02 பிப்ரவரி 2018 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

நெற்றிக்கண்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு எதிராக சதி செய்த லெனின் கருப்பனுக்கு எதிரான வழக்கில் ஜனவரி 22 2018 ல் கர்நாடக மாநிலம் ராமநகர மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் லெனின் கருப்பனுக்கு அழைப்பாணை விடுத்து உத்தரவிட்டுள்ளது.

நாள் :02 பிப்ரவரி 2018

தலைப்பு : பரமஹம்ஸ நித்யானந்தர் மீது பொய் வழக்கு தொடுத்த லெனின் கருப்பனுக்கு எதிராக நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு !!!

"நெற்றிக்கண் என்ற தமிழ் வார இதழிள் 02 பிப்ரவரி 2018 அன்று ‘பரமஹம்ஸ நித்யானந்தர் மீது பொய் வழக்கு தொடுத்த லெனின் கருப்பனுக்கு எதிராக நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு !!!’ என்ற செய்தி வெளியாகி உள்ளது.

பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு எதிராக சதி செய்து அவர் மீது பொய் வழக்கு தொடுத்தவனும் தொடர் கற்பழிப்பு குற்றங்கள் செய்தவனுமான லெனின் கருப்பனுக்கு எதிரான வழக்கில் ஜனவரி 22 2018 ல் கர்நாடக மாநிலம் ராமநகர மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் லெனின் கருப்பனுக்கு அழைப்பாணை விடுத்து உத்தரவிட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை முடித்து குற்ற அறிக்கையை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணைக்கு சமர்ப்பிக்க காவல் துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளது.

“கற்பழிக்க முயற்சி செய்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை மிரட்டல்” போன்ற குற்றங்களில் ஈடுபட்ட லெனின் கருப்பன் மீது செல்வி.புஷ்பா அவர்கள் கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய கடந்த மார்ச் 2013 ல் கர்நாடக உயர் நீதிமன்றம் காவல் துறையினருக்கும் உத்தரவிட்டிருந்தது. இந்த குற்றவழக்கு தொடர்பாக வழங்கியுள்ள உத்தரவில் குற்றங்கள் நடந்துள்ளதை கனம் நீதிமன்றத்தார் ஏற்றுக்கொண்டதுடன், இது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பாதுகாப்பு சட்டம் SC ST Act இன் கீழ் வரும் கடுமையான வழக்கு என்பதால் இவ்வழக்கை 2 மாதங்களுக்குள் முடித்துவைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது."

02 பிப்ரவரி 2018

02 பிப்ரவரி 2018 -பத்திரிகை செய்தி