September 08 2020 Tamil

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

தலைப்பு

அன்கிளட்சிங் (UNCLUTCHING) மூலம் எழுந்திரு !

விளக்கம்

இந்த நாளில் இந்து மதத்தின் பகவான் நித்யானந்த பரமசிவம் மற்றவர்களின் உணர்வுகள் நம் ஆளுமையை எவ்வாறு ஆக்கிரமிக்கின்றன என்பதையும், அனைத்து மருட்சி உணர்வுகளிலிருந்தும் அவிழ்ப்பதன் முக்கியத்துவத்தையும் விரிவுபடுத்தினார்.

தமிழாக்கம்

செப்டம்பர் 08, 2020 அன்று பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அருளிய ஆங்கில சத்சங்கத்தின் சாரம்

அன்கிளட்ச் (UNCLUTCH) செய்வதன் மூலம் விழித்தெழுங்கள்!

புரிந்து கொள்ளுங்கள் - இந்த முழு உலகம், வாழ்க்கை, கடவுள் பற்றிய உங்கள் புலனுணர்வு, உங்களைப் பற்றிய உங்கள் புலனுணர்வு கூட விழிப்புணர்வற்ற மனித சமுதாயத்தால் உங்கள் மீது விளையாடப்படுகின்ற ஒரு பிராங்க் குறும்பு விளையாட்டு ஆகும்.

நான் மனித சமூகத்தை குற்றம் சாட்டவில்லை, அவர்கள் மிக விழிப்புணர்வற்றவர்கள் என்பதால் அவர்கள் பொறுப்பில்லாதவர்களாக இருக்கிறார்கள். யாரும் காரணம் இல்லை, ஆனால் கூட்டு விழிப்புணர்வற்ற தன்மையால் அனைவருமே துன்பப்படுகிறார்கள், நோக்கம் அன்றாட வாழ்க்கைக்கு உருவாகியுள்ளது.

உங்கள் கல்வியோ அல்லது உங்களுக்கு வாழ்க்கையாக கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதோ, 99.99% கற்றுக் கொடுக்கப்பட்டது ஒரு ஆடம்பரமான படுக்கை / சோபாவைப் பற்றிக் கொண்டிருப்பதே வாழ்க்கையின் சுகமும், மகிழ்ச்சியும் என்பது ஆகும். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், பத்மசனாவில் மணிக்கணக்காக உட்கார முடிந்த ஒரு உடலை பெற்று இருப்பது மிகவும் முக்கியமானது.

நான் படுக்கை வைத்திருக்காதீர்கள், ஆடம்பரமான இருக்கைகள், சோஃபாக்கள், விலை உயர்ந்த நாற்காலிகள் வைத்திருக்காதீர்கள் என்று நான் சொல்லவில்லை. உலகின் மிக விலை உயர்ந்த நாற்காலிகளில் சில என்னுடையவை என்று நான் நினைக்கிறேன்.

அது இரண்டாவது முன்னுரிமை என்று மட்டும் நான் சொல்கிறேன்!

முதல் முன்னுரிமை முதல் விஷயங்களை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும்! முழு உலகமும் உணவு, நாக்கு, சுவை பற்றி மிக அதிக அளவு கற்றுக் கொடுக்கப்படுகிறது - அங்கு உணவு சுற்றுலா என்று அழைக்கப்படுகின்ற ஏதோ ஒன்று இருக்கிறது.

இடையில் விரதத்தையும் கற்றுக்கொள்ளுங்கள் என்று நான் சொல்கிறேன். இன்று நாங்கள் கபில சஷ்டி அனுஷ்டித்தோம், நான் திட உணவைப் உண்டேன். குறைந்தபட்சம் அடுத்த 10-15 நாட்களுக்கு நான் நிராஹார சம்மியமாவில் இருப்பேன். மகேஸ்வர பூஜையில் மட்டுமே நான் திடமான உணவைக் எடுத்துக்கொள்கிறேன். நான் என் ஆனந்தமான, உணவு இல்லா வாழ்க்கை முறையை துய்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்.

நான் அடுத்த முயற்சியாக - சக்தி வெளிப்பாடு மூலம் சிக்ஸ் பேக் உருவாக்க முயற்சிக்கிறேன். இந்த உலகத்திற்கு இந்த அறிவியல் கிடைக்கும்படி செய்ய விரும்புகிறேன்.

விழிப்புணர்வு ஆற்றல் மூலம் கொழுப்பை எரிப்பதால் அதை நிறுவ விரும்புகிறேன், எந்தவொரு வெளிப்புற ஆதரவும் இல்லாமல் நீங்கள் தசைகளை உருவாக்க முடியும்.

முதல் விஷயங்கள் முதலில் - நீங்கள் மதிக்கப்படுவதாக, அவமதிக்கப்படுவதாக, ஆதரிக்கப்படுவதாக, சுயநலத்திற்கு பயன்படுத்தப்படுவதாக, அதிக வேறுபாடு காட்டப்பட்டதாக, செல்வ வளம் அல்லது வறுமை என நீங்கள் உணர்ந்தால், உங்களைப் பற்றிய அனைத்து உங்கள் புலனுணர்வுகளும் சமுதாயம் உங்கள் மீது விளையாடிக் கொண்டிருக்கும் ப்ராங்க் குறும்பு விளையாட்டு ஆகும்.

