August 30 2019 - Tamil

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

Title:

Satsang from The Supreme Pontiff of Hinduism HDH Bhagavan Nithyananda Paramashivam in Tamil


Link to Video:

Video Audio




Transcript:

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். பிரபஞ்சவியல் உயிர் ஏன் உயிர்த்து? எவ்வாறு உயிர்த்தது? உயிர் எப்படி உயிர்த்தது? உயிர் எப்பொழுது உயிர்த்தது? உயிர் நோக்கியிருக்கும் நோக்கம் என்ன? உயிர் உயிர்த்ததற்கான காரணங்களை எல்லா பரிணாமங்களில் இருந்தும் தெரிந்து கொள்வீர்களானால்.. உயிரின் நோக்கத்தை அடைந்து விடுவீர்கள்.

நன்றாக புரிந்துகொள்ளுங்கள். உங்கள் உயிர் ஆதியில் ஏன் உயிர்த்தது? யார் யாரெல்லாம் எதுவெதுவெல்லாம் அதற்கு காரணம்? இந்த சத்தியங்களை முழுமையாக தெரிந்து கொள்வீர்களானால் வாழ்க்கையின் நோக்கம் உங்களுக்கு புரிந்துவிடும். உயிரின் நோக்கத்தை அடைந்து விடுகிறீர்கள்.

உங்கள் உயிரின் நோக்கத்தை மறுதலித்து தவறாக, நோக்கினை மாற்றி உங்களுக்கு சொல்லித்தரும் எல்லோரும் உங்களின் துரோகிகள்.. உங்கள் உயிரின் நோக்கத்தை உள்ளது உள்ளபடி உங்களுக்கு சொல்பவர் ஒரு உங்கள் உயிரின் நோக்கத்தை உண்மையாக அளிப்பவர் குரு. நோக்கத்தை மாற்றும் எல்லோரும் உங்கள் வாழ்க்கையையே அழிக்கின்ற எதிரிகள் உங்கள் துரோகிகள்.

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்… யார் உங்கள் நண்பன்? யார் உங்கள் வாழ்க்கைக்கு உதவுபவர்? யார் உங்கள் வாழ்க்கையின் எதிரி? என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் உயிரின் குறிக்கோள் என்ன என்ற உண்மையை உங்களுக்கு உணர்த்துபவர் குரு. அந்த உண்மையில் இருந்து உங்களை ஏமாற்றி பிரித்து வேறு நோக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் எல்லோரும் உங்கள் துரோகிகள்.

பராசக்தி ஏன் காஞ்சி ஏகினால்? காஞ்சியம்பதிக்கு ஏன் வந்தாள்? காஞ்சியம்பதிக்கு ஏன் வந்தாள்? ஏகம்பதிக்கு ஏன் வந்தாள்? பரமசிவம் பரம்பொருளின் வலக்கண்ணாக இருக்கும் சூரியன் ஒளிபட்டு நிலம் உயிர்த்தது. இடக்கண்ணாக இருக்கும் சந்திரன் ஒளிபட்டு நீர் உயிர்த்தது, நிலம் உயிர்த்து தாவரங்களும், நீர் உயிர்த்து மற்ற உயிர்களும்., நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

இந்து மதத்தினுடைய வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள் தான் பிரபஞ்சவியல் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் தெளிந்த விடை இருக்கிறது. பிரபஞ்சவியல் வானியல் மற்றும் பிரபஞ்சவியல் சார்ந்த மற்ற துறைகளை ஆராய்கின்ற எல்லா விஞ்ஞானிகளின் எல்லா கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் சக்திகள் தெளிந்த அறிவோடு நேர்மையாக பதிலளிக்கும் சக்தி வேத ஆகமங்களுக்கே உண்டு. காரணம் நன்றாக புரிந்து கொள்ளுங்கள். எந்த நாட்டிலும் ஏழ்மை இல்லை. ஆளுகின்றவர்கள். மக்களை ஏழ்மையில் வைக்கவேண்டும் என்று முடிவெடுத்தால் மட்டுமே ஏழ்மை உண்டு. எந்த துறையிலும் அறிவு வறுமை கிடையாது. அந்த துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் அறிவு வறுமையில் வைத்திருப்பதன் மூலம் மக்களை அடிமையாக வைத்திருக்க நினைத்தால் மட்டுமே அறிவு வறுமை அந்த துறையில் இருக்கும். சில சுயநலவாதிகள் மக்களையும், அறிவையும், பொருளையும், சக்தியோடு வாழும் வாழ்க்கை முறையையும் தன கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு, மக்களை அறிவு வறுமையிலும், பொருள் வறுமையிலும் வைத்திருக்கிறார்கள். நன்றாக புரிந்து கொள்ளுங்கள். சில மனித இனத்துரோகிகள் அறிவையும், பொருளையும், சக்தி நிறைந்த வாழ்க்கை முறையையும் தன கட்டுப்பாட்டில் வைத்து மக்களை அடிமையாக வைத்து, அறிவோ, பொருளோ மக்களுக்கு போய் சேராமல் பார்த்து கொள்கிறார்கள். நீரழிவு நோய்க்கு மருந்து கண்டுபிடித்து எத்தனையோ நூறு ஆண்டுகள் ஆகிறது. மக்களுக்கு போய் சேராமல் பார்த்து கொள்கிறார்கள். காரணம் என்னவென்றால் இந்த நோயை உருவாக்கியர்வர்கள் எப்படி மக்களுக்கு போய் சேர விடுவார்கள்.? சர்க்கரை வியாதியை உருவாக்கியவர்களின் நோக்கம் என்னவென்றால் மனிதர்கள் இறந்து விடவும் கூடாது. இறந்து விட்டால் வருமானம் வராமல் போய்விடும். அதேபோல் முழுக்க முழுக்க அவர்கள் ஆரோக்கியமாகவும் இருந்துவிடக்கூடாது அப்பொழுதும் வருமானம் வராமல் போய்விடும் வேலைக்கு போகவேண்டும், சம்பாதிக்க வேண்டும் பணத்தை இவர்களிடம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இதுதான் நான் மருந்து தீவிரவாதம் என்று சொல்கின்றேன். மனிதனை அவனிடமிருந்து பணம் பறிப்பதற்காக, பணம் சுரக்கின்ற இயந்திரமாக மனிதன் இருக்கவேண்டும் என்பதற்காக அவனை மருத்துவ ரீதியாக அடிமைப்படுத்தி வைத்து கொடுமைப்படுத்தி பறிக்கப்படும் பணம்., மருந்து தீவிரவாத வரி இன்சுலின் லட்சக்கணக்கான பணம் குவிக்கும் வியாபாரமாக இருக்கிறது. கேன்சர் மருந்துகள் லட்சக்கணக்கில் பணம் குவிக்கும் வியாபாரம்., அதனால் அறிவு வறுமையில் கேன்சருக்கு நீரழிவு நோய்களுக்கோ மிக மிக மிக சாதாரண மிகுந்த சொற்பமான விலையில் நிலையே இல்லாமல் உண்மையில் இலவசமாக சித்த வைத்தியத்திலும், ஆயுர்வேதம் யோக முறைகளிலும் மருந்துகள் இருக்கின்றன. ஆயுர்வேத சித்த, யோக, வாழ்க்கையை நீங்கள் வாழ்வீர்கள் என்றால் இந்த வியாதிகளை உங்களிடம் வராது, ஒருவேளை இந்த வியாதிகள் உங்களிடம் வந்தாலும் மற்ற பொருள்கள் உங்கள் உயிரிலும் உடலிலும் கலந்ததால் இந்த வியாதிகள் வந்தாலும் சித்த மருத்துவத்திலும் ஆயுர் வேதத்திலும் எளிமையான சாதாரணமான மருந்துகள் மூலமாக வியாதிகளை காணாமல் போகச் செய்ய முடியும்.

