என் குரு நித்யானந்தர் 15 சாக்ஷி பிரமாணம்

From Nithyanandapedia
Revision as of 11:01, 16 January 2021 by Ma.Akshaya (talk | contribs) (Created page with "==<big>சாக்ஷி பிரமாணம் (Sakshi Pramana)</big>== '''வருடம் ''' : 2006 '''தலைப்பு :'''சாக்ஷி பிரமா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

சாக்ஷி பிரமாணம் (Sakshi Pramana)

வருடம்  : 2006

தலைப்பு :சாக்ஷி பிரமாணம்

பெயர் : இந்துப்ரியா

இடம் : சென்னை, தமிழ்நாடு, இந்தியா

சாக்ஷி பிரமாணம்:

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் பக்தர்கள் தங்கள் குருவால் வாழ்வில் பெற்ற உன்னதங்களை, பகவான் தங்கள் வாழ்வில் நிகழ்த்திய மாற்றங்களை பக்தியுணர்வோடும், நன்றியுணர்வோடும் பகிர்ந்துள்ளனர்"

பக்தரின் அனுபவம் : இந்துப்ரியா சென்னையில் உள்ள ஒரு பக்தர். அவர் ‘அன்பின் அவதாரம்’ என்ற தலைப்பில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களை பற்றி தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அன்பின் அவதாரம் என்ற முகநூல் பக்கத்தை துவங்கியதன் நோக்கத்தை இக்காணொளியில் பதிவிட்டுள்ளார். பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் ஒவ்வொரு பக்தர்கள் வாழ்விலும் நிகழ்த்திய அற்புதங்களை பதிவிடும் பொழுது மேலும் பல மக்கள் நன்மையடைவார்கள் என்று பக்தர்கள் தினத்தில் நன்றிவுணர்வுடன் பதிவிட்டுள்ளார்.

சாக்ஷி பிரமாணம்


பகவானைப்பற்றி பக்தர்களின் பதிவு : அன்பின் அவதாரம்


சாஸ்திர பிரமாணம்

சாஸ்திர பிரமாணம்:

குருவின் மகத்துவத்தை சிவ மஹாபுராணம் இவ்வாறு போற்றுகிறது...

குருவே சிவன். சிவனே குரு. - உபமன்யு முனிவர் பகவான் கிருஷ்ணருக்கு செய்த உபதேசம். ( ஆதார நூல்: அத்தியாயம்: குரு தீக்ஷா விதி , சிவ மஹாபுராணம்)

பக்தர்களுக்காக பரமசிவன் தோன்றி அருள்பாலிக்கும் கருணையை அருணாச்சல புராணம் இவ்வாறு போற்றுகிறது...

அன்பர்கருதிற்கடுமை யாகியெதிர்வந்தே துன்பமகல்விக்குமது தூயதொழிலானான்

அடியார்கள் நினைத்தால் சீக்கிரத்தில் தானே அவர்களுக்கு எதிராகத் தோன்றித் துன்பம் நீக்குவதே தமக்கு பரிசுத்தமாகிய தொழிலாகக் கொண்டவன் பரமசிவன். - பாவந்தீர்த்த சருக்கம், பன்னிரெண்டாவது அத்தியாயம், அருணாச்சலப் புராணம்

ஆத்ம பிரமாணம்:

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் குருவாய் எழுந்தருளி தம்மிடத்தில் சரண்புகுந்தவர்களை தம்மைபோலவே பரமசிவ நிலையடையும் பொருட்டு ஞான உபதேசஞ் செய்து வரமருள்கின்றார். தம் சீடர்களையும், பக்தர்களையும் காத்தருளுகின்றார்.