September 23 2019-Tamil

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

Title

Satsang from The Supreme Pontiff of Hinduism HDH Bhagavan Nithyananda Paramashivam in Tamil


Transcript:

23RD SEPT 2019 EVNG TAMIL NITHYANANDA SATSANGH இன்றைய சத்சங்கத்தின் முழு எழுத்தாக்கம்! 23-செப்டம்பர்-2019

  • நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம்

நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பரியந்தாம் வந்தே குருபரம்பராம்…

  • உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்..

நான் என்னுடைய பக்தர்களுக்கும் சீடர்களுக்கும் நான் பேசுகின்றேன்.. உள்ளதை உள்ளபடி உள்ளிருந்து அப்படியே உரைக்கின்றேன்.. ஆழ்ந்து கேளுங்கள்..

  • இன்று காலையிலிருந்து அன்னை பராசக்தி பூமிக்கு கொண்டு வந்த ஞான விஞ்ஞான உயர்நிலை உயிர்களை மலர வைக்கின்ற அறிவியல் எனக்குள் பதிவிறக்கம் ஆகிக்கொண்டே இருக்கிறது.
  • ஆழ்ந்து கேளுங்கள், என்னுடைய பக்தர்களுக்கும் சீடர்களுக்கும் நான் பேசுகின்றேன்.
  • பரமசிவ பரம்பொருளின் பெருங்கருணையால் உயர்வான சத்தியங்களை உங்களுக்கு சொல்கின்ற அளவிற்கு அவர் எனக்கு பாதுகாப்பான சூழலையும் சுதந்திரமான இடத்தையும் அமைத்து கொடுத்துவிட்டார். அதனால் அவர் நம் மீது கொண்டிருக்கும் பெரும் கருணையின் காரணமாக உலகிற்கெல்லாம் செய்த இந்த பேரருளால்.. இந்த சத்தியங்களை அப்படியே உங்களுக்கு சொல்லுகின்றேன் ஆழ்ந்து கேளுங்கள்.
  • முழுமையாக கேளுங்கள்..

பரமசிவம் பரம்பொருள் அளித்து, பராசக்தி அன்னை காமாட்சியாக காஞ்சிபுரம் எழுந்தருளி உயர்ந்த ஞான விஞ்ஞான, பரமசிவஞானத்தை, பரமசிவ விஞ்ஞானத்தை அதாவது உயர்ந்த நிலையிலிருந்து சான்றோர்களை உருவாக்குகின்ற இந்த அறிவியலை பூமிக்கு கொண்டு வந்தாள்.

  • அதனால்தான் தொண்டை நாடு சான்றோருடைத்து என்று சொல்கிறது.

தொண்டை நாடு காஞ்சிபுரம்தான் தொண்டை நாடு. அன்னை பார்வதி தேவி பராசக்தி தொண்டை நாட்டில்தான் எழுந்தருளினார். உயர்ந்த சான்றோரை உருவாக்கும் அந்த அறிவியலை பரமசிவம் பரம்பொருளின் பேரருளால் எனக்குள் பதிவிறக்கம் ஆகிக்கொண்டு இருந்தது அதை கண்டேன்..

  • ஆழ்ந்து கேளுங்கள்.

இந்த அறிவியலை ஆழ்ந்து தியானித்து சிந்தித்து உள்வாங்கும் பொழுது எனக்குள் நான் தெரிந்துகொண்ட சத்தியங்களை இந்த உயர் ஞான சத்தியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

முதல் விஷயம்

உங்கள் உயிரை உயிர் உயிர்ப்பிக்கும் வார்த்தைகளை மட்டும் உங்களுக்குள் வாங்குங்கள். ஏனென்றால் நீங்கள் உங்களுக்குள் சிந்திக்கும் தியானிக்கும் வார்த்தைகள் உங்களுடைய உடலாகவே மலர்கின்றது.

The words You cherish in you, will become your muscles not only muscle memory.

  • நீங்கள் சிந்திக்கும் தியானிக்கும் வார்த்தைகள் எண்ண ஓட்டங்கள் உங்கள் உடலாக மனமாக மற்றும் உடல் நினைவாக மலர்கின்றது.

ஆழ்ந்த கேளுங்கள்..

  • அன்னை பராசக்தி முதல் ஞான விஞ்ஞானத்தை சான்றோரை செய்யும் ஞான விஞ்ஞானத்தை Subtle highest super conscious mutation - செய்கின்ற மிக உயர்ந்த DNA- வை உருவாக்குகின்றஇந்த இயற்பியல் வேதியல் உயிரியல்.
  • அதாவது இது ஒரு மிகப்பெரிய அறிவியல் இந்த துறை சார்ந்த நம்முடைய சைவ சித்தாந்த சாஸ்திரங்கள், சித்த மருத்துவம், ஞான ரசவாத நூல்கள் இவற்றை தாயார் பராசக்தி தாயார் பூமிக்கு கொண்டுவந்து தொண்டை நாட்டிலே உயிர்பித்து உலகிற்கு அளித்த மூன்று மிகப்பெரிய சம்பிரதாயங்கள்.

அதன்பிறகு அங்கிருந்து கொங்கு நாடு, சோழநாடு, சேர நாடு பாண்டிய நாடு என எல்லா இடங்களுக்கும் பரவியது உலகம் முழுவதுமே பரவியது. பராசக்தி தாயார் முதல்முதலாக கைலாயத்திலிருந்து காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளி அங்கிருந்த உலகத்திற்கு அளித்த அறிவியல் - சான்றோர் செய்யும் மாண்பு.

  • ஆகமங்கள் - ஞானபாதம் என்று வகுத்து வைத்திருக்கும் வித்யா பாதத்தின் சத்தியங்கள்,

யோகத்தின் - யோக சத்தியங்கள், சரியா பாதத்தின் - உண்மைகள், கிரியா பாதத்தின் - சாத்தியகூறுகள், சித்த மருத்துவம்.

  • Chemistry of highest possible conscious mutation is siddha tradition. Understand siddha tradition is not only bringing the medicine and curing diseases. Its hight powerful science for super conscious mutation
  • சித்த மருத்துவம் வெறும் உடல் ஆரோக்கியத்தை மட்டும் அளிக்கின்ற கலை அல்ல. உடல் ஆரோக்கியத்தோடு சேர்ந்து, உயிர் ஞான மலர்ச்சியை அளிக்கக் கூடிய மிக உயர்ந்த, மிக உயர்ந்த உயிர் ஞான வளர்ச்சியும் ஞான சக்திகளும், சாத்தியக்கூறுகளும் நமக்கு வளர்வதற்கான வேதியியல் தான் சித்த மருத்துவம் விஞ்ஞானம்.
  • அடுத்தது மூன்றாவதான ரசவாதம்..

The biology of super conscious mutation is alchemy science of siddha’s.

  • உயர் ஞான சத்தியங்களை வாழ்கின்ற, உயர் ஞான சத்தியங்கள் சாத்தியங்கள் சக்திகள் இவைகளை வைத்து இவைகளுக்கும், இவைகள் இருக்கும் எல்லா சாத்தியங்களையும் வாழ்ந்து உலகத்திற்கு அளிக்கக்கூடிய இந்த
  • விஞ்ஞானத்தின் உயிரியல். Biology component. அதுதான் alchemy science of Siddhas- சித்தர்களின் ரசவாதம் அறிவியல்.
  • நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் இதைப் பற்றி பேசும் பொழுதெல்லாம் என் கண்கள் எல்லாம் என்னை அறியாமல் நிறைகின்ற காரணம் அன்னை பராசக்தியின் பெருங்கருணை, அதுமட்டுமல்ல பரம சிவப்பரம்பொருள் இந்த விஞ்ஞானத்தை உலகத்திற்கு அருள வேண்டும் என்று பெருங்கருணையோட அளித்தது. தாயார் அதைத் தாங்கி பூமிக்கு கொண்டு வந்தது அதிலிருந்து எனக்கு அதை அளித்தல் என் குருமார்களின் கடும் உழைப்பு. அதற்காக இந்த மொத்த குருபரம்பரையில் நன்றியோடு வணங்குகின்றேன்.
  • லட்சக்கணக்கான தியாகிகள் தங்கள் வாழ்க்கையையும் மற்ற சுகபோகங்களை பல நேரத்தில் உயிரையும் தியாகம் செய்து உயிர்ப்போடு வைத்திருந்த அறிவியல் இந்த அறிவியல்.
  • இது முழுமையாக எனக்கும் கூட கிடைக்கவில்லை. குற்றுயிரும் குலை உயிருமாக எச்சமும் மிச்சமும், இருந்த சொச்சம் மட்டுமே என் கையில் கிடைத்தது.
  • உயிரை துச்சமென கருதி தன்னையே தியாகம் செய்த பெரும் தியாகிகளின் தியாகத்தால்தான் இந்த மிச்சம் கூட இருந்தது. என் கையில் கிடைத்த மிச்சத்தை உள்வாங்கி என் குருமார்கள் எனக்கு அருளிய ஞானத்தை வைத்து மனதிலே ஆராய்ந்து சீர்தூக்கி பார்க்கும் வேளையில் அன்னை பராசக்தி பெரும் கருணையினால் தான் இந்த அறிவியல் முழுவதும் எனக்குள் பதிவிறக்கம் செய்யும் நிகழ்வு நிகழ்கின்றது. நிகழ்வதை பார்க்கின்றேன்.
  • இந்த ZiKZaK buzzle மாதிரி All the pieces fitting together. அது நிகழ்வதை பார்க்கிறேன்.
  • நிச்சயமாக பல்லாயிரம் சித்த வைத்தியர் அவர்களின் சுகதுக்கங்களை மறந்து இந்த கருத்திற்காக, இந்த ஞானத்தை அறிவியலுக்காக தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்திருக்கிறார்கள்.
  • இந்த அறிவியல் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் எண்ணிலடங்கா தாக்குதல்கள். ஆயிரக்கணக்கான அறிவியல் சார்ந்த நூலகங்கள் எரிக்கப்பட்டன, அழிக்கப்பட்டன, இதை வாழ்வியலாக தெரிந்து வைத்திருந்தவர்கள் கொல்லப்பட்டார்கள், அழிக்கப்பட்டார்கள்.
  • உணவிற்கே வழியின்றி வறுமையில் வாட்டி அழிக்கப்பட்டார்கள். சிவாச்சாரியார்கள் சித்த வைத்தியர்கள் இவர்கள் மீது எல்லாம் நடத்தப்பட்ட தாக்குதல் சாதாரண தாக்குதல் அல்ல அது இந்து மதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.
  • கும்பகோணம் தஞ்சாவூர் பகுதிகளில் விஸ்வகர்மாக்கள், சிலைகள் ஆலயங்கள் வடிக்கும் ஸ்தபதிமார்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வறுமையில் போட்டும் அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து, அவர்களை அழித்து அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் சித்த வைத்தியர்கள், பாரம்பரிய சித்த வைத்திய ஞானத்தை தங்கள் வாழ்க்கையில் வைத்து கடைபிடித்துக் கொண்டிருந்த பாட்டிமார்கள் மற்றும் வைத்தியர்கள் கடைசியாக இப்போது இருக்கின்ற ஹீலர்பாஸ்கர் வரை இவர்கள் எல்லாரும் ஏதும் நடத்தப்படுகின்ற தாக்குதல் மத தாக்குதல் இந்து மதத்தின் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல் சாதாரண தாக்குதல் அல்ல. அவை இந்து மதத்தின் அறிவியல் மீது நடத்தப்படும் தாக்குதல்.
  • அதேபோல முப்போதும் திருமேனி தீண்டி இறைவனையே வாழ்க்கையாக வாழும் சிவாச்சாரியார்கள் மீது நடத்தப்படும் தாக்குதல். அவர்களை தாக்குவதும் அவதூறு செய்வதும் அவர்கள் மீது கலங்கம் கற்பிப்பதும், அவர்கள் மீது சட்ட ரீதியான போராட்டங்களை தொடுப்பது, சமூகரீதியாக அவர்களுடைய நட்புகளை அழிப்பது இவைகள் எல்லாமே மதத் தாக்குதல்கள்.

