09 ஜனவரி 2013 தியான முகாம்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

நித்ய கிரியா யோகா-தியான முகாம் (Meditation Programs)

வருடம்  : 2013

நாள் :09 ஜனவரி 2013

நாட்கள் : நான்கு நாட்கள் நடைபெறும் நித்ய கிரியா யோகம் தியான முகாம்

நிகழ்வு : தியான முகாம்

பங்கேற்பாளர்களின் விபரம் : பொது மக்கள் கலந்து கொண்டனர்

தியான முகாமின் பெயர் :நித்ய கிரியா யோகம் - தியான முகாம்

நடைபெற்ற இடம் : பிடதி, பெங்களூரு, கர்நாடகா, இந்தியா

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : நித்யானந்த பீடம், பெங்களூரு ஆதீனம்

நிகழ்வினை நடத்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 5000 நபர்கள்

வீடியோ

09 ஜனவரி 2013 தியான முகாம் - தமிழ்


தியான முகாம் _விவரனை

எழுதப்பட்டதன் நகல் (Transcript) :

நான்கு நாட்கள் நடைபெறும் நித்ய கிரியா யோகா வகுப்பில் இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் ஆசைப்பற்றி அருளிய சத்தியங்கள்.. உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.. எப்பொழுதுமே இக்கரைக்கு அக்கரைக் பச்சை என்றுதான் தெரியும்... ஆற்றில் ஒரு கரையில் இருந்து அடுத்தக் கரையைப் பார்த்தால் பச்சையாகத்தான் தெரியும்.

வாழ்க்கையில் எப்பொழுதுமே மற்றவர்கள் இருக்கின்ற இடம் ரொம்ப நல்லா இருக்கின்ற மாதிரிதான் தெரியும். பசுமையையும், தென்றலையும் பார்த்து அமர்ந்தீர்காளானால் உங்களுக்குள்ளே இருந்துகூட அமைதி வரலாம். ஆனால் பக்கத்தில் இருக்கும் காதலியால்தான் நினைத்து, 'ஓ! அவர்களுடன் இருந்தால் வாழ்க்கையே வசந்தமாக இருக்கும் என்று நினைத்து திருமணம் செய்துகொள்கிறோம். பிறகுதான் தெரியும் அது எங்கிருந்தோ வந்த ஆனந்தம்.. இங்கிருந்து வந்தது அல்ல!'

பல நேரங்களில் உள்ளுக்குள் இருந்து வருகின்ற சந்தோஷத்தை ஒரு பொருள், ஒரு நபர், ஒரு இடத்தின்மீது திணிக்கும்பொழுது ஏற்படுகின்ற உணர்வைத்தான் ஆசை என்று சொல்கிறோம்.

ஆசையில்கூட தவறில்லை, ஆனால் இந்த கான்ட்ராடிக்டிங்கான (Contradicting Desires) ஆசைகள்.. கான்ட்ராடிக்டிங்கான ஆசைகள்.. என்றால் சிலநேரத்தில் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று தோன்றும்.. சில நேரத்தில் எதுவுமே வேண்டாம் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு ஆசிரமத்திற்கு ஓடிப்போயிவிடலாம் என்று...சில நேரத்தில் தோன்றும் நிறைய மக்களுக்கு எல்லாம் நல்லது செய்ய வேண்டும் என்று.. சில நேரத்தில் என்ன செய்தாலும் நன்றிகெட்ட ஜென்மங்கள் இவர்கள் எதுவும் செய்யக்கூடாது. முடிந்தவரை பிடிங்கி நாமே வாழவேண்டும்.

நீங்களே யோசித்துப் பாருங்கள்.. இதல்லாம் உங்களுக்குள் வருவதுதான்.. குழப்பமான ஆசைகள், சுய முரண்பாடான ஆசைகள்.

