04 மே - 24 மே 2016 வளப்படுத்தும் பிரசுரம்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வளப்படுத்தும் பிரசுரம்

"""சுத்த அத்வைதம்"""


வருடம் :2016

நாள் :04 மே - 24 மே 2016

நாட்கள் : 21 நாட்கள்

நிகழ்வு : ""சுத்த அத்வைதம் தியான முகாம்""

பங்கேற்பாளர்களின் விபரம் : "பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்"

நிகழ்வின் பெயர் : "சுத்த அத்வைதம்"

நடைபெற்ற இடம் : "நித்யானந்த தியான பீடம், பெங்களூரு ஆதீனம், நித்யானந்த நகர், மைசூர் ரோடு, பெங்களூரு."

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : நித்யானந்த தியான பீடம், பெங்களூரு ஆதீனம், நித்யானந்த நகர், மைசூர் ரோடு, பெங்களூரு."

நிகழ்வினை நடத்தியவர் : "இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்"

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 1 லட்சம்

வளப்படுத்தும் பிரசுரத்தின் நோக்கம் :

"தனிமனித வாழ்க்கையையும் உலகையும் வளப்படுத்தும் பிரசுரம்"

ஒரு ஆன்ம உணர்வாக இந்த உலகத்திற்கு வந்து பிறந்த முழுமையான ஜீவன்கள் நீங்கள். உங்களை நித்யமான ஆன்ம உணர்வாக உணராமல், உணரும் வழித்தெரியாமல்... அநித்யமான உடலாகவும் மனதாகவும் உணர்வதால் உங்களைப்பற்றி நீங்களே பல தவறான கருத்துக்களை, அஞ்ஞானத்தை உருவாக்கிக் கொள்கின்றீர்கள். அதனால்தான் நீங்கள் என்ன முயற்சிகள் எடுத்தாலும், செயல்கள் செய்தாலும் அது வெற்றியை நோக்கி அழைத்து செல்வதில்லை.

நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைப்பற்றிய உணரும் தவறான கருத்துக்களை, அஞ்ஞானத்தை அழித்து உங்கள் வாழ்வில் உண்மையான வெற்றி பெறலாம். இந்துமதம் யுகம் யுகமாக எல்லா நிலையிலும் இருக்கும் உயிர்களும் உய்வு பெற வழிகாட்டுகிறது. இந்து மதத்தின் சாஸ்திரங்கள் அனைத்தும் குருவின் தீட்சையே அஞ்ஞானம் அழிவதற்கான ஒரே வழி என்றும் குருவின் உபதேசத்தால் மலரும் ஞானத்தெளிவே வாழ்வின் வெற்றிக்கு ஆதாரம் என்று தெரிவிக்கின்றன.

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் தம் பரம கருணையால் அனைவருக்கும் நல்வாய்ப்பினை அளிக்கின்றார். பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் உங்கள் ஒவ்வொருடைய வாழ்வும் வெற்றி பெற வழிகாட்டுகிறார்.

உங்களின் விழிப்புநிலையையும், செயல்படுநிலையையும், செயல்படு திறனையும் - இவைகளின் ஆழத்தையும், வேகத்தையும், அகலத்தையும் அதிகமாக்கி, நீங்கள் உயர் உயிர் விழிப்பு (Super Conscious Breakthrough - ஞானசக்தி அலை) நிலையில் நிலைபெறுவதற்கான தீட்சைகளையும், உபதேசங்களையும் பகவானே நேரடியாக அருள்கின்றார். தீட்சை பெற்ற சீடர்கள், சன்யாசிகள் மூலமாகவும் பல சேவைகள் புரிந்து வருகின்றார். தனிமனித வாழ்க்கையையும் உலகையும் வளப்படுத்தும் பகவான் நேரடியாக அருளும் தீட்சைகள் பற்றியும், உலகம் முழுவதும் இருமுணை காணொளி காட்சி வழியாக வழங்கும் நிகழ்வுகள் பற்றியும் உலக மக்கள் அறிந்து பயனடைந்திட 'கைலாஸா' அரசாங்கம் நல்வழிகளில் அறிக்கைகள் வெளியீடு செய்கிறது.

அச்சிடப்பட்ட பிரசுரங்களாகவும், மின்னணு பிரசுரங்களாகவும் தம் இணையத்தளம், சமூக வளைத்தளம் மூலமாக பகவானை பக்தர்கள் கண்டு உணர 'கைலாஸா' அரசாங்கத்தால் தகவல்கள் பகிரப்படுகின்றன.

பக்த சேவையில் தம்மை இணைத்துக் கொண்ட ஆர்வலர்களும் இத்தகவல்களை பகிர்கின்றனர்.

நிகழ்வின் விவரனை :

""கும்பமேளாவில் 21 நாட்கள் நடைபெற்ற, சதாசிவனின் மாண்புகளையும் சக்திகளையும் விழிப்பிக்க வைக்கும் சுத்த அத்வைதம் என்னும் தியான முகாமில், 70 விதமான ஆன்மீக சக்திகளை விழிப்படைய செய்வதற்கான 70 தியான தீட்சைகள் மற்றும் ஆசீர்வாதங்களை இந்து மதத்தின் தனிப்பெரும் ஜெகத் குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் அளித்தார். உலகிலேயே அதிக மக்கள் ஒன்று கூடி கொண்டாடிடும் ஒரே விழா - கும்பமேளா. சனாதன தர்மம், தன்னுடைய கம்பீரத்தையும், ஆற்றலையும், மகத்துவத்தையும், காலத்திற்கு அப்பாற்பட்ட தன் பவித்திரத்தையும், உவகையுடன் 'கும்பமேளா'வில் நம் ஒவ்வொருவரின் வழியாகவும் வெளிப்படுத்துகிறாள். மனிதகுலத்தின் கர்மங்களை கரைக்கும் சிம்ஹஸ்த கும்பமேளா மனிதகுலத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். சிம்ஹஸ்த கும்பமேளாவில் குரு உச்சத்தில் இருப்பார், அவர் அருளால் வாழ்வே உச்சத்திற்கு செல்லும். மனித விழிப்புணர்வில் மாற்றத்தை நிகழ்த்தும் தெய்வ நிகழ்வு ' கும்பமேளா"". சக்திவாய்ந்த புனித நதியில் சாஹி ஸ்நானம் செய்யும் போது, நதியின் தெய்வீக சக்தி நம் கர்ம வினைகளையும், குறை உணர்வுகளையும் நீக்கி, மன அமைதியையும், மங்கலத்துவத்தையும் அருள்கிறது. நித்யானந்த பீடத்துடன் இணைந்து கும்பமேளாவிற்கு வருகைதந்த பக்தர்கள், இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் பரிவாரங்களுடன் ஷிப்ரா நதியில் இரண்டு முறை சாஹி ஸ்நானம் செய்யும் வாய்ப்பு பெற்றார்கள்; மேலும், விழாவில் கலந்துகொண்ட கோடிக்கணக்கான மக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் செய்யும் பாக்கியத்தை பெற்றார்கள்.""

04 மே - 24 மே 2016

04 மே - 24 மே 2016 - வளப்படுத்தும் பிரசுரம் (Enriching and Enreaching Material)