புரிந்து கொள்ளுங்கள் இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள்!

  • காஞ்சிபுரம் ஆலயத்தின் சிவாச்சாரியார் மீது பொய் வழக்கு தொடுத்து அவர் மீது நடத்தப்படும் தாக்குதல் மத தாக்குதல்.
  • முப்பொழுதும் திருமேனி தீண்டுவார் என்றால் என்ன சும்மாவா? நாள் கணக்காக வார கணக்காக மாதக்கணக்காக வருடக்கணக்காக ஆயுள் கணக்காக பெருமானே என்று திருமேனியைத் தீண்டிய வாழ்வது சுலபமான வாழ்க்கையா?
  • பல லட்சக்கணக்கானவர்களின் தியாகத்தால் இன்று மிச்சம் கொஞ்சம் மிச்சமிருக்கும் இந்த அறிவியலை உங்களோடு பகிர்ந்துகொள்ளும் முன் அந்த *எல்லா தியாகிகளையும் வணங்குகின்றேன். அவர்கள் எல்லோருடைய தியாகத்தையும் வணங்குகின்றேன்.
  • தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் சிதம்பரம் ஆலயத்தின் ஏதாவது ஒரு சிறு குறைகள் நடந்தால், அதை சரி செய்து கொள்வது தில்லைவாழந்தணர்களுடைய, தீக்ஷிதர்களுடைய உள் பிரச்சனை.

தில்லை சிதம்பர நடராஜர் ஆலயம் தில்லை வாழ் அந்தணர்களின் குடும்பச் சொத்து!

  • இந்த ஆலயத்தை நிர்வகிக்கும் பொறுப்பு வாழையடி வாழையாக தில்லைவாழ் அந்தணர்களுக்கு உரியது. அங்கு ஏதாவது சிறு குறைகள் நிகந்தால் தில்லை வாழ் அந்தணர்களை வணங்கி அவர்களிடம் விண்ணப்பம் செய்து கொள்வதற்கு மட்டும் தான் பக்தர்களுக்கு உரிமை உண்டு. தில்லை வாழ் அந்தணர்களை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை!
  • சைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் எல்லோருக்கும் முதல் நாயன்மார்கள்தில்லை வாழ் அந்தணர்கள்.
  • சுந்தரமூர்த்தி நாயனாரை விட நீங்கள் பெரிய சைவர்களாக மாறிவிட்டீர்களா?

சுந்தரமூர்த்தி நாயனார் பாடுகையில்..||தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்|| என்று தான் முதலில் துவங்குகின்றார். சைவர்கள் என்று சொல்லிக்கொள்வதற்கு முன் தில்லைவாழ் அந்தணர்களுக்கு அடியார்கள் என்று தில்லை வாழ் அந்தணர்களை வணங்குகின்றேன். மதிக்கின்றேன்.

  • ஏதாவது சிறு குறைபாடு ஆலயத்தின் நடைமுறையில் நிகழ்ந்திருக்குமானால் தில்லை வாழ் அந்தணர்களை பணித்தது அவர்ளிடம் வேண்டுகோள் வைப்பது மட்டும்தான் அவர்கள் செய்ய வேண்டிய வேலை. தில்லை வாழ் அந்தணர்களை அவமரியாதை செய்தது கேள்வி கேட்பதுதற்கு எந்த தகுதியும் என்ற சைவர்களுக்கும் கிடையாது. எல்லா சைவர்கள் தில்லைவாழ் அந்தணர்களுக்கு அடிமை!
  • எத்தனை தில்லைவாழந்தணர்கள் தன் உயிர் கொடுத்து சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை இன்று உயிரோடு வைத்திருக்கிறார்கள் இன்று நாம் தேவாரமும் திருவாசகமும், பாடுகிறோம் என்றால் இன்று நமக்கு அவற்றின் மிச்சமும், சொச்;சமும், எச்சமும் இருக்கிறது என்றால்.. அது தில்லை வாழ் அந்தணர்களின் தியாகம், அவர்களின் இரத்தம் அவர்களின் உயிர்!
  • இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள்!

சிவாச்சாரியார்களும், பிராமணர்களும் விஷ்வகர்மாக்களும், சித்த வைத்தியர்களும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து பாதுகாத்து வைத்த இந்த அறிவியல்.

  • நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். பழைய சைவம் சார்ந்த அன்னை பராசக்தி தாயார் உலகத்திற்கு கொண்டுவந்த இந்த அறிவியல், பரமசிவன் பரம்பொருள் பராசக்திக்கு அளித்து, பராசக்தி தாயே இந்த உலகிற்கெல்லாம் இந்த அறிவியல், நந்தியம்பெருமான் மூலமாக கொஞ்சமும், ஞான சுப்பிரமணியசாமி மூலமாக கொஞ்சமும், சனகாதி ரிஷிகள் மூலமாக கொஞ்சமும் பல்வேறு ருத்திரர்கள் மற்றும் வித்யேஷ்வரர்கள் மூலமாக கொஞ்சமும் இந்த அறிவியலை தாயார் உலகத்திற்கு தந்திருக்கின்றார்.
  • அவர்கள் காலம் தொடங்கி இன்றுவரை எத்தனையோ பேரின் உயிர் தியாகத்தால்தான் இந்த அறிவியல் இன்றுவரை உயிரோடு இருக்கின்றது.
  • சென்னையில் பிளாட்பார்மில் இந்த பழைய புத்தகங்கள் விற்கின்ற வயதான ஒரு நபர் இரு;ககின்றார்.. நான் எப்பொழுது சென்னை சென்றாலும் மயிலாப்பூரில் அவருடைய, கடை சாலை ஓரத்தில் இருக்கும் நான் எப்பொழுது சென்னை சென்றாலும் அவருடைய கடைக்குச் சென்று இந்த பழைய இந்து மதம் சார்ந்த புத்தகங்கள் என்ன இருந்தாலும் வாங்கிக் கொண்டு வரும் பழக்கம் இருக்கிறது.

பல பேர் உங்களுக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை ஒன்றரை வருடங்கள் நான் சென்னை மயிலாப்பூரில் இருந்து இருக்கின்றேன். சென்னை ராமகிருஷ்ண மடத்தில் பிரம்மச்சாரியாக இருந்தபொழுது ஒன்றரை ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றேன்.

  • தவறாமல் அவருடைய கடைக்குச் சென்று பழைய இந்து மதம் சார்ந்த புத்தகங்கள் இருந்தாலும் வாங்கிப் படிப்பது வழக்கம்.

இந்தக் காலத்தில் நிறைய அன்பர்கள் பக்தர்கள் அதற்கான சிறு சிறு பண உதவிகள் செய்வார்கள் அந்தக் கடை வைத்திருந்த முதியவர் ஒரு இஸ்லாமியர், ரொம்ப நல்ல மனிதர்.