ப்ராங்க் குறும்பு விளையாட்டாளர்களிடம் குறும்பு விளையாட்டை விளையாடும் நுட்பம் : சில குறும்பு விளையாட்டாளர்கள், முழு அணியுமே பணம் கொடுக்கப்பட்ட நடிகர்கள். அவர்கள் குறும்பு விளையாட்டை விளையாடுகிறார்கள் ஆனால் பார்வையாளர்கள் அது உண்மை, தானாக நிகழ்கிறது என்று நினைத்து ப்ராங்க் பண்ணப்படுகிறார்கள் (குறும்புத்தனமாக ஏமாற்றப்படுகிறார்கள்). குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 21 நிமிடங்களுக்கு அதிகப்படியான அமைதியுடன் அன்கிளட்ச் செய்வது இந்த ஒரு தந்திரத்தை கற்றுக் கொள்வதன் மூலம் நீங்கள் குறும்பு விளையாட்டாளர்களின் மீது பல நிலைகளில் குறும்பு விளையாட்டை விளையாட முடியும்.

குறைந்த பட்சம் 21 நிமிடங்களுக்கு உங்கள் ஆளுமையில் நுழைந்த உங்கள் கருத்துகளிலிருந்து விலகிச் செல்ல வேண்டும்!

புரிந்து கொள்ளுங்கள்! மற்றவர்களுடைய புரிதல்கள் உங்களுக்கு உள்நுழைவது இன்றி நீங்கள் உங்களை புரிந்து கொள்வதை மறந்து விட்டீர்கள்.குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது உங்கள் ஆளுமையில் நுழைந்த மற்ற கருத்துக்களை எடுத்துக் கொள்ளாமல்லாமல் உங்கள் தனித்துவத்தை உணருங்கள்.

மற்றவர்களிடமிருந்து உங்களைப் பற்றிய பல புரிதல்கள் உங்கள் தனிப்பட்ட தன்மையை ஆக்கிரமித்துள்ளன. உங்கள் தனிப்பட்ட தன்மை மற்றவர்களிடமிருந்து பெறப்பட்டதாக நீங்கள் புரிந்துகொண்டீர்களா என்றால், இல்லை!

கேளுங்கள்! வாழ்க்கையின் மிகப் பெரிய ஆரோக்கியம், வாழ்க்கையில் இருந்து நீங்கள் சேர்ப்பது உங்கள் தனிப்பட்ட தன்மையுடன் உங்களது ஆளுமையில் மற்ற புரிதல்கள் நுழையாமல் உட்கார்ந்து இருப்பதற்கான உங்கள் திறமையாகும்.

எனது சொந்த வாழ்க்கையிலிருந்து நான் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு தருகிறேன்: நான் பரமசிவா. நான் நித்யானந்த பரமசிவம். இது எனது தனித்துவம். என்னைப்பற்றி என் அனுபவம்.

‘நித்தி’ என்பது திராவிஷ் பாய்ஸால் (DRAVISH BOYS.)கட்டமைக்கப்பட்ட தனிப்பட்ட தன்மை.

தனிப்பட்ட பாலியல் செயல்பாடுகள் சார்ந்து ஒவ்வொருவரும் மிகக் குறைவான, மோசமான, டேஸ்ட்,மிருக மன அமைப்பு கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஞானம் அடையும் வரை மிருகமான அமைப்பை கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு நபரும் அதை வைத்திருப்பார்கள்.

டிராவிஷ் கேங் மீடியா, தனித்துவமான பாலியல் செயல்களைத் தூண்டுகிறது, அவர்கள் இந்த வகை மசாலா செய்திகள், மசாலா அடையாளங்களை தொடர்ந்து உருவாக்குகிறார்கள்.

இந்த அறிக்கையை கவனமாகக் கேளுங்கள்! டிராவிஷ் கேங்க்ஸ்டர்கள் (திரவிஷ கூட்டம்) உங்கள் பாலியல் செயல்பாடுகளை கற்பழிப்பு செய்து, சட்டவிரோதமான குழந்தையாக ‘நித்தி’ உருவத்தை பிறக்க வைத்து விடுகிறார்கள்!

நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன் - நான் நித்யானந்தா. நான் ‘நித்தி’ உடன் எதுவும் செய்யவில்லை.

என்னால் தெளிவாக காண முடிகின்றது, தொலைதூரத்திலிருந்து - திராவிஷ் கேங்கினால் கையாளப்பட்ட மற்றும் வெளிப்படுத்தப்பட்ட படம், ஆளுமைக்கு உட்பட்டது, திராவிஷ் கேங் எனது தூய்மையான தனித்துவத்தை உருவாக்க முயற்சிக்கிறது.

ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் அடையவேண்டிய ஆடம்பரம், அவனது தூய்மையான இருப்பை பார்க்கும் திறனைக் கொண்டிருக்கிறது, அவனுடைய அல்லது அவனுடைய உள்ளே கட்டமைக்கப்பட்ட தனிநபர்களிடமிருந்து பெறப்பட்ட புரிதல்களில் இருந்து தள்ளி இருப்பதாகும்!

நிர்விகல்ப நிலையின் அடிப்படையானது, நீங்கள் எப்பொழுது எல்லாம் நிர்விகல்ப நிலையில்இருக்கிறீர்களோ, உங்களுக்குள் என்னால் ஒரு நொடியில் சக்திகளை வெளிப்படுத்த செய்ய முடியும். உங்களுக்குள் பரமசிவனை என்னால் வெடிக்கச் செய்ய முடியும்.

மற்றவர்கள் உங்கள் மீது வைத்துள்ள கருத்துக்கள், அந்த கருத்துக்களை தான் நீங்களும் நீங்கள் என்று நம்ப துவங்கிவிட்டீர்கள் -இந்த மொத்த குழப்பத்தை தான் மாயை என்று குறிப்பிடுகின்றேன் .

ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடமாவது, நீங்களாகவே ஆழ்ந்த அன்க்ளட்சிங் (UNCLUTCH - எண்ணங்களில் இருந்து விடுபடுத்தி கொள்ளுதல்) நிலையில் அமர்ந்து கொள்வதற்கு சுதந்திரமாக உணருங்கள்.

இந்த எளிமையான அன்க்ளட்சிங் (UNCLUTCH) நீங்கள் செய்ய தொடங்கினாலே போதுமானது. இந்த சமூகம் உங்களுக்குள் திணித்த கருத்துக்கள், கல்வி அல்லது தூண்டுதல்களை பின்பற்ற வேண்டுமா? அல்லது குருவை, கைலாசத்தை பின்பற்ற வேண்டுமா? என்பதை தெரிந்து கொள்வீர்கள்.

வாழ்க்கை என்பது பயணம் ஆகும். நீங்கள் அதில் பயணித்து கொண்டு இருக்கின்றீர்கள், வேறு திசையில் சென்று கொண்டு இருப்பீர்கள். சுவாசத்தை உள்வாங்கியும், வெளியிட்டும் பயணித்து கொண்டுயிருப்பீர்கள், பயணத்தில் எந்த சிரமமும் இல்லை, எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்று எடுக்கும் முடிவில் தான் சிரமம் உள்ளது.

சில நாட்களுக்கு முன் சத்சங்கத்தில் சொல்லியிருந்தேன்: இரவில் உறங்கும் பொழுது, ஈரத்துணியை அல்லது குளிர்ந்த துணியை வயிற்றில் கட்டிக்கொண்டு உறங்குமாறு சொல்லியிருந்தேன். அவ்வாறு செய்யும் பொழுது நீங்கள் அன்க்ளட்சிங் (UNCLUTCH) செய்தால் ஆழ்ந்த அன்க்ளட்சிங் (UNCLUTCH) நிலை உணர்வதற்கு சக்தி வாய்ந்த வழியாக இருக்கும்.

இரவில் உறங்கும் முன் யாரெல்லாம் வயிற்றில் ஈரத்துணியை வைத்துக்கொண்டு அன்க்ளட்சிங் (UNCLUTCH) செய்கின்றீர்களோ, உண்மையில் உங்களுடைய கனவு நிலையில் துரிய நிலையை உணர்வீர்கள்.

வயிற்றில் ஏற்படும் வெப்பத்தன்மை ஜடராகினியாக மாறிவிடும்; அந்த தூய்மையான சக்தியை ஈரத்துணியை வைத்துக்கொண்டு குளிர வைக்கவேண்டும்.

வயிற்றுள் இருக்கும் வெப்பம், புகை போன்றது ஆகும்.நெருப்பை போன்றதல்ல .நீங்கள் அனுபவமாக பெரும் சக்தி தான் தெளிந்த நெருப்பாகும்.

நீங்கள் வயிற்றில் ஈர்த்துணியை கட்டும் பொழுது, வெப்பத்தன்மையை குறைத்து விடும், தெளிந்த நெருப்பு சக்தியை உங்களுக்குள் உணரச்செய்யும் .

திடமான வயிறும், திடமான தைரியமும் விழிப்புணர்வின் உயர்ந்த நிலையை உணர்வதற்கு துணையாக இருக்கும் .

தலையில் இருக்கும் இந்த மாபெரும் ஜடா முடி தொடர்ந்து வைத்திருப்பதால் நேரடியாக நம்முடைய வயிற்றையும், தைரியத்தையும் திடமாக்குவதை நான் உணர்திருக்கிறேன். முக்கியமாக பத்மாசனத்தில் ஜடா முடியுடன் அமரும் போது திடமாக்குகிறது.

என்னுடைய அனைத்து பிள்ளைகளும் இதனை பயிற்சி செய்ய வேண்டும்.படிக்கும் பொழுது,வேலை செய்யும் பொழுது அனைத்து நேரங்களிலும் - பத்மாசனத்தில் அமர்ந்து ஜடா முடியுடன் செய்யல்பட துவங்குகள் அது உங்களை மேலும் வலிமை பெற செய்யும்.

