08 ஜுன் 2018 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Revision as of 14:22, 12 April 2021 by Ma.divya (talk | contribs) (→‎நிகழ்வு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

வெளியீடு

நெற்றிக்கண்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிக தொடர்: வாழ்வின் சத்தியத்தை உள்வாங்கி சக்தியாக வெளிப்படுத்த வழிக்காட்டும் கட்டுரை.

நாள் :08 ஜுன் 2018

தலைப்பு : மனித வாழ்வின் சாத்தியம் - சத்தியத்தை சக்தியாக வெளிப்படுத்துங்கள்

"நெற்றிக்கண் என்ற தமிழ் வார இதழில் 08 ஜுன் 2018 அன்று ‘மனித வாழ்வின் சாத்தியம் - சத்தியத்தை சக்தியாக வெளிப்படுத்துங்கள்’ என்ற தலைப்பில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய சத்சங்கத்தில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரையை வெளியிட்டுள்ளார்கள்.

சதாசிவ பரம்பொருளின் சுவாசமாக வெளிப்பட்ட வேதங்களையும் அவரின் விசுவாசமாக வெளிப்பட்ட ஆகமங்களையும் ஆழ்ந்து புரிந்து கொள்வது அவசியம். பெருமான் திருவாய் மலர்ந்து அருளிய சத்தியங்கள் சாஸ்திரப் பிரமாணம். யோகிகள் சித்தர்கள், ரிஷிகள் தங்களுடைய வாழ்க்கையிலே சாஸ்திர பிரமாணங்களை வாழ்ந்து அதை உலகத்திற்கு வெளிப்படுத்திய தங்கள் அனுபவக் குறிப்புகள் தான் ஆப்தப் பிரமாணம். பெருமானுடையத் திருவருளாலே குருவருளாலே பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் வாழ்வில் அவருக்கு நிகழ்ந்த ஆன்ம அனுபவங்கள் ஆத்மப் பிரமாணம். பெருமானுடைய சாஸ்திரப் பிரமாணம், ஞானிகளுடைய ஆப்தப் பிரமாணம், இவைகளோடு இணைந்து இருக்கின்ற பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் ஆத்மப் பிரமாணத்தை மட்டுமே சாக்ஷிப் பிரமாணமாக அனுபூதியாக மக்களுக்கு அளிக்கின்றார்.

எந்த ஒரு கருத்துக்கும் வேத பாரம்பரியத்தில் மூன்று வார்த்தைகள் உண்டு. ஸ்ரவணம், மனனம், நிதித்யாசனம். கேட்டலும், தெளிதலும், கேட்டுத் தெளிந்ததை வாழ்தலும்... வாழத்துவங்கும் பொழுது கேட்ட சத்தியம் சக்தியாக வெளிப்பட வேண்டும்.

சக்தியாக வெளிப்படாத எந்த சத்தியமும் நித்தியம் இல்லாதது என்று பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளினார்கள்."

08 ஜுன் 2018

08 ஜுன் 2018 -பத்திரிகை செய்தி