வேறு ஏதும் தேவையில்லை வாரத்தில் மூன்று நாட்கள் விரதம் இருங்கள். திங்கட்கிழமை பரம சிவனுக்காக, வெள்ளிக்கிழமை பராசக்திகாக, ஞாயிற்றுக்கிழமை குருநாதருக்காக மூன்றே மூன்று நாட்கள் விரதம் இருங்கள் விரதம் என்றால் வேறொன்றுமில்லை சூரியன் உதித்தது லிருந்து சூரியன் அஸ்தமிக்கும் வரை முடிந்த வரை எதுவும் சாப்பிடாமல் உங்களால் முடியுமானால் நீர் கூட அருந்தாமல் இருக்கலாம், அது முடியவில்லை என்றால் நீர் மட்டுமாவது அருந்தி, அதுவும் முடியவில்லை என்றால் கொஞ்சம் பழரசங்கள் எடுத்து கொண்டு இருக்கலாம். எந்த ஒரு திட உணவையும் எடுத்துக் கொள்ளாமல் மூன்று நாட்கள் மட்டும் விரதம் இருங்கள் உங்கள் உடலும் மனதும் உயிர்ப்பதை நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு நீங்கள் பார்ப்பீர்கள். தேவையில்லாத எந்த ஒரு செயலையும் உங்களை செய்யச்சொல்லிமாட்டேன். உங்களின் மீது நேர்மையான அன்பும் காதலும் உள்ளவன் நான், தேவை இல்லாத எந்த ஒரு துயரத்தையும் உங்களுக்கு நான் அழிக்க மாட்டேன், வாரத்தில் மூன்று நாட்கள் விரதம் இருங்கள் என்று சொன்னால், சத்தியமாக அது உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நன்மை தரும் என்று மட்டுமே சொல்கின்றேன். எந்தத் துறையிலுமே வறுமை இல்லை,அந்தத் துறையின் தலைவர்கள் செய்த பெரும் சூழ்ச்சியை மனித இனம் படும் எல்லா துக்கங்களுக்கும் காரணம். வேதங்களும் ஆகமங்களும் மிக உயர்ந்த அறிவியல் சத்தியங்களை உலகத்திற்கு தந்தன. காரணம் என்னவென்றால் அந்த காலத்தில் அறிவு, அரசியல் மூலமாக மக்களை அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்த மனிதர்களிடமோ, பணத்தின் மூலமாக மக்களை அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்த நபர்களிடமோ, செல்லாமல் அவர்கள் கையில் சிக்காமல், மண்டியிடாமல் சுதந்திரமாக இருந்தது. ஆதிசைவர்கள் கட்டுப்பாட்டில் அறிவியல் ஞான அறிவியல் சுதந்திரமாக இருந்தது. இந்த பிரபஞ்சவியல் வேதங்களிலும், ஆகமங்களிலும் இந்து சாஸ்திரங்களிலும் சொல்லப்படுகின்ற இந்த பிரபஞ்சவியயலை பற்றி சற்றே புரிந்து கொண்டோமானால்.. நன்றாக புரிந்து கொள்ளுங்கள்

ஒரு சின்ன கருத்து, கிரகங்களின் பிறப்பை பற்றி சொல்லும் பொழுது சந்திரன் குருவின் வீட்டிற்கு சென்று குருவின் மனைவியை கவர்ந்து வந்து புணர்ந்தால் புதன் பிறந்தான். உண்மையில் கிரகங்களை பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளை அவர்களுடைய கண்டுபிடிப்புகள் இவையெல்லாம் புரட்டிப் பார்த்தோமானால் ஒவ்வொரு வார்த்தையும் இதில் சொல்லப்பட்டிருப்பது சத்தியமாக இருக்கிறது.

மிகப்பெரிய சந்திரன் உருவாகி பூமியை சுற்றி குரு கிரகத்தின் ஈர்ப்பினால் இந்த சந்திரன் ஈர்க்கப்பட்டு பூமியின் சந்திரனோடு மோதி பூமியின் சந்திரனின் அளவு குறைந்து பூமியின் சந்திரன் ஒரு பாகமும் குருவின் சந்திரனின் ஒரு பாகமும் இணைந்து புதன் கிரகம் உருவானது அறிவியல்பூர்வமான உண்மை. ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு உண்மையும் மிகத்தெளிவாக புவியில் ரிதியான அறிவியல் முடிவுகள் முழுமையாக அதை நிரூபிக்கின்றன. சூரியனிலிருந்து பூமியின் மீது ஏற்படும் பெரிய தாக்கத்தை தாங்கும் ஒரு சக்தி சனிகிரகம். ஜோதிடத்தில் சொல்கின்ற எல்லா சத்தியங்களும் புவியியலோடு வேதாகமங்களில் சொல்லப்பட்டிருக்கும் பிரபஞ்சவியலோடு பொருத்தி பார்த்தோமானால் மீண்டும் மீண்டும் மீண்டும் கண்ணெல்லாம் குளமாக நன்றி வேதாகமங்களை நமக்கு அருளிய பெருமான் மீதும் அதைவாங்கி எந்தவிதமான சுயநல சொருகல்களும் செய்யாமல் உலகத்திற்கு ரிஷிமார்கள் மீதும், குருமார்கள் மீதும், அந்த குருபரம்பரையின் மீது மீண்டும் மீண்டும் மீண்டும் பக்தியும் நன்றியும் பொங்கி வழிகின்றது. அந்த குரு பரம்பரையின் மீது நான் மீண்டும் மீண்டும் மீண்டும் நான் காதலில் விழுகின்றேன்.