  • கொஞ்ச நாள் கழித்து பணம் பற்றி கவலைப்படாமல், இந்த இந்து மதம் சார்ந்த எந்த புத்தகங்கள் வந்தாலும் அதை சேகரித்து ஒரு சணல் கயிறு போட்டு ஓரமாக வைத்து விடுவார்.
  • அப்பொழுது ராமகிருஷ்ண மடத்தில் பிரம்மச்சாரியாக இருந்ததனால் மொட்டை அடித்து குடுமி வைத்திருப்பேன். அதனால் குடுமி சாமியார் என்று அவரே எனக்கு ஒரு பட்டப்பெயர் வைத்து விட்டார்.
  • நான் சென்றவுடன் அந்த புத்தகக் கட்டை எடுத்துக் கொடுத்துவிடுவார், எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார். எதுவும் சொல்ல மாட்டார் இன்னமும் உயிரோடு இருப்பார் என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால் இது ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்; நடந்த ஒரு நிகழ்வு தான் அதனால் அவர் உயிரோடு இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
  • அந்தக் கடையில் அவர்கிட்ட இருந்து கிடைத்தது தான் நாம் இப்பொழுது படிக்கின்ற ஹிந்து பாக சாஸ்திரம் என்ற நூல்.

இந்து மதத்தில் சூப சாஸ்திரம் அதாவது சமையல் சார்ந்து சொல்லப்படுகின்ற எல்லா ஆதாரத்தையும் ஒன்று திரட்டி யாரோ ஒரு அந்தகாலத்து நாட்டுக்கோட்டை நகரத்தார் செட்டியார் அவர்கள் பதிவு செய்திருக்கின்றார். அதன் முதல் பக்கம் எல்லாம் காணாமல் போய்விட்டது பின்புறமாக அந்த புத்தகத்தில் இருந்து இந்த குறிப்பை வைத்துதான் நாட்டுக்கோட்டைச் செட்டியார் வெளியிட்ட புத்தகம் இன்று கண்டுபிடித்தோம்.

  • இந்த சூப சாஸ்திரத்தை சேகரித்து மொழிப்பெயர்த்து தமிழ் இந்து பாக சாஸ்திரம் என்று வெளியிட்டிருக்கிறார். அதாவது எப்படி உணவே மருந்தாக்கி வாழ்க்கையை நடத்துவது என்று?
  • அந்த புத்தகத்திலிருந்து குறிப்பை வைத்து தான் என்னுடைய உடலில் இருக்கின்ற நஞ்சை வெளியேற்றி, என்னை நானே சுத்தப்படுத்திக் கொள்வதற்கு அந்த உணவுமுறை மிகவும் உதவி செய்தது. அதாவது அந்த நூலில் 120 சூத்திர குறிப்புகள் உள்ளது..
  • புளி உடலுக்கு என்ன செய்யும்?

உப்பு உடலுக்குள் என்ன செய்யும்? வெல்லம் உடலுக்கு என்ன செய்யும்? இனிப்பு சுவையை தருகின்ற எல்லா பொருட்களும் உடலுக்கு என்ன செய்யும்? என்பதை பரமசிவம் பரம்பொருள் ஆகமத்தில் அருளியபடி அதை தமிழில் மொழிபெயர்த்து அளித்திருக்கிறார்கள்.

  • பல சூத்திரங்களின் மொழப்பெயர்ப்புகள் உண்டு மூல சூத்திரங்களுடன் இந்த மொழிபெயர்ப்பை எடுத்துப்பார்த்தால் 80 சதவிகிதம் அதிகமாக, அதாவது நேர்மையாக மொழிபெயர்ப்பு நடந்திருக்கின்றது. 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக நேர்மையாக மொழிபெயர்த்து நடந்தாலே அதை உண்மையான மொழிபெயர்ப்பு என்று நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் ஏனென்றால் மொழிபெயர்ப்பாளர்கள் இருவருக்கும் இருக்கின்ற இடைவெளியே 40 சதவிகிதம் இருக்கும்.
  • ஒரு வார்த்தையை ஒருவர் மொழிபெயர்ப்பதற்கும், இன்னொருவர் மொழிபெயர்ப்பதற்குமே உள்ள அந்த இடைவெளியை 40 சதவிகிதம் இருக்கும் என்பதனால் ஒரு மொழிபெயர்ப்பு நூல் 80 சதவிகிதம் மூல நூலோடு ஒத்துப்போனாலே அதை ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்று ஏற்றுக்கொள்வது அறிஞர்கள் மத்தியில் இருக்கின்ற வழக்கம் அப்படித்தான் ஏற்றுக்கொண்டாக வேண்டும் வேறு வழியில்லை. மிகுந்த நேர்மையோடு மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
  • இவர்கள் ஒவ்வொருவருடைய தியாகம்.

இந்த அறிவியல் இப்பொழுது அடுத்து தொடர்ந்து சத்தம் உங்கள் மூலமாக உங்களுக்கு நான் அழிக்கப் போகின்ற இந்த அறிவியல்..

  • புரிந்துகொள்ளுங்கள் எப்பொழுதுமே ஒரு அறிவியலைக் கற்கும் முன்பாக அந்த அறிவியலிறிக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தவர்களை வங்கி விட்டு தொடங்குவோம் அந்த அறிவியல் நமக்குள் செல்லும், இந்த எல்லா முன்னோர்களின் வார்த்தையினால் அந்த அறிவியல் நமக்குள் வளத்தை தரும் வாழ்க்கை விஞ்ஞானமாக வளரும்.
  • அந்த முன்னோர் தியாகத்தை நினைத்து பார்த்தால் எந்த அறிவியலும் நமக்கு பலன் தரும்.
  • அந்த காலத்திலே ஸ்மிருதியை செய்துவிட்டுதான் சாஸ்திர கற்றுக்கொள்ள துவங்குவார்கள்.
  • அது வெறும் சடங்கு அல்ல நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

சிறுவயதிலே என் குருமார்கள் இந்த அறிவியகளையெல்லாம் எனக்கு கற்றுக் கொடுக்கும் பொழுது அவர்கள் எனக்கு அளித்த புத்தகங்களையெல்லாம் புரட்டிப் பார்க்கும்பொழுது இந்த நான்கு சாதியினருடைய தியாகம் அளவற்றதாக இருந்திருக்கின்றது.

  • ஆதிசைவ வேளாளர்களும் - முதலியார்கள், சைவ பிள்ளை என்ற தலைப்போடு இருக்கின்ற இந்த ஆதி சைவ வேளாளர்கள்,

பட்டர்கள் குருக்கள் - என்று சொல்லக்கூடிய இந்த ஆதிசைவ சிவாச்சாரியார்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் - செட்டியார்கள் என்று சொல்லப்படுகின்ற நாட்டுக்கோட்டை நகரத்தார்கள். பிராமணர்கள் - ஸ்மார்த்தர்கள் பிராமணர்கள் என்று சொல்லப்படுகின்ற பிராமணர்கள்... கொங்கு வேளாள கவுண்டர்கள் - கொங்கு நாட்டில் வேளாண்மை செய்து வாழ்ந்த கொங்கு வேளாள கவுண்டர்கள்.

  • இந்த நான்கு இனத்தவர் உடைய பங்களிப்பு அந்த நூல்கள் அதாவது அந்த நூல்கள் எல்லாவற்றையும் பார்த்தீர்களென்றால் ஒன்று பதிப்பித்தவரும் அல்லது மறுபதிப்பு செய்தவரும் அல்லது எழுத்துப் பிழை பார்த்து சரி பார்த்தவரும் அல்லது தொகுத்த வரும் மொழிபெயர்த்தவரும், அதற்கு மூல சூத்திரங்களை தந்து உதவியது இவை எல்லாவற்றிலும் பார்த்தீர்களென்றால் இந்த நான்கு இனத்தின் பங்களிப்பு எல்லையில்லாத பங்களிப்பாக இருக்கின்றது.

அளவில்;லாத பங்களிப்பாக இருந்திருக்கின்றது.

  • மற்றவர்களின் பங்களிப்பு இல்லை என்று நான் சொல்லவில்லை, தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் இந்த நான்கு இனத்தவர்களின் பங்களிப்பு எல்லையில்லாத அளவிற்கு இருந்திருக்கின்றது.
  • பல்வேறு நூல்களையும் பார்த்தபொழுது என்னுடைய ஆதிசைவ குரு பாண்டுரங்கனார் அச்சாரியருடைய குறிப்புகள் இருக்கும்..

ஏற்கனவே ஒருமுறை சத்சங்கத்தில் அவரைப் பற்றி சொல்லி இருக்கின்றேன். நாள் தவறாது அவருடைய வீடு கீழ்நாத்தூர் என்கின்ற இடம்

திருவண்ணாமலையில், அப்பொழுதெல்லாம் அது ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த இடம் இது என்று சொல்வார்கள்.

  • அந்த கீழ்நாத்தூரிலிருந்து அண்ணாமலையார் கோவிலுக்கு.. தினந்தோறும் நடந்து வருவார் மூன்று கிலோ மீட்டர் தூரமாவது இருக்கும்.

கோவிலில் வந்து தேவாரம் திருவாசகம் இதையெல்லாம் பாடுவார், அதைப் பற்றி வகுப்புகள் எடுப்பார். அதுமட்டுமில்லாமல் ஒரு சிறு மாணாக்கர்கள் குழுவிற்கு தினந்தோறும்; கல்யாணசுந்தரேஸ்வரர் சந்நிதியில் தான் மாலை வேளைகளில் சைவசித்தாந்த சாஸ்திரங்களை சொல்லிக்கொடுத்தார். ஆனைகட்டி மண்டபம் என்று ஒரு மண்டபம் இருக்கும் சில நேரத்தில் அந்த மண்டபத்தில் உட்காருவார், சில நேரத்தில் விநாயகர் சந்நிதியில் உட்காருவார், சில நேரத்தில் அம்மன் சன்னதிக்கு முன் உட்காருவார்.