உங்களுக்குத் தலைவலி சரியாகவேண்டும் என்றால், தலைவலி சரியாக வேண்டும், தலைவலி சரியாகவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டே இருந்தீர்கள் என்றால் தலைவலி இன்னும் ஆழமாகத்தான் போகும். ஏனெனில் தலைவலி, தலைவலி என்ற வார்த்தையை நினைத்துக்கொண்டே இருக்கின்றீர்கள்.. தலை நன்றாக வேண்டும் என்று நினைத்தால்தான் தலை நன்றாகும். முதலில் குழப்பமான ஆசைகள், பிறகு சுய முரண்பாடான ஆசைகள், பிறகு சிக்கலான ஆசைகள். சிக்கலான ஆசைகள் என்றால்,. திடீரென்று ஒரு கோடிரூபாய் பணம் வந்தால் ஒரு கட்டிலை வாங்கிப்போட்டு வாசலில் அமர்ந்து போகிற வருகின்றவர்களை எல்லாம் கேள்வி கேட்கலாம். உண்மை! இப்பொழுது அதற்கு என்ன செய்ய வேண்டும், லாட்டரி வாங்க வேண்டும்! லாட்டரி எத்துனை பேருக்கு அடிக்கும்? எல்லாம் சுக்கிர திசை இருந்தால் அடிக்கும்பா.. ஜோசிரைப் போய்க் கேட்பது.. சுக்கிரதிசை எப்பொழுது வருகிறது? லாட்டரியை வாங்கிவிட்டு வீட்டுக்கு வௌியில் படுத்துக்கொண்டே இருப்பது. நீங்கள் செய்த செயலுக்கும், உங்களுக்கு என்ன வேண்டுமே அது நடப்பதற்கும் ஏதாவது சாத்தியக்கூறு இருக்கிறதா? ஆனால் என்ன செய்வது..இந்தச் செயலாலேயே உங்கள் ஆசை நிறைவேறிவிடும் என்கிற குழப்பமான சிக்கலான மன நிலையிலேயே வாழ்வது.

அதாவது நீங்கள் செய்கின்ற செயல் நேரடியாக அந்த ஆசையைப் பூர்த்தி செய்யாது. ஆனால் இந்த செயலைச் செய்துகொண்டே கனவு கண்டு கொள்வது.

அரசியலில் பார்க்கலாம், ஒரு கவுன்சிலராக ஜெயித்துவிட்டாலே போதும், அடுத்து மந்திரியாகிவிடலாம், அதற்கடுத்து முதலைமைச்சராகிவிடலாம் என்று கனவு காணுவார்கள். இப்பொழுது என்னதான் ஆகியிருக்கின்றார்.. கவுன்சிலர் தான் ஆகியிருக்கிறார். எம்.எல்.ஏ சீட் வாங்க வேண்டும், பின் தேர்தலில் நிற்க வேண்டும், பின் தேர்தலில் ஜெயிக்க வேண்டும். பின் 5 வருடமாவது அப்பதவியில் இருக்க வேண்டும்.

இதுதான் சிக்கலான ஆசைகள். செய்கின்ற செயல் பலன் தராது என்று தெரிந்தும், தருகின்றது என்ற எண்ணத்தாலேயே சரியான முயற்சிகளைச் செய்யாமல் வாழ்க்கையைச் சிக்கலாகவே கழித்தல். இந்த மூன்று நிலை ஆசைகள்.. முரண்பாடான ஆசைகள்.. குழப்பமான ஆசைகள் சிக்கலான ஆசைகள்..

குழப்பமான ஆசைகள் என்றால்.. உதாரணம் சொன்னதுபோல.. வேலைக்குச் சென்று சம்பாதித்து வாழவேண்டும் என்று ஒரு நேரத்தில் தோன்றும்.. சில நேரத்தில் எல்லாத்தையும் விட்டுவிட்டு சாமியாராகிப் போய்விடலாம் என்று தோன்றும். இதுதான் குழப்பமான ஆசைகள்.