நான் பிறந்த பொழுது திருவண்ணாமலையில் குறைந்தபட்சம் குறைந்தபட்சம் ஐம்பது ஞானம் மலர்ந்த முழுமையான பரிபூரண பரமசிவ நிலையை அடைந்த ஐம்பது பேரையாவது என்னால் பார்க்க முடிந்தது அது ஒரு ஈகோ சிஸ்டம் என்லைட்ன்மெண்ட் ஈகோ சிஸ்டம் ஜீவன் முக்த ஞான சூழலியல் வேறுவேறு சம்பிரதாயம்.

அத்வைத சம்பிரதாயம் பகவான் ரமணருடைய சீடர்கள்.. அண்ணாமலை சுவாமிகள், கனகாம்பாள் ஒரு பெண் இருந்தார்கள் ரமண பகவான் ரமண மகரிஷி உடைய அக்ஷரமணமாலை உரை எழுதி இருக்கிறார்கள் நான் பார்க்கும்போது வயசான வயது முதிர்ந்த பெண்மணியாக இருந்தார்கள். பல ஆண்டுகள் அவருடைய காலைத் தொடும் பெரும் புண்ணியம் கிடைத்தது. அண்ணாமலை சுவாமிகள் பக்தி சம்பிரதாயத்தின் உடைய வடிவமாக சக்தியின் மூலமாக பரமசிவம் பரம்பொருளோடு ஒன்றி விட்ட நிலையில் இருந்த ராம்சுரத்குமார். சுத்தாத்வைத சுகபோக நிலையில் எப்போதும் நிலைத்திருக்கும் ஆதி சைவ வேளாளர் பரம்பரையில் வந்த இசக்கி சுவாமிகள், அவருடைய அடிமையாக, பக்தையாக சிஷ்யையாக இருந்து வாழ்ந்து வந்த விபத்தானந்த புரி குப்பம்மாள், உமாதேவி தாயார் ஒருவர் இருந்தார், சேஷாத்திரி சுவாமிகள் அவர் மூலமாக வெளிப்பட்டு பேசுவதை நான் பார்த்து இருக்கிறேன். உமாதேவி தாயார், பெரிய குங்கும பொட்டு., சேஷாத்திரி சுவாமிகள் வெளிப்பட்டு பேச ஆரம்பிச்சா ஆண் போல இருக்கும். நான் கண் முன்னால் கண்டிருக்கின்றேன்., பொய்யில்லை

50 பேராவது பரமசிவம் பரம்பொருளின் ஜீவன் முக்த நிலையில் வாழ்ந்த ஒரு ஞான சூழலியலை என் முன்னோர்கள் எனக்குக் கொடுத்தார்கள். அதை கொடுத்துவிட்டுத்தான் அதே போன்ற ஞான சூழலியலை என் அடுத்தஜென்மத்திற்கு உருவாக்கியே தீருவேன். அதைச் செய்யும் வரை யாரும் என்னை அழிக்க விடமாட்டேன் .அதைச் செய்து முடித்து விட்டால் யாரைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன்.

திருக்கைலாயத்திற்கு செசென்று கொண்டே இருப்பேன். எனக்கு அருணகியோகிஸ்வர பெருமான் என்ன சூழலை, ஞான சூழலை, திருவண்ணாமலையில் எனக்கு அளித்தரோ, அதை அளிக்கும் வரை யாரும் என்னை அழிக்க விடமாட்டேன். அருணகியோகிஸ்வர பெருமான் எனக்கு அருள் செய்த பொது, எந்த திருவண்ணாமலையை எனக்கு அளித்தரோ, எந்த திருவண்ணாமலையில் நான் பிறந்து வளர்ந்து, இந்த ஞானத்தில் மலர்ந்து இந்த சக்திகளையெல்லாம் உணர்ந்து, இந்த பரமசிவ நிலையை உணர்ந்தேனோ அந்த ஞான சூழலை உருவாக்கியே தீருவேன். அதற்காக நேரம், காலம் பார்க்காது உழைத்தே தீருவேன்.

மீண்டும் வந்துவிட்டேன் மட்டுமல்ல, மீண்டு வந்துவிட்டேன். திருக்கயிலாயம் செய்தே தீருவேன்.

இந்த ஞான குருமார்களும்,ஆதி சைவர்களும், உயிர் கொடுத்து, உடமை கொடுத்து, வறுமையில் இருந்து உயிர்ப்போடு வைத்திருந்த இந்த சத்தியம்.. நன்றாக புரிந்து கொள்ளுங்கள்

பிராமண வெறுப்பும் இந்துமத வெறுப்பும் ஒன்று ஆதிசைவ வெறுப்பும் ஹிந்துமத வெறுப்பும் ஒன்று என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் இந்துக்களே உங்களுக்குள் ஜாதி ரீதியான கோத்திரம் ரீதியாக பிரிவுகளை விட்டுவிடுங்கள். நம்முடைய பொது எதிரி பெரியவன். நம்முடைய சிறுமையான சிறு சிறு உட்பிரிவு பிரச்சனைகளால் வீட்டையே கொளுத்துவதற்கு பார்த்துக்கொண்டிருக்கிறான். நம்முடைய அண்ணன் தம்பி பிரச்சனையை பிறகு பார்த்துக்கொள்ளலாம். வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு மொத்தமாய் நம்மை அழிக்கநினைக்கும் எதிரிக்கு இடம் கொடுக்காதீர்கள்.

சின்ன வயசுல நன்றாக நினைவிருக்கிறது., ஆலயத்தில் திருவண்ணாமலை கோவில் திருவிழாக்காலங்களில் பதினாறு ஜாதிக்காரர்கள் ஒன்றாக நின்று 16 ஜாதிக்காரர்கள் மரியாதை செய்யப்படும் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து ஆலயத்தில் பெருமானுடைய பிரசாதத்தைப் பாருங்கள் யாருடைய வீட்டிலாவது எதாவது நல்ல விஷயங்கள், சடங்குகள் விழாக்கள் என்னும் பொழுது எல்லா சாதிக்காரர்களும் ஒன்றாக சேர்ந்து உணவருந்துவார்கள்.அது மட்டுமல்ல அந்த கோவிலில் பத்திரிகை படிக்கும் போது இன்னமும் எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது. ஆதிசைவ சிவாசார்யர்கள்., ஆதி சைவ வேளார்கள்., ஆதிசைவ கௌண்டர்கள், ஆதிசைவ பறையனார், அந்த பெயர் படிக்கும் பொழுதே ஆதிசைவ என்கின்ற தலைப்போடு தான் மரியாதை செய்யப்பட்டதை நான் பார்த்து இருக்கிறேன். அந்த ஒரு தலைப்பை சிதைத்து, சாதிகளை தனி தனியாக உடைத்து ஆலயம் நம்மையெல்லாம் இணைத்து வைத்திருக்கிறது என்பதற்காக ஆலயத்தையே மக்களிடம் இருந்து திருடி. கிணத்தை காணோம், குளத்தை காணோம் என்று காமெடிய பார்த்து இருப்பீங்க. நிஜத்தில் கோவிலையே காணோமடா.!