  • அந்த காலத்தில் கோவிலில் ஒரு பெரிய பேனர் எல்லாம் தட்டிக் கொடுப்பார்கள், ஒரு மைக் செட் ஏற்பாடு செய்து மார்கழி மாதத்தில் தேவாரம் திருவாசகம் திருப்பாவை திருவெம்பாவை போன்ற பாடல்களை பாடுவவார். மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை மட்டுமல்லாது தாயார் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்களை சேர்த்து கற்றுக்கொடுத்தார்.
  • மிக இனிமையான ஆச்சாரியன், இந்த ஞானம் இவர்கள் பல பேருடைய தியாகத்தை நாளில் உயிரோடு இருக்கின்றது மிச்சம் இருக்கின்றது எல்லாமே.

யாருடைய தியாகத்தையும் மறக்கக்கூடாது எத்துணை தில்லை வாழ் அந்தணர்கள் இளைஞர்கள் தங்கள் உயிரை கொடுத்து நடராஜரையும், சைவத்தையும் காப்பாற்றியிருக்கிறார்கள் எத்துணை கொடும் போராட்டங்கள் நடந்தும், வைப்பி என்கின்ற ஒரு தேவதாசி ருத்திரகன்னிகை நடராஜ பெருமானின் ஆத்மார்த்த பூஜை மூர்த்தியை காப்பாற்றுவதற்காக தன் உயிரையே கொடுத்து இருக்கின்றார்.

  • வரலாறுகளில் இதெல்லாம் இருக்கின்றது வைப்பி என்கின்ற தேவதாசிப் பெண் ருத்திரகன்னிகை ஆலயத்தில் பெருமானுக்காக நடனம் புரிந்து வாழ்ந்து வந்து தன்னுடைய இளமை, வாழ்க்கை, உயிர் அனைத்தையும் தியாகம் செய்து நடராஜப் பெருமானின் ஆத்மார்த்த மூர்த்தி பெட்டகத்தைம் காப்பாற்றி வைக்கின்றார். வெள்ளையம்மாள் என்கின்ற ஒரு பெண் ருத்ரகன்னிகை அவர்கள் உயிர் தியாகம் செய்து தான் ரங்கநாதர் ஆலயத்தில் காப்பாற்றி வைக்கிறார்கள்.
  • தயவு செய்து அந்த இனத்தை எல்லாம் அவதூறு செய்யாதீர்கள் பழிக்காதீர்கள் அவர்களெல்லாம் செய்த உயிர் தியாகத்தினால் தான் மிச்சம் கொஞ்சமாவது விஞ்ஞான அறிவியல் உயிரோடு இருக்கின்றது.

எனக்கு இன்னமும் நினைவு இருக்கின்றது இந்த இரண்டு நிகழ்வுகளை சொல்லி விடுகின்றேன் கேளுங்கள்!

  • நாராயணசுவாமி தாத்தா இன்று ஒரு சித்த வைத்தியர் பெரிய சித்தர்..

திருவண்ணாமலை திருமஞ்சன கோபுரத்திற்கு வெளியில் ஒரு விநாயகர் கோவில் இருக்கும் ஒரு நூறு அடி தூரத்தில் இருக்கும்.. அந்த விநாயகர் கோவிலிலேயே அமர்ந்திருப்பார்.

  • அந்த காலத்தில் இந்த சித்த மருந்தை எல்லாம் புதிது புதிதாக காம்பினேஷன் செய்து பார்த்தால் தன் மீது தான் சோதித்துப் பார்த்துக் கொள்வார்கள். ஒரு பெரிய வியாதி என்று ஒரு அன்பர்கள் இந்த தாத்தா காலில் விழுந்து அலைகின்றார்.
  • தாத்தா அந்த அன்பரின் முதுகில் தட்டி விட்டு, ‘’போடா! போடா ஒரு வாரத்தில் மருந்து செய்து வைக்கிறேன்’’ என்று சொல்லி அனுப்பிவிடுகிறார்.

பிறகு என்னை அழைத்துக் கொண்டு மலை மீது செல்கின்றார்.. அண்ணாமலை பரமசிவம் பரம்பொருளின் வடிவம்!

  • அது வெறும் மலை அல்ல, அண்ணாமலை ஸ்தூல சரீரம், பரமசிவம் பரம்பொருளின் மூல லிங்கம். சக்தி மண்டலம். மூல லிங்கம் மற்றும் மூலவர் லிங்கம் இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது.
  • நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்...

மூல லிங்கம் என்றால் Energy blue print மூலவர் லிங்கம் என்றால் Physical-ஆக இருப்பது. அண்ணாமலையை பொருத்தவரை அது சக்தி மண்டலம் மற்றும் Physical இரண்டுமே!

  • இந்த நாராயணசாமி தாத்தா, இவர் மலையில் பல இடங்களிலும் சென்று இந்த மூலிகைகளை எல்லாம் சேகரித்தார். பல நேரங்களில் பார்த்திருக்கிறேன் நாய்கள் வந்து இவரை வழி நடத்தும் அழைத்துச்செல்லும்.

அந்த நாய்களை அழைத்து தலைமீது சக்தி ஏதோ மந்திரம் போல சொல்லுவார்.

  • சொல்லிவிட்டு.. “டேய் கன்னு! என்று அதாவது என்னிடம் பேசுவது போலவே அந்த நாயிடம் பேசுவார். “டேய் கன்னு! அந்த தழை பேரை சொல்லி விட்டு எங்கே இருக்கு என்று சொல்லு” என்பார். அது அப்படியே வாசனை பிடித்துக் கொண்டே போகும் அவர் இந்த நாள் பின்னாடியே செல்வார் இவர் போகாமல் கொஞ்சம் முதுமை காரணமாக என்றார் என்றால் அந்த நாய் காத்திருந்து அழைத்துச் செல்லும் இவர் வந்த பிறகு தான் அது போகும் வெகு நாட்கள் வாழ்ந்தார். அது மாதிரி சென்று மூலிகைகளை எல்லாம் சேகரித்து இந்த காம்பினேஷனில் செய்துவிட்டார்.
  • செய்த பிறகு என்னை அழைத்து “டேய் தம்பி இதை நான் சோதிக்க வேண்டும் சாப்பிட போகிறேன் மூச்சு பேச்சின்றி ஆகிவிட்டேன் என்றால் இந்தக் கல்லை வைத்து என் முதுகெலும்பிற்கு கீழே தட்டு வந்துவிடுவேன்” என்றார். எனக்கு பயமாகிவிட்டது என்ன சொல்கிறார் தாத்தா?

செத்து போயிட்டினா என்ன செய்வது கேட்டேன்?

  • “டேய் அதெல்லாம் சாக மாட்டேன் டா சொல்கிறேன் இல்லையா?”

அது ஒரு கல் இந்த கலவையில் வைத்து மருந்து அரைப்பதற்ககாக வைத்திக்கும் கல். அதை என்னிடம் கொடுத்து இதை வைத்து “என் முதுகில் தண்டின் கீழ் 3 முறை தட்டு வந்து விடுவேன் என்றார். எனக்கு பயமாக போய் விட்டது” இல்லை இல்லை தாத்தா நீ பாட்டியை அழைத்து வா! என்றேன். பாட்டி என்று நான் சொல்வது குப்பம்மாள் பாட்டி! நீ பாட்டியை அழைத்து வா எனக்கு பயமாக இருக்கிறது நீ இறந்து விட்டால் நான் என்ன செய்வது?”

“அதெல்லாம் சாக மாட்டேன் விடுடா! என்று சொல்லி மருந்தை வாயில் போட்டு விட்டார்|| ஒரு பத்து நிமிஷத்தில் உண்மையிலேயே பேச்சு மூச்சு இன்றி இருக்கிறார். எனக்கு பயமாகி விட்டது!

  • சரி அவர் சொன்னது போல செய்து விடுவோம் என்று அந்த கல்லை எடுத்து அவர் முதுகில் மூன்று முறை டக் டக் டக் என்று தட்டினேன்.

இந்த கதவைத் தட்டினால் திறந்து வருகின்ற மாதிரி”|டேய் வந்துட்டேன் விடுடா!| என்று சொன்னார். எழுந்துவிட்டு.. உன்னை மெதுவாகத்தான தட்டச் சொன்னேன் ஏன்டா பழி வாங்குற?”என்கிறார்.

  • எனக்கா என் உயிர் போவது போல பயம் இறந்துவிட்டார் என்றால் யார் யாருக்கு பதில் சொல்வது?
  • பிறகு சொல்கிறார் இதெல்லாம் நம் மீதுதான் சோதித்து பார்க்க வேண்டும், இப்பொழுது நினைத்தால் சொல்வதற்கு வேண்டுமானால் காமெடி கதை போல இருக்கலாம் ஆனால் உண்மையில் என் இதயம் அவர்களையெல்லாம் நினைத்து நன்றி தெரிவிக்கன்றது!
  • ஒரே ஒரு நோயாளியின் மீது வைத்த அன்பிற்காக அந்த நோயாளி ஒன்றும் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் பணம் எல்லாம் கொடுத்து விடப்போவதில்லை, ஒரு வெற்றிலை பாக்கு வைத்து ஒன்னேகால் ரூபாய் தட்சணை வைத்து, சாமி உன்னால் என் உடம்பு சரி ஆயிடுச்சு! நல்லா இருக்கிறேன் ஆசீர்வாதம் பண்ணுங்கள் என்று ஆசீர்வாதம் கேட்பார் அவ்வளவுதான்! அந்த காலத்தில் தட்சிணை என்றால் 1.25 பைசா அவ்வளவுதான்! ஆனால் தன் காலடியில் வந்து சரணடைந்து விட்டானே என்கின்ற என்பதற்காக நோயாளி நோயாளியாக பார்க்காமல் சிஷ்யனாக பார்ப்பார்கள்.
  • சித்த வைத்தியர்கள் எல்லோருமே பார்த்தீர்களென்றால் வருகிற நோயாளியை சீடனாக பார்ப்பார்கள் அவர்களை தன்னுடைய வருமானத்தின் வழியாக பார்ப்பதில்லை. இந்த தாத்தா ஒரு நோயாளிக்காக தன்மீதே சோதித்து பார்க்கின்ற தியாகம்.
  • அதன் பிறகு இரண்டு நாள் கடுக்காய் பொடி எடுத்து எடுத்து வயிறை சுத்தம் செய்தார். நான் என்ன தாத்தா? என்று கேட்டேன்.