அடுத்து சுய முரண்பாடான ஆசைகள்.. தலைவலி சரியாகவேண்டும், சிகரெட் பிடிப்பதை விட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தால் விட்டுவிட முடியுமா? ஏனெனில் ஒவ்வொருமுறையும் சிகரெட்டை நினைக்கின்றீர்கள்.. அப்பொழுது என்ன ஆகும்? அந்த சுகம் நினைவிற்கு வரும், பின் செய்ய வேண்டும் என்கிற தூண்டுதல் அதிகமாகும். இவைகள்தான் சுய முரண்பாடான ஆசைகள்.

மூன்றாவது சிக்கலான ஆசைகள்.. நான் லாட்டரி டிக்கெட் கதை சொன்னது போல.. எதையோ அடைய நினைப்பது, ஆனால் வேறு ஒரு திசையில் சென்றுகொண்டிருப்பது - இவைகள்தான் சிக்கலான ஆசைகள்.

இதுமாதிரி உங்களுக்குள் இருக்கின்ற அந்த 3 நிலை ஆசைகளையும் முதலில் கண்டறிவோம். கண்டறிந்த பிறகு அதை எப்படி அதை்தாண்டி வாழ்க்கையை முழுமையாக்குவது என்று பார்ப்போம். இந்த ஆசைகளில் வாழ்க்கை சக்தியை வீணடிக்காமல். நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்.. ஒன்று ஆசை உங்கள் வாழ்க்கையை நிறைக்கும், இல்லை நீங்கள் ஆசையைப் பூர்த்தி செய்வீர்கள். நன்கு ஆழமாகக் கேளுங்கள்.. ஆசைகள் உங்கள் வாழ்க்யைப் பூர்த்தி செய்தால், உங்களால் அதைச் பூர்த்தி செய்ய முடியாது. நீங்கள் ஆசையைப் பூர்த்தி செய்தால் ஆசை உங்களைப் பூர்த்தி செய்யாது.

ஆழமாகக் கேளுங்கள்.. அதாவது நீங்கள் தலைவனாக இருந்தீர்களானால், வெற்றியடைந்தால் நீங்கள் உங்கள் ஆசையைப் பூர்த்தி செய்வீர்கள். பல நேரத்தில் உங்கள் ஆசைகள் அனைத்தும் உங்கள் மனதை நிறைத்து நீங்கள் இயங்காமல் உங்களை முடக்கி வைத்துவிடும். அது அடிமைத்தனமான வாழ்க்கை!

நீங்கள் உங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்கிறீர்களா? இல்லை உங்கள் ஆசை உங்களை நிறைக்கிறதா?

ஆழமாகக் கேளுங்கள்.. அதாவது நீங்கள் உங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்தீர்களானால் மிகுந்த வெற்றியடைந்துவிடுவீர்கள். நீங்கள் தலைவனாக இருந்து உங்கள் ஆசைகளை பூர்த்தி செய்துகொண்டே செல்வீர்கள். ஆனால் அது நடப்பதே இல்லை. உண்மையில் என்ன நடக்கிறது? ஆசைகள் தான் உங்களை வைத்து அழுத்துகின்றது. அதனால்தான் எதையுமே செய்யாமல், எந்த எண்ணமும் இல்லாமல் மந்தமாக இருக்கின்றீர்கள். முதலில் செய்யவேண்டியது என்ன வெனில், நீங்கள் உங்களுக்கேக் கொடுத்துக்கொள்கின்ற வார்த்தைகள், மற்றவர்களுக்கு அளிக்கின்ற வார்த்தைகள் இதை யோசித்து விழிப்புணர்வோடு கொடுக்கத் துவங்குங்கள். ஒரு சிறிய உதாரணம்..