திருடி அழிக்க கூடிய ஆலயங்களை எல்லாம் திருடி அழித்தார்கள். திருடி அழிக்கமுடியாது ஆலயங்களை எல்லாம் லட்சியத்தின் முறைப்படி நடக்காமல் அதை அழித்தார்கள்.எந்த லட்சியத்திற்காக அது உயிரோடு வைத்திருந்ததோ அந்த கொள்கைகளை அழித்தார்கள்.

முன்னோர்கள் வாழ்க்கையையும், சொத்தையும், ஆலயத்தை சார்ந்து தான் கட்டி வைத்தார்கள். இனம் இனமாக, வம்சம் வம்சமாக நாம் பெருநன்மையோடு வாழ பொருள், அரசு செய்யும் முறை எல்லாவற்றையும் ஆலயம் சார்ந்தே அமைத்து வைத்தார்கள். மக்களே ஆலயத்தையும், ஆலயம் சார்ந்த வாழ்கை முறையும் மீட்டெடுப்போம். நமக்குள் இருக்கும் சிறு சிறு சண்டையும், பிரச்சனைகளும் விட்டு விட்டு ஆலயம் சார்ந்த வாழ்க்கை முறையை மீட்டெடுப்போம். இதை செய்தலே மற்ற எல்லா பிரச்சனைகளும் மறந்து போய்விடும். எனக்கு நன்றாக தெரியும், நாட்டாரும், நாடாரும் திருவண்ணாமலை கோவிலில் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும். ஒற்றரும் தேருக்கு கட்டை போட வேண்டும். வேளாரும், மறவரும் பெருமானை தோளில் தூக்குகின்ற சீர்பாகம். சைவவேளாளரும், அகமுடைய வேளாளரும் மக்களை கட்டுப்படுத்தி, நகைகளை பாதுகாத்து பெருமானுடைய ஊர்வலத்தை முறையாக நடத்த வேண்டும். ஆதி சைவ சிவாச்சாரியார்கள் பூஜைகளை சடங்குகளை நடத்த வேண்டும். ஒவ்வொரு சாதியை சேர்ந்தவர்களும் ஒவ்வொரு பொறுப்பை எடுத்து கொண்டு முறையாக நடத்த வேண்டும்.இவர்களுக்கு ஆதி சைவ என்கின்ற பெயர் உண்டு. ஆதிசைவ நயினார், ஆதிசைவ ஒற்றர். ஆதிசைவ பள்ளர், ஆதிசைவ கவுண்டர். ஆதிசைவ வேளாளர். பழைய புத்தகங்களில், பழைய பத்திரிக்கைகளில் இது போன்று ஆதாரங்கள் இருக்கின்றது. நான் இதை பார்த்திருக்கின்றேன், கேட்டுஇருக்கின்றேன்/ எந்த ஒரு தலைப்பின் கீழும் நாம் வந்துவிடக்கூடாது என்று தலைப்பை சிதைத்தார்கள். நம்மையெல்லாம் தனி தனியாக சிதைத்தார்கள். ஆதி சைவ சிவாச்சார்யர்களுக்கும், ஆதி சைவ வேளாளர்களுக்கு திருமண பந்தமே இருந்திருக்கிறது. சுந்தர மூர்த்தி நாயனாயரை பாருங்கள். ஆதி சைவ வேளாள பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்கின்றார். அதே போல ருத்ர கன்னிகைகள் விபச்சாரிகள் அல்ல. திருவாரூரின் ருட்ரகன்னிகையை தான் சுந்தரர் திருமணம் செய்து கொள்கின்றார். சில ருட்ரகன்னிகைகள் தன்னுடைய வாழ்க்கையே பெருமானுக்கு சமர்ப்பித்து பெருமானையே தன்னுடைய மணாளனாக, பரமசிவ பரம்பொருளையே தன்னுடைய மணாளனாக நினைத்து வாழ்ந்தார்கள். நினைத்து அல்ல உண்மையில் அவருடனே வாழ்ந்தார்கள். சில ருட்ரகன்னிகைள் யாராவது சிவனடியாரை தேர்ந்தெடுத்து வாழ்க்கை முழுவதும் பத்தினிகளாக நேர்மையாக வாழ்ந்தார்கள். இவர்கள் விபச்சாரிகள் கிடையாது. ஆதி சைவம் சார்ந்த எல்லாவற்றையுமா விமர்ச்சிப்பது.

தயார் ஆண்டாளின் கற்புக்கே களங்கம் விளைவிப்பது. நினைக்கும் பொழுது நெஞ்சமெல்லாம் மலருகின்ற பக்தியின் வடிவம். உயிரை மட்டும் எடுத்துக்கொண்டு உடலை விட்டு ரங்கநாதரோடு கலந்து விட்டால், இறுதி சடங்கு செய்வதற்காக யாராவது ஆண்கள் உடலை தொட்டு விடக்கூடும் என்று அதற்கு கூட வேறு ஒரு ஆண் உடலை தொடக்கூடாது என்று உடலோடு சென்று அரங்கனோடு கலந்த அன்னை ஆண்டாளையா அவதூறு செய்வது?, தாயாரின் கற்பையா கேள்வி கேட்பது.?

ஆண்டாளை அவதூறு செய்யும் பொழுது சைவர்கள் சும்மா இருந்தோமானால், நாளை ஞானசம்பந்தரை அவதூறு செய்யும் பொழுது வைணவர்கள் சும்மா இருப்பார்கள். இது போன்று நாம் தனித்தனியாக சிதைந்தோமானால் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம். மற்ற சம்பிரதாயத்தை அவதூறு செய்யும் பொழுது மற்ற சம்பிரதாயங்கள் அமைதியாக இருந்தால் அது அடி முட்டாள் தனம். இது எப்படி என்றால்... காட்டு தீ பரவும் பொழுது ஒரு மரம், தீ எனக்கு வரவில்லை என்று நினைத்து கொண்டதாம். காட்டு தீ பரவினால் இம்மரமும் உயிரோடு இருக்காது. அதனால் என் மீது நெருப்பு வரும் வரை சும்மா இருக்காதீர்கள். இந்து மதம் ஒரு காடு.

