11 மே 2018 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Revision as of 17:38, 5 January 2021 by Ma.Akshaya (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

வெளியீடு

நெற்றிக்கண்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: மிக உயர்ந்த உணர்வு நிலையான சதாசிவத்வத்தை அடைய வழிகாட்டும் கட்டுரை.

நாள் :11 மே 2018

தலைப்பு : உயர்ந்த உணர்வு நிலை – சதாசிவத்துவம்

"நெற்றிக்கண் என்ற தமிழ் வார இதழில் வெளிவந்த 11 மே 2018 அன்று ‘உயர்ந்த உணர்வு நிலை – சதாசிவத்துவம்’ என்ற தலைப்பில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய சத்சங்கத்தில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரை வெளியாகி உள்ளது.

சதாசிவத்துவம் என்ற உயர்ந்த நிலையை பல்வேறு சம்பிரதாயங்கள் வேறு வேறு வார்த்தையில் கூறினாலும் மனித வாழ்வின் லட்சியம் சதாசிவத்வத்தை அடைவது, அதில் வாழ்வது, அந்த நிலையில் இருந்தவாரே நம்முடைய வாழ்க்கையின் எல்லா தேவைகளையும் பூரணப்படுத்திக்கொள்வது. வாழக்கையின் மிக சாதாரண சிக்கலானாலும் சரி அல்லது சம்சார சாகரத்தோட பிரச்சனையானாலும் சரி பரம்பொருளை சார்ந்தே எல்லா பிரச்சனைகளையும் தீர்த்தோமேயானால் அந்த பிரச்சனை மட்டுமல்லாமல் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கின்ற பெரும் துக்கமே தீர்ந்துவிடும்.

Maturity என்பது வாழ்க்கையையே சந்தேகப்படுகின்ற மிகப்பெரிய கேள்விகளானாலும் சரி அதை மிக உயர்ந்த ஆன்ம உணர்வு நிலையில் இருந்து தீர்ப்பீர்களேயானால் வாழ்க்கை முழுமையாக எல்லா பரிணாமங்களிலும் நமக்குள் மலர துவங்கும். "

11 மே 2018

11 மே 2018 -பத்திரிகை செய்தி