01 டிசம்பர் 2018 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

மக்கள் பார்வை


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: கடந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய சில சத்தியங்கள்.

நாள் :01 டிசம்பர் 2018

தலைப்பு : எதிர்காலத்தை பிரகாசமாக மாற்றலாம் ! சுவாமி பரமஹம்ச நித்யானந்தர் அழைக்கின்றார் !

"மக்கள் பார்வை என்ற மாதம் இருமுறை வெளிவரும் இதழில் டிசம்பர் 01 2018 வருடம் “எதிர்காலத்தை பிரகாசமாக மாற்றலாம் ! சுவாமி பரமஹம்ச நித்யானந்தர் அழைக்கின்றார் !” என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி இருந்தது.

இதில் கடந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய நான்கு சத்தியங்களை பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய சத்சங்கத்தில் இருந்து தொகுக்கப்பட்டு இக்கட்டுரையின் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

கடந்த காலம் முடிந்து விட்டது, அதை மாற்றவே முடியாது என்று நினைத்தோம் என்றால் அது தவறான கருத்து. கடந்த காலம் கடந்து போயிருந்தாலும் அதைப்பற்றி நாம் வைத்திருக்கும் கருத்து உயிர்ப்போடு இருந்து நாம் எடுக்கும் முடிவுகளை பாதித்து கொண்டே இருக்கும். அதனால் கடந்த காலம் பற்றிய என்னத்தை மாற்றும் பொழுது நாம் எதிர்காலத்தை மாற்றி அமைக்கின்றோம். நம் எதிர்காலத்தை பிரகாசமாக மாற்றும் நுட்பமான பூரணத்துவ தியானமும் இக்கட்டுரையில் வழங்கபட்டுள்ளது."

01 டிசம்பர் 2018

01 டிசம்பர் 2018 -பத்திரிகை செய்தி



வெளியீடு

குடும்ப நாவல்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: தர்மம் மற்றும் கடவுள் பற்றி விளக்கும் கட்டுரை

நாள் :01 டிசம்பர் 2018

தலைப்பு : வேத ஆகமங்களின் சாரம்: 3 மனிதனின் தர்மம்

""குடும்ப நாவல் என்ற மாதம் இருமுறை வெளிவரும் இதழிள் டிசம்பர் 1 2018 வருடம் வேத ஆகமங்களின் சாரம்:3 - மனிதனின் தர்மம் என்ற தலைப்பில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய சத்சங்கத்தில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரை வெளியாகி இருந்தது. இதில் மனிதனின் தர்மம் மற்றும் கடவுளைப்பற்றி விளக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையின் இயற்கையான விதி என்பதையே சாஸ்திரம், தர்மம் என்று கூறுகின்றது. தனி மனிதனின் முதல் தர்மம் என்பது தன்னையும், உலகத்தையும், கடவுளையும் புரிந்து கொள்வதாகும். அதன் பிறகு வருவது நம் சமூக தர்மம், தேச தர்மம், குல தர்மம். அனைத்தும் கடவுளுக்கான மதங்கள் என்றால் மோதல்கள் இருக்காது என்பது மட்டுமல்லாமல் எதனாலும் கட்டுப்படுத்தப்பட முடியாத எல்லையற்ற ஆற்றலும் சக்தியும் கொண்டது ஒவ்வொரு கடவுளும் என்கின்ற புரிதலும் ஏற்படும்.

ஒருவரின் தர்க்கம் மிகவும் ஆழமானதாக இருக்கும்பொழுது எல்லையற்ற தன்மையை கிரகித்துக்கொள்ள முடியும்."

01 டிசம்பர் 2018

01 டிசம்பர் 2018 -பத்திரிகை செய்தி