அந்த மருந்தின் பக்கவிளைவை சுத்தம் செய்ய வேண்டும் இல்லையா? அதுதான் என்றார்.

  • அவருக்கு நான்தான் சொம்பு தூக்குவேன் அதாவது கழிப்பிடம் செல்ல வேண்டும் என்றால் அந்த காலத்தில் கழிப்பறை கிடையாது. மலை ஓரமாக ஒதுங்குவார்கள்! அவர் தன்னை தூய்மைப் செய்துகொள்வதற்கு தண்ணீர் சுண்டி செம்பை நான் தான் தூக்கிச் செல்வேன். இரண்டு நாள் போனது போனபடி இருக்கின்றீர்களே!? என்றேன்.
  • திருவண்ணாமலையில் மேற்கு பக்கமாக இருக்கின்ற பே கோபுரம் மலை நோக்கியிருக்கும். அதனால் எல்லாரும் யாருக்காவது பேதி ஆனது என்றால் ஊரில் ஒரு வழக்குச்சொல் “என்ன மேற்கு வாசல் திறந்திருச்சா?” என்பார்கள். ஏனென்றால் மலை பக்கமாக ஒதுங்க வேண்டுமென்றால் இந்த மேற்கு பக்கமாக போகணும். ஊருக்கு மேற்குப் பக்கமாக ஒதுங்க வேண்டும். அதனால் கிண்டலாக கேட்பார்கள் மேற்கு வாசல் திறந்திருச்சா? என்று!
  • நான் அவரிடம் எனன் தாத்தா மேற்கு வாசல் திற்திருச்சா காலையில் இருந்து போயிட்டு இருக்க? அவர் "அதுவாடா கடுக்காய் பொடி சாப்பிட்டு வயிற்றை சுத்தம் செய்கிறேன் அந்த மருந்தின் பக்கவிளைவு வெளியில் செல்ல வேண்டும் இல்லையா அதனால்தான” என்றார். கடைசியில் அந்த மருந்தை அந்த நபருக்கு கொடுத்து அந்த நபர் நல்லா இருக்கிறார். முழுமையாக குணம் அடைந்து விட்டார். தியாகம் இவர்களுடைய தியாகம்.
  • அதே மாதிரி இந்த பாண்டுரங்கனார். அவர் அப்பொழுதே ஆசிரியராக இருந்து சம்பளம் வாங்கி நல்ல வசதியான வாழ்க்கையில் இருந்தவர்தான். ஒரு காலத்தில் தமிழ் ஆசிரியர்கள் எல்லோருமே சைவ சித்தாந்தத்தில் மிகுந்த புலமை உடையவர்களாக இருப்பார்கள்.

.

  • தமிழ்நாட்டின் மீது மிகப்பெரிய மதத்தாக்குதல் நிகழ்ந்து தமிழையும், சைவத்தையும் பிரித்து அழித்த அந்த மதத் தாக்குதல் நடப்பதற்கு முன்பாக இருந்த பல தமிழ் ஆசிரியர்கள் சைவத்தில் மிகுந்த புலமையோடு இருந்தவர்கள். பாண்டுரங்கனார் பெரிய தமிழ் ஆசிரியர் சைவத்தில் மிகுந்த புலமை கொண்டு இருந்தவர்.
  • தமிழும் சைவமும் ஒன்று என தமிழையும் சைவத்தையும் இரு கண்களாக வாழ்ந்தவர் .
  • ஆழ்ந்து கேளுங்கள் நல்ல வசதியான நிலையில் இருந்த ஆசிரியர்கள் என்றாலும் தினந்தோறும் அவராக ஆலயத்திற்கு வந்து சைவத்தை பரப்பியது மட்டுமல்லாமல் அவர் எனக்கு வகுப்பு எடுக்கும் பொழுது பார்த்திருக்கின்றேன் அந்த நூல்கள் எல்லாவற்றிலும் பின் குறிப்பு எழுதி வைப்பார்.
  • நான் கேட்பேன் “தாத்தா ஏன் இதை எழுதி வைக்கிறீர்கள்?” என்று

இல்லப்பா இந்த நூல் மறு பதிப்பு செய்கிறவர்கள், அப்பொழுது என்னை அணுகுவார்கள் அப்பொழுது இதிலிருக்கும் குறிப்புக்களை அவர்களுக்கு அளித்தால் அவர்கள் அதையும் சேர்த்து அடுத்த பதிப்பில் அச்சிடுவார்கள் என்றார்.

  • சைவ நூல்கள் பலவற்றிலும் அதனுடைய மறுபதிப்பிலும் அதனுடைய அடிக்குறிப்புகள், மேல் தெளிவுகளும், அடிக்குறிப்புகளும், நுண்பொருளையும், வரி விளக்கங்களை, உட்பொருள் கருத்துக்களையும் இவர் அளித்து உதவியதாக இவருக்கு நன்றி எழுதப்பட்டு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
  • அதேமாதிரி அவருடைய ஒவ்வொரு புத்தகத்திற்கு பின்புறம் ஒரு நாற்பது பக்க நோட்டுப் புத்தகம் என்று சொல்வார்கள் அந்த புத்தகத்தை பின்னாடி வைத்து தைத்து பைண்டிங் செய்வார்.
  • நான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு எதிரே ஜீவா அச்சகம் என்று ஒரு அச்சகம் இருக்கின்றது. இன்னமும் இருக்கும் என்று நினைக்கின்றேன் அந்த கால காலத்தில் இருந்தது, இப்பொழுது ஒருவேளை இருக்க வாய்ப்பு உள்ளது ஜீவா அச்சகம் என்று அதற்கு பெயர்.
  • இன்று உலகம் முழுவதும் நான் வைக்கின்ற நூலகங்கள் நித்யானந்தர் நூலகங்கள். இதுவரை 2 கோடி ஹிந்து மதம் சார்ந்த நூல்கள் உடைய Digitized Scanned பலபேரிடமிருந்து அவர்கள் அனுமதி பெற்று scanned digitised versionn சேகரித்து இருக்கின்றோம். இதை பல இடங்களில் அச்சு நூல்களாக செய்து கொண்டிருக்கின்றோம்.
  • அதாவது பல அன்பர்கள் அவர்களுடைய மொத்த சேகரிப்பை நகல் எடுத்துக் கொள்வதற்கும் digitised scan செய்து கொள்வதற்கும் நம்மை அனுமதித்தார்கள்.

அதுபோல அனுபவித்த நண்பர்களிடமிருந்து எல்லாம் சேகரித்த புத்தகங்கள் இரண்டு கோடி Digitised Scanne, Xerox மற்றும் ஓலைச்சுவடிகளில் நகலையும் உலகம் முழுவதிலும் இருந்து. சேகரித்து இருக்கின்றோம்.

  • நான்கு Beta byte material. உலகம் முழுவதிலும் இருந்து. சட்டப்படியாக சேகரித்து இருக்கின்றோம். ஒப்புகை சான்று சட்டரீதியாக பேப்பரில் கையெழுத்து பெற்று நான்கு Beta byte material உலகம் முழுவதிலும் இருந்து இந்துமதம் சார்ந்து இருக்கும் பல்வேறு மொழிகளில் பல்வேறு சாஸ்திரங்களை சேகரித்து இருக்கின்றோம். இவை எல்லாவற்றுக்கும் வேறுவேறு சம்பிரதாயங்கள்;படி வகுத்து தொகுத்து அச்சிட்டு நூலகங்களில் வைத்திருக்கின்றோம்.
  • இந்த எல்லா நூலகங்களிலும் ஜீவா அச்சகத்தினுடைய உரிமையாளரின் படத்தை நன்றிக்காக வைக்கப் போகின்றேன்.
  • ஏனென்றால் இந்த நூலகங்கள் அனைத்திற்கும் ஆணிவேர் அந்த ஜீவ அச்சத்தின் உரிமையாளர்.
  • அதாவது பிரிண்ட் பண்ணி பைண்ட் பண்ற அந்தளவிற்கு ரொம்ப எளிமையான சொற்ப வருமானம் இருக்கின்ற தொழிலை செய்து வந்தவர். வீட்டின் எதிரிலேயே இருந்ததனால் நெடுநாட்களாக அவர் குடும்ப நண்பர் மட்டுமல்ல என்னை முதலில் ‘சாமியார் பையா.. சாமியார் பையா’ என்றழைத்து எனக்கு இந்த ‘சாமியார்’ என்ற பெயர் வைத்தவர் அவர்தான்.
  • இந்த பாண்டுரங்கனார் தினந்தோறும் மாலையில் வீட்டிற்கு வருவார். இந்த அச்சகத்தில் அமர்ந்துகொள்வோம். வீட்டுக்கு எதிர்வீடு இந்த அச்சகம் என்பதனால், அச்சகத்தில் அமர்ந்து அவர்களுடைய நூல் அனைத்தையும் எடுத்து வந்து 40 பக்க நோட்டு புத்தகத்தை வைத்து கோணி ஊசியில் வெள்ளை நூல் வைத்து தைப்போம். அந்த அச்சகத்தின் உரிமையாளர்தான் எல்லா பொருளும் கொடுத்து உதவி செய்வார்.

