிலைபெறுவதற்கான தீட்சைகளையும், உபதேசங்களையும் பகவானே நேரடியாக அருள்கின்றார். தீட்சை பெற்ற சீடர்கள், சன்யாசிகள் மூலமாகவும் பல சேவைகள் புரிந்து வருகின்றார். தனிமனித வாழ்க்கையையும் உலகையும் வளப்படுத்தும் பகவான் நேரடியாக அருளும் தீட்சைகள் பற்றியும், உலகம் முழுவதும் இருமுணை காணொளி காட்சி வழியாக வழங்கும் நிகழ்வுகள் பற்றியும் உலக மக்கள் அறிந்து பயனடைந்திட 'கைலாஸா' அரசாங்கம் நல்வழிகளில் அறிக்கைகள் வெளியீடு செய்கிறது.

அச்சிடப்பட்ட பிரசுரங்களாகவும், மின்னணு பிரசுரங்களாகவும் தம் இணையத்தளம், சமூக வளைத்தளம் மூலமாக பகவானை பக்தர்கள் கண்டு உணர 'கைலாஸா' அரசாங்கத்தால் தகவல்கள் பகிரப்படுகின்றன.

பக்த சேவையில் தம்மை இணைத்துக் கொண்ட ஆர்வலர்களும் இத்தகவல்களை பகிர்கின்றனர். "


நிகழ்வின் விவரனை :

"புனித கங்கை நதிக்கு இணையாக கருதப்படும் காவிரிக் கரையில் 2001 ஆம் ஆண்டு சித்திரை 1 ஆம் நாள் தமிழ் வருடப்பிறப்பன்று வாழும் அவதார புருஷர் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களால் மிக சக்தி வாய்ந்த சிவலிங்கம் முதன் முதலாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் 18 ஆம் ஆண்டு துவக்க விழா 14 ஆம் நாள் ஏப்ரல் 2018 அன்று நடைபெற்றது. காலை 5 .30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியுடன் ஆரம்பித்து, பூஜை, இருமுனை காட்சி வழியாக சுவாமிஜியின் சொற்பொழிவு, ருத்ர அபிஷேகம், அன்னதானம், காவேரி ஆரத்தி மற்றும் மாலை 5 .30 மணிக்கு திருவிளக்கு பூஜையுடன் இனிதே நிறைவு பெற்றது. அங்கு நடைபெறும் திருவிளக்கு பூஜை, இலவச யோகா பயிற்சி, சுவாமிஜியின் சத்சங்கம், ஒரு நாள் கல்பதரு தியான முகாம், இலவச குருகுல கல்வி மற்றும் தியான சிகிச்சை பற்றிய விவரங்கள் மக்களுக்கு அளிக்கப்பட்டது. "

14 ஜனவரி 2018

14 ஜனவரி 2018 - வளப்படுத்தும் பிரசுரம் (Enriching and Enreaching Material)