மிகப்பெரிய போர் உங்களை நோக்கி நிகந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆதி சைவ வாழ்க்கை முறை வெறும் மதம் அல்ல, ஞானம், உயிரின் நோக்கத்தை முழுமை படுத்தும் ஞானம்

முதல் உபநிஷதம் ரொம்ப அழகா சொல்லும்

ஈஷாவாஸ்யம்

நன்றாக புரிந்துகொள்ளுங்கள்.. இதன் பொருள் : இருப்பது அனைத்தும் பரம்பொருள் பரமசிவம் உயிரின் நோக்கம் உயிர் நிறைந்த மலர்வது தடையாக இருக்கின்ற எல்லாவற்றையும் துறந்துவிட்டு நூறு ஆண்டுகள் 100 கிடையாது அது ஒரு உவமை, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆனந்தமாக வாழுங்கள் நல்ல என்னை இதுபோன்ற ஒரு வாழ்க்கை லைஃப் நேர்மறையான சம்பிரதாயம் அல்ல புரிஞ்சுக்கோங்க பணத்துக்காக உங்க உயிரை குடிக்கிற மருத்துவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். ஆட்டுக் கூட்டத்தை ஒரு சிங்கமும் மனோவசியம் பண்ணி நீங்க எல்லாம் சிங்கம்னு அந்த ஆட்டு கூட்டங்களுக்கு சொல்லிக் கொடுத்துட்டு இருந்தது. இன்னொரு சிங்கம் கேட்டுத்தான் ஏன் இதை பன்றேன்னு, நான் இத மாதிரி மனோவசிய பண்ணி வச்சு நான் தினமும் ஒரு ஆடு தன்னை சிங்கம் நினைச்சுகிட்டே வரும் அன்னைக்கு நான் சாப்பிடுவேன் நான் போய் அனாவசியமா வேட்டையாட வேண்டியது இல்லை. அதே போலத்தான் உங்கள் துரோகிகள் உங்களை மனோவசியம் செய்து அவர்கள் உங்களுடைய நண்பர்கள் என்று உங்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் உணவு விஷம், உங்களுக்கு சொல்லப்படும் எல்லாம் விஷம்.உங்கள் மருந்து விஷம், உங்கள் வாழ்க்கையே சுருக்கப்பட்டுவிட்டது. அதே போன்று இரண்டு மூன்று தலைமுறை இதேமாதிரி குடிக்கிறதுனால உங்களுடைய மார்பு எலும்பு கூடு அளவே சுருங்கி கரைந்து விட்டதை புரிந்து கொள்ளாமல் வாழ்கிறீர்கள். மூன்று நான்கு தலைமுறைகளாக யோகத்தை தினசரிக் கடமையாக கடைபிடிப்பது நிறுத்திவிட்டு அதனால் உங்கள் மார்பு எலும்பு கூட்டின் விரிவே 40 சதவிகிதம் குறைந்து விட்டது. உங்களுடைய முக்கியமா ஆதிசைவர்கள் பிராமணர்களுடைய மூன்று தலைமுறைக்கு முன்னாடி இருந்த இரண்டு தலைமுறைக்கு முன்னாடி இருந்த பெரிய உங்களுடைய பழைய புகைப்படங்கள் ஏதாவது இருந்தா எடுத்து பாருங்க, அவங்க வாழ்ந்த வாழ்க்கை அளவு இதெல்லாம் இருந்தா எடுத்து பாருங்க, முன்னோர்கள் வைத்திருந்த ஸ்டாடிஸ்டிக்ஸ் மட்டும் எடுத்துப் பாருங்கள் அவர்களுடைய தினசரி வாழ்க்கையை யோகம், இயற்கையான உணவுகளை உண்பது ஸ்வயம் பாகம், அதாவது நாமலே நம்ம உணவை விளையவைத்துக்கற அளவுக்கு நம்முடைய முன்னோர்கள் சுயம்பகமாக இருந்திருக்கிறார்கள். நாமே சமைத்து கொள்ளும் அளவுக்கு மட்டுமல்ல நாமே விளையவைத்து கொள்ளும் அளவுக்கு சுயம்பகமாக இருந்திருக்கிறார்கள்.

அந்த காலகட்டத்திலே அவர்கள் வாழ்க்கையின் நீட்சிமை, மாட்சிமை இரண்டையும் பாருங்கள். நீட்சிமை, மாட்சிமை இரண்டையும் பாருங்கள். என்ன வளமாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை முறையை இரண்டு, மூன்று தலைமுறைக்கு நாம் வாழாததால் இன்று எந்த நிலைக்கு போயிருக்கிறோம் என்று பாருங்கள். உபநிஷதம் சொல்லுது நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆனந்தமாக வாழுங்கள் என்று. நன்றாக புரிந்து கொள்ளுங்கள்., நீங்கள் எதோ குடிக்கறீங்க 20மணி நேரத்துக்கு பிறகு போதை தெளிந்து விடுகிறது, அது உங்கள் உடலை விட்டு போய் விடுகிறது என்று நினைக்காதீர்கள். அப்படியெல்லாம் தப்பாக நம்பாதீர்கள். ஒவ்வொரு முறை நீங்கள் மது அருந்தும் போதும், உங்கள் உடலையும், மனதையும், மூளையும் அது நிரந்தரமாக பாதிக்கின்றது. குடித்து 20 மணி நேரம் கழித்து அது உங்கள் உடலைவிட்டு போய் விடுவதாக நினைக்காதீர்கள். சில பேர் கேட்பது எனக்கு கேட்கிறது. 20 மணிநேரம் இருக்கறமாதிரி சரக்கு எங்க சாமி கிடைக்குது என்று.

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், ஆதி சைவம் வேற ஒன்றுமே இல்லை.. உயிரின் உயிர்ப்பின் காரணம் என்னவோ அதை நோக்கிச் செல்வது உயிரின் உயிர்ப்பின் காரணம் என்னவென்றால் வாழ்க்கையை நேர்மறையாக இருப்பது வாழ்க்கையோட மாட்சிமையும், நீட்சிமையும் மலர்ந்து வாழ்தல். ஆதி சைவத்தின் சாரம், வேதாகமங்களின் சாரம் என்னவென்றால் வாழ்க்கையின் மீட்சிமையும், மாட்சிமையும் மேம்படுத்துங்கள். வாழ்க்கையின் நீளத்தையும்,உயர்வையும் அதிகமாக்குங்கள். எதுதெல்லாம் உங்கள் வாழ்க்கையின் மாட்சிமையும், நீட்சிமையும் அதிகரிக்கிறதோ, அதையெல்லாம் உங்கள் வாழ்க்கையில் சேர்த்து கொள்ளுங்கள். எந்தெந்த பொருள் எல்லாம் வாழ்க்கையின் நீட்சிமையும், மாட்சிமையும் குறைகிறதோ, அதையெல்லாம் துறந்து விடுங்கள்.

