2013 ஏப்ரல் தியான சத்சங்கம்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

தியான சத்சங்கம் (Tamil Satsangs)

வருடம்  : 2013

நாள் : ஏப்ரல் 2013

நாட்கள் : ஒரு நாள்

நிகழ்வு : தியான சத்சங்கம்

சொற்பொழிவின் தலைப்பு : "நித்ய கிரியா யோகா வகுப்பு - சத்தியங்கள்.. உங்கள் அனைவரையும் வணங்கி வரவேங்கின்றேன்"

நடைபெற்ற இடம் : கைலாஸா

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : கைலாஸா

நிகழ்வினை நடத்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 1 லட்சம்

வீடியோ

14 டிசம்பர் 2020 தியான சத்சங்கம்- தமிழ் (01.09:59)


தியான சத்சங்கம்_விவரனை

எழுதப்பட்டதன் நகல் (Transcript) :

"நித்ய கிரியா யோகா வகுப்பு - சத்தியங்கள்.. உங்கள் அனைவரையும் வணங்கி வரவேங்கின்றேன்.. ஆசை சார்ந்த சம்ஸ்காரங்கள். ஆசை என்றால் என்ன. எக்ஸாக்டா டிபினே பண்றேன் கேட்டுக்கோங்க. வேற ஒண்ணுமே இல்ல. இக்கரைக்கு அக்கரைக் பச்சை என்ற பீலிங் தான். எப்பவுமே இக்கரையில் இருந்து பார்த்தால் என்ன தெரியும்... பச்சையாவே தான் தெரியும்... ஆற்றில் ஒரு கரையில் இருந்து அடுத்தக் கரையைப் பார்த்தால் பச்சையாகத்தான் தெரியும். எப்ப வாழ்க்கையை பார்த்தாலும் மற்றவர்கள் இருக்கின்ற இடம் ரொம்ப நல்லா இருக்கின்ற மாதிரி தான் தெரியும். ஒரு சின்ன வீடியோ, ஒரு நிமிஷ வீடியோ பாருங்க தென்றலையும் பார்த்து அமர்ந்தீர்காளானால் உங்களுக்குள்ளே இருந்துகூட அமைதி வரலாம். ஆனால் கூட இருக்கும் காதலன் அல்லது காதலியால் தான் வருதுன்னு நினைத்து, ஓ! அவர்களுடன் இருந்தால் வாழ்க்கையே வசந்தமாக இருக்கும் என்று நினைத்து திருமணம் செய்துகொள்கிறோம். பிறகுதான் தெரியும் அது எங்கிருந்தோ வந்த ஆனந்தம்.. இங்கிருந்து வந்தது அல்ல! பல நேரங்களில் உள்ளுக்குள் இருந்து வருகின்ற சந்தோஷத்தை ஒரு பொருள், ஒரு நபர், ஒரு இடத்தின் மீது திணிக்கும்பொழுது ஏற்படுகின்ற உணர்வைத்தான் ஆசை என்று சொல்கிறோம். ஆசையில்கூட தவறில்லை, ஆனால் இந்த கான்ட்ரடிக்டிவான ஆசைகள்.. கான்ட்ரடிக்டிவான ஆசைகள்.. என்றால் சிலநேரத்தில் நிறைய சம்பாதிக்க சம்பாதித்து பணக்காரன் ஆகா வேண்டும் என்று தோன்றும்.. சில நேரத்தில் எதுவுமே வேண்டாம் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு ஆசிரமத்திற்கு போயிவிடலாம் என்று. இந்த ரெஸ்பான்சிபிலிட்டி ஏ வேண்டாம் ப . சில நேரத்தில் என்ன தோன்றும் நிறைய மக்களுக்கு எல்லாம் நல்லது செய்ய வேண்டும் என்று.. சில நேரத்தில் என்ன செய்தாலும் நன்றிகெட்ட ஜென்மங்கள் இவர்கள் எதுவும் செய்யக்கூடாது. முடிந்தவரை இவர்கள் கிட்ட இருந்து எல்லாத்தையும் பிடிங்கி நாமே வாழனும். நீங்களே யோசித்துப் பாருங்கள்.. இதல்லாம் வருவதுதான்.. சில