சாதாரண சிறு சிறு விஷயங்களில்கூட.. நான் தினம்தோறும் யோகா, தியானம் இதெல்லாம் செய்யப்போகிறேன் என்று யோசித்தீர்கள் என்றாலே அது உங்களுக்கு நீங்கள் கொடுத்துக்கொள்ளும் வார்த்தைகள். நீங்கள் உங்களுக்குச் செய்துகொள்கின்ற சத்தியம் அது. ஒரு இரண்டுநாட்கள் அதைச் செய்யாமல் விட்டுவிட்டீர்கள் என்றால் உங்களுக்கே உங்கள் மீது இருக்கின்ற நம்பிக்கை போய்விடும்.

ஏனெனில் ஏந்த முடிவை எடுத்தாலும் ஏற்கனவே உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாததனால் உங்கள் வாழ்க்கையில் எந்த முடிவுமே நிஜமாக மாறுவதில்லை.

நன்றாக ஆழ்ந்து யோசித்துச் சொல்லுங்கள்.. எத்துனைப் பேருக்கு நீங்கள் எந்த முடிவெடுத்தாலும் உடனே உங்களால் அதைச் செய்துவிடமுடியாது என்கிற சுய நம்பிக்கையின்மை உள்ளிருந்து உடனடியாக மேலெழுகிறது? இதுதான் வாழ்க்கை.. அப்பொழுது நாம் எந்த முடிவெடுத்து என்ன உபயோகம்? பல நேரத்தில் ஏதாவது ஒரு விஷயத்தை கமிட் செய்த உடனேயே.. நமக்கே நம்மீது நம்பிக்கை இருப்பதில்லை. காரணம் என்னவென்றால் முட்டாள்தனமாக, விழிப்புணர்வின்றி நமக்கு நாமே வார்த்தைகளைக் கொடுத்துக்கொள்கிறோம். விழிப்புணர்வின்றியே மற்றவர்களுக்கும் வார்த்தைகளை கொடுக்கின்றோம்.

உதாரணத்திற்கு ஒரு நண்பரிடம் நாளை மாலை 8 மணிக்கு உங்களோடு டின்னர் சாப்பிட வருகிறேன் என்று சொல்லிவிட்டீர்களானால் உயிரேப் போனாலும் அதைப் பூர்த்தி செய்துவிட வேண்டும். ஆனால் என்ன.. நாம் அப்படி இருப்பதில்லை. நண்பன்தானே.. தப்பாக எடுத்துக்கொள்ள மாட்டான் என்று நினைப்பது. அவர் தவறாக எடுத்துக்கொள்வாரா? இல்லையா? என்பது வேறு விஷயம். வார்த்தைகளைக் கொடுத்துக் கொடுத்து அதைப் பூர்த்தி செய்யாமல் போகும்பொழுது உங்களுக்கு உங்கள்மீது இருக்கும் நம்பிக்கையும், உங்களை சுற்றியிருப்பவர்களுக்கு உங்கள் மீது இருக்கின்ற நம்பிக்கையும் அழிகின்றது.

வாழ்க்கையில் வெற்றி என்பது, உங்களுக்கு உங்கள் மீது இருக்கின்ற நம்பிக்கை, உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு உங்கள் மீது இருக்கின்ற நம்பிக்கை. அதுதான் வாழ்க்கையில் வெற்றி. என் வாழ்க்கையில் வெற்றியே ஒன்றே ஒன்றுதான்.. எனக்கு என் மீது இருக்கும் நம்பிக்கை, என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு என் மீது இருக்கும் நம்பிக்கை. அவ்வளவுதான். வாழ்க்கையில் எல்லாப் பெரிய நம்பிக்கையுமே உங்களுக்கு உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையும், உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையினாலும்தான் வரும்.

வாழ்க்கையில் மற்றவர்களுக்கு நீங்கள் கொடுக்கின்ற கமிட்மென்ட்- அதுதான் வார்த்தை. உங்களுக்கு நீங்களே கொடுக்கின்ற கமிட்மென்ட - அதுதான் எண்ணம். இது இரண்டையும் நீங்கள் தோல்வியடையச் செய்யும்பொழுது, அதை நிறைவேற்றாமல் போகப்போக.. உங்கள் வாழ்க்கையில் வெற்றி சுருங்குகின்றது.