வயிற்றுக்கும், முதுகு எலும்பிற்கும் நாம் தொடர்ந்து செய்யும் பயிற்சி ஆகும்.இந்த பிரபஞ்ச நிலைக்கு ஏற்றவாறு நம்மை அமைத்துக்கொள்ள வேண்டும். துரிய துரியாதீத - பரமசிவ நிலையில் நம்மை தொடர்ந்து வைத்திருக்கும்.

நீங்கள் வயதானவர்களாக இருந்தால் ஜடா முடியும், பத்மாசனமும் செய்ய இயலாது என்று நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்.

முதுமை பற்றி என்னுடைய விளக்கம்: சாத்தியமற்றது என்கின்ற எண்ணம் உங்களுக்குள் வருவதும், சாத்தியமற்றது என்கின்ற எண்ணம் உங்களை உள்ளடக்குவது தான் முதுமை நிலை.

என்னுடைய அனைத்து குழந்தைகளும் திடமான தைரியத்தை முதலில் பயிற்சி பெற்று கொள்ள வேண்டும்.

பரமசிவம் தன்னை பற்றி தானே ஆகமத்தில் விளக்கியுள்ளார். அது தான் அவருடைய சுய தன்மையின் வாய்மொழி. பரமசிவன் தியான ஸ்லோகம் ஆகமத்தில் கொடுத்துள்ளார் ,அதை அவருடைய சுயதன்மையை வெளிப்படுத்தும் மந்திரம் என்று சொல்கின்றேன். என்றும் 16 என்ற நிலையில் உணர்வதாக கூறியுள்ளார். 16 வயதில் தான் உங்களுடைய அனைத்து உடல் பாகங்களும் ஆரோக்கியத்தில், தைரியத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும்.

இரவில் வயிற்றில் ஈரத் துணியைப் போட்டு உறங்குவதும், எப்பொழுதும் பத்மாசனத்தில் அமர்ந்து இருப்பதும், இதெல்லாம் உங்களுக்கு ஒரு பலமான குடல் பகுதியையும், மற்றும் எண்ணமற்ற நிலையில் நிலைத்திருக்கவும், சமுதாயம் உங்கள் மீது திணிக்கப்பட்ட கருத்துக்களை தான் நீங்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் உங்களை, உண்மையில் தான் யார் என்று உங்களால் உணர முடியும்.

நான் என்னை, தனிப்பட்ட இருப்பு தன்மையாகவும், எல்லா திணிக்கப்பட்ட கருத்துக்களிலிருந்து விடுபட்டதாகவும், என்னுள் அந்த திணிக்கப்பட்ட கருத்துக்களிலிருந்து வென்றவனாக இருக்கிறேன்.

நான் நித்தியிடம் இருந்து விடுவிக்கப்பட்ட இருப்பு தன்மையால், நித்தியானந்தா - நித்தியை எப்பொழுதும் உள்ளே அனுமதித்ததில்லை. ஒருவேளை நித்தியை அனுமதித்திருந்தால் ஆனந்தம் என்னில் இருந்து மறைந்திருக்கும். நான் என்னோட ஆனந்தத்தை இருத்திக் கொண்டு நித்தியை விடாமல் வெளியேற்றினேன். அதனால் நான் நித்தியானந்தர் ஆனேன்.

உங்கள் எல்லோரையும் திணிக்கப்பட்ட கருத்துக்களிலிருந்து விடுபட்ட இருப்பு தன்மையாக நான் பார்க்கிறேன். நான் சில பேரிடம் இருந்து தூரம் விலகி இருந்தாலும், நான் யாரையும் ஒருபோதும் வெறுத்ததில்லை.

நான் என் தனிப்பட்ட இருப்பு தன்மையையும் சுதந்திரத்தையும் மதிக்கிறேன். அதேபோல் உங்கள் இருப்பு தன்மையும் உங்களுக்கு சாத்தியம், உங்களில் பரமசிவனின் இருப்புத்தன்மை இருக்கிறதை பார்க்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் பரமசிவன் ஆக இருப்பது சாத்தியமே.

யாராவது ஒரு பணக்காரரை பார்த்தால் அவரோடு நட்பு கொண்டு அவரின் செல்வத்திற்கு பாகம் ஆகவே இருக்கிறீர்கள். ஒவ்வொருவரையும் பார்க்கும் பொழுது உங்களுக்கு அவரைப் பற்றிய ஒரு கருத்துக்களும் ஒரு ஒரு திட்டமும் உங்களுக்குள் உருவாகிறது.

ஆனால் நான் உங்களை பார்க்கும் பொழுது உங்களின் தனித்துவத்தை மட்டுமே பார்க்கிறேன், உங்களை எப்படியாவது உங்களுக்குள் இருக்கும் அந்த பரமசிவனை தூண்டிவிட்டு அந்த பரமசிவன் நிலையிலேயே நீங்கள் இருப்பதற்கும் உணர்வதற்கும் என்ன செய்ய வேண்டும் என்றுதான் நான் திட்டம் இடுவேன்.