நேரத்துல என்ன தோணும். நிறைய மக்களுக்கு சேவை பண்ணனும். சில நேரத்துல என்ன தோணும்இவர்கள் நன்றிகெட்ட ஜென்மங்கள் என்ன கொடுத்தாலும் நன்றி இல்ல . குழப்பமான ஆசைகள். சுய முரண்பாடான ஆசைகள். உங்களுக்குத் தலைவலி சரியாகவேண்டும் என்றால், தலைவலி சரியாக வேண்டும், தலைவலி சரியாகவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டே இருந்தீர்கள் என்றால் தலைவலி இன்னும் ஆழமாகத்தான் போகும். ஏனெனில் தலைவலி, தலைவலி என்ற வார்த்தையை நினைத்துக்கொண்டே இருக்கின்றீர்கள்.. தலை நன்றாக வேண்டும் என்று நினைத்தால்தான் தலை நன்றாகும். தலைவலி சரியாகவேண்டும் தலைவலி சரியாகவேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தாள் , தலை வலியை திரும்ப திரும்ப நினைக்கின்றீர்கள். எதை திரும்ப திரும்ப நினைக்கின்றீர்களோ அது என்னவாகும் ஆழமா அனுபவம் ஆகும். முதலில் குழப்பமான ஆசைகள், பிறகு சுய முரண்பாடான ஆசைகள், பிறகு சிக்கலான ஆசைகள். சிக்கலான ஆசைகள் என்றால்,. திடீரென்று ஒரு பாத்து கோடி ரூபாய் பணம் வந்தால் ஒரு பங்களாவை வாங்கிப்போட்டு வாசலில் அமர்ந்து போகிற வருகின்றவர்களை எல்லாம் கேள்வி கேட்கலாம். உண்மை! இப்பொழுது அதற்கு என்ன செய்ய வேண்டும், லாட்டரி வாங்க வேண்டும்! லாட்டரி எத்துனை பேருக்கு அடிக்கும்? எல்லாம் சுக்கிர திசை இருந்தால் அடிக்கும்பா.. ஜோசிரைப் போய்க் கேட்பது.. சுக்கிரதிசை எப்பொழுது வருகிறது? லாட்டரியை வாங்கி விட்டு வீட்டுக்கு வௌியில் படுத்துக்கொண்டே இருப்பது. நீங்கள் செய்த செயலுக்கும், உங்களுக்கு என்ன வேண்டுமே அது நடப்பதற்கும் ஏதாவது சாத்தியக்கூறு இருக்கிறதா? ஆனால் என்ன செய்வது..இந்தச் செயலாலேயே உங்கள் ஆசை நிறைவேறிவிடும் என்கிற ஒரு குழப்பமான சிக்கலான் மன நிலையிலேயே வாழ்வது. அதாவது நீங்கள் செய்கின்ற செயல் நேரடியாக அந்த ஆசையைப் பூர்த்தி செய்யாது. ஆனால் இந்த செயலைச் செய்துகொண்டே கனவு கண்டு கொள்வது. அரசியலில் பார்க்கலாம், ஒரு கவுன்சிலராக ஜெயித்து விட்டாலே போதும், அடுத்த தரம் மந்திரி சீட் வாங்கிடறேன் அதற்கடுத்து சபாநாயகர் தான் அப்பறம் சிஎப் மினிஸ்டர் செத்து போய் விட்டால் நான் தான் முதலைமைச்சர். இப்பொழுது என்ன தான் ஆகியிருக்கின்றார்.. கவுன்சிலர் தான் ஆகியிருக்கிறார். எம்.எல்.ஏ சீட் வாங்க வேண்டும், சீட் வாங்கின அப்பறம் பின் தேர்தலில் நிற்க வேண்டும், பின் தேர்தலில் ஜெயிக்க வேண்டும். ஜெயித்த அப்பறம் பின் 5 வருடமாவது எம்.எல்.