இவர் பாண்டுரங்கனார் வயது முதிர்ந்தவர் என்பதால் அவருக்கு உதவுதற்காக உதவியாளனையும் அளிப்பார். அந்த புத்தகங்களை எல்லாம் பைண்ட் செய்து இந்த பின்குறிப்புகள் எடுத்துக் கொள்வதற்கு உதவுவார்.

  • இவர்கள் எல்லோருடைய தியாகம் இதுபோன்று என்னுடைய குருமார்கள் ஆச்சாரியார்கள் எனக்கு அளித்த பல்வேறு அறிவு அறிவு உழைப்பின் குறிப்புகள் பல நூல்களையும் இதுபோல சேகரித்து வைத்த பல அறிவிப்பு நோட்டு புத்தக குறிப்புகளையும் படுபாவிகள் 2010ல் என்னை உயிரோடு கொளுத்த முயற்சி செய்த பொழுது கொளுத்து விட்டார்கள் அதில் பெரும் பங்கு அழிந்துவிட்டது. இழந்துவிட்டோம்.

2010ல் என்னை உயிரோடு கொளுத்த வேண்டும் என்பதற்காக என்னுடைய ஆசிரமத்தில் குடிலில் உள்ளே தீ வைத்து வெளியில் பூட்டி கொளுத்த முயற்சி செய்தபொழுது பரமசிவன் பேரருளால் காலபைரவர் காப்பாற்றிவிட்டார். ஆனால் என்னை மட்டும்தான் காப்பாற்றிக் கொள்ள முடிந்ததே தவிர என்னுடைய அறிவு உழைப்பைக் காப்பாற்ற இயலவில்லை. இது வெறும் 40 பக்க புத்தகம் அல்ல, 40 வருட உழைப்பு.

  • இந்த குறிப்புகள் சேர்த்துவைத்த பல அறிவு சார்ந்த பொக்கிஷங்கள், அவைகள் எத்துணை கோடிகள் கொடுத்தால் சமமாகாது. கோடிகளை எல்லாம் தாண்டி அவை இந்த ஞான குறிப்புகளை படுபாவிகள் கொளுத்திவிட்டார்கள். கொளுத்தியதை பெருமையோடு தொலைக்காட்சி நேரலையில் காட்டுகிறார்கள்.
  • நித்யானந்தரை அவருடைய அறைக்குள்ளே தள்ளி வெளியில் பூட்டி உயிரோடு தீவைத்து கொளுத்தி அவருடைய தங்கும் அறை எரிந்து கொண்டிருப்பதை பெருமையோடு தொலைக்காட்சி நேரலையில் காட்டினார்கள். இந்த தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கின்ற புகைப்படத்தை பாருங்கள்.

பரமசிவன் அருளாலேயே காலபைரவர் என்ன காப்பாற்றிவிட்டார். காலபைரவரும் மஹாகாளியும் என்னை காப்பாற்றி விட்டார்கள். ஆனால் என்னுடைய 30 வருட உழைப்பாக என்னுடைய குருமார்களும் ஆச்சாரியார்கள் எனக்கு அளித்த பல நூல்களும், அதன் அடியில் எழுதி வைத்திருந்த அடிக்குறிப்புகளும், அதனோடு இணைக்கப்பட்ட நோட்டுப் புத்தகங்களில் எழுதி வைக்கப்பட்டிருந்த தெளிவுகளும், குறிப்புகளும் எல்லாம் அழிந்துவிட்டன.

  • பரமசிவனின் பேரருளால் எனக்கு ஆழமான நினைவாற்றலை அளித்திருப்பதனால் இன்னமும் நினைவாற்றலில் இருக்கின்ற மிச்சத்தை எடுத்து எழுதி நினைவாற்றலிலிருந்து என்னால் என்னவெல்லாம் மீண்டும் கொண்டு வர முடிகிறதோ அதை எல்லாவற்றையும்தான் உங்களோடு பகிர்ந்து கொண்டு இருக்கின்றேன்.
  • என் குருமார்கள் பல பேரின் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் உழைத்து அவர்கள் எனக்கு அளித்த சாரத்தில் குறிப்புகள் படுபாவிகள் அழித்துவிட்டார்கள்.
  • ஆசிரமங்களை அடித்து தீ வைத்து கொளுத்தி, இதுவரை நூறு முறைக்கும் அதிகமாக என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

ஆனால் அதைப்பற்றி எல்லாம் நான் கலங்கவில்லை உண்மையில் அந்த குறிப்புகளை கூட என் குருமார்கள் எனக்கு அளித்த ஞான நுட்ப தெளிவு, அவர்கள் அளித்த அந்த குறிப்புகளை கூட என் நினைவில் வைத்திருந்து நான் மீண்டும் எடுத்து வந்து விட முடிகின்றது ஆனால்.

  • அவர்களுடைய கையெழுத்தை இழந்துவிட்டேன்! அதுதான் என்னால் தாங்க முடியாததாக இருக்கின்றது. அதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை அவர்கள் கைப்பட எழுதிய அவர்களின் கையெழுத்து அவர்கள் எல்லோருடைய நினைவுத் தொகுப்பு அவையெல்லாம் என் வாரிசுகளுக்கு என் சன்யாசப் பரம்பரைக்கு மிகப்பெரிய பொக்கிஷமாக இருந்திருக்க வேண்டிய குருமார்களின் கையெழுத்துக்கள் அதை இழந்தோம் என்றுதான் தாங்க முடியவில்லை.
  • இந்த ராட்சத தீயசக்தி அறிவுக் கருவூலம் அறிவு பொக்கிஷத்தை அழைத்தார்கள்.

இதற்கு மேல் இவர்களுக்கு இந்த ஞானம் பலியாக கூடாது. இந்த ராட்சஸர்கள் கையில் சிக்கி இதற்கு மேல் இந்த ஞானம் அழிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் என்னை பாதுகாப்போடு வைத்திருக்கின்றேன் இந்துக்களை கவலைப்படாதீர்கள் !

  • என்னை பாதுகாத்துக் கொண்டே இந்த அறிவு மொத்தத்தையும் பாதுகாத்து விடுவேன் கவலைப்படாதீர்கள்!
  • தனி ஆளாக உழைத்து ஒரு மியூசியம் அளவிற்காவது இதை பாதுகாக்க விடுவேன், நீங்கள் எல்லோரும் எனக்கு துணையாக இருந்தால் இதை வாழ்க்கை முறையாக வாழ வைத்து விடுவேன்.
  • நான் மட்டும் ஒழிக்க வேண்டுமென்றால் மியூசியம் அளவிற்காவது இதை உயிரோடு வைத்துவிடுவேன், உங்களுடைய அடுத்த தலைமுறை ஒரு மியூசியம் மாதிரி வந்து பார்த்துவிட்டு செல்கின்ற அளவிற்காவது இதை உயிரோடு வைத்துவிடுவேன் அழிய விடமாட்டேன்.
  • ஒருவேளை என்னுடைய குருமார்களின் தியாகம் மற்றும் என்னுடைய தியாகம் உங்கள் யாருக்காவது புரிந்து விழித்தெழுந்து இந்து மதத்திற்காக வாழ்க்கையை அர்பணிக்க தயாராக இருக்கும் சில ஆயிரம் பேர், சில லட்சம் பேர் ஒன்று திரண்டு எழுந்தீர்களானால் இதை வாழும் பொழுதே வாழ்க்கை முறையாக அளித்துவிடுவேன்.
  • எனக்கு இரண்டு கிடைத்தது ஞானம் விஞ்ஞானம்.

ஞானம் - அறிவியல் விஞ்ஞானம்- Experienced science , Purec science and applied science.

  • இந்த இரண்டும் பரமசிவம் பரம்பொருள் அவரே நேரடியாக அருணகிரியோகீஸ்வரராகவும், என்னுடைய குருமார்கள் மூலமாகவும் எனக்கு அளித்து விட்டார்.
  • நான் மட்டும் தனியாக இதை காப்பாற்றி வைக்க வேண்டுமானால் இந்த ஞானத்தை காப்பாற்றி வைத்து விடுவேன். நூல்களாக எழுதி கட்டங்களாக பேசி குறிப்பு குறிப்புகளாக வரைந்து காப்பாற்றி வைத்துவிடுவேன்.

நீங்களும் என்னோடு செய்தீர்களானால் இந்த விஞ்ஞானத்தை, applied sciece, power manifestation மற்ற எல்லாவற்றின் மூலமாகவும் உங்களுக்கு அளித்து இதை வாழ்க்கை முறையாக ஆக்கி வைத்துவிடுவேன் அவ்வளவுதான்.

ஆனால் நான் சாக மாட்டேன் இந்த அறிவியலை உயிரோடு வைப்பதற்காக உயிரோடு இருந்து விடுவேன் இந்த ஞான விஞ்ஞானத்தை உயிரோடு வைத்துவிடுவேன்.

  • பரமசிவம் பரம்பொருள் இதைச் செய்வதற்கு என்னை காப்பாற்றி உயிரோடு வைத்துவிடுவார் கவலைப்படாதீர்கள்!

என் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஒருவேளை நான் இறந்திருக்கவேண்டும் ஆனால் எப்பொழுதோ இறந்திருக்கவேண்டும்.. *உயிரோடு இருந்து இந்த ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அடுத்த தலைமுறைக்கு உயிரோடு வைத்துவிடுவேன்.

  • ஒரு லட்சம் சம்பிரதாயங்கள் உயிரோடு இருந்தன, இப்பொழுது வெறும் பத்தாயிரம் சம்பிரதாயங்கள் மட்டும் தான் உயிரோடு இருக்கின்றது. கடந்த நூறு ஆண்டுகளில் மட்டும் 20,000 சம்பிரதாயங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.