தொடர்ந்து நீங்கள் பரமசிவன் தான் என்று உங்களை தூண்டிவிட்டு தீட்சை கொடுத்து கொண்டே இருப்பேன்.

இரவு வயிற்றின் மீது ஈரத் துணியைப் போட்டு படுத்து உறங்குங்கள், என்று நான் சொல்வது கூட உங்களுக்குள் இருக்கும், பரமசிவ இருப்பு தன்மையை தூண்டுவதற்காக தான்.

தொடர்ந்து உண்ணும் வழக்கத்தை நிறுத்துங்கள் என்று நான் சொல்லும் பொழுதும் உங்களுக்குள் இருக்கும் அந்த பரமசிவ இருப்புதன்மை தூண்டுவதற்கும் அதை நீங்கள் உணர்வது சாத்தியம் என்பதற்காகத்தான்.

நான் உங்களை unclutch (விடுபடுங்கள்) என்று சொல்லும் பொழுது, துக்கப்படும் பட்டனை அழுத்தி துக்கத்தை நிறுத்தி விட்டு பரமசிவ இருப்பு நிலைக்கு விழித்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.

ஒரு நாளைக்கு அரை மணி நேரம் நீங்கள் முயற்சித்தாலும் பரவாயில்லை பரமசிவனோடு விளையாட தொடங்குங்கள். எண்ணமற்ற நிலையில் இருப்பதுதான் பரமசிவன் விளையாட்டு. அப்பொழுது நீங்கள் திணிக்கப்பட்ட கருத்துக்கள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள், சித்திரவதைகள் எல்லாம் பார்த்துக்கொண்டே விழிப்புணர்வோடு அதிலிருந்து மீண்டு வருவீர்கள்.

உங்களுடைய உண்மையான இருப்பு தன்மை, ஆனந்தம், அமைதி, மகிழ்ச்சி போன்ற உள் உணர்வுதான். உங்கள் தனிப்பட்ட உணர்வு நிலையிலிருந்து அரை மணி நேரம் சற்றே உங்களுக்காக இளைப்பாருங்கள். ஒவ்வொரு நாளும் அரை மணி நேரம் உங்களுக்காக தியானம் செய்யுங்கள்.

இதை செய்யும் பொழுது சிறிது நாட்களுக்கு கஷ்டமாக இருந்தாலும், பின் வருங்காலத்தில் சுவாமிஜி, சொன்னது சரிதான் என்று புரிந்து கொள்வீர்கள்.

இந்த உலகம் என் மீது சுமத்தும் மாயை என்னவென்று நான் உணர்ந்து கொண்டு விட்டேன். இந்த சமுதாயம் எனும் மாயா விளையாட்டையும் நான் புரிந்து கொண்டு விட்டேன். இந்த சமுதாய மாய விளையாட்டு என்னுடைய விழிப்புணர்வு இல்லாமலே என்னுள் விளையாடி கொண்டிருக்கிறது.

இந்த விழிப்புணர்வு இல்லாத சமுதாயம் உங்கள் மீது தன் கருத்து திணிப்பு மூலம் விளையாடுகிறது, என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டால், நீங்கள் விழித்துக் கொள்வீர்கள் உங்கள் மாயையிலிருந்து விடுபட்டு நீங்கள் மோட்ச நிலையை பெறுவீர்கள்.

நீங்கள் பாலுணர்வைப்பற்றி வைத்திருக்கும் 5 புலனுணர்வுகள் மற்றும் மரணத்தைப் பற்றி வைத்திருக்கும் 7 புலனுணர்வுகள்.

நான் ஏன் ஐந்து என்று சொல்கிறேனென்றால், மூலாதாரம் தான் பாலுணர்விற்கான சக்கரம். அதற்கு 5 இதழ்கள் உள்ளன. சுவாதிஷ்டானச் சக்கரத்திற்கு ஏழு இதழ்கள் உள்ளன. இந்த மொத்த 11 இதழ்களும் அன்பிற்கான புலனுணர்வுகள். இவை மொத்தமுமே மாயை.

இவை அனைத்தும் பொய் என்றோ, தவறு என்றோ, நான் சொல்லவில்லை. நான் எதையாவது தவறு என்றோ, சரி என்றோ, சொன்னால், நீங்கள் அதனைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்து விடுவீர்கள். நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம், இந்த அடிப்படையான புலனுணர்வே ஒரு மாயைதான் என்பதே.

நிர்விகல்ப சமாதி மூலம் நீங்கள் உங்களுக்குள்ளே ஒரு இனம் புரியாத இன்பத்தை அனுபவிக்கும் பொழுது, வெளியிலே யாராவது உங்களை தொடுகிறார்களோ, இல்லையோ, பாலுணர்வு செய்கைகள் பற்றிய அந்த முழு புரிதல், மற்றும் பாலினம் குறித்த அடையாளம் இவைகளெல்லாம் ஒரு மாயையே என்பது புலப்படும்.

