Difference between revisions of "17 டிசம்பர் 2013 சன்யாச யாத்திரை"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
(Created page with "== நிகழ்வு == '''வருடம் ''' :2013 '''நாள் :'''17 டிசம்பர் 2013 '''எந்துனை நாட்கள் யாத...")
 
 
Line 83: Line 83:
  
  
[[Category:2013]][[Category:சன்யாச யாத்திரை]][[Category:தமிழ்]][[Category:Tamil]][[Category:Sanyas Yatra]]
+
[[Category:2013]][[Category:சன்யாச யாத்திரை]][[Category:தமிழ்]][[Category:Tamil]][[Category:Sanyas Yatra]][[Category:யாத்திரை]][[Category:பக்தி யோகம்]]

Latest revision as of 16:10, 6 January 2021

நிகழ்வு

வருடம் :2013

நாள் :17 டிசம்பர் 2013

எந்துனை நாட்கள் யாத்திரை திட்டமிடப்பட்டது : 10 நாட்கள்

நிகழ்வு : யாத்திரை

பங்கேற்பாளர்களின் விபரம் : தீட்சை பெற்ற சீடர்கள்

பயணித்த தூரம் : 285 கிலோ மீட்டர் தூரம்

யாத்திரை துவங்கிய இடம் : திருவண்ணாமலை

நிகழ்வின் பெயர் : சன்யாச யாத்திரை

நடைபெற்ற இடம் : நித்யானந்தபீடம், திருவண்ணாமலை

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : நித்யானந்தபீடம், திருவண்ணாமலை

நிகழ்வினை நடத்தியவர் : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளால் நடைபெற்றது.

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 10000

நிகழ்வின் விவரனை : இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களிடம் தீட்சை பெற்ற சீடர்கள் குருமுடி கட்டி விரதமிருந்து, யாத்திரையாக வந்து காணிக்கை செலுத்துகின்றனர். 17 டிசம்பர் 2013 முதல் 26 டிசம்பர் 2013 வரை நடைபெற்றது.


17 டிசம்பர் 2013- படங்கள்



யாத்திரை: தவத்தின் தாத்பரியம் :

பரம்பொருள் பரமசிவன் ஈஸ்வர கீதையில் அருளிய உயரிய தவத்தின் 8 அங்கங்களும் யாத்திரையில் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது...

'பரியும கிஞ்சைப் பழிதீர் பிரம

சரியந் தவந்திரு சந்தோட முண்மை

யுரியபொ றைதூய்மை யுண்டென்றி ருக்கை

யரியவி ரதத்துக் கங்கங்க ளாமால்...' - ஈசுவர கீதை (கூர்ம புராணம்) (சிவப்பிரகாசம் எனும் தமிழநுவாதம், அத்தியாயம் 11, யோகம் - கலிவிருத்தம் - 296 பாடல், ஶீ தத்துவராய சுவாமிகளின் பொழிப்புரை)

விரும்பத்தக்க அகிம்சையும், குற்றமற்ற பிரமசரியமும், தவமும், உண்டாகின்ற சந்தோஷமும், சத்தியமும், உரியதாயுள்ள பொறை ( க்ஷமை - திதிக்ஷ)யும், சரீரமனோசெளசமும் (தூய்மையும்), ஆஸ்த்திக்யமும் (நிலையானதுண்டு எனும் உறுதி) ஆகிய இவை அருமையான தவத்திற்கு எட்டு அங்கங்களாகும்.

பரம்பொருள் பரமசிவன் ஈசுவர கீதையில் உரைத்தவாறே தவத்தின் எட்டு அங்கங்களும் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் சீடர்களால் முழு சிரத்தையுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.

தவத்தின் மகோன்னதத்தை, பலனை அக்னி பகவான் உரைக்கின்றார்...

'தபஸோ ஹி பரம் நாஸ்தி தபஸா வின்ததே மஹத்

தபஸா க்ஷீயதே பாபம் மொததே சஹ தைவதை

தபஸா பிராப்யதே ஸ்வர்கஸ் தபஸா பிராப்யதே யஷ

தபஸா ஸ்வர்வமாப்போதி தபஸா வின்ததே பரம்'

பொருள்: தவத்தைவிடவும் பெரியது ஏதும் இல்லை. தவத்தினால் சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. தவத்தினால் பாவங்கள், கர்மங்கள் நிறைவு பெறுகின்றன. தவத்தினால் ஒருவர் கடவுளோடு ஒருங்கிணைகிறார். தவத்தினால் நற்பெயர், புகழ் மற்றும் அருள் பெறப்படுகின்றது. தவத்தினால் அனைத்தும் அடையப்படுகின்றது. தவத்தினால் உயர்ந்த பிரம்மநிலை வெளிப்படுத்தப்படுகின்றது.

அக்னி பகவான் தவத்தைப்பற்றி அளித்திருக்கும் தவத்தின் அனைத்து நற்பயன்களையும் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் யாத்திரை மேற்கொண்ட அனைவரும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட ஆசி வழங்குகின்றார். "