12 ஜனவரி 2009 கோடிக்கண் ரத யாத்திரை

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

நிகழ்வு

வருடம் :2009

நாள் :12 ஜனவரி 2009

எந்துனை நாட்கள் யாத்திரை திட்டமிடப்பட்டது : 32 நாட்கள்

நிகழ்வு : யாத்திரை

பங்கேற்பாளர்களின் விபரம் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களும், பகவானிடம் தீட்சை பெற்ற சீடர்களும் சேர்ந்து யாத்திரை செய்தனர்.

பயணித்த தூரம் : 1000 கிலோ மீட்டர் தூரம்

யாத்திரை துவங்கிய இடம் : கன்னியாகுமரி, தமிழ்நாடு, இந்தியா

நிகழ்வின் பெயர் : கோடிக்கண் ரத பாத யாத்திரை

நடைபெற்ற இடம் : கன்னியாகுமரி, தமிழ்நாடு, இந்தியா

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : நித்யானந்தபீடம், தமிழ்நாடு, இந்தியா

நிகழ்வினை நடத்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : ஒரு கோடி பக்தர்கள்

நிகழ்வின் விவரனை : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் உலக மக்களின் நன்மைக்காக கோடிக்கண் தரிசன ரத பாத யாத்திரை துவக்கி வைத்தார். ரத யாத்திரை கன்னியாகுமரியில் 12 ஜனவரி 2009 அன்று துவங்கியது. 15 பிப்ரவரி 2009 அன்று பிடதி வந்தடைந்தது. 32 நாட்கள் இந்த யாத்திரை செய்யப்பட்டது. 15கும் மேற்பட்ட முக்கிய நகரங்கள் வழியாக இரண்டுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடைபெற்ற இந்த ரத யாத்திரையை கோடிக்கணக்கான கண்கள் தரிசனம் செய்து பாக்கியம் அடைந்தது.

பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் கன்னியாகுமரி முதல் பிடதி வரையும் 15க்கும் மேற்பட்ட முக்கியமான நகரங்களில் தாமும் நடந்து இந்த யாத்திரையில் பங்கு கொண்டார். யாத்திரைக்கு இடையே நகரங்களில் கல்பதரு தியான முகாம் நடத்தினார்.

பகவானின் பக்தர்கள், சீடர்கள் 1000 கிலோமீட்டர் தூரம் நடந்தே பயணம் செய்தனர்.

ஒவ்வொரு நாளின் இறுதியிலும் தங்கும் இடத்தில் வசிக்கும் மக்களுக்கு தியானத்தைப் பற்றிய அறிமுகமும், தியான சிகிட்சையும் சீடர்களால் அளிக்கப்பட்டது.

ஆஜானுபாகுவாய் அமர்ந்து உற்சவ ஊர்வலம் தந்த ஶீ நித்யானந்தேஸ்வரி பராசக்தி சமேத ஶீ நித்யானந்த பரமசிவன் தங்களை தரிசனம் செய்த அனைவருக்குள்ளும் ஜீவன்முக்த தீட்சையை விதைத்தனர்.

2.5 டன்னிற்கு மேற்பட்ட எடையும் 7 அடிக்கு மேல் உயரமும் பெற்ற பிரம்மாண்டமான திருமேனிகளின் தரிசனம் செய்த அனைவருக்கும் இந்து மதத்தின் பிரம்மாண்டம், அதன் அறிவியல், அதன் கொண்டாட்டம் அனுபவமாக பரிமாற்றம் செய்யப்பட்டது. பக்தியால் கண்குளிர தரிசனம் செய்து, ஆடிப்பாடி தொழுது வணங்கிய பக்தர்களின் கர்ம வினைகளை பகவான் அவர்கள் ஆசிர்வதித்து அருளினார். யாத்திரையில் பங்கேற்ற அனைவருக்குள்ளும், தெய்வ திருமேனிகளை தரிசனம் செய்த அனைவருக்குள்ளும் பக்தியை, வாழ்க்கை மீதான நேர்மறை உணர்வை அருளினார். இதனால் உலகில் கூட்டு நேர்மறை சக்தி கூடியது.

இந்த திருமேனி தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் ஆதீனத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்கள்.


12 ஜனவரி 2009-வளப்படுத்தும் பிரசுரம்- படங்கள்


http://drive.google.com/uc?export=view&id=11FKskrC2D8GwU2kOomdjAtwsERl4x0Yn

http://drive.google.com/uc?export=view&id=1EkRcuVbH4iRSUMrWe79qPrv3gdZGz03h


பாத யாத்திரை தவத்தின் தாத்பரியம் :

பாத யாத்திரை 'பரமசிவத்துவத்தை' உணர்வதற்கான உயரிய யோகம், உயரிய தவம். இது உடலாலும், மனத்தாலும், உயிராலும் செய்யப்படும் தவம். பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களிடம் தீட்சை பெற்ற சீடர்கள் ஒவ்வொரு பிரம்மோற்சவத்தின்போது பாத யாத்திரை மேற்கொள்கின்றனர். பாத யாத்திரையினை மேற்கொண்டு மேலான நலன்களை பெறுகின்றனர்.