உங்கள் வாழ்க்கையில் உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு நம்பிக்கை வராமல் உங்களால் எதையாவது சாதிக்க முடியுமா? சொல்லுங்கள்.

ஏனெனில் உங்கள் வாழ்க்கையின் எல்லா வெற்றியும் உங்களைச் சுற்றியிருப்பவர்களை சார்ந்து இருக்கின்றது. நீங்கள் தேர்வில் வெற்றியடைவது உங்கள் ஆசிரியரைச் சார்த்து இருக்கின்றது. உங்கள் பதவி உயர்வு உங்கள் முதலாளியை சார்ந்து இருக்கின்றது.

நீங்கள் நல்ல முதலாளியாக இருந்து வெற்றியடைவது உங்கள் வேலையாட்களைச் சார்ந்து இருக்கின்றது. நீங்கள் ஒரு நல்ல தாயாக வெற்றியடையவது உங்கள் மகனைச் சார்ந்து இருக்கிறது.

நீங்கள் ஒரு நல்ல மகனாகவோ, மகளாகவோ வெற்றியடைவது உங்கள் தந்தைத் தாயைச் சார்ந்து இருக்கிறது. அப்பொழுது உங்களின் எல்லா வெற்றியுமே உங்களைச் சுற்றியிருப்பவர்களை சார்ந்துதான் இருக்கின்றது. அப்பொழுது உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு உங்கள்மீது நம்பிக்கை இல்லையென்றால் வாழ்க்கையில் வெற்றி பெருவது சாத்தியமா? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.. ஒரு சிறிய உதாரணம்.. உங்கள் கணவனுக்கோ, மனைவிக்கோ கொடுத்த வார்த்தையை எப்படியாவது காப்பாற்றாமல் இருக்கலாம், உங்கள் சகோதரர்களுக்கு கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றாமல் இருக்கலாம், உங்கள் வாழ்க்கையில் யார் யாருக்கெல்லாம் நீங்கள் வார்த்தையைக் கொடுத்து காப்பாற்றாமல் இருக்கின்றீர்களோ. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. நீங்கள் உங்களுக்குக் கொடுத்துக் காப்பாற்றாமல் இருக்கின்ற வார்த்தைகள், சில நேரத்தில் ஒரு பெரிய மருத்துவராக வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே வார்த்தையைக் கொடுத்திருப்பீர்கள். ஆனால் கடைசியில் என்னவாயிருப்பீர்கள் கம்பவுண்டர் ஆகியிருப்பீர்கள்.

எத்துனைப்பேர் உங்களுக்கு நீங்களே கொடுத்த வார்த்தைகளை காப்பாற்றவில்லையே என்று வருத்தப்படுகின்றீர்கள் கை தூக்குங்கள்.