ஏ வ வாழனும். இதுதான் சிக்கலான ஆசைகள். செய்கின்ற செயல் பலன் தராது என்று தெரிந்தும், தரும் என்கின்ற எண்ணத்தாலேயே சரியான முயற்சிகளைச் செய்யாமல் வாழ்க்கையைச் சிக்கலாகவே கழித்தல். இந்த மூன்று நிலை ஆசைகள்.. ஆழமாக புரிந்துகொள்ளுங்கள் முரண்பாடான ஆசைகள்.. குழப்பமான ஆசைகள் சிக்கலான ஆசைகள்.. குழப்பமான ஆசைகள் என்றால்.. நான் உதாரணம் சொன்னது போல.. வேலைக்குச் சென்று சம்பாதித்து வாழ வேண்டும் என்று ஒரு நேரத்தில் தோன்றும்.. சில நேரத்தில் எல்லாத்தையும் விட்டுவிட்டு சாமியாராகிப் போய் விடலாம் என்று தோன்றும். ஏதாவது ஆசிரமத்துக்கு போய் விடலாம். இதுதான் குழப்பமான ஆசைகள். அடுத்து சுய முரண்பாடு தலைவலி சரியாகவேண்டும், சிகரெட் பிடிப்பதை விட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தால் விட்டுவிட முடியுமா? ஏனெனில் ஒவ்வொரு முறையும் சிகரெட்டை நினைக்கின்றீர்கள்.. அப்பொழுது என்ன ஆகும்? அந்த சுகம் நினைவிற்கு வரும், பின் செய்ய வேண்டும் என்கிற தூண்டுதல் அதிகமாகும். இவைகள்தான் சுய முரண்பாடான ஆசைகள். மூன்றாவது சிக்கலான ஆசைகள்.. நான் சொன்னதை போல லாட்டரி டிக்கெட் கற்பனை பண்ணிக்கிட்டு இல்ல எதையோ அடைய நினைப்பது, ஆனால் வேறு ஒரு திசையில் சென்றுகொண்டிருப்பது – இது தான் சிக்கலான ஆசைகள். இதுமாதிரி உங்களுக்குள் இருக்கின்ற அந்த 3 நிலை ஆசைகளையும் முதலில் கண்டறிவோம். கண்டறிந்த பிறகு அதை எப்படி அதைதாண்டி வாழ்க்கையை முழுமையாக்குதல் என்று பார்ப்போம். இந்த ஆசைகள் நம்முடைய வாழ்க்கை சக்தியை வீணடிக்காமல். நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்.. ஒன்று ஆசை உங்கள் வாழ்க்கையை நிறைக்கும், இல்லை நீங்கள் ஆசையைப் பூர்த்தி செய்வீர்கள். நன்கு ஆழமாகக் கேளுங்கள்.. ஆசைகள் உங்கள் வாழ்க்யைப் பூர்த்தி செய்தால் உங்களால் அதைச் பூர்த்தி செய்ய முடியாது. நீங்கள் ஆசையைப் பூர்த்தி செய்தால் ஆசை உங்களைப் பூர்த்தி செய்யாது. ஆழமாகக் கேளுங்கள்.. அதாவது நீங்கள் தலைவனாக இருந்தீர்களானால் வெற்றியடைந்தால் நீங்கள் உங்கள் ஆசையைப் பூர்த்தி செய்வீர்கள். ஆனா பல நேரத்தில் உங்கள் ஆசைகள் அனைத்தும் உங்கள் மனதை நிறைத்து நீங்கள் இயங்காமல் உங்களை முடக்கி வைத்துவிடும். அது அடிமைத்தனமான வாழ்க்கை! நீங்கள் உங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்கிறீர்களா? இல்லை உங்கள் ஆசை உங்களை நிறைக்கிறதா? அழுத்தி கொண்டு ஆழமாகக் கேளுங்கள்.. அதாவது நீங்கள் உங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்தீர்களானால் மிகுந்த வெற்றியடைந்து விடுவீர்கள். நீங்கள் சுகந்திரத்தோட இருப்பீர்கள். உங்கள் ஆசைகளை பூர்த்தி செய்து கொண்டே செல்வீர்கள். ஆனால் அது நடப்பதே இல்லை. உண்மையில் என்ன நடக்கிறது? ஆசைகள் தான் உங்களை வைத்து அழுத்துகின்றது. அதனால்தான் எதையுமே செய்யாமல், எந்த இயக்கமும் இல்லாமல் மந்தமாக இருக்கின்றீர்கள். முதலில் செய்யவேண்டியது என்ன வெனில், நீங்கள் உங்களுக்கேக் கொடுத்துக்கொள்கின்ற