63 நாயன்மார்கள் வழிபாட்டை உலகமெல்லாம் பரப்ப வேண்டும். அதை செய்தாலே இந்துக்களுக்கு இடையிடையே இருக்கின்ற இந்த ஜாதி சர்ச்சைகள் அழிந்துவிடும் திருக்கைலாய பரம்பரையின் ஆலயங்களும் நித்யானந்தேஸ்வர ஆலயத்தில் உடனடியாக 63நாயன்மார்களின் படத்தை அவரவர்களுடைய ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும். கூடிய விரைவில் அறுபத்துமூன்று நாயன்மார்களுடைய திருமேனிகளையும் 63 நாயன்மார்கள், தனியடியார்கள், தொகையடியார்கள் யாரென்றால் திருவாரூர் பிறந்தார்கள் அவர்கள் எல்லோரும் நாயன்மார்களுக்கு சமம். தில்லைவாழ் அந்தணர்கள், தில்லையிலேயே இருக்கின்ற அந்தணர்கள் எல்லோரும் நாயன்மார்களுக்கு சமம். இவர்களுக்கு பிரதிநிதியாக ஒரு நாயன்மார்களின் திருமேனி, எப்பொழுதும் திருமேனி தீண்டுவார், எல்லா ஆலயங்களிலும், திருமேனி தொட்டு பூஜை செய்பவர்கள் எல்லோரும் நாயன்மார்களுக்கு சமம். பரமனையே பாடுவார், இறைவனையே படுவார், இறைவனை எந்த நாட்டிலும் ,எந்த மொழியில் பாடினாலும் அவர்கள் எல்லோரும் நாயன்மார்களுக்கு சமம். இவர்களின் பிரதிநிதியாக ஒருவரபூஜா நடந்தாலும் அவர்களையெல் லாம் தெரிவிக்கப்படும் பரமனையேபாடுவார் இறைவனை எந்த நாட்டில் எந்த மொழியிலும் படுபவர்கள், அவர்களும் நாயன்மார்களுக்கு சமம்

இந்துக்களுக்கு இடையிடையே இருக்கின்ற இந்த ஜாதி சர்ச்சைகள் அழிந்துவிடும் நம்பிக்கையில் ஆலயங்களும் உடனடியாக 63நாயன்மார்களின் அவரவர்களுடைய ஆலயத்தில் எப்படி செய்ய வேண்டும் கூடிய விரைவில் அறுபத்துமூன்று நாயன்மார்களுடைய திருமேனிகளையும் 63 நாயன்மார்கள் தனியடியார்கள் 9 நாயன்மார்கள் அவர்களையெல்லாம் தெரிவிக்கப்படும் பரமனையேபாடுவார் இறைவனை எந்த நாட்டில் எந்த மொழியிலும் பாடினாலும் அவர்களும் நாயன்மார்களுக்கு சமம். அவர்களின் பிரதிநிதியாக ஒருவர். தன வாழ்க்கையே கொடுத்து, சுகபோகமான மந்திரி பதவியே கொடுத்து, ஊர் ஊரகா சென்று இந்த 63 நாயன்மார்களின் வரலாற்றை திரட்டி இது ஒரு மத நூலக மட்டுமல்லாது, மத,சமூக வரலாற்று நூலாக எந்தவிதமான கற்பனையும் கலக்காத நாயன்மார்கள் வாழ்ந்த காலகட்டத்திலே எல்லா தகவல்களையும் யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாத பெரிய புராணம், செய்த சேக்கிழார் ருக்கு, தொகையடியார்கள் ஆலயத்திலும் உடனடியாக வைக்கப்படவேண்டும் நம்முடைய ஆலயங்களில் எல்லாவற்றிலும் உடனடியாக வைக்கப்படவேண்டும் கூடிய விரைவிலேயே அவர்கள் அறுபத்து மூவர் திருமேனிகள் அறுபத்துமூவர் தொகையடியார்கள, எல்லாம் சேர்த்து 73 நாயன்மார்கள் திருமேனிகள் வைக்கப்படவேண்டும். நம்முடைய எல்லா ஞானாலயங்களிலும் இருக்க வேண்டும். இதன் மூலமாக இந்துக்களுக்கு மத்தியிலேயே இருக்கின்ற சாதிச் சண்டைகளை அழிக்கவேண்டும். இந்துக்கள் அனைவரும் ஒன்றாய் சேர்ந்து இறை நிலையை அடைய வேண்டும் நம்முடைய சம்பிரதாயத்தின் மீது நமக்கு இருக்கின்ற ஆழமான அன்பும், பக்தியும் விருப்பும் வேறு ஒரு சம்பிரதாயத்தின் மீது வெறுப்பாக மாறவேண்டிய அவசியம் இல்ல.

மதுரையின் 293வது குரு மகா சன்னிதானமாக பொறுப்பேற்ற பிறகு எல்லாக் கோவில்களையும் சென்று தரிசிக்கும் பொழுது, மதுரையில் கள்ளழகர் ஆலயத்திற்கும் சென்று தரிசித்தோம். சில விஷமிகள், சில ஹிந்து விரோதிகள் பெரும் பிரச்சனையை கிளப்பினார்கள். ஒரு சைவ ஆதீனத்தின் சன்னிதானம் கள்ளழகர் ஆலயத்திற்குள் எவ்வாறு செல்வது? கள்ளழகரை எவ்வாறு விழுந்து வணங்குவது? விஷமத்தனத்தை உருவாக்கிய யாரும் கள்ளழகர் ஆலயத்திற்கும் போனதில்லை, மீனாக்ஷி ஆலயத்திற்குள் போனதில்லை., கள் குடித்து வாழ்ந்தது தான் அவர்கள் வாழ்க்கை. ஆனால் நாம் கள்ளழகர் ஆலயத்திற்குள் சென்றால் அவர்களுக்கு வலிக்கிறது.

இதற்கு நன்றாக புரிந்துகொள்ளுங்கள்., திருப்பரங்குன்றம் ஆலயம் எங்கள் ஆதீனத்திற்கு சொந்தமானது. மதுரை ஆதீனத்திற்கு சொந்தமானது திருப்பரங்குன்றம் ஆலயத்தில் பார்த்தீர்களென்றால் சப்த மூர்த்திகளும் இருப்பார்கள்., விநாயகர், முருகன், அம்பாள், பெருமாள் பவளவாய் பெருமான், அன்னை துர்க்கை, சிவபெருமான், சூரியன் ஆறு பேருக்கும் சந்நிதி இருப்பதை பாருங்கள். வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி திருப்பரங்குன்றம் திருக்கோவில் எல்லா ஆலயங்களுக்கும் முதன்மையானது. ஆதியில் ஆதி சைவம் எல்லா மதத்திற்கும் தாயாக ஆக இருந்தது எல்லா சம்பிரதாயங்களுக்கும் தாயாக இருந்து. ஆதி சைவத்தில் எல்லா சம்பிரதாயங்களும் நிலை பெற்றிருந்தன. இன்றும் நிலை பெற்றிருக்கின்றன. பிரம்ம சூத்திரத்திற்கு சைவமாக நீலகண்ட சிவாச்சாரியார் எழுதிய பாஷ்யம் தான் முதல் பாஷ்யம்.