மற்றவர்களுக்கு கொடுத்த வார்த்தைகளை காப்பாற்றவில்லையே என்று வருத்தப்படுகின்றீர்கள் கை தூக்குங்கள். இன்னொரு முக்கியமான விஷயம் இந்த ஆன்மீகப் பெயர் வாங்கியவர்கள்.. சாமி.. இந்த பெயரை என்னால் சட்டரீதியாக மாற்ற முடியாத நான் திருப்பியளித்துவிடுகின்றேன் என்று சரணாகதி செய்துவிட்டீர்கள் என்றால் கூட வார்த்தையைக் காப்பாற்றியதற்கு சமம். ஏனெனில் காப்பாற்ற முடியாது என்பதையாவது சொல்லிவிட்டீர்கள் இல்லையா? அப்பொழுது அந்த நபர் அவருடைய வாழ்க்கையில் அடுத்த முடிவை எடுப்பார். உங்களை நம்பி உங்களைச் சார்ந்து இருக்க மாட்டார். கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற முடியவில்லை என்பதைச் சொல்லிவிட்டால்கூட அது நல்லது. ஆனால் அதைக்கூட நிறைவு செய்யாமல் இருந்தீர்கள் என்றால் உங்கள் மீது உங்களுக்கும், உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீது உங்களுக்கும் நம்பிக்கையே வராது.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள்.. உங்களுக்கு நீங்கள் கொடுக்கின்ற வார்த்தை, மற்றவர்களுக்கு நீங்கள் கொடுக்கின்ற வார்த்தை இவை இரண்டையும் ஆழமாக யோசித்து செய்யும்பொழுதுதான் ஆசைகளைச் தாண்டிய குழப்பமில்லாத வாழ்க்கையை வாழத்துவங்குவீர்கள். ஆசைகள் சார்ந்த குழப்பம் என்பது வேறு ஒன்று இல்லை - விழிப்புணர்வின்றி கமிட்மென்ட் கொடுப்பது. விழிப்புணர்வின்றியே பேசுவது, சிந்திப்பது. சிலபேர் என்னிடம் சொல்வார்கள்.. என் வாழ்க்கையையே உங்கள் காலின் சரணாகதி செய்துவிடுகிறேன் சாமி.. நீங்கள்தான் எனக்கு கதி!

நான்.. ‘ஒரு நான்கு நாட்கள் இருந்து ஆசிரமத்தில் இருக்கின்ற தோட்டதிற்கு எல்லாம் தண்ணீர் ஊற்றி சேவை செய்துவிட்டுப்போ அப்பா!’ என்றால்.. உடனேயே.. எனக்கு வீட்டில் வேலை இருக்கிறது என்பார்கள். அப்பொழுது வாழ்க்கையை சரணாகதி செய்தேன் என்று ஏன் புலம்புகிறாய்? பெரும்பாலான நேரங்களில் விழிப்புணர்வின்றியேப் புலம்பவது.

நாம் மற்றவர்களுக்குச் சொல்கிற வார்த்தைகள், நமக்குச் சொல்கிற வார்த்தைகள் எல்லாமே விழிப்புணர்வற்றது. அர்த்தமில்லாதது, பொருளற்றது. நிறைவில்லாதவை, நிறைவேற்றப்படாதவை, நிறைவேற்றவிரும்பாதவை. விழிப்புணரவின்றியே சிந்திக்கின்றோம், செயலாற்றுகின்றோம்.. ஒரு உதாரணத்திற்கு..

யாராவது ஒருவர் எனக்கு ஒரு வார்த்தையைக் கொடுத்துவிட்டு அதைச் செயல்படுத்துவில்லை என்றால், அல்லது செயல்படுத்த முடியவில்லை என்று சொல்லிவிட்டால்கூட அது நேர்மை. ஆனால் அதைக்கூடச் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு நான் என்ன வரம் அளித்தாலும் பலிப்பத்தில்லை. ஏனெனில் இணைப்பு பாலமே இல்லை!

அதே மாதிரிதான் உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு நீங்கள் ஒரு வார்த்தைக் கொடுத்து அதை நிறைவேற்றினால் நல்லது. இல்லை நிறைவேற்ற முடியாததை அவர்களிடம் சொல்லிவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இது இரண்டையும் செய்யாமல் இருந்தால் அவர்களால் உங்களுக்கு எந்தவிதமான ஒத்துழைப்பும் இருக்காது. அவர்களுடைய ஆசீர்வாதம் உங்கள் வாழ்க்கையில் பலிக்காது.

