30 செப்டம்பர் 2006 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Revision as of 07:49, 5 December 2020 by Sriram.nagarajan (talk | contribs) (Created page with "==<big>வெளியீடு</big>== வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர் === நிகழ்வு === '''நிகழ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

வெளியீடு

வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம்: உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர்

நாள்: 30 செப்டம்பர் 2006

தலைப்பு: நான்

"மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர்.

30 செப்டெம்பர் 2006 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 'நான்' எனும் தலைப்பில்... மூளைக்குள், மனதிற்குள் நிஜத்தில் இல்லாதவை குப்பை போல் நிரம்பி வழிந்தால் நமக்கு நிச்சயம் பிரச்சனைதான்! முழுமையாக அனுபவித்தால் போதும், அவை உணர்ச்சி பதிவுகளாக மாற்றப்படுவது தடுக்கப்பட்டுவிடும். உணர்ச்சிகளை உள்மயமாக்காமல் தடுத்துவிட்டால், துக்கமேயில்லாத உற்சாகமான வாழ்க்கை சாத்தியமாகும் என்ற அறிவுத் தெளிவை பெற்று, செய்வதற்கு உறுதியும் பெற்று, வெற்றி பெற ஆன்ம பலம் தரும் ஆன்மிக ஞானத்தையும், ஆனந்தமான வாழ்வு வாழ்வதற்கான அருட் சிந்தனைகளையும் வழங்கினார். "

30 செப்டம்பர் 2006

30 செப்டம்பர் 2006 -பத்திரிகை செய்தி