அவருக்குப் பிறகு தான், அத்வைத பரமாக. நீலகண்ட சிவாச்சாரியார் சிவாத்வைத பரமாக சத்தியத்தை உள்ளது உள்ளபடியே எழுதி வைக்கிறார். அவருக்கு பிறகு தான் ஆதி சங்கராச்சாரியார் அத்வைத பரமாக எழுதி வைக்கிறார். அதற்கு பிறகு தான், விஷ்ணுவபரமாக இராமானுஜாசார்யார் எழுதுகிறார். மத்வாச்சார்யார், பாமதி என்று பல்வேறு விதமான பாஷ்யங்கள் உருவாகின. உபநிஷதம், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை, இந்த 3 நூலும் இந்துமதத்தின் மூல நூல்கள் என்று முதன் முதலில் நீலகண்ட சிவாச்சாரியார் தான் எழுதி வைக்கிறார். அதன் பிறகு சொல்லவந்த சத்தியங்கள் படி அந்தந்த சம்பிரதாயங்களின் முறைப்படி எழுதி வைக்கத்துவங்கினார்கள். நம் சம்பிரதாயங்களின் மீது பக்தியோடும், அன்போடும் இருப்பது தவறில்லை. அது மற்ற சம்பிரதாயங்களின் மீது வெறுப்பாக ஆகவேண்டிய அவசியமில்லை.

ராமகிருஷ்ண மடத்து பிரம்மச்சாரியாக இருந்த பொழுது சென்னையில் புத்தக கண்காட்சி ஒன்று நடைபெற்றது இந்த காட்சியை நடத்தும் பொறுப்பை அறிவித்திருந்தார்கள் அதனால் நான் அங்கு இருந்தேன் பிரம்ம சூத்திரத்தின் எல்லா விதமான விஷயங்களும் இருக்கும் சங்கர பாஷ்யம் ராமானுஜ பாஷ்யம் என்று எல்லாவிதமான பாஷ்யங்களும் விற்பனைக்காக அடுக்கப்பட்டிருக்கும். தமிழிலும் மொழிபெயர்ப்புகள் குறைவாகவே இருக்கும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புகள் அதிகமாக இருக்கும் ஏனென்றால் ராமகிருஷ்ண மடத்தின் சன்யாசிகள் ஆங்கிலத்தில் சங்கர பாஷ்யம் ராமானுஜ பாஷ்யம் மொழிபெயர்ப்பு செய்திருந்தார்கள். புத்தகங்கள் விற்பனைக்காக அடுக்கப்பட்டு இருந்தது அப்பொழுது அங்கு வந்த ஒரு அன்பர் பிரம்ம சூத்திரத்தின் ராமானுஜம் பாஷ்யம், சங்கர பாஷ்யம் இந்த இரண்டையும் பார்த்துவிட்டு இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டார். எனக்கு அடிவயிற்றில் பகீர் என்று இருந்தது. இந்த மதத்தின் மிகப்பெரிய பிரச்சனையே அத்வைதமா துவைதமா என்பதுதான் நான் என்ன பதில் சொன்னாலும் பிரச்சனை தீராது. நான் உற்றுப் பார்க்கிறேன் அவர் நாமம் வைத்து இருக்கிறாரா அல்லது திருநீறு வைத்திருக்கிறாரா என்று.. எந்த மாதிரி பதில் சொல்வது என்று நான் யோசித்துக்கொண்டே இருந்தேன் அவர் எந்தவிதமான இருக்கிறா என்றும் பார்த்தேன். அங்கிருந்த சேவையாளர் ஒருவர் சட்டென்று பதில் சொன்னார் 45 ரூபாய் சார் என்று, எனக்கு சிரிப்பதா.., அழுவதா.., என்று தெரியவில்லை. உலகத்தின் மிகப்பெரிய பிரச்சனையை ஒரு சின்ன விடையால் தீர்த்துவிட்டார்

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் நம்முடைய சம்பிரதாயத்தின் மீது ஆழ்ந்த பக்தியும் ஈர்ப்பு இருப்பது தவறில்லை, மற்றொரு சம்பிரதாயத்தின் மீது வெறுப்பாக மாற வேண்டிய அவசியமும் இல்லை. வாழ்க்கையை நோக்கி வாழ்க்கையின் மாட்சிமையும் நிட்சிமையையும் உங்களுக்குள் மலர வைக்கின்ற எல்லா கருத்துக்களும் ஆதி சைவம். இவைகளை வாழுங்கள். உங்களுக்குள் உயிரை உயிர்ப்பிக்க செய்கின்ற எந்த கருத்தாக இருந்தாலும் அந்த கருத்தை மேலும் மேலும் ஆழப்படுத்திக்கொள்ளுங்கள். வாழ்க்கையை மாட்சிமையும் நிட்சிமையையும் நெறிக்கின்ற எந்த கருத்தாக இருந்தாலும் அதை உடனடியாக துறந்து விடுங்கள். வாழ்க்கை மலர்ச்சியை ஆதி சைவம், உயிரின் உயிர்ப்பே ஆதி சைவம்.

உயிரின் நோக்கமே பரந்து விரிந்து வளர்ந்து கொண்டே செல்வது தான், உயிரின் நோக்கம் உயிர் உயிர்ப்பின் நோக்கம் பரந்து விரிந்து கொண்டே செல்வது. பூமியில் பரமசிவம் பரம்பொருளின் வலது கண்ணில் இருந்து சிவசூரியன் அருள்பெற்று பூமியில் தாவரங்கள் மலர்ந்தது. பரமசிவ பரம்பொருளின் இடக்கண் ஒளி பட்டு அமிர்தம் பொழிவது போல் நீரில் பல்வேறு உயிர்கள் உருவாகின. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவை வளர்ந்து வளர்ந்து வளர்ந்து வளர்ந்து பல்வேறு மிருகங்களாக உருவாகிவிட்டது . இந்த வளர்ச்சி நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது . அமீபாவில் இருந்து டைனோஸிர் வரை உருவாகிவிட்டது. தாவர ஜங்கமங்களாக மலர்ந்திருந்தன

மசில் மெமரி, செயல்களை செய்வதன் மூலம் ஏற்படுகின்ற நினைவுப்பதிவு. ஒரு செடி. மீண்டும் மீண்டும் சூரிய ஒளியில் இருந்து சக்தியைப் பெற்று தன்னுடைய உயிர் வாழ்தல் இதற்கு மசில் மெமரி, மட்டும் இருந்தால் போதும். இப்படியே இருந்துவிட முடியும்.