இதே மாதிரிதான் பயத்தை பற்றியும், பயத்திற்கான பலமடங்கான வரையறைகள், எதிர்வினைகள், பதில் உரைகள், இவைகள் எல்லாமே ஒரு தொடர்பற்ற நிலையைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் தவறான கருத்துக்கள் தானே தவிர வேறொன்றுமில்லை. தொடர்பில்லாத நிலை என்பது இல்லை. உங்களுக்குள் நடக்கும் தொடர்ந்த தொடர்பு இல்லாத நிலையைப் பற்றி கற்றுக்கொள்ளுங்கள்

அநித்தியம் இருக்கப் போகிறது என்றால்,அது இப்பொழுதே உங்களுக்குள் இருக்கப்போகிறது. உங்களுக்குள் ஒவ்வொரு கணமும் ஏற்படுகின்ற மரணம் என்கின்ற உணர்வு உங்களுக்குள்ளேயே இப்போது நிகழ்கின்ற மரணம்தான். தனித்தனியானது என்பது இல்லை.

தொடர்ச்சியாக உங்களுக்குள் மரணம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது என்பதனை, மறக்க முயற்சி செய்வதும், மறைக்க முயற்சி செய்வதும், லூசுத்தனமான தேவையற்ற பரபரப்புத்தனமான செயல், மேழும் மரணம் என்று சொல்லிக் கொள்ளப்படுகிறதே, அப்பொழுது தான் உங்களுக்கு மரணம் நிகழும் என்று நினைப்பது ஒரு பைத்தியக்காரத்தனமான செயல். இரண்டுமே முட்டாள்தனமானது.

மரணம் உங்களுக்குள் இப்பொழுதே நிகழ்வதை நீங்கள் பாருங்கள். மரணம் என்பது ஒரு தனியான நிகழ்வு அல்ல. மரணம் என்று சொல்லிக் கொள்கிறோமே அப்பொழுது கூட இல்லை என்பதனை உணருங்கள். அது ஒரு control + delete பட்டன் தான். இதனை உணர்பவர் எவருக்கும் அவர்களுடைய உள்ளுறுப்புக்கள் இனிமையான என்றும் 16 ஆக இருக்கும். நீங்கள் துடிப்புடனும், உயிரோட்டத்துடன், எப்பொழுதும் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டே இருப்பீர்கள்.

சில நேரங்களில் என்னை சுற்றி இருப்பவர்கள் மீது ஒரு கருணைத் தன்மை உருவாகும். முக்கியமாக ஆதினவாசிகள் மீது. நான் மிக அதிக அளவு உயிரோட்டத்துடன், மிக அதிக அளவு துடிப்புடனும், பல்வேறு விஷயங்களைப் பற்றிய ஞானத் தெளிவு பெறும் திறமை உடையவனாகவும், திட்டமிடுதலில் திறமை உடையவனாகவும் இருக்கின்றேன். ஆனால் இவையெல்லாம் ஒரு பிரம்மாண்டமான கருணைத்தன்மையிலும் அன்பிழும் நிறைந்து இருக்கின்றன என்பதனை உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

இந்த சமூகத்திலிருந்து என்னை நான் விலக்கிக் கொண்டதும், கைலாசத்துக்கு நான் திரும்பியதும் கூட என்னுடைய எல்லையில்லாத கருணை தன்மையே. அவர்களுடைய முட்டாள் தனத்தினால் மேலும் மேலும் கர்மாவினை சேர்த்துக் கொள்கிறார்கள்.

மனித குலத்துடன் நானிருந்தால் அவர்களுக்கு நான் தீட்க்ஷை அளித்துக் கொண்டும், ஜீவன் முக்தி அளித்துக் கொண்டும், ஆசீர்வதித்து கொண்டும், இருந்திருப்பேன், ஆனால் என் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பர்கள் மேலும் மேலும் கர்மவினையை சேர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் மேலும் மேலும் கர்மவினையை சேர்த்துக் கொள்ள நான் விரும்பவில்லை. ஆகவே என்னை நானே விலக்கிக் கொண்டேன்.

SRIMAD KAMIKA AGAMA II PURVA PADA II CHAPTER 4 II ARCHANA VIDHI PATALAM II SLOKA 332 II SADASHIVA DHYANAM

ஸ்ரீமத் காமிக ஆகமம், பூர்வ பாதம், 4 ஆம் அத்யாயம், அர்ச்சனை விதி படலம் 332 ஆம் ஸ்லோகம், சதாசிவ தியானம்.

षोडशाब्दपयुतं कान्तं सुप्रसन्नं स्मिताननम्॥ Shodashaabda yutam kaantham suprasannam smitaananam ஷோடஷாப்தயுதம் காந்தம் ஸுப்ரஸன்னம் ஸ்மிதானனம்

षोडशाब्दपयुतं कान्तं सुप्रसन्नं स्मिताननम्॥ ஷோடஷாப்தயுதம் காந்தம் ஸுப்ரஸன்னம் ஸ்மிதானனம்

பொருள்: என்றும் 16, ஒப்பற்ற பேரழகான, மங்களகரமான கவர்ச்சிமிக்க புன்சிரிப்பால் அலங்கரித்த முகம்.