வார்த்தைகள், மற்றவர்களுக்கு அளிக்கின்ற வார்த்தைகள் இதை யோசித்து விழிப்புணர்வோடு கொடுக்கத் துவங்குங்கள். ஒரு சிறிய உதாரணம்.. சாதாரண சிறு சிறு விஷயங்களில்கூட.. நான் தினம்தோறும் யோகா செய்யப்போகிறேன், இல்ல தினம்தோறும் தியானம் செய்யப்போகிறேன், தினம்தோறும் கோவில் போக போறேன் என்று யோசித்தீர்கள் என்றாலே அது உங்களுக்கு நீங்கள் கொடுத்துக்கொள்ளும் வார்த்தைகள். நீங்கள் உங்களுக்குச் செய்துகொள்கின்ற சத்தியம் அது. ஒரு இரண்டு நாட்கள் அதைச் செய்யாமல் பூர்த்தி பண்ணாமல் விட்டுவிட்டீர்கள் என்றால் என்னவாகும் உங்களுக்கே உங்கள் மீது இருக்கின்ற நம்பிக்கை போய்விடும். ஏனெனில் எந்த முடிவை எடுத்தாலும் ஏற்கனவே உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாததனால் உங்கள் வாழ்க்கையில் எந்த முடிவுமே நிஜமாக மாறுவதில்லை உங்கள் வாழ்க்கையில். நன்றாக ஆழ்ந்து யோசித்துச் சொல்லுங்கள்.. எத்துனைப் பேருக்கு நீங்கள் எந்த முடிவெடுத்தாலும் உடனே உங்களால் அதைச் செய்துவிடமுடியாது என்கிற சுய நம்பிக்கையின்மை உள்ளிருந்து உடனடியாக மேலெழுகிறது? இதுதான் வாழ்க்கை.. அப்பொழுது நாம் எந்த முடிவெடுத்து என்ன உபயோகம்? பல நேரத்தில் ஏதாவது ஒரு விஷயத்தை கமிட் செய்த உடனேயே.. நமக்கே நம்மீது நம்பிக்கை இருப்பதில்லை. காரணம் என்னவென்றால் முட்டாள்தனமாக, விழிப்புணர்வின்றி நமக்கு நாமே வார்த்தைகளைக் கொடுத்துக்கொள்கிறோம். விழிப்புணர்வின்றியே மற்றவர்களுக்கும் வார்த்தைகளை கொடுக்கின்றோம். உதாரணத்திற்கு ஒரு நண்பரிடம் நாளை மாலை 8 மணிக்கு உங்களோடு டின்னர் சாப்பிட வருகிறேன் என்று சொல்லிவிட்டீர்களானால் உயிரேப் போனாலும் அதைப் பூர்த்தி செய்துவிட வேண்டும். ஆனால் என்ன.. நாம் அப்படி இருப்பதில்லை. நண்பன்தானே.. தப்பாக எடுத்துக்கொள்ள மாட்டான் என்று நினைப்பது. அவர் தவறாக எடுத்துக்கொள்வாரா? இல்லையா? என்பது வேறு விஷயம். வார்த்தைகளைக் கொடுத்துக் கொடுத்து அதைப் பூர்த்தி செய்யாமல் போகும்பொழுது உங்களுக்கு உங்கள்மீது இருக்கும் நம்பிக்கையும், உங்களை சுற்றியிருப்பவர்களுக்கு உங்கள் மீது இருக்கின்ற நம்பிக்கையும் ஒடுங்குகிறது அழிகின்றது. வாழ்க்கையில் வெற்றி என்பது என்னவென்றால், உங்களுக்கு உங்கள் மீது இருக்கின்ற நம்பிக்கை, உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு உங்கள் மீது இருக்கின்ற நம்பிக்கை அதுதான் வாழ்க்கையில் வெற்றி. என் வாழ்க்கையில் வெற்றியே ஒன்றே ஒன்றுதான்.. எனக்கு என் மீது இருக்கும் நம்பிக்கை, என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு என் மீது இருக்கும் நம்பிக்கை. அவ்வளவுதான். வாழ்க்கையில் எல்லாப் பெரிய வெற்றியுமே உங்களுக்கு உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையும், உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையினாலும் தான் வரும். வார்த்தைகளை கொதித்து கொடுத்து அதாவது மற்றவர்களுக்கு நீங்கள் கொடுக்கின்ற கமிட்மென்ட்- அதுதான் வார்த்தை. உங்களுக்கு நீங்களே கொடுக்கின்ற கமிட்மென்ட - அதுதான் எண்ணம். உங்களுக்கு நீங்க கொடுக்கின்ற கமிட்மென்ட மற்றவர்களுக்கு நீங்கள் கொடுக்கின்ற கமிட்மென்ட்- இது இரண்டையும் நீங்கள் தோல்வியடையச் செய்யும்பொழுது, அது சின்ன விஷயமாக இருந்தாலும் சரி அதை நிறைவேற்றாமல் போகப்போக.. உங்கள் வாழ்க்கையில் வெற்றி சுருங்குகின்றது. வெற்றி சுருக்கமடைகின்றது உங்கள் வாழ்க்கையில் உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு நம்பிக்கை வராமல் உங்களால் எதையாவது சாதிக்க முடியுமா? சொல்லுங்கள். வெற்றி adaiya முடியுமா? ஏனெனில் உங்கள் வாழ்க்கையின் எல்லா வெற்றியும் உங்களைச் சுற்றியிருப்பவர்களை சார்ந்து இருக்கின்றது. நீங்கள் தேர்வில் வெற்றியடைவது உங்கள் ஆசிரியரைச் சார்த்து இருக்கின்றது. உங்கள் பதவி உயர்வு உங்கள் முதலாளியை சார்ந்து இருக்கின்றது. நீங்கள் நல்ல முதலாளியாக இருந்து வெற்றியடைவது உங்கள் வேலையாட்களைச் சார்ந்து இருக்கின்றது. நீங்கள் ஒரு நல்ல தாயாக வெற்றியடையவது உங்கள் மகனைச் சார்ந்து இருக்கிறது. நீங்கள் ஒரு நல்ல மகனாகவோ, மகளாகவோ வெற்றியடைவது உங்கள் தந்தைத் தாயைச் சார்ந்து இருக்கிறது. அப்பொழுது உங்களின் எல்லா வெற்றியுமே உங்களைச் சுற்றியிருப்பவர்களை சார்ந்துதான் இருக்கின்றது. அப்பொழுது உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு உங்கள்மீது நம்பிக்கை இல்லையென்றால் வாழ்க்கையில் வெற்றி பெருவது சாத்தியமா? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.. ஒரு சிறிய உதாரணம்.. உங்கள் கணவனுக்கோ, மனைவிக்கோ கொடுத்த வார்த்தையை எப்படியாவது காப்பாற்றாமல் போயிருக்கின்றீர்களா? உங்கள் சகோதரர்களுக்கு கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றாமல் போயிருக்கின்றீர்களா? உங்களுடைய ஆசிரியருக்கோ ஸ்டுடென்ட்டுக்கோ வார்த்தையைக் காப்பாற்றாமல் போயிருக்கின்றீர்களா? உங்கள் வாழ்க்கையில் யார் யாருக்கெல்லாம் நீங்கள் வார்த்தையைக் கொடுத்து காப்பாற்றாமல் இருக்கின்றீர்களோ. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. நீங்கள் உங்களுக்குக் கொடுத்துக் காப்பாற்றாமல் இருக்கின்ற வார்த்தைகள், சில நேரத்தில் ஒரு பெரிய மருத்துவராக வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே வார்த்தையைக் கொடுத்திருப்பீர்கள். ஆனால் கடைசியில் என்னவாயிருப்பீர்கள் கம்பவுண்டர் ஆகியிருப்பீர்கள். இல்ல என்ஜினீயர் ஆகா வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே வார்த்தையைக் கொடுத்திருப்பீர்கள். ஆனா ளயீறாக ஆகியிருப்பீங்க எத்துனைப்பேர் உங்களுக்கு நீங்களே கொடுத்து கொண்ட வார்த்தைகளை காப்பாற்றவில்லையே என்று வருத்தப்படுகின்றவர்கள் . கை தூக்குங்கள். மற்றவர்களுக்கு கொடுத்த வார்த்தைகளை காப்பாற்றவில்லையே என்று வருத்தப்படுகின்றவர்கள் கை தூக்குங்கள். இன்னொரு முக்கியமான விஷயம் முக்கியமா இந்த ஆன்மீகப் பெயர் வாங்கியவர்கள்.. நீங்களே வந்து சாமி.. இந்த பெயரை என்னால் சட்டரீதியாக மாற்ற முடியல , மன்னித்து விடுங்கள். நான் இந்த பெயரை திருப்பியளித்துவிடுகின்றேன் என்று சரணாகதி செய்துவிட்டீர்கள் என்றால், நீங்கள் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றியதற்கு சமம். ஏனெனில் அடலீஸ்ட் காப்பாற்ற முடியாது என்பதையாவது சொல்லிவிட்டீர்கள் இல்லையா? அப்பொழுது அந்த நபர் அவருடைய வாழ்க்கையில் அடுத்த முடிவை எடுப்பார். இப்போ இதை நான் உதாரணத்துக்கு சொன்னேன் . இதை நீங்கள் பல இடத்தில அப்ளை செய்து பார்க்கலாம் . இப்போ நீங்க யாருக்காவது வார்த்தை கொடுத்து இருப்பீர்கள் , ஒரு ஐம்பது ரூபாய் கடன் கொடுப்பதாக , கொடுக்க முடியலன்னு அடலீஸ்ட் , அவருக்கு சொல்லி விடுவது என்னிடம் இருக்கு இல்லனு சொல்ல மாட்டேன் உனக்கு என்னால கொடுக்க முடியாது . நான் கொடுத்த வார்த்தையை திருப்பி எடுத்துகிறேன் . நீ வேற எங்கையாவது ட்ரை பண்ணி பாருப்பானு சொல்லிட்டா கூட அது சத்தியம் தான். கொடுத்த வார்த்தையைக் காப்பாற்ற முடியவில்லை என்று சொல்லிவிட்டால்கூட அது நல்லது. அது என்ன இப்போ சத்தியம். ஆனால் அதைக்கூட நிறைவு செய்யாமல் இருந்தீர்கள் என்றால் உங்கள் மீது உங்களுக்கும், உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீது உங்களுக்கும் நம்பிக்கையே irrukkadhu. ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள்.. உங்களுக்கு நீங்கள் கொடுக்கின்ற வார்த்தை, மற்றவர்களுக்கு நீங்கள் கொடுக்கின்ற வார்த்தை இவை இரண்டையும் யோசித்து echarikkaiyodu செய்யும்பொழுதுதான் ஆசைகளைச் தாண்டிய குழப்பமில்லாத வாழ்க்கையை வாழத்துவங்குவீர்கள். ஆசைகள் சார்ந்த குழப்பம் என்பது வேறு ஒன்று இல்லை - விழிப்புணர்வின்றி கமிட்மென்ட் கொடுப்பது. விழிப்புணர்வின்றியே பேசுவது, விழிப்புணர்வின்றியே சிந்திப்பது. சிலபேர் என்னிடம் சொல்வார்கள்.. என் வாழ்க்கையையே உங்கள் காலின் சரணாகதி செய்துவிடுகிறேன் சாமி.. நீங்கள்தான் எனக்கு கதி! நான்.. ‘ஒரு நான்கு நாட்கள் இருந்து ஆசிரமத்தில் தோட்டதிற்கு எல்லாம் தண்ணீர் ஊற்றி சேவை செய்துவிட்டுப்போ அப்பா!’ என்றால்.. உடனேயே.. எனக்கு வீட்டில் வேலை இருக்கிறது என்பார்கள். அப்பொழுது வாழ்க்கையை சரணாகதி செய்தேன் என்று ஏன் புலம்புகிறாய்? தெளிவா உட்காந்து இருக்கலாம் இல்ல ? பெரும்பாலான நேரங்களில் விழிப்புணர்வின்றியேப் புலம்பவது. நாம் மற்றவர்களுக்குச் சொல்கிற வார்த்தைகள், நமக்குச் சொல்கிற வார்த்தைகள் எல்லாமே விழிப்புணர்வற்றது. அர்த்தமில்லாதது, பொருளற்றது. நிறைவில்லாதவை, நிறைவேற்றப்படாதவை, நிறைவேற்றவிரும்பாதவை. விழிப்புணரவின்றியே சிந்திக்கின்றோம், விழிப்புணரவின்றியே செயலாற்றுகின்றோம்.. ஒரு உதாரணத்திற்கு.. யாராவது ஒருவர் எனக்கு ஒரு வார்த்தையைக் கொடுத்துவிட்டு அதைச் செயல்படுத்துவில்லை என்றால், அல்லது செயல்படுத்த முடியவில்லை என்று சொல்லிவிட்டால்கூட அது நேர்மை. ஆனால் அதைக்கூடச் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு நான் என்ன வரம் அளித்தாலும் பலிப்பதில்லை. ஏனெனில் இணைப்பு பாலமே இல்லை! அதே மாதிரிதான் உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு நீங்கள் ஒரு வார்த்தைக் கொடுத்து அதை நிறைவேற்றினால் நல்லது. இல்லை நிறைவேற்ற முடியாததை அவர்களிடம் சொல்லிவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இது இரண்டையும் செய்யாமல் இருந்தால் அவர்களால் உங்களுக்கு எந்தவிதமான ஒத்துழைப்பும் இருக்காது. அவர்களுடைய ஆசீர்வாதம் உங்கள் வாழ்க்கையில் பலிக்காது.. பல நேரத்தில் உங்கள் பெற்றோரை பலமாக உணர மாட்டீர்கள். காரணம் என்னவென்றால் அவர்களுக்கு கொடுத்த வார்த்தைகளை பூர்த்தி செய்திருக்க மாட்டீர்கள். பூர்த்தி செய்ய முடியாது என்று அவர்களுக்கு சொல்லியும் இருக்க மாட்டீர்கள். முதலில் உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொண்ட வார்த்தைகளைப் பூர்த்தி செய்யாதது பட்டியலிடுங்கள்.. என்ன வார்த்தை எல்லாம் நீங்க கொடுத்து கொண்டீர்கள் . ஒன்னும் இல்ல உதாரணத்துக்கு பெரிய வைர அட்டிகை வாங்கி போட்டுக்கணும்னு நினைசீங்கனா , அதுவும் நீங்க உங்களுக்கு கொடுத்த கிட்ட வார்த்தை தான் . அப்போ நீங்க என்ன பண்ணனும் , எனக்கு வார்த்தை கொடுத்துகிட்டேன் , ஆனா என்னால செய்ய முடியாது . அதனால் அந்த வார்த்தையில் இருந்து என்னை விடுபடுத்தி கொள்கின்றேன் . அப்பொழுது உங்களின் ஒவ்வொரு எண்ணத்தையும் விழிப்புணர்வோடு சிந்திப்பது, விழிப்புணர்வோடு கமிட் பண்றது . சில பெரு என்ன பண்ணி இருப்பீங்க , அந்த ரீபோக் சூ ஒன்னு வாங்கலும் அப்படீன்னு , பெரிய சூ ஒன்னு வாங்கி போட்டுக்கிட்டு சுத்திட்டு இருக்கணும்னு உங்களுக்கு நீங்களே கமிட் பண்ணி இருப்பீங்க , ஆனா வாங்க முடியல . ஆனா கமிட் பண்ண கமிட்மென்ட் பியூலபில் ஆகம அப்படியே இருக்கு . இந்த மாதிரி உங்களுக்கு நீங்களே கொடுத்த பல கமிட்மெண்ட்ஸ் பியூலபில் ஆகலேனா தான் மனசுக்குள்ள குறையாகவும் வெறுமையாகவும் உங்களை உணருவது . "