இந்துக்களே! இப்பொழுது நீங்கள் விழித்துக் கொண்டால் மட்டும் தான் மிச்சம் இருக்கும் பத்தாயிரம் சம்பிரதாயங்களையாவது உயிரோடு வைத்திருக்க இருக்க முடியும்.

  • நம் சம்பிரதாயங்களுக்குள் பிரச்சினைகள், உள் ஜாதி பிரச்சினைகள், உட்பிரிவு பிரச்சினைகள் என்று சிக்கிச் சீரழிந்தோமானல் ஆனால் மிச்சம் இருக்கும் எந்த சம்பிரதாயங்களும் இருக்காது.
  • இந்துமத விரோதிகள் இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் செய்கின்ற வேலை நமக்குள் ஜாதிப் பிரச்சனை ஜாதிப்பிரிவு பிரச்சனை, உள் மொழி பிரச்சனை இது எல்லாவற்றையும் கிளறி விடுவதுதான். இது எல்லாவற்றையும் கிளறிவிட்டு நாம் அடித்துக் கொள்ளும் பொழுது அவர்கள் மொத்தமாக இந்து மதத்தை அழித்து விட்டு சென்றுவிடுவார்கள், அதுதான் நடந்து கொண்டிருக்கின்றது.
  • இந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள்!

உள் ஜாதி பிரச்சினைகளில் சம்பிரதாய பிரச்சினைகளை, ஜாதி உட்பிரிவு பிரச்சினைகளை தூக்கி எறிந்துவிட்டு இந்துக்களாக ஒன்றுசேர்ந்து எங்கெங்கு உங்களுடைய சம்பிரதாயங்களை நேர்மையாக கடைப்பிடிக்க வேண்டுமோ அங்கெல்லாம் கடைபிடியுங்கள்.

  • உங்களுடைய சம்பிரதாயத்திற்கு நேர்மையாக இருக்க வேண்டியதற்காக இன்னொரு சம்பிரதாயத்தை அழிக்க வேண்டிய அவசியமில்லை. நம் சம்பிரதாயத்தின் மீது நமக்கு இருக்கின்ற நேர்மை இன்னொரு சம்பிரதாயத்தின் மீது வெறுப்பாக வளர வேண்டிய அவசியம் இல்லை.

நம் அனைவருக்கும் ஒரு common minium understanding இருக்கிறது. அந்த common minimum acceptance , அதாவது ‘ஓம்’ இதனுடைய உயர்வை நம்முடைய எல்லா சம்பிரதாயங்களும் ஏற்றுக் கொள்கின்றோம். கோமாதா பசுவின் தெய்வீகத்தன்மையை நம்முடைய எல்லா சம்பிரதாயங்களும் ஏற்றுக் கொள்கின்றோம். பக்தி இஷ்ட தெய்வ பக்தி அதை நம்முடைய எல்லா சம்பிரதாயங்களும் ஏற்றுக் கொள்கின்றோம்.

  • வேதங்கள் அதன் Authority - நம்முடைய எல்லா சம்பிரதாயங்களும் ஏற்றுக் கொள்கின்றோம்.

இந்த Common Minimum Agendas அதில் மட்டுமாவது நாம் அனைவரும் ஒன்றாகச் இணைந்து அந்தCommon minimum விஷயங்கள் அத மட்டுமாவது அழியாமல் பார்த்துக்கொண்டு நாம் நம்முடைய சம்பிரதாயங்களில் தேர்ச்சி அடைந்து *நேர்மையோடு வாழ்ந்து அவைகளை உயிரோடு வைக்கின்ற இந்த தெளிவிற்கு இந்துக்கள் வந்துவிடவேண்டும். மொத்தமாக நம் மீது நடத்தப்படும் தாக்குதலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..

  • ஏனென்றால் நான் மதுரை ஆதீனத்தில் பகவத்கீதையை பற்றி பேசினேன் என்று என் மீது பெரிய தாக்குதலை நடத்தினார்கள் சில படுபாவிகள்.

உங்களுக்குப் புரியவில்லை, பாண்டிய நாட்டு இளவரசி ஒருவரை கிருஷ்ணர் மனம் முடித்திருக்கிறார். பாண்டிய நாடும் கிருஷ்ணன் பிறந்த யாதவ வம்சம் இரண்டும் சந்திர வம்சம்.

  • வம்ச ரீதியாகக் கூட பாண்டிய நாட்டிற்கும் கிருஷ்ணனுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. பாண்டி நாட்டினுடைய ராஜவித்யையின் சாரத்தைதான் கிருஷ்ணன் பகவத் கீதையாக அளிக்கின்றார்.
  • இந்து சம்பிரதாயங்கள் எல்லாவற்றிற்குமே நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு இருந்தே தீரும் இல்லாமல் போக முடியாது. சைவத்திலே உபநிடதம், பிரம்ம சூத்திரத்தையும் சொல்லுகின்ற அளவிற்கு பகவத்கீதை சொல்லுவதில்லை என்பது வேண்டுமானால் மரபாக இருக்கலாம், ஆனால் பகவத்கீதையை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை மறுக்க வேண்டிய அவசியமில்லை.
  • தேவாரத்தில் சொல்லுவோம் திருவாசகத்தை சொல்லுவோம் என்பது உயர்ந்தது ஆனால் பகவத் கீதையை சொல்ல மாட்டோம் என்பது சரியானது அல்ல.

கிருஷ்ணரும் அர்ஜுனனும் முன்ஜென்மத்தில் நர நாராயணன் அவதாரத்தின்பொழுது பத்ரியிலே நர நாராயணன் ஆக சிவபெருமானை நோக்கி தவம் இருந்தபொழுது பரம சிவப்பரம்பொருள் வந்து உபதேசித்த ஈஸ்வரர் கீதையையைத்தான், அதே சத்தியத்தை தான் நர நாராயணர்கள் உடைய அடுத்த அவதாரமான கிருஷ்ணன் அர்ஜுனன் அவதாரத்தில் கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையாக சொல்லுகின்றார்.

  • ஞான ரகசியங்கள் ஆழ்ந்து குடித்தால் எல்லா சம்பிரதாயங்களும் ஆழமான இணைத்து இருப்பது புரியும், இணக்கம் இருப்பது புரியும். சம்பிரதாய பேதங்களை விட்டு சாதி சண்டைகளை விட்டு இந்துக்களாக இணைவோம். பொது எதிரியிடமிருந்து இந்து மதத்தை காப்பாற்றுவோம்.
  • இந்து மதத்தில் வெறும் ஞானமாக அறிவியலாக மட்டுமல்லாது விஞ்ஞானமாக வாழ்க்கை முறையாக வாழ்ந்து நம் வாழ்வை வளமாக்கிக் கொள்வோம் வாருங்கள்.
  • தொடர்ந்து இந்த சத்சங்களின் மூலமாக தாயார் பராசக்தி தாயார் திருக்கயிலாயத்தில் இருந்து பூமிக்கு கொண்டு வந்த சான்றோர் உருவாக்கும் விஞ்ஞானம். The science of Making Higher conscious beings..
  • அதனால்தான் தொண்டை நாட்டில் தொண்டைநாடு சான்றோருடைத்து என்று சொல்வார்கள். சான்றோர் உருவாக்கும் விஞ்ஞானம் தொண்டை நாட்டிலே விளைவிக்கப்பட்டு இருக்கின்றது.
  • சோழ நாடு சோறுடைத்து..

பாண்டி நாடு முத்துடைத்து.. சேர நாடு வேழமுடைத்து.. தொண்டை நாடு சான்றோருடைத்து.. ஏனென்றால் தொண்டை நாட்டில் தான் இந்த உயர்ந்த டி என் ஏ வை உருவாக்குகின்ற, சான்றோரை பரமசிவ சத்தியங்களையும், பரமசிவ சக்திகளையும் வாழ்ந்து வெளிப்படுத்தி பரமசிவ ஞானத்தையும் பரமசிவன் விஞ்ஞானத்தையும் வாழுகின்ற அந்த hightest super conscious beings உருவாக்குகின்ற விஞ்ஞானக் கூடமாக தொண்டைநாடு இருந்தது. அதனால்தான் தொண்டைநாடு சான்றோருடைத்து என்று சொல்வார்கள்.

  • சான்றோர் செய்யும் விஞ்ஞானக் கூடம், பராசக்தி உருவாக்கிய சான்றோர் செய்யும் விஞ்ஞான கூடம் தொண்டைநாடு. அன்றிலிருந்து இன்றுவரை எல்லா அரசர்களுக்கும் மந்திரிகளும் அரசர்கள் தங்களுடைய பட்டத்து ராணிகளையும் தொண்டை நாட்டில் இருந்து அழைத்துச் செல்வது வழக்கம்.
  • ஏனென்றால் Best DNA, highest conscious possiblity ஐ உயிரோடு வைத்திருக்கின்றன விஞ்ஞான கூடமாக தொண்டைநாடு இருந்திருக்கின்றது.
  • இந்த அறிவியலின் இயற்பியல் பாகம், வேதியல் பாகம், உயிரியல் பாகம்,

இயற்பியல் பாகம்தான் - ஆகமங்கள், சாஸ்திரங்கள் வேதியியல் பாகம்தான் - சித்த மருத்துவம் உயிரியல் பாகம்தான் -ரசவாதம் இந்த மூன்றின் சாரத்தையும் தொடர்ந்து சத்சங்கங்கள் மூலமாக உங்களுக்கு பகிர்கின்றேன் .