என்னுடைய குழந்தைகள் அனைவரும் இதை 11 தடவை எழுதுங்கள். தியானமும் செய்யுங்கள். மஹாதேவரே!என்னுள் இந்த உணர்வுநிலையில் இருங்கள் என்னுள் இந்த வெளிப்பாடாக நான் உங்களை அனுபவித்து மகிழவிரும்புகிறேன். இந்த பிரார்த்தனையோடு இன்று அங்கிளட்ச் செய்யுங்கள்

மஹாதேவரே, தயவு செய்து இந்த பரிமாணத்தை என்னுள் வெளிப்படுத்துங்கள் என்று பிரார்த்தியுங்கள்.

இரவில் உறங்கும்போதோ, விடியற்காலையில் கண்விழிக்கும்போதோ, அங்க்ளட்ச் செய்து உட்காரும்போதோ, பரமசிவனிடம் சொல்லுங்கள் "மஹாதேவரே, நான் அங்கிளட்ச் செய்ய முயற்சிக்கிறேன். தயவுசெய்து எனக்குள் இருக்கும் உணர்வுநிலைக்குள் நீங்களே வெளிப்படுங்கள். நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்."

பரமசிவன் இருக்கிறார் என்றும், செய்யும் அனைத்தும் அவரை நோக்கியே உள்ளதென்பதும் உங்களை ஏமாற்றும் மாயவித்தை அல்ல, உங்களை விழிப்படைய செய்யும் வித்தை. பரமசிவன் இல்லாமலே எல்லாவற்றையும் நீங்களே சாதித்துவிடலாம் என்று கர்வத்துடன் நினைப்பது சூனியம் வைத்துக்கொள்வதுபோல் ஆகும்.

ஒரே வேறுபாடு என்னவென்றால், பரமசிவனிடம் சரணடைவது என்பது வெள்ளை மாய வித்தை (உங்களை விழிப்படைய செய்யும் வித்தை) சொல்லப்போனால் அது வெள்ளையும் அல்ல, கருப்பும் அல்ல, அது தங்கநிறம் என்றோ, பலவண்ணங்களை உணர்த்தும் ஒரு உன்னத அனுபவம் என்றோ சொல்லலாம்.

வேதாகமங்களின் சிறப்பு என்னவென்றால் அவை ஒப்புயர்வற்ற ஞானத்தையும், சரணாகதியையும் கற்றுக்கொடுக்கின்றன. ஹிந்துமதத்தில் உள்ள ஒப்புயர்வற்ற ஞானத்தை பற்றி என்னால் பேசி ஆனந்த கண்ணீர் வடிக்க முடியும். அருணகிரி யோகிஸ்வரரை - மஹாதேவரை நான் கண்டுள்ளதால் அவரை நினைவுகோருகிறேன். எனது சொந்த குருவாக அவரை - அருணகிரியோகிஸ்வரரை தொட்டிருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன், ருசித்திருக்கிறேன்.

EVEN IF YOU STRUGGLE WITH UNCLUTCHING, TRY FOR HALF AN HOUR.

UNCLUTCH செய்ய நீங்கள் சிரமப்பட்டாலும் அரை மணி நேரம் முயற்சியாவது செய்யுங்கள்.

உங்கள் உயிரியியலின் வேதியியல் உங்கள் மனம், பரமசிவனின் ரசவாதத்தோடு ஒன்றிணைதல் UNCLUTCH மூலம் சாத்தியமாகும்.

UNCLUTCH பரமசிவனின் ரஸவாதத்தோடு உங்கள் உயிரியியலின வேதியியிலை ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் வினையூக்கி ஆகும்.

பரமசிவனே இதை விவரிக்கும் சாஸ்திர பிரமாணம்: ஸ்ரீமத் காமிகாகமம், அத்யாயம் 4, அர்ச்சனை விதி படலம், ஸ்லோகங்கள் 330 & 331 சதாசிவ தியானம்

शान्तं चन्द्रकलाचूडं सर्पसन्नद्ध सज्जटम्। कटिसूत्रोदरबन्धनैः। śāntaṃ candrakalācūḍaṃ sarpasannaddha sajjaṭam. kaṭisūtrodarabandhanaiḥ. ஶாந்தம் சந்த்ரகலாசூடம் ஸர்பஸன்னத்த ஸஜ்ஜடம். கடிஸூத்ரோதரபந்தனை꞉.

இந்த செய்யுட்கள் பரமசிவனை இவ்வாறு விவரிக்கின்றன: ஸஜ்ஜதம் என்றால் பரமசிவனுக்கு ஜடாமுடி உள்ளது என்று பொருள். "உதரோபந்தனம்" என்பது அடிவயிற்றில் அவர் அணிந்திருக்கும் அணிகலனை குறிப்பிடுகின்றது. தொப்பை இல்லாதவர், கட்டுப்படுத்திய வயிறுள்ளவர்.

இந்த சத்சங்கத்தின் மூலமாக இன்று நான் என்னவெல்லாம் தெரிவிக்க விரும்புகிறேன் என்றால்,மொத்த தன்னுணர்வற்ற மனித சமூகமும் உங்கள் மேல் குறும்பு விளையாட்டை (ப்ராங்க்) நடத்துகிறுது. குறும்பு விளையாட்டிற்கு ஆளாகாதீர்கள். அரைமணி நேரம் அன்கிளட்ச் (எண்ணங்களிலிருந்து விடுபடுத்துதல்) செய்வதன் மூலம் நிஜத்திற்கு விழித்தெழுங்கள். அன்கிளட்ச்-க்கு முயற்சி செய்தால் கூட சரி.