பரம்பொருள் பரமசிவன் ஈஸ்வர கீதையில் அருளிய உயரிய தவத்தின் 8 அங்கங்களும் பாதயாத்திரையில் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது...

'பரியும கிஞ்சைப் பழிதீர் பிரம

சரியந் தவந்திரு சந்தோட முண்மை

யுரியபொ றைதூய்மை யுண்டென்றி ருக்கை

யரியவி ரதத்துக் கங்கங்க ளாமால்...' - ஈசுவர கீதை (கூர்ம புராணம்) (சிவப்பிரகாசம் எனும் தமிழநுவாதம், அத்தியாயம் 11, யோகம் - கலிவிருத்தம் - 296 பாடல், ஶீ தத்துவராய சுவாமிகளின் பொழிப்புரை)

விரும்பத்தக்க அகிம்சையும், குற்றமற்ற பிரமசரியமும், தவமும், உண்டாகின்ற சந்தோஷமும், சத்தியமும், உரியதாயுள்ள பொறை ( க்ஷமை - திதிக்ஷ)யும், சரீரமனோசெளசமும் (தூய்மையும்), ஆஸ்த்திக்யமும் (நிலையானதுண்டு எனும் உறுதி) ஆகிய இவை அருமையான தவத்திற்கு எட்டு அங்கங்களாகும்.

பரம்பொருள் பரமசிவன் ஈசுவர கீதையில் உரைத்தவாறே தவத்தின் எட்டு அங்கங்களும் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் சீடர்களால் முழு சிரத்தையுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.

தவத்தின் மகோன்னதத்தை, பலனை அக்னி பகவான் உரைக்கின்றார்...

'தபஸோ ஹி பரம் நாஸ்தி தபஸா வின்ததே மஹத்

தபஸா க்ஷீயதே பாபம் மொததே சஹ தைவதை

தபஸா பிராப்யதே ஸ்வர்கஸ் தபஸா பிராப்யதே யஷ

தபஸா ஸ்வர்வமாப்போதி தபஸா வின்ததே பரம்'

பொருள்: தவத்தைவிடவும் பெரியது ஏதும் இல்லை. தவத்தினால் சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. தவத்தினால் பாவங்கள், கர்மங்கள் நிறைவு பெறுகின்றன. தவத்தினால் ஒருவர் கடவுளோடு ஒருங்கிணைகிறார். தவத்தினால் நற்பெயர், புகழ் மற்றும் அருள் பெறப்படுகின்றது. தவத்தினால் அனைத்தும் அடையப்படுகின்றது. தவத்தினால் உயர்ந்த பிரம்மநிலை வெளிப்படுத்தப்படுகின்றது.

அக்னி பகவான் தவத்தைப்பற்றி அளித்திருக்கும் தவத்தின் அனைத்து நற்பயன்களையும் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் யாத்திரை மேற்கொண்ட அனைவரும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட ஆசி வழங்குகின்றார். "

பாத யாத்திரையின் போது கடைப்பிடிக்கப்படும் அனுஷ்டானங்கள் :

கடைப்பிடிக்கப்பட்ட கிரியைகள்:

காலை பிரம்ம முஹூர்த்த வேளையில் துயிலெழுதல், வேம்பு சாறு பருகுதல் தவறாமல் கடைப்பிடிக்கப்படுகிறது.

பஞ்ச கிரியை முடித்துக் கொண்டு நித்ய யோகா, குரு பூஜை மற்றும் சிவ பூஜை, பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் சத்சங்கம் கேட்டு அவருடைய அருளாசி பெற்று நாளை துவங்குறது.

குருவின் பாதுகையை சிரசில் ஏந்தி ஒருவர் முன்நடக்க, மற்றவர்கள் பகவானிடம் பெற்ற மஹாவாக்கிய மந்திரத்தை அஜபா ஜெபமாக உச்சரித்துக் கொண்டோ அல்லது சப்தமாக உச்சாடனம் செய்தவாறோ நடத்தல். உலகாயுத சம்பந்தமான விஷயங்கள் எதையும் சிந்தனை செய்யாமல், தங்கள் முன் ரதத்தில் சென்று தரிசனம் அளிக்கும் பரமசிவ பரம்பொருளின் திருமேனியை பார்த்தவாறு ஆடிப்பாடி ஆனந்த கீர்த்தனைகள், பஜனைகள் செய்த வண்ணம் யாத்திரை செய்யப்படுகிறது. வரும் வழியெங்கும் பொதுமக்களுக்கு விபூதி பிரசாதமும், பகவான் அருளாசி வழங்கும் படமும், தியான சிகிட்சையும், ஆரத்தியும், பிரசாதமும் வழங்கப்படுகிறது. மாலையில் உணவு எடுத்துக் கொண்டு, சிறிது நேரம் கழித்து கடுக்காய் தூளும், விளக்கு எண்ணெய் எடுத்துக் கொள்ளப்படுகிறது.