தியான சத்சங்கம்_சாஸ்திர பிரமாணம்

" ஆத்மஞானத்தை குருகிருபையே நல்கும், குருவின் உபதேசத்தாலேயே அஞ்ஞானம் அழியும்.

குருரேகோ ஹி ஜாநாதி ஸ்வரூபம் தேவமவ்யயம் | தத்ஜ்ஞாநம் தத்ப்ரஸாதேந நாந்யதா ஶாஸ்த்ர கோடிபி: ||

ஶ்வரூபஜ்ஞாநசூ'ந்யேந க்ரு'தமப்யக்ரு'தம் பவேத் | தபோ ஜபாதி்கம் தேவி ஸகலம் பாலஜல்பவத் ||

மாற்றமற்ற பரம்பொருளைப் பற்றிய உண்மை சொரூபத்தை (ஆத்ம ஞானத்தை) அறிந்தவர் குரு ஒருவரே. இந்த ஞானத்தை குரு கிருபையாலன்றி கோடிக்கணக்கான சாஸ்திரங்களாலும்கூட ஒருவன் பெற முடியாது.

தேவி! ஆத்மஞானம் இன்றிய தவம், மந்த்ர ஜபம் போன்ற அனைத்தும் குழந்தையின் மழலைக்கு நிகரே; பயனற்றவையே.

- குருகீதை (பரம்பொருள் பரமசிவனார் பார்வதி தேவிக்கு உபதேசித்தது)

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் பரமசிவ பரம்பொருளின் நேரடி செய்திகளை கைலாஸாவிலிருந்து தமது சொற்பொழிவுகளில் வெளிப்படுத்துகிறார்.

பகவான் அவர்கள் அனைத்து நிலை ஜீவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் உபதேசம் அருள்கிறார். ஒரு ஜீவனின் உயிர் எந்த நிலையில் இருந்தாலும், அது மிகுந்த உற்சாகத்தோடும் வாழ்க்கையை நோக்கிய மிகுந்த உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும், வேகத்தோடும், இயங்குகின்ற நிலையில் இருந்தாலும், அல்லது தளர்ந்து சோர்ந்து படுக்கையை விட்டே அசையமுடியாத நிலையில் இருந்தாலும், அல்லது மாயை என்ற மன உளைச்சலில் மூழ்கி தன்னை மறந்து வீழ்ந்து கிடந்தாலும், ஒரு ஜீவன் எந்த நிலையில் இருக்குமானாலும் அது அடையப்பட வேண்டியது பரமசிவ பரம்பொருளோடு சாயுஜ்யநிலையே என்பதை அருள்கிறார். பரமசிவப் பரம்பொருள் பிரபஞ்சத்தின் அடிப்படை அறிவியலாக தன் அரூப ரூபத்திலிருந்து அளித்த வேதங்களும், அதை வாழ்க்கையில் சாத்தியமாக்கிக் கொள்ளும் பயன்பாட்டுத் தொழில் நுட்பமாக அருளிய ஆகமங்களையும் அருளி ஒவ்வொரு ஜீவனுக்கும் வழிகாட்டுகிறார். "