ஆனால் என் எல்லா சன்யாசிகள் மற்றும் குழந்தைகளுக்கு இது அரைமணி நேரமாக இருக்க கூடாது, இது முழு நாளாக இருக்க வேண்டும்‌. பக்தர்களிடம் எதிர்பார்க்கப்படும் சாதனையின் நிலை வேறு, சன்யாசிகள், கைலாசவாசிகள், குருகுல குழந்தைகளிடமிருந்து எதிர்ப்பார்க்கப்படுவது வேறு. நீங்கள் ஆச்சாரியாராக இருக்கபோகிறீர்கள். நீங்கள் உங்கள் வாழ்வில் ஞானமடைவது மட்டுமின்றி, மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வில் அவர்களை ஞானமடையவைக்க போகிறீர்கள்‌.

இன்று உங்கள் அனைவருக்கும் தீக்ஷை அளிக்கப்போகிறேன். வெறுமனே அன்கிளட்ச் செய்வதற்கான தீக்ஷை மட்டுமல்ல, நான்‌உங்களுக்கு வலிமையான தைரியத்தை கட்டமைக்க மிகவும் தீவிரமான சக்தியான -செரிமான சக்தி! தீக்ஷையை அளிக்க இருக்கிறேன்‌. உங்கள் ஆத்ம லிங்கத்தை எடுத்துக்கொண்டு அதை உங்கள் வயிற்றின் மேல் வைத்துக்கொண்டு அன்கிளட்ச் செய்துகொண்டு அமரவும்.

இந்த தீக்ஷை- யின் சக்தியானது அடுத்த 24மணிநேரத்தில்,உங்கள் வயிற்றிலிருந்து தேவையில்லாத கொழுப்பு,வாயு,செரிமானமாகாத மலம் ஆகியவற்றை வெளியேற்றும்.

இப்போது எல்லோரும் ஆத்ம லிங்கத்தை எடுத்துக்கொண்டு வந்து உங்கள் மணிப்பூரக சக்கரத்தின் மேல் வைத்து கொள்ளுங்கள்‌.ஆத்மலிங்கத்தை வைத்துக்கொண்டு நேராக நிமிர்ந்து அமர்ந்து அன்கிளட்ச் செய்யுங்கள்.

படங்கள்

https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-9/118995820_1750065315148460_5161196963156699821_o.jpg?_nc_cat=107&_nc_sid=8024bb&_nc_ohc=Eo7UOWQ1VEwAX-zNqyv&_nc_ht=scontent.fskg1-2.fna&oh=a25e2f1dd00f4a844fa7c386c3c40b7e&oe=5F7DBBFD https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-9/119059534_1750065298481795_1060442486802577922_o.jpg?_nc_cat=109&_nc_sid=8024bb&_nc_ohc=dOIms3480s8AX_r9UaL&_nc_ht=scontent.fskg1-1.fna&oh=4990b4b93320a6afa09e902d6357b02a&oe=5F7BF436 https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-9/118958264_1750065405148451_2371026084086892765_o.jpg?_nc_cat=105&_nc_sid=8024bb&_nc_ohc=54rKFaTNTX0AX_diZMD&_nc_ht=scontent.fskg1-2.fna&oh=183617854c627780a2f2302668d6703a&oe=5F7C62E3

https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/119049083_1750065308481794_2832308988436445699_o.jpg?_nc_cat=109&_nc_sid=8024bb&_nc_ohc=4RECKrvoUzkAX-gzVwA&_nc_oc=AQk01iZeKs4YloygyuhizSjoeXCSLVVCTWnIjdMasaIy0jeT9JZkrDBdWdNcTvxQSEI&_nc_ht=scontent.fskg1-1.fna&tp=6&oh=20638222ea45042b6fa2ebe196a4166c&oe=5F7D5038 https://scontent.fskg1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/118957770_1750065305148461_2434426779089098627_o.jpg?_nc_cat=111&_nc_sid=8024bb&_nc_ohc=hKvJqJXZdJQAX_xaW1h&_nc_ht=scontent.fskg1-1.fna&tp=6&oh=026f7dfff2392402a517aa1d7efb1d0e&oe=5F7DE49C https://scontent.fskg1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/119029094_1750065321815126_8264235683929955512_o.jpg?_nc_cat=105&_nc_sid=8024bb&_nc_ohc=a99F3Mfl9JoAX_l3mSA&_nc_ht=scontent.fskg1-2.fna&tp=6&oh=b221368e68bb24fb2ddf528f20a590d2&oe=5F7DB6C2


முகநூல் பக்கத்திற்கு இணைப்பு

https://www.facebook.com/srinithyananda.swami/posts/1750066461815012
https://www.facebook.com/ParamahamsaNithyananda/posts/4330086630412487 Tamil