பல நேரத்தில் உங்கள் பெற்றோரை பலமாக உணர மாட்டிர்கள்.. காணரம் என்னவென்றால் அவர்களுக்கு கொடுத் வார்த்தைகளை பூர்த்தி செய்திருக்க மாட்டீர்கள். பூர்த்தி செய்ய முடியாது என்று அவர்களுக்கு சொல்லியும் இருக்க மாட்டீர்கள். முதலில் உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொண்ட வார்த்தைகளைப் பட்டியலிடுங்கள்.. அப்பொழுது உங்களின் ஒவ்வொரு எண்ணத்தையும் விழிப்புணர்வோடு சிந்திப்பது, பேசுவது, வாக்களிப்பது என்ற நிலைக்கு உயர்வீர்கள்.


படங்கள்


http://nithyananda.org/sites/default/files/photo-gallery/swami_4.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/puja_14.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/swami1_2.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/swami2.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/swami3_0.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/swami4_0.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/swami5_0.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/swami6_0.jpg http://nithyananda.org/sites/default/files/photo-gallery/video.jpg


தியானமுகாம்கள்_சாஸ்திர பிரமாணம்

"நமது சாஸ்திரங்கள் குருவின் உபதேசம் பெறும் ஒவ்வொரு ஜீவர்களும் பெறும் நன்மைகளை, மேன்மைகளை மிக அழகாக விளக்கியுள்ளது.

அறிவினோ டொன்றிநிற்குந் தமத்தொடு விகார மாங்கே

அறிவினிற் கலக்கு மென்று மணைந்துட னிற்கு மாகி

லறிவினுக் கநந்த கோடி கற்பம்வந் திறந்திட்டாலும்

பிறிவதற் காகு முத்தி யில்லையே பேசி லென்றும்

ஆத்மாவினோடு பொருந்தியிருக்கும் ( அறியாமையெனும்) தமசின் விகாரமானது, ஆத்மாவுடன் சம்பந்திக்கு மாயின், ( எப்போதும் கலந்து கூடவேயிருக்குமாயின்), அனந்த கோடி கல்பங்கள் உண்டாகி நாசமாயினும் ஆத்மாவிற்கு, அவ்வறியாமையினின்றும் வேறுபடுவது எனப்படும் மோக்ஷம் சொல்லில் கூட எக்காலத்தும் இல்லை. - ஆதாரம்: சாங்கிய யோகம், ஈஸ்வர கீதை ( கூர்ம புராணத்தில் உள்ளது)

கோடி கல்பங்களாக தொடரும் அஞ்ஞானத்தை அழித்து ஆத்ம ஞானத்தை நேரடியாக அருள்பவர் 'குரு' என்று குருகீதையில் பரமசிவனார் சொல்கின்றார்.

கூடாவித்யா ஜகந்மாயா தேஹஶ்சாஜ்ஞாத-ஸம்பவ:|

விஜ்ஞாநம் தத்ப்ரஸாதேந குரு-சப்தேந கத்யதே ||

ஜகத் காரணமாகிய மாயை, தேஹ காரணமான அவித்தை - இவ்விரண்டனுக்கும் மறைந்திருக்கும் அஞ்ஞானமே பிறப்பிடம். எவரது அருளால் ஒருவருக்கு நேரடியாக ஆன்மஞான அனுபவம் கிட்டுகிறதோ, அவரே குரு எனப்படுகிறார். - குருகீதை (பரமசிவனார் தேவி பார்வதிக்கு உபதேசம் செய்தது)

பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் உலக மக்களின் சர்வ துக்கத்திற்கும் காரணமாய் உள்ள அஞ்ஞானத்தை அழிக்கும்பொருட்டு குருவாய் வீற்றிருந்து நேரடியாக ஆத்ம ஞான உபதேசம் அளிக்கின்றார்.

தியாக முகாம்களில் தாமே நேரடியாக தீட்சை அளித்து, பரமசிவ ஞானத்தை உபதேசம் செய்கின்றார். தனிநபருக்குள் நிகழும் உணர்வு மாற்றங்களால் அவர்களது துக்கம், வன்முறை குறைந்து அமைதியும், ஆனந்தமும் பெருகுகிறது. இது உலகிற்கு அமைதியையும், ஆனந்தத்தையும் தருகிறது.

"