  • என்னுடைய சுயசரிதம் எழுதுகின்ற, அதற்கு தேவையான விஷயங்களை சேகரித்து கொண்டிருக்கின்ற சன்யாசிகள்குழுவிற்கு இந்த ஜீவா அச்சகத்தின் உரிமையாளரைத் தேடி கண்டுபிடித்து அவருடைய புகைப்படத்தை கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
  • அச்சகம் நடத்தும் பொழுது இன்னும் இருக்கும் என்று நம்புகின்றேன். இருந்தால் நல்லது ஒரு வேலை இல்லை என்றால் அந்த அச்சகம் நடக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றையாவது கொண்டு வாருங்கள்.

அந்த உரிமையாளர் உடைய படத்தை நம்முடைய எல்லா நூலகங்களில் வைக்கப்பட வேண்டும் அவருடைய உழைப்பு தியாகம் நட்பு சேவை மதிக்கப்பட வேண்டும்.

  • அவர் ஒன்னும் மிகப்பெரிய பணக்காரர் கிடையாது மிக எளிமையான மனிதர் மிக சொற்ப வருமானத்தில் இந்த திருமண பத்திரிக்கை, காதுகுத்து விழாக்கள் பத்திரிக்கை, இறந்தவர்களுக்கான அஞ்சலி பத்திரிக்கை இதையெல்லாம் அச்சிடுகின்ற ஒரு மிகச்சிறிய பதிப்பகம்தான்.
  • மிகச் சிறிய இடம்தான் ஒரு இடத்திற்கு 20 இருக்கலாம் அவ்வளவுதான்!

ஆனால் அவர் அந்த காலத்தில் எனக்கு செய்த உதவி, என் குருவிற்கு செய்த உதவி. சலிப்பே இல்லாமல் தினந்தோறும் பாண்டுரங்கனார் வந்து அமர்ந்தவுடன் இந்த பழைய நோட்டு புத்தகங்களை பைண்ட் செய்வதற்கு தேவையான கோணி ஊசி, அதை அடிப்பதற்கு மரத்தாலான ஒரு சுத்தியல், தடிமனான வெள்ளை நூல், அதற்கு மைதா மாவில் பசை செய்வார்கள். அந்த நோட்டில் புத்தகத்தின் முதுகெலும்பில் காலர் துணி என்று சொல்லுகின்ற ஒரு சிகப்பு துணியை ஓட்டுவார்கள் அந்த புத்தகத்தின் முதுகெலும்பு பலமாக இருப்பதற்காக அந்த துணி இந்த தேவையான உதிரி பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொடுத்துவிட்டு ஒரு உதவியாள் சிறுவனையும் கொடுத்து |தம்பி தாத்தாவுடன் சாமியார் பையனுடன் உட்கார்ந்து என்ன வேலை செய்ய வேண்டுமோ அதை செய்!| என்று சொல்லுவார்.

  • ஒருநாளும் சலித்துக் கொள்ளாமல் அவர் செய்த உதவி நூற்றுக்கணக்கான புத்தகங்களை பின்பு ஒரு நாற்பது பக்க நோட்டு புத்தகம் வைத்து பல நேரங்களில் நோட்டு புத்தகம் வாங்க முடியவில்லை என்றால் அவருடைய நூலகத்தில் காகிதத்தை எடுத்தபிறகு உதிரியாக விழுகின்ற காகிதங்களில் அழகாக இந்தநூல் உடைய வடிவத்திற்கு தகுந்தார் போல வெட்டி எடுத்து அந்த புத்தகங்களின் பின் வைத்து பைண்ட் செய்வதற்கு அளிப்பார்.

இவர்கள் எல்லோரும் செய்த தியாகங்கள்தான் இன்று கைலாயம் என்கின்ற மிகப்பெரிய இந்து தேசமாக வளர்ந்திருக்கின்றது. சிறு உதவி கிடையாது பேருதவி உதவி..

  • அந்த காலகட்டத்திலே நான் இந்த ஞானத்தை அறிவியலை கற்கின்ற காலகட்டத்திலே எனக்கு இந்த உதவிகளை செய்தார்கள்.

இன்னும் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது சித்தர் பெரிய ஞானக்கோவை என்ற ஒரு நூல் பாண்டுரங்கன் ஆனால் அந்த நூலை கொண்டுவந்து அதற்குப் பின் இந்த நோட்டுப் புத்தகத்தை வைத்து தைத்து குறிப்புகளை எல்லாம் எழுதி இந்த வாசி யோகத்தை பற்றி எனக்கு வகுப்பு எடுத்தார்கள். சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான்!

  • சித்தர்கள் யார்? அவர்களுடைய அறிவு என்ன?

பதினெண் சித்தர் ஞானக் கோவை பெரிய ஞானக்கோவை என்று அந்த நூலின் பெயர்! ஆத்மபுராணம் என்று ஒரு புத்தகம் இன்றும் எனக்கு நினைவில் உள்ளது நான்கு உபநிடதங்களுடைய தமிழ் மொழிப்பெயர்ப்பு.. எல்லாவற்றையும் முறையாக பைண்டு செய்து அவை ஒவ்வொன்றிற்கும் அடிக்குறிப்புகள் அதனுடைய, மேல் விளக்கங்கள் கொடுத்து, அவர்களுடைய அத்துனைபேருடய உழைப்பும் அதன் வெற்றியும் தான் இன்று உங்கள் முன் நித்யானந்தர் என்கின்ற பெயராலே அமர்ந்திருக்கின்றது.

  • இவர்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியையும், பக்தியையும் சமர்ப்பிக்கும் பரமசிவம் பரம்பொருள் துவங்கி பராசக்தி முதல் என் குருமார்கள் வரை இந்த ஞானப் பரம்பரையில் வணங்கி இந்த அறிவியலை உங்களோடு பகிர்ந்துகொள்ள தொடங்குகின்றேன். தொடர்ந்து அடுத்தடுத்த சங்கங்களில் இந்த அறிவியலை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

இன்றைய சத்சங்கத்தின் சாரம்:

  • ஜீவா அச்சகத்தின் உரிமையாளரே மொத்த நித்யானந்த நூலகத்திற்கும் அடிக்கல் நாட்டிய பெருமகனார்.. அவருக்கு என் நன்றி.
  • பாண்டுரங்கனாருக்கு எப்படியும் சிலை வைக்கப் போகின்றேன் என்குரு என்பதற்காக.. ஆனால் சிறு உதவி என்று நாம் நினைக்கின்ற இந்த உதவிகள் தினந்தோறும் எனக்கு புத்தகத்தை பைண்ட் செய்து கொடுத்து சலிப்பில்லாமல் அவருடைய பல வேலைகளக்கு இடையில்.
  • அதாவது பாண்டுரங்கனாருக்கு நன்றாக தெரியும் நான் எதிர்காலத்தில் அவருடைய புகழைப் பாடிக் கொண்டிருக்கபோகிறேன் என்று.

ஆனால் அந்த ஜீவா அச்சகத்தின் உரிமையாளருக்கு அந்த எதிர்பார்ப்போ அந்த ஞானம் கூட அவருக்கு கிடையாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் இந்த சாமியார் பையன் ஏதோ நல்லது செய்கிறார் இந்த தாத்தா ஊரிலிருந்து தினமும் நடந்து வந்து இந்த பையனுக்கு கற்றுக் கொடுக்கிறார். சரி நம்மால் ஆன நல்லதை செய்யலாம் என்று அவர் தினந்தோறும் பசை காய்ச்சி கொடுப்பார் அவருடைய உழைப்பு எல்லாம் மறக்கப்பட்டு விடக்கூடாது.

  • இன்றைய சத்சங்கத்தின் சாரம்.. ஜீவா அச்சகத்தின் உரிமையாளரே உலகம் முழுவதும் நான் அமைத்துக் கொண்டிருக்கின்ற ஆயிரக்கணக்கான நித்யானந்தர் நூலகங்களுக்கு அடிக்கல் நாட்டியவர் அவருக்கு நன்றி! அதுதான்

இன்றைய சத்சங்கத்தின் சாரம்.

  • உலகம் முழுவதும் இருக்கும் என்னுடைய பக்தர்கள், சீடர்கள் என்னால் ஞான, விஞ்ஞான பலன் அடைந்த எல்லோரும் அவருக்கு கடன் பட்டவர்கள்.

அவர் இன்னும் உயிரோடு இருந்தால் அவருக்கு என் நன்றிகள், ஒருவேளை உயிரோடு இல்லை என்றால் அவருக்கு என் மரியாதைகள் பக்தியும் சிரத்தையும், இதுதான் இன்றைய சத்சங்கத்தின் சாரம்.

எல்லோரும் நித்யானந்தத்தில் நிறைந்து நித்யானந்தத்தில் மலர்ந்து நித்யானந்தத்தில் கரைந்து நித்யானந்தமாகிட ஆசீர்வதித்து முடிக்கின்றேன் ஆனந்தமாக இருங்கள்.


Photos

Adi Shaivam Satsang Tamil

Nithya Satsang Tamil - 2019-09-23_IMG_0318_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-23_IMG_0327_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-23_IMG_0328_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-23_IMG_0356_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-23_IMG_0372_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-23_IMG_0388_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-23_IMG_0389_nithya-satsang-tamil.JPG Nithya Satsang Tamil - 2019-09-23_IMG_0418_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-23_IMG_0423_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-23_IMG_0424_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-23_IMG_0426_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-23_IMG_0451_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-23_IMG_0572_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-23_IMG_0590_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-23_IMG_0595_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-23_IMG_0596_nithya-satsang-tamil.jpg Nithya Satsang Tamil - 2019-09-23_IMG_0614_nithya-satsang-tamil.jpg



Link to facebook

https://www.facebook.com/srinithyananda.swami/posts/1405383746283287