பயோ மெமரி என்னவென்றால் தன்னுடைய இருப்பை சார்ந்து முடிவுகளை எடுத்து வெறும் செயல்களை சார்ந்த இல்லாமல், நேற்று கரும்பை உண்டேன் இன்று கரும்பைப் பிழிந்து சாறெடுத்து குடிக்கலாம். என்ற சற்றே சிந்தனையை சேர்த்து செயல்படுவது பயோ மெமரி. நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

செயல் சார்ந்து இருப்பது மசில் மெமரி இருப்பு சார்ந்து இயங்குவது பயோ மெமரி நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். செயலை சார்ந்து வருகின்ற நினைவுகள் தசை நினைவுகள். உணர்வு சார்ந்து இருந்து வருகின்ற நினைவுகள் உயிர் நினைவுகள். இந்த இரண்டுமே உயர்ந்த நிலையை அடைந்து விட்டது உயிர் நிலைக்குச் செல்ல வேண்டும் சூரியனும் வருஷக்கணக்கா தன் வேலையை யுகங்களாக வேலையை செய்கின்றான். சந்திரன் வேலையைச் செய்கின்றன இரண்டினாலும் முழு பரிமாணத்தையும் தன்னுடைய முழுப் பரிமாணத்தில் குளிர்ச்சி அடைந்து விட்டது. இப்பொழுது உயிர் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும். பகவானின் 3ம் கண்ணில் இருந்து பயோ எனர்ஜி வந்தாக வேண்டும். உயிர் சக்தி வெளிப்பட்டு தசை நினைவிலும், உயிர் நினைவிலும் சேர வேண்டும். அதற்கு 3பெருமானின் வது கண் திறந்தாக வேண்டும்..

ஆழமாக புரிந்து கொள்ளுங்கள். இது சக்தி வாய்ந்த ஒரு தாந்திரிக நுட்பம். இந்த இரண்டு கண்களையும் மூடி, மூன்றாவது கண்ணை நோக்கி திருப்புதல். மனைவி, கணவனுக்கோ, கணவன் மனைவிக்கோ, தாய் மகனுக்கோ, தந்தை மகளுக்கோ இதை செய்ய வேண்டும். குறிப்பாக குருவின் 3வது கண்ணான ஞானஞ்சனம் மை வைத்து செய்யும் பொழுது முழுமையாக 3வது கண் திறக்கிறது. பரமசிவனின் 3வது கண் எப்பொழுதும் திறந்திருக்கிறது, ஆனால் அது மலர்ந்து உயிர் பூமியின் மீது படவேண்டும். எப்படி செய்வது?

தாயார், தன்னுடைய அளப்பெரும் அன்பினால், கருணையினால், பூமியில் ஜீவன்களின் மீதுள்ள கருணையினால் பகவான் மீதிருக்கும் பெரும் பக்தியினாலும், தன் திருக்கரங்களால் சூரிய, சந்திரனாக 2 திருநயங்களையும் மெதுவாக பற்றி, சக்தி முழுவதும் 3வது திருக்கண்ணை நோக்கி திருப்புகின்றாள்.சக்தியும் 3வது திருக்கண்ணில் குவிந்து திரிநேத்திரம் என்று சொல்லக்கூடிய 3வது கண்ணில் இருந்து உயிர்த்து, மலர்ந்து பூமியை நோக்கி பொழிகின்றது. அது பொழிந்த இடம் காஞ்சி மா நகரம். . பொழிந்த அந்த உயிரை தாங்கி அன்னை அழகாக எல்லா உயிர்களுக்குள்ளும் அளித்து மனித இனத்தை உருவாக்குகின்றாள்.. இந்த பணியை செய்வதற்க்கு தான் அன்னை காஞ்சி மா நகருக்கு ஏகுகின்றாள். பூமிக்கு வருகின்றாள்.

காஞ்சி மா நகரத்தில் வைக்கப்பட்ட லிங்கம் தான் உலகின் முதல் லிங்கம். ஏகாம்பரநாதரே ஆதி நாதர். காஞ்சி மா நகரத்தில் மண். மண்ணிற்கான சேத்திரம் திருவாரூர். பூமிக்கான சேத்திரம் காஞ்சி மா நகரம்.

தன உடலில் தாங்கி தன் உடல் சூட்டில் தாங்கி மனித இனமாக மலரச்செய்கின்றாள். உயிரின் உயிர்ப்பின் நோக்கம் எப்பொழுதும், பரமசிவ நிலையிலேயே லயித்திருத்து, பரமசிவ சுகபோக நிலைத்திருந்து, அந்த உணர்விலேயே நிலைத்திருந்து, பராசக்தியாக உயிரின் உயிர்ப்பின் நோக்கம் பரமசிவ நிலையிலேயே எப்போதும் நிலைத்திருந்து, பரமசிவ சுகபோதத்திலே நிலைத்திருந்து, பரமசிவ பரம்பொருளின் நிலையில் நிலைத்திருந்து அந்த நிலையே வாழ்திருந்து, பரமசிவனின் சக்திகளை வெளிப்படுத்தி பாராசக்தியாகவே இருக்கும் சுத்தாத்வைத சுகபோகமே உயிரின் உயிர்ப்பு.

உங்கள் சக்தி முழுவதையும் 3வது கண்ணை நோக்கி திருப்புங்கள். மஹாவாக்யத்தை 'ஓம் நித்யானந்த பரமசிவம்' என்னும் மஹாவாக்யத்தை ஆழ்ந்து உச்சரியுங்கள்.உங்கள் உயிர் பராசக்தியின் பேரருளால் உயிர்த்து எழும். உங்கள் எல்லோருக்கும் இந்த தீக்ஷை இப்போது நிகழும், மலர்ந்து, உங்கள் எல்லோருடைய 3வது கண்ணும் திறந்து, பரமசிவ பரம்பொருளின் 3வது கண்ணில் இருந்து உயிர் சக்தி நம் எல்லோருக்குள்ளும் பொழிந்து, நாதமும், பிந்தும் நமக்குள் கலந்து நாதபிந்து காலாதீதமாக பரமசிவ பரம்பொருள் பராசக்தியாய் நம்முள் மலர்வர். நிமிர்ந்து அமர்ந்து மஹாவாக்யத்தை உச்சரியுங்கள்.


Link to Facebook Page:

https://www.facebook.com/srinithyananda.swami/posts/1386506134837715

Photos: