Difference between revisions of "November 22 2015"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
(November 22 2015)
Line 376: Line 376:
 
File:20151122_Photo_1086_1RpXOPUn9rvv9qtS2SZXVtL5n4BLGHmQa.JPG
 
File:20151122_Photo_1086_1RpXOPUn9rvv9qtS2SZXVtL5n4BLGHmQa.JPG
 
File:20151122_Photo_1087_1CS930nORZEmx4TcWKZHCQO7Bx0XzwCVA.JPG
 
File:20151122_Photo_1087_1CS930nORZEmx4TcWKZHCQO7Bx0XzwCVA.JPG
File:20151122_Photo_1088_17dHgK0rrB2FUFwCI24yeI3753I6_PauX.JPG
+
 
 
File:20151122_Photo_1089_1p-mB0AjddVS9958fRJvPcGEK7_d3pO0p.JPG
 
File:20151122_Photo_1089_1p-mB0AjddVS9958fRJvPcGEK7_d3pO0p.JPG
 
File:20151122_Photo_1090_1XUo_0btO8nj_6YNw4bdpRg6OXzEV7zpj.JPG
 
File:20151122_Photo_1090_1XUo_0btO8nj_6YNw4bdpRg6OXzEV7zpj.JPG
Line 852: Line 852:
 
File:20151122_Photo_1542_1lX-lDqjRnhLaV0tNNwYgy3f8w1t5I96n.JPG
 
File:20151122_Photo_1542_1lX-lDqjRnhLaV0tNNwYgy3f8w1t5I96n.JPG
 
File:20151122_Photo_1543_1r9t26YmFj4z43rF411sjKjC8P-0DZFaI.JPG
 
File:20151122_Photo_1543_1r9t26YmFj4z43rF411sjKjC8P-0DZFaI.JPG
File:20151122_Photo_1544_1-y7O_YHCDxrXR-gMf8E0ZFTdSbmcdD-1.JPG
+
 
 
File:20151122_Photo_1545_1oo0-AfArXHX90nN3u61jUVxN23gldBxq.JPG
 
File:20151122_Photo_1545_1oo0-AfArXHX90nN3u61jUVxN23gldBxq.JPG
 
File:20151122_Photo_1546_1nvZAqYhodS4ueHEdunajuPv7jiB742Wp.JPG
 
File:20151122_Photo_1546_1nvZAqYhodS4ueHEdunajuPv7jiB742Wp.JPG
Line 938: Line 938:
 
File:20151122_Photo_1628_16GValB1y4PIlbVxpAmPPASbB_E-JaGBH.JPG
 
File:20151122_Photo_1628_16GValB1y4PIlbVxpAmPPASbB_E-JaGBH.JPG
 
File:20151122_Photo_1629_11YMeyoebkw00Y8KdR3JXtxqv6Yq2Qfir.JPG
 
File:20151122_Photo_1629_11YMeyoebkw00Y8KdR3JXtxqv6Yq2Qfir.JPG
File:20151122_Photo_1630_1NQLdOwb0x15Fv9Dek7mOHC-uTLH81rEH.JPG
+
 
 
File:20151122_Photo_1631_1vEB06ffCK_2dWN-s74u-R7RiMT8Z69Ve.JPG
 
File:20151122_Photo_1631_1vEB06ffCK_2dWN-s74u-R7RiMT8Z69Ve.JPG
 
File:20151122_Photo_1632_1tZasvG-HImXuOFzQ3_zZ0yEacpd60XaO.JPG
 
File:20151122_Photo_1632_1tZasvG-HImXuOFzQ3_zZ0yEacpd60XaO.JPG
Line 970: Line 970:
 
File:20151122_Photo_1660_1RXsItVh4IoH9gIKVl6qRvZE5O3YAsx51.JPG
 
File:20151122_Photo_1660_1RXsItVh4IoH9gIKVl6qRvZE5O3YAsx51.JPG
 
File:20151122_Photo_1661_1EElQ17Pn-crSQSgYXk6qIC6mua93T95i.JPG
 
File:20151122_Photo_1661_1EElQ17Pn-crSQSgYXk6qIC6mua93T95i.JPG
File:20151122_Photo_1662_1SRK30QEBoZKttC3lgyNF5I9L2UQcKRRD.JPG
+
 
 
File:20151122_Photo_1663_1XvEkExzi2X2n8aNYTda43WB0UgiXjkgJ.JPG
 
File:20151122_Photo_1663_1XvEkExzi2X2n8aNYTda43WB0UgiXjkgJ.JPG
 
File:20151122_Photo_1664_16Lf5iPmc3HyqRQRwoQ7rDD5s1LQZ6Jwr.JPG
 
File:20151122_Photo_1664_16Lf5iPmc3HyqRQRwoQ7rDD5s1LQZ6Jwr.JPG

Revision as of 10:40, 1 May 2021

Title:

ஆதி சைவம் - பக்தியின் சக்தி

Link to Video:

Video Audio



Transcript

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.. ஆதி சைவம்.. நேற்றைய சத்சங்கத்தைச் சார்ந்த ஒரு கேள்வி.. இந்த ஒரே கேள்வியை இரண்டு மூன்று அன்பர்கள் வேறுவேறு வார்த்தைகளால் எழுப்பி இருக்கிறார்கள். விதர்க்கத்தோடு சிரத்தையோடுதான் எழுப்பி இருக்கிறார்கள். குதர்க்கமில்லாதது.. அவர்களுடைய கேள்வி என்னவென்றால்.. பெருமானே.. நீங்கள் சுந்தரர் கதையை, அவர் பக்தியின் சக்தியை விவரித்த முறையைக்கண்டு, இந்தக் கதையைக் கேட்டு ஆழ்ந்து சிந்தித்தால், தனிமனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம், சமூக சமச்சீர் காப்பாற்றப்படுவதற்கான விதிமுறைகள் இது எதையும் கடைபிடிக்க வேண்டிய தேவை இல்லையா?.. இதுபோன்றெல்லாம் நான் என்ன வேண்டுமானாலும் செய்து கொண்டிருந்தாலும், எம்பெருமான் எனக்கு சுந்தருக்கு அருளியதுபோல அருளுவாரா? எனக்கும் அவர் தூது செல்வாரா?. உண்மையில் பார்த்தால் இந்தக் கேள்வியை நீங்கள் ரொம்ப வேகமாக கேட்டுவிட்டீர்கள்.. இன்னும் முழுக்கதையையும் நீங்கள் முழுமையாகக் கேட்டு முடிக்கவில்லை. இன்னும் க்ளைமாக்ஸ் முடியவில்லை. இறங்கி வந்ததில் இருந்து திரும்பி போகிற வரைக்கும் ஒரு விறுவிறு நாவல் மாதிரிதான் சுந்தரர் கதை மட்டும் போகிறது. இறங்கி வந்த காரணம், திரும்பிச் சென்ற விதம், எல்லாமே சுந்தரர் வாழ்க்கை மட்டும், அவர் வாழ்க்கையே சுந்தரம். இன்று ஆழ்நந்து கேளுங்கள்.. இன்றைய சத்சங்கத்தைக் கேட்டீர்களானால் உங்களுடைய இந்தக் கேள்விக்கு பதில் கிடைத்துவிடும். தனிமனித ஒழுக்கம், சமூகத்தை சமச்சீர் நிலையில் வைக்கின்ற ஒழுக்கம், சமூகத்தின் கோட்பாடுகள் எதையுமே மாதிக்காமல், இது எதையுமே வாழாமல், என்னவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பன்றாரு அது அத்துனைக்கும் பெருமனே தூது செல்கிறார்.. அப்பொழுது நானும் அதுபோல் செய்தால் எனக்கும் பெருமான் தூது செல்வாரா? ஆழ்ந்து கேளுங்கள்.. இந்தப் பிரச்சினையை சிறிது ஆழ்ந்து சிந்தித்தால் மட்டும்தான் இதற்கு தீர்வு கிடைக்கும், புரியும். அதாவது ஒரு மனிதன்.. உடல்-மனம்-உணர்ச்சி-உணர்வு-ஆன்மா இந்த ஐந்தும் ஒன்று சேர்ந்ததுதான் ஒரு மனிதன். உடல்-மனம்-உணர்ச்சிகள் -உணர்வு-ஆன்மா. சுந்தரமூர்த்தி நாயனார் உடலாலும், மனதாலும் செய்ததை மட்டும்தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.. உடலாலே இரண்டு பெண்களை மணந்துகொண்டார். மனதாலே இரண்டு பெண்களிடமும் காதலில் விழுந்தார். இதைத்தான் பார்க்கிறீர்கள். உணர்ச்சியாலும், உணர்வாலும், உயிராலும்-ஆன்மாவாலும் அவர் எப்படி இருந்தார் நீங்கள் பார்க்கவோ நினைக்கவோ மறந்து மறுக்கிறீர்கள். காரணம் என்னவென்றால், நீங்கள் உங்களையே வெறும் உடல்-மனமாக மட்டும்தான் பார்க்கிறீர்கள். நாத்திக நாராசம் தமிழ்நாட்டில் பரப்பப்பட்ட பொழுது இந்த உடல்-மனம் தாண்டி உங்களுடைய பரிமாணங்கள் வளர்வதற்கான வாய்ப்பே அழிக்கப்பட்டது. பகுத்து அறிவதற்காக பகுத்தறிந்தால் தவறில்லை. பகுத்து எரிவதற்காக பகுத்தறிவைப் பரப்பினார்கள். பகுத்து எறிய பகுத்தறிவை உபயோகித்தார்கள். அதுவும் இந்து மதத்திற்கு எதிராக மட்டும்தான் உபயோகித்தார்கள். தமிழ்நாட்டில் நாத்திகம் பகுத்தறிவு இயக்கம் பரவுச்சு என்று யாராவது தயவுசெய்து தவறாக நினைக்காதீர்கள். இந்த மத விரோதக் கருத்துக்களை முட்டாள் தனமான, மூடத்தனமான இந்து விரோதக் கருத்துக்களை மொத்தமாக தொகுத்து, அதற்கு ஏதாவது ஒரு ிாடைழளழிால -னு வவைடந கொடுக்க வேண்டுமில்லையா.. அதற்காக கொடுக்கப்பட்டது. ஆனால் இந்தக் கொடுமை என்னவென்றால், இந்த முட்டாள்தனமான, மூடத்தனமான, சாத்தியங்களை மறுக்கின்ற இந்த மூடக்கருத்துகள் பரவியதனாலே நாம் எல்லாருமே.. உங்களை உடல்-மனம் தாண்டி வேறு ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கே நீங்கள் வந்துவிட்டீர்கள். இது ஒரு பெரிய கொடுமை. உங்களை நீங்கள் உடல்-மனம் என்று நினைப்பதினால், சுந்தரரையும் உடல் மனம் என்கின்ற நிலையிலிருந்து மட்டும்தான் பார்க்கிறீர்கள். அவருடைய.. உடல் பார்த்தீர்களென்றால் நீங்கள் என்கின்ற உங்களுடைய உடல் வெறும் 5 சதவிகிதம்தான். உங்கள் மனம் வெறும் 5 சதவிகிதம் தான், உங்களுடைய உணர்ச்சிகளும், உணர்வும், உயிரும் தான் மீதி 90 சதவிகிதம். உடல் 5 சதவிகிதம், மனம் 5 சதவிகிதம், மற்ற மூன்றும்தான் 90 சதவிகிதம். இந்த 10 சதவிகிதம்.. உடல் 5, மனம் 5, இந்த 10 சதவிகிதம் செய்த செயலைப் பார்த்தீர்களே தவிர, இந்த 90 சதவிகிதம் இந்த 10 சதவிகிதத்தின் செயல்களின் பொழுது எந்த நிலையில் இருந்தது என்று பார்க்கவில்லை. சுந்தரர் மிக அழகாகச் சொல்கிறார் ’’தடுக்கி விழுந்தாலும் உன் நாமமே என் தறுக்கில் செறுக்கும்.’’ தடுக்கி விழுந்தாலும் உன் நாமமே என் நாவில், நெஞ்சில் சுரக்கும். அவர் இருந்த உணர்வுநிலை, அவர் இருந்த உணர்ச்சி நிலை, அவர் இருந்த உயிர்நிலை. அவருடைய உயிர் எதிலே நிலைகொண்டிருந்தது. நன்றாக புரிந்துகொள்ளுங்கள்.. அரசிளங்குமரனாக, எதிர்கால அரசனாக.. அந்த நாட்டு அரசனாலே வளர்க்கப்பட்டும், பெருமான் ஆட்கொண்டவுடன் அரசைத் துறந்து ஊர் ஊராய் சைவம் பரப்ப சென்று விடுகின்றார். அப்படியென்றால் என்ன அர்த்தம், அவர் உயிர், பொருள், உலகம், சுகம் இதன் மீது நிலைகொள்ளவில்லை. அப்படி வேண்டுமானாலும் பெருமானிடம்தான் கேட்டுப்பெறுவேன். வேறு ஒருவரிடம் கேட்கவும், வேறு ஒருவரிடம் வணங்கலும் கேட்டலும் ஆகாது. அஞ்சுவதும், அடிபணிவதும் அப்பன் ஒருவனுக்கே! அவனேதான் மன்னவனும், அவனேதான் என்னவனும், கடவுளும் அவன்தான், தலைவனும் அவன்தான், இறைவனும் அவன்தான், என்னவனும் அவன்தான், மன்னவனும் அவன்தான். வேறு ஒருவருக்கு வேலை செய்ய மாட்டேன். வேறு ஒருவருக்கு ஊழியம் செய்ய மாட்டேன். வேறு ஒருவருக்கு என் வாழ்க்கையும், தலையும் வணங்காது. சைவத்தினுடைய சாரம், சைவத்தின் ஒரு அடிப்படையான விளக்கம், வேறு ஒன்றும் இல்லை, பரம்பொருளான சதாசிவனை, பக்தியால் பரவுவதும், நம் பக்தியை அவர் ஏற்றுக்கொண்டு நம்மை வாழ்விக்கின்றார், நாம் அவர்மீது வைத்த நம்பிக்கையை அவரும் நம்மீது வைத்திருக்கின்றார் என்று புரிந்துகொள்வது சரணாகதி. அவ்வளவுதான். மொத்த சைவமுமே இவ்வளவுதான். நாம் அவர் மீது வைத்திருக்கும் பக்தியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. அவர் நம்மீது அதே நம்பிக்கையை வைத்திருக்கின்றார் என்கின்ற சிரத்தை. எனக்கு அவரைத் தெரியும் நான் விழுந்து விழுந்து கும்பிடுகிறேன். ஆனால் எனக்கு அவரைத் தெரியுமான்னு தெரியலையே.. உனக்கே அவரைத் தெரியும்பொழுது, அவருக்கு உன்னைத் தெரியாதாப்பா..? என்னைய்யா இது? மொத்த சைவமும் இவ்வளவுதாங்க ஐயா.. நினைத்தவுடன் அடிவயிரே இனிக்கின்ற நம்பிக்கை. நினைத்தவுடன் அடிவயிறு கலங்குகின்ற துன்பத்தை எல்லாரும் பார்த்திருப்பீர்கள் வாழ்க்கையில்.. ஒரு புது வார்த்தையை சொல்கின்றேன்.. நினைத்தவுடன் அடிவயிறே ஆனந்தம் கொள்ளுகின்ற நம்பிக்கை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் நினைத்தவுடனேயே அடிவயிரே கலங்குகின்ற துக்கம் ஏன் வருகிறதென்றால் ஏற்கனவே வந்த துக்கங்களெல்லாம் நினைவுல பொங்கி, அலைமோதி அதைவிட இந்தமாதிரி இன்னும் மோசமாகிவிடுமா..? இந்த அந்த மாதிரி ஆகிடுமான்னு.. கலங்குவதுதான் அடிவயிறு பொங்குகின்ற துக்கம். அடிவயிறு பொங்குகின்ற துக்கம் வரவேண்டும் என்றால்.. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஏற்கனவே பண்ண விளையாடல்களெல்லாம் ஞாபகத்தில் இருக்க வேண்டும். அடிவயிறு பொங்குகின்ற ஆனந்தம் வரவேண்டுமென்றால், பெருமான் வாழ்க்கையில் ஏற்கனவே செய்த விளையாடல்களெல்லாம் நினைவிற்கு வரவேண்டும். ஐயா, நினைத்தவுடனே ஐயோ!.. அந்த மாதிரியே திரும்ப ஆயிடுமோ.. இல்ல அதைவிட மோசமாக ஆகிவிடுமோ.. என்று அடிவயிறு கலங்க வைப்பது.. உங்கள் வாழ்க்கையையே நினைத்துக்கொண்டிருப்பது. நினைத்தவுடனேயே.. அந்தமாதிரி ஆகுமோ.. அதைவிட வேறமாதிரி ஆகுமோ! என்று மனதெல்லாம் ஆனந்தத்தால் பொங்குகிற மாதிரியான சத்தியங்கள்தான் பெருமானும், அவர்தம் அடியாரின் வாழ்விலும் நடந்த விளையாடல்கள். எதை அதிகமாக உங்கள் பயோ-மெமரியில் ஸ்டாக் வைத்துள்ளீர்களோ அதுதான் திரும்பத் திரும்ப மேலே வரும். என்ன திண்ணீங்களோ.. அதுதான் ஏப்பமாக வரும். 24 மணிநேரமும், அண்ணி, ஓருபடி, மாமியார், மருமகள், சித்தி இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தீர்களானால், இந்த டீவி சீரியலே என்ன தெரியுமா? வேற ஒன்றுமில்லை, அதாவது.. மருமகளுக்குத் தெரியாம மகனை எப்படிப் பிரிக்கிறது..? எப்படி ப்ளான் பண்ணி போலீசில் மாட்டாமல் மாமியாரை சாகடிப்பாது? எப்படி ப்ளான் பண்ணி தானாகவே மருகளை ஓடிப்போவது போல் செய்வது.. ? இருக்கின்ற எல்லாவிதமான கிரிமினல் செயல்களையும் எப்படி செய்வது என்று வருடக்கணக்காக எடுக்கப் படுகின்ற பாடம்தான் இந்த டிவி சீரியல்கள். இது எல்லாம் உங்கள் பயோ-மெமரியில் போய் உட்கார்ந்தால், ஒரே ஒருநாள் புருஷன் 5 நிமிடம் தாமதமாக வந்தால்கூட மனசுக்குள் என்ன ஆகிறது, 50 காரணங்கள் வந்துவிட்டு போகிறது. ஏதாவது பொம்பளையை வச்சிருக்கரா.? இல்லை யாராவது கடத்திக்கொண்டு போய்விட்டார்களா? இல்ல அவரே இதுக்குமேல வீட்டுக்கு வரவேண்டாம் என்று முடிவுசெய்து விட்டாரா? அலுவலகத்தில் வேலை போய்விட்டதா? இல்லை துக்கத்தில் தற்கொலை செய்துகொண்டாரா? நான் வேறு இன்னைக்கு காலையில் சரியாக பேசவில்லை. நான் கொஞ்சம் ஒழுங்கா பேசி அனுப்பி இருந்திருக்க வேண்டும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. டிவி சீரியல்கள் நம்முடைய வாழ்க்கையின் பாகமாக மாறுவதற்கு முன்பாக, இந்த அளவிற்கு மனக்கொந்தளிப்பு, மன உளைச்சல், நினைத்தவுடன் அடிவயிறு கலங்குகின்ற துக்கம் நமக்கு இருந்திருக்கவில்லை. நினைத்துப் பார்ப்பதற்கு தவறான நினைவுகளை அளவுக்கதிகமாக உண்டுவிட்டு, கண்டுவிட்டு என்று வேண்டுமானால் சொல்லலாம், கண்டுண்டு விட்டு, எப்பொழுது ஒரு சிறு காரணம் வரும், துக்கப்படலாம், உயிரே நடுங்கும் அளவிற்கு வேதனைப்படலாம் என்று காத்துக்கொண்டிருக்கின்ற ஜீவன்களைப்போலே மாறிவிட்டோம். உங்கள் உடலிற்குள்ளும், மனதிற்குள்ளும் எப்பொழுது துக்கத்தைப் பரப்பலாம் என்கின்ற உணர்ச்சிகளையும், உணர்வுகளை நீங்கள் வைத்திருந்தால் அந்த வாழ்க்கைதான் நாத்திக வாழ்க்கை. இந்த சமூகம் சார்ந்த குற்றம், கொலை, அதிலும் எல்லா.. சேனலிலும் இந்த க்ரைம்-ஸைப் பற்றி ஒரு ஷோ. அதுல மியூசிக் பார்த்தீர்களென்றால்.. அப்பா.. ஒந்து வந்திதாரே(கன்னடம்) பல மொழிகளிலும்தான் சொல்கிறேன் இடி மாதிரி அந்த மியூசிக் அடிக்கும். கடைசியாக என்னவென்றால் ஒரு ஆறு ஓடிக்கொண்டிருப்பதைக் காண்பிப்பார்கள் வட்டம் போட்டு. குற்றம் குஐசுஇ க்ரைம் சீன், இவைகளையெல்லாம் தொடர்ந்து பார்த்துப் பார்த்து எதை சாப்பிடுகிறீர்களோ அதுதான் ஏப்பம் வரும். இதெல்லாம் உங்களின் பயோ-மெமரியில் போய் உட்கார்ந்து.. எந்த ஒரு சிறுகாரணம் கிடைத்தாலும் உங்களை ஒரு துக்க சுனாமி மாதிரி தாக்குகிறது. அதனால்தான் வாழ்க்கை துக்கமாக இருக்கிறது. ஆனால் அதுவே. கரிக்குருவிக்கு உபதேசித்ததும், வந்திக்காக பிட்டுக்காக மண் சுமந்ததும், நரியெல்லாம் பரியாக்கி தானே குதிரைச் சேவகனாய் வந்ததும், பாலைக் கொடுத்து சம்பந்தனை ஆண்டதும், சுலை கொடுத்து அப்பரை ஆண்டதும், குதிரைஓட்டும் கோலை எடுத்து மணிவாசகரை ஆண்டதும், ஓலை கொடுத்து சுந்தரனை ஆண்டதும், இதெல்லாம் நினைவில் இருந்தால் இதெல்லாம் உங்கள் பயோ-மெமரியில் இருந்தால், எந்த ஒரு சுழலிலும் இது எப்படி வெடித்து, பக்தியை ஆனந்தத்தை உங்களுக்குள் பொங்க வைக்கலாம் என்று பார்த்துக்கொண்டே இருக்கும். அதுதான் சைவ வாழ்க்கைங்கையா. துக்கமும், துயரமும், வேதனையும், கல்மஷமும், வலியும்.. தொடர்ந்து டிவி சீரியல் பார்த்தீர்களென்றால்.. வாழ்க்கையில் என்னவெல்லாம் றசழபெ போக முடியுமோ.. அதெல்லாம் றசழபெ போகும் என்ற நினைப்பில்தான் இருப்பீர்கள். எது தவறாக போகுமோ.. எப்படி வாழ்க்கை கொலாப்ஸ் ஆகுமோ, எப்படி துக்கம் வருமோ..? எப்படி பிரச்சினை வருமோ என்று அதை எதிர்நோக்கியே காத்திருப்பீர்கள். இந்த பயோ-மெமரி உடலிற்குள்ளும், மனதிற்குள்ளும் டீரடைவ ஆயிருச்சின்னா எப்பொழுது உங்களுக்குள் அந்த கடும் பயத்தையும் நரம்புத்தளர்ச்சியையும் உருவாக்கக்கூடிய அந்த அட்ரலினை உடலிற்கும் சரளா பண்ணலாம் என்று உங்களுடைய பயோ-மெமரி காத்துக்கொண்டிருக்கிறது. ஒரு சிறுவிஷயமாக இருந்தால்கூட போதும், ரொம்ப சின்ன விஷயத்துக்கெல்லாம்கூட உயிரே நடுக்குகின்ற மாதிரி உடலும்- மனமும் நடுநடுங்கி.. தன் இருப்புநிலையை இழந்து, இயல்பு நிலையை மறந்து, இயைபாக இருக்கும் நிலையும் ஒழிந்து, மீண்டும் மீண்டும் துக்கச் சுனாமி உங்களுக்குள் அடிப்பதற்கு, துக்கப்பேரலை உங்களுக்குள் அடிப்பதற்கு நீங்களே காரணமாகிறீர்கள். இதுதான் நாத்திகவாதிகள். எந்த நினைவுகள் அதிகமாக உங்களடைய பயோ-மெமரியில் இருக்கிறது என்பதுதான், நீங்கள் எந்த வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று முடிவுசெய்கிறது. நன்றாக புரிந்துகொள்ளுங்கள்.. செய்கின்ற செயல் சார்ந்து உங்கள் வாழ்க்கை அமைவதில்லை. அது மிகவும் சிறிய பாகம்.. செய்கின்ற செயல், உங்கள் வாழ்க்கையின் மிகச் சிறிய பாகம், நீங்கள் இருக்கின்ற உணர்வுதான் உங்கள் வாழ்வின் பெரும்பாகம். பெரும்பாகத்தை தூய்மை செய்யுங்கள்.. பெரும்பாகத்தை தூய்மை செய்யுங்கள்.. பெருமான் பாகம் கிடைக்கும். பெரும்பாகத்தை தூய்மை செய்வதற்கு லீலாத்தியானம் மாதிரி ஒரு அருமையான வழி வேறு எதுவும் இல்லை. நன்றாக தெரிந்துகொள்ளுங்கள்.. இப்பொழுது நீங்கள் சினிமாவில் பார்க்கின்ற டிவியில் பார்க்கின்ற செய்தியை விட, நம்முடைய புராணங்களும், இதிகாசங்களும் அதிக அளவு உண்மை உடையவை. நன்றாக தெரிந்துகொள்ளுங்கள்.. இப்பொழுது நீங்கள் தொலைகை்காட்சிகளில் பார்க்கின்ற செய்திகளை விட, நம்முடைய புராணங்கள் அதிக அளவு உண்மையும், உண்மையான மனிதர்களாலும் உருவாக்கப்பட்டது. அதானால் இந்த புராணங்களும், நம்முடைய இதிகாசங்களும் பொய் என்று உங்களுக்குக் கற்றுக்கொடுத்த பொய்யர்கள்தான் பொய்யர்கள். புராணம் பொய் என்ற அதைப் படிப்பதை நிறுத்தினார்கள்.. இப்பொழுது இவர்கள் புராணத்தை படிக்க வேண்டியதாக இருக்கிறது. இவர்கள் புராணத்தைப் படிக்க வைக்க இதற்கு முன்பிருந்த புராணத்தை பொய் என்று உங்களை நம்ப வைத்தார்கள். ஊழபெவைழைெ - தமிழில் சொல்லவேண்டுமானால், உணர்வுப்படுத்திக்கொள்ளுதல். எந்த ஒரு சுழல் உங்கள் கவனத்திற்கு முன்பு வந்தாலும், எந்த ஒரு செய்தி.. எந்த ஒரு நிகழ்வை நீங்கள் எதிர்கொண்டாலும், அதை எவ்வாறு நீங்கள் உள்வாங்கி உங்களுக்குள் பதிய வைத்துக்கொள்கிறீர்கள் என்பது மிக மிக முக்கியம். ஒரு மனித வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சம், எவ்வாறு நீங்கள் வாழ்க்கைய உணர்வுபடுத்திக்கொள்கின்றீர்கள், உணர்கின்றீர்கள். சிலபேர் என்னிடம் கேட்பதுண்டு.. தவறு செய்கிறவர்கள் எல்லாம் நல்லாவே இருக்கிறார்கள் நல்லது செய்கிறவர்கள் எல்லாம் கெட்டுப்போகிறார்களே சாமி.. என்று. உங்கள் உணர்வுப்படுத்துதல்தான் தவறே தவிர, இறைவனின் தர்மம் தவறுவதே இல்லை. சரி எது? நல்லது எது? நிம்மதி எது? துக்கம் எது? என்று இந்தக் கருத்துக்களை நீங்கள் உணர்வுப்படுத்திக்கொள்வதில் தவறு இருக்கிறதே தவிர, இறைவனின் தர்மம் தவறுவதே இல்லை. எதுகாலம் வரை எந்த சக்தியும் இல்லாமல் அந்தரத்தில் பூமி தொங்கிக்கொண்டிருக்கிறதோ.. இறைவன் தர்மம் தவறுவதே இல்லை. எந்த சக்தியும் தாங்கலும் இல்லாது அந்தரத்தில் பூமி இருப்பதும், சுற்றுவதுமே இறைவனின் தர்மம்தான். அவன் தர்மம் தவறுவதே இல்லை. என்னுடைய வாழ்க்கையில் நான் நினைத்து நினைத்து சந்தோஷப்படுகின்ற, ஆனந்தப்படுகின்ற ஒரு விஷயம், நல்லவேளை டிவி எல்லாம் ிழிரடயச ஆவதற்கு முன்பே நாம் பிறந்து வளர்ந்துவிட்டோம். உண்மையிலேயே சொல்கிறேன்.. நல்லவேளை தொலைக்காட்சி மனித வாழ்க்கையின் அதீதமான பாகமாக மாறுவதற்கு முன்பாகவே பிறந்து வளர்ந்துவிட்டோம். பெருமானே.. அதுவும் அதெல்லாம் அண்ட முடியாத கிராமத்தில் பிறந்து வளர்ந்தோம். நல்லவேளை. இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது.. மாலையானால் எனக்குத் தெரிந்ததெல்லாம், அண்ணாமலையான் ஆலயம்தான். காலை புனர்ந்தாலும், மாலை மங்கினாலும் வாழ்க்கை அவன் வாழும் சாலைதான். காலை புனர்ந்தாலும், மாலை மங்கினாலும் அவன் ஆலயமே கதி. இந்தத் தொடர்ந்து திரைத்துறையிலும் வௌ்ளித்துரையிலும், சின்னத்துறை, திரைத்துறை இதில் இருக்கின்ற பலபேரை நான் சந்திக்கிறேன்.. அவர்களிடம் நான் கேட்கிறேன். ஏன் தொடர்ந்து ஏழடையஉந-ம் உசைஅந- மும், அதாவது வேதனை, துக்கம், அழித்தல்.. அதிலும் இப்பொழுது இந்த டிவி சீரியலில் காட்டுகின்ற.. அந்தப் பெண்களுடைய உரெெபைெநௌளஇ வீட்டிற்குள் நடக்கின்ற உரெெபைெநௌள ரொம்ப கொடுமையாக.. அதாவது ரொம்ப சாதாரண மக்கள் மத்தியில் இந்தக் உரெெபைெநௌள தான் இயற்கையான வாழ்க்கைமுறை என்று நிறுவப்படுகின்ற மிகப்பெரிய கொடுமை. என்னவேண்டுமானாலும் செய்.. மாட்டிக்கொள்ளாமல் ப்ளான் பண்ணுவதற்கு நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம்.. மிகவும் இந்தக் கொடுமை சாதாரண கொடுமை தினசரி வாழ்க்கையாக மாறி இதற்கு சுந்திரம் என்று வேறு ஒரு டாப் டைடில் கொடுத்து, ஐயோ.. நல்லவேளை இதெல்லாம் நடப்பதற்கு முன் பிறந்து வளர்ந்துவிட்டோம். இதுபோன்ற கருத்துக்கள் தொடர்ந்து உள்ளபோயிருந்தா உடலில் இரத்தத்திற்கு பதில் ஆசிடை (அமிலத்தை) ஊற்றி சுத்த வைத்துக்கொண்டிருக்கிறோம். எந்த ஒரு சுழலிலும், உங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று நீங்கள் நம்பத்துவங்கிவிட்டால், உணர்வுப்படுத்திக்கொள்ளத் துவங்கிவிட்டால் நீங்களும் அநீதி இழைக்கத் தயாராகி விடுவீர்கள். பெரிய கொடுமையே.. இந்த நாகரீக உலகத்தில்.. ஊடகங்களும், இந்த டிவி சீரியல்சும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எல்லாமே உங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக உங்களை என்று நம்பவைக்கின்றன. நீங்களும் அந்த நம்பிக்கை ரொம்ப சுகமாக இருப்பதால் அதை சாப்பிட ஆரம்பித்து விடுகிறீர்கள். எல்லா மருமகளும் நினைக்கிறால்.. மாமியார் கொடுமைக்காரியாக இருக்கின்ற சீரியலைப் பார்த்து, இதில் வருகின்ற மருமகள் நான்.. என் மாமியார் இது. எல்லா மாமியாரும் நினைக்கிறார்கள்.. மருமகள் கொடுமைக்காரியாக வருகிற சீரியலைப் பார்த்து.. இதில் வருகிற மருமகள் என் மருமகள்.. இந்த மாமியார் நான். நீங்கள் வஞ்சிக்கப்படுவதாக உங்களை நம்பவைப்பது சுலபம். அந்த நம்பிக்கை உங்களுக்குள் சென்றுவிட்டால், அது மிகப்பெரிய விஷமாக மாறி நீங்கள் மற்றவர்களை வஞ்சிக்க.. மனதளிவிலும், கருத்தளவிலும், உணர்வளவிலும் தயாராகிவிடுகின்றீர்கள். அந்தத் தயார் நிலையிலிருந்து நீங்கள் செய்கின்ற எல்லாச் செயலுமே.. உங்கள் இருப்பு நிலைக்கு எதிரானதாக, உங்கள் இயல்பான சுபாவமான சிவபோத நிலையான நித்யானந்த நிலைக்கு எதிரானாதாக இருக்கின்றது. எப்பொழுது நீங்கள் வஞ்சிக்கப்படுகிறீர்கள் என்று நீங்கள் நம்ப ஆரம்பிக்கின்றீர்களோ.. அப்பொழுது எந்தவிதமான நல்லது-கெட்டது பார்க்காமால் எதை வேண்டுமானாலும் செய்வதற்கு.. நல்லது - கெட்டது, ஞாயம் -தர்மம் எதையும் பார்க்காமல் செய்வதற்கு தயாராகிவிடுவீர்கள். மிருகத்தன்மைக்குள் நுழைந்து விடுவீர்கள். அப்படியில்லாமல்.. எப்பொழுதும் நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள்.. எந்தச் சுழலிலும் நீங்கள் தாங்கப்படுகின்றீர்கள்.. பிரபஞ்சத்தையே இயக்கும் பேரருட் கருணை சக்தி, எப்பொழுதும் உங்கள் உள்ளும், புறமும் பொங்கி உங்களை நித்யானந்தத்தில் நிலைபெறச் செய்துகொண்டே இருக்கின்றது. இந்த உணர்வுப் பதிவு உங்களுக்குள் செல்வதற்கு இறைவனின் திருவிளையாடல்கள் மிகப்பெரிய வழிவகுக்கும். இறைவனுடைய ஆறுபத்துமூவர் கதையையும், 64 லீலைகளையும் நீங்கள் உள்வாங்குவீர்களானால், எப்பொழுதும் நீங்கள் காக்கப்படுகிறீர்கள், இரட்சிக்கப்படுகிறீர்கள், தாங்கப்படுகிறீர்கள்.. உங்களைத் தாங்கிக்கொண்டிருக்கும் திருக்கரம் எல்லா சக்தியுடையது மட்டுமல்ல.. எல்லா வல்லமையும் உடையது மட்டுமல்ல. பெரும் கருணை உடையது. இந்த சத்தியம் உங்களுக்குள் மலரும்பொழுது எல்லோரையும் இனிமையோடும், ஆனந்தத்தோடும், அன்போடும், கருணையோடும், பொங்குகின்ற பொறுப்புணர்வோடும், சிரத்தையோடும் அணுகத்துவங்கிவிடுவீர்கள். டிவி சீரியலும் - திருவிளையாடலும் அதுதான் இன்றைக்கு நான் சொல்ல விரும்புகின்ற கருத்து. உங்களையும் வலிக்க வைத்துக்கொண்டு, உங்களைச் சுற்றி உலகமே உங்களை ஏமாற்றுவதற்காகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று உங்களை நம்ப வைத்து, நீங்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறீர்கள் என்ற முடிவுக்கு உங்களை வரவழைத்து.. தொடர்ந்து நீங்கள் வஞ்சிக்கப்படுவதனால் யாரை வேண்டுமானாலும் நீங்கள் வஞ்சித்தாலும், என்ன செய்தாலும் அது தவறில்லை என்று உங்களை நம்பவைத்து... வாழ்க்கைக்குத் தயார்படுத்தி உங்களை வாழ்க்கைக்குள் அனுப்புவதற்கு பதிலாக, ஒரு கொடூரமான, குரூரமான.. அழிக்கும் சக்தியாக, இராட்சஸத் தன்மையை உங்களுக்குள் உருவாக்கி உங்களை வாழ்க்கைக்குள் அனுப்புகின்ற சக்தி இந்த டிவி-சீரியல்கள்.. தொலைக்காட்சித் தொடர்கள். நீங்கள் வஞ்சிக்கப்படுகிறீர்கள், நீங்கள் யாரை எப்படி வஞ்சித்தாலும் அதில் தவறில்லை என்று நம்பினால் நீங்கள்தான் இராட்சஸர்கள். நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள்.. எப்போதும்.. பேரருட் பெருங்கரத்தால் தாங்கிப் பிடிக்கப்படுகிறீர்கள்.. என்று தௌிவாக உங்கள் உணர்வில் உணர வைக்கப்பட்டு.. அதே பேரருள்.. ஆனந்தம், கருணை இவை எல்லாவற்றையும் உங்கள் வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளிலும் நீங்கள் வாழ்ந்துகொண்டிருந்தால், சிந்தனையும் செய்துகொண்டிருந்தால், வௌிப்படுத்திக்கொண்டிருந்தால் நீங்கள்தான் சிவகணங்கள். இந்த இரண்டே இரண்டு விதத்தில்தான் வாழ்க்கை நடக்க முடியும். நீங்கள் வஞ்சிக்கப்படுகிறீர்கள் என்று நம்பி நாசமாகப்போவது. நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள் என்று நம்பி ஆனந்தமாக வாழ்வது.

எப்பொழுதும் நீங்கள் எம்பெருமானால்.. காத்து, இரட்சித்து.. அவருக்கு நீங்கள் உண்மையாக இல்லாதபொழுதுகூட அவர் உங்களுக்கு உண்மையாக இருக்கின்றார் என்கின்ற சத்தியத்தை உங்களுக்குள் புகட்டுகின்ற, அந்த சாத்தியத்தை உங்களுக்குச் சொல்வதற்காகத்தான் சுந்தரமூர்த்திப்பெருமான் அவதாரம் செய்து இந்த லீலை எல்லாம் நடத்திக்காட்டினார்.

நல்லவேளை பரவை நாச்சியும் - சங்கில் நாச்சியும் டிசி சீரியல் எல்லாம் பார்க்கவில்லை.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. டிவி சீரியலில் காட்டுகிற மாதிரி துக்கங்களும், கொடுமைகளும் உங்கள் வாழ்க்கையில் எத்துனை முறை நடந்திருக்கிறது என்று நீங்கள் நம்புகின்றீர்களோ.. சத்தியமாக சொல்கிறேன் அதைவிட அதிக முறை திருவிளையாடல்களிலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும் பெருமான நடத்திக்காட்டியதாக சொல்லப்பட்டிருக்கின்ற காப்பாற்றுதல், தாங்கிப்பிடித்தல், ஏற்றுக்கொள்ளுதல், தடுத்தாட்கொள்ளுதல் உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கிறது.

டிவி சீரியல்களில் காட்டுகிற மாதிரி உடைந்துபோகிறது 100 முறை நடந்திருந்தால், திருவிளையாடற்புராணங்களில் சொல்லப்படுகிற மாதிரி ஒட்ட வைத்து தூக்கி நிறுத்தப்படுவது 101 முறையாவது நடந்திருக்கிறது. அதனால்தான் இன்னமும் நீங்கள் நின்றுகொண்டிருக்கிறீர்கள். 100 முறை விழுந்தால் 101 முறை எழுந்து நின்றிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதனால்தான் இன்னும் நின்றுகொண்டிருக்கிறீர்கள். 100 முறை டிவி சீரியல் உண்மை என்றால்.. 101 முறை திருவிளையாடற்புராணம் உண்மை.

எத்துனை என் அப்பன் துணை இருப்பான் என்கின்ற தௌிவுதான் சைவம்!

இந்த நவ நாகரீக பகுத்து எரியும் பன்றிகள்.. எத்துனை என் அப்பன் துணை இருப்பான் என்கின்ற கருத்தை, ஏதோ ஏமாற்றுக் கருத்துபோலவும், தன்னைத்தானே ஹிப்னடைஸ் செய்துகொண்டு வெகுளி மனிதர்கள்தான் இதுமாதிரி நினைத்துக்கொண்டு வாழ்வார்கள் என்றும், இந்தக் கருத்தையே ஒரு ஐடட-டநபவைைஅயவந ஆன உழெஉநிவ மாதிரி சமூகத்தில் மாற்றிவிட்டார்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. "எந்த நேரத்தில் என்ன பிரச்சினை வேண்டுமானாலும் வரலாம், நீ ஒன்றுமில்லாம் போய் விடுவாய்.." என்கின்ற பயத்தை உங்களுக்குள் விதைப்பவர்கள் இராட்சஸர்கள். யார் அந்த பயத்தை உங்களுக்குள் விதைக்கிறார்கள் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். நாத்திகர்கள்.

"எப்பொழுதும் எப்பெருமான் இருக்கின்றான்.. எத்துனை வந்தாலும் எம் துணையாய் எப்பெருமான் இருக்கின்றான்.." என்கின்ற சத்தியத்தை உங்களுக்குள் சாத்தியமாக்குபவர்கள் தெய்வங்கள்.

உண்மையில் நீங்கள் ஹிப்னாடிஸத்திலும், மாயையிலும் இல்லை. அவர்கள்தான் மாயையில் இருக்கிறார்கள். நீங்கள் மாயையில் இல்லை. நீங்கள் தௌிவாக இருக்கிறீர்கள்.. மிகவும் தௌிவாகத்தான் இருக்கிறீர்கள்.

இரண்டு பசழரிஇ ஒரு பசழரி சொல்கிறது.. "என்னவேண்டுமானாலும் பிரச்சினை வந்தால் வரலாம், என்னவேண்டுமானால் நடக்கலாம், யாரையும் நம்பாதே.. என்னை மட்டும் நம்பு.. நான்தான் ஏதாவது பிரச்சினை வந்தால் உன்னைக் காப்பாற்றுவேன்" என்று சொல்வது. இன்னொரு பசழரிஇ "ஒரு பிரச்சினை வராது அப்பனே.. என் அப்பன் இருக்க எதுவும் வராது.. நிம்மதியாக ஆனந்தமாக அவனை சிந்தித்து.. சிவமயமாய் வாழ்" என்று இந்த பசழரி சொல்கிறது.

நிம்மதியாக இரு என்று சொல்கின்ற பசழரி - க்கு, இன்னொரு பசழரி யை பார்த்தால் கோபம் வருவதில்லை. ஆனால் அந்த இன்னொரு பசழரிக்கு இந்த நிம்மதியாக இரு என்று சொல்கின்ற பசழரிஐ பார்த்தாலே அடிவயிறு எறியிது. இதைப் பார்த்தே தெரியவில்லையா.. யார் மாயையில் இருக்கிறார்கள்.. யார் ஞானத்தில் இருக்கிறார்கள் என்று.


இந்த பயமுறுத்துகின்ற பசழரி ஞானிகள் பசழரி-அ அடித்ததாக கதை இருக்கு. ஞானிகள் எப்போதாவது அடித்ததாக கதை இருக்கிறதா என்று பார்த்தீர்களா..? ஏனென்றால் நமக்குத் தேவையில்லை. அதிகபட்சமாக நம்மைக் காத்துக்கொள்வோம்.. சில நேரத்தில் அவர்களை அடிக்கின்ற அந்தக் கர்மம் அவர்களுக்கேத் திரும்பிச் செல்கிறது. அவ்வளவுதான். முடிந்தவரை, பெருமான் ஆற்றிய லீலைகள், அறுபத்து மூவர் வரலாறுகளையும், 64 திருவிளையாடல்களையும் படித்து.. சிந்தித்து, உணர்விற்குள்ளே பார்த்து, இரசித்து அவைகளை உங்கள் மெய்-நினைவாகவும், உயிர்-நினைவாகவும் மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் வாழ்க்கையே வசந்தமாய், ஆனந்தமாய், சிவபோதத்தில் இருப்பதை தானாய் உணர்வீர்கள்.

பிட்டிற்கு மண் சுமந்ததும்.. கால் தேய வெறும்காலோடு நடுநிசியில் சுந்தரருக்காக தூதுபோனதும் கரிக்குருவிக்கு உபதேசித்ததும் இவையெல்லாம் சத்தியமாக கற்பனை இல்லை. கற்பனை கடந்த சத்தியம்.

இதெல்லாம் எப்பவோ அப்பொழுது மட்டும்தான் நடந்தது என்று நினைக்காதீர்கள். இன்னமும் அவன் செய்துகொண்டே இருக்கின்றான். உங்கள் வாழ்க்கையில் எல்லாம்கூட நிகழ்த்திக்கொண்டே இருக்கிறான். ஆனால் நீங்கள் டிவி சீரியலைப் பார்த்து இதெல்லாம் மட்டும்தான் உங்கள் தசைப்பதிவு, உயிர்ப்பதிவாக இருப்பதனால் கெட்டது நடக்கும்பொழுதுதான் ஒப்பிட்டுப்பார்த்து, ளவரனல -பண்ணி பார்ப்பதற்கு உங்களுக்கு மெட்டீரியல் இருக்கிறது. நல்லது நடக்கும்பொழுது ஒப்பிட்டுப்பார்த்து ளவரனல -பண்ணி பார்ப்பதற்கு உங்களுக்கு மெட்டீரியலே இல்லாம் போய்விட்டது. எதிர்பார்க்காமல் திடீரென்று ஒரு உதவி வரும்பொழுது.. பெருமான் அனுப்பியிருக்கிறார் என்று ஒப்பிட்டுப்பார்த்து ளவரனல -பண்ணுவதற்கு, ஏற்கனவே பெருமான் இதுபோன்ற லீலைகளை நடத்தியது எல்லாம் உங்கள் தசைப்பதிவிலோ, உயிர்ப்பதிவிலோ இல்லை.

காரணம் என்னவென்றால், அந்த மாதிரி நடந்ததெல்லாம்.. எதேர்ச்சையாக நடந்ததென்று நினைக்கின்றோம். பிரச்சினையை மட்டும் அவர் திட்டமிட்டு உங்கள்மீது ஏவி விட்டார் என்ற நினைக்கின்றோம். என்னங்கையா இது? தீர்வு நடந்தால் ஏதேர்ச்சையாக நடந்ததாம்.. பிரச்சினை வந்தால் என்னவாம்.. அவர் வேலையெல்லாம் விட்டுவிட்டு.. அவரும் பார்வதியும் உட்கார்ந்துகொண்டு, நந்தியைகூட அழைத்துக்கொண்டு.. விளக்குப் பிடிக்கச் சொல்லி.. எல்லாம் ப்ளான் பண்ணி.. இவன் இருக்கான் பாரு.. இந்த ஊரில், இவனை நாம் சும்மா விடக்கூடாது.. இவனை கட்டம் கட்டு என்று நமக்காகவே பெருமான் நாளுநாள் உட்கார்ந்து சிந்தித்து, திட்டபோட்டு, அந்தக் கதாப்பாத்திரங்களையெல்லாம் நம்மீது ஏவி விட்டது போல நினைக்கின்றோம். ஆனால் தீர்வு வரும்பொழுது.. "எதேர்ச்சையாக நடந்துவிட்டதப்பா.. நான் படு புத்திசாலிப்பா.. அதனால் தப்பித்துவிட்டேன்பா"

கொடுமை பாருங்கள்.. பிரச்சினை வரும்பொழுது கடவுள் ப்ளான் பண்ணி என்னை எப்படியெல்லாம் பழி வாங்குகிறார் பாரப்பா.. தீர்வு வரும்பொழுது.. நான் படு புத்திசாலி.. என்ன வந்தாலும் தப்பித்து வந்துவிட்டேன் பார்த்தாயா?.

ஐயா.. கிணறும், லிங்கமும், வன்னியும், சாட்சிசொன்னதெல்லாம்.. இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கிறதப்பனே!!! சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை பொய் இல்லை!

நீங்கள் வஞ்சிக்கப்படுகிறீர்கள், ஏமாற்றப்படுகிறீர்கள் என்று உங்களைத் தொடர்ந்து நம்பவைப்பவர்கள் உங்களை பலவீனர்களாக மாற்றுகிறார்கள்.

"இறைவன் எப்போதும் உங்களைத் தாங்குகின்றான், எப்போதும் உங்களைக் காக்கின்றான், எப்போதும் உங்களை மேம்படுத்துகின்றான், எப்பொழுதும் உங்களைத் தாங்கி நிற்கின்றான்" என்று நீங்கள் நம்பும்பொழுது பலசாலியாக, தெய்வீகத்தன்மை உடையவர்களாக மாறுகின்றீர்கள். எந்த நம்பிக்கை வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்.

சுந்தரமூர்த்தி நாயனார்.. தன்னுடைய உணர்ச்சி - உணர்வு - உயிர் மூன்றிலும், பெருமான் என்னவன் நான் தம்பிரான்தோழன்.. என்கின்ற உணர்வை, தன் உணர்வுப்படுத்தி அனுபவமாக வைத்திருந்தார். அதனால் ஒரு பெண் என்ன? இரு பெண் என்ன? எத்துனை பெண், பொன், மண் கேட்டாலும் பெருமான் தூது சென்றிருப்பான். ஏனென்றால் அவர் உணர்வு எதுவோ அது மிகுந்த உத்தம நிலையில் இருந்தது. உணர்வை உத்தமமாக்கும் உயர் வாழ்க்கை முறையே சைவம்.

ஐயா, பெருமான் தூது சென்றது மட்டுமல்ல.. அடுத்தது என்ன செய்தார் என்றும் சொல்கிறேன்.. கேளுங்கள்..

இதுதான் க்ளைமாக்ஸ்.

ஆழ்ந்து கேளுங்கள் சுந்தரர் கேட்டதையெல்லாம் கொடுத்தது மட்டுமல்லாது.. கேட்டதையெல்லாம் செய்தது மட்டுமல்லாது.. அதையும் தாண்டி பெருமான், சுந்தரருடைய பெயர்கூட கெட்டுவிடக்கூடாது என்று எந்த அளவிற்கு சிரத்தையோடு இருந்தார்னு பாருங்க.

இரவிலே பெருமானை கால்தேய திருவடிகூட இல்லாமல் திருவாரூரின் தெருக்களிலே.. தூது செல்வதற்காக நடக்கச் செய்து, தன்னுடைய காம சுகத்திற்காக பெருமானை ஏவல் கொண்ட செய்தி நாடுமுழுவது தீ எனப் பரவியது.

சோழ நாட்டிலே.. திருப்பெருமங்கலத்தில் ஏயர்கோன் கலிக்காமர் என்று ஒரு பெரிய சிவனடியார் வாழ்ந்திருந்தார். இதைக் கேட்டதும் அவருக்கு நெஞ்சு பதைத்தது!. ஐயோ!! ஒரு சிவனடியார், தொண்டன், பக்தன் பெருமானை ஏவல் கொல்வது சரியா? ஏயர்கோன் கலிக்காமருக்கு மட்டுமல்ல.. அதைக் கேட்ட எல்லா சிவனடியாருக்குமே நெஞ்சு பதறும். தன்னுடைய காம சுகத்திற்காக, தன்னுடைய தேவைக்காக பெருமானை தூது செய்வது, அதுவும் இரண்டுமுறை.. பெருமானை ஏவல்கொள்வதா? ஏயர்கோன் கலிக்காமரால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஆழ்ந்து கேளுங்கள் சோழ நாட்டிலே.. திருப்பெரும்தலம் ஒன்று.. இதில் ஏயர்கோன் கலிக்காமர் என்கின்ற சிவனடியார்.. வன்தொண்டர் சுந்ததர், தன்னுடைய சுய நலத்திற்காக.. பெருமானை ஏவல் கொண்டார் என்கின்ற செய்தி கேட்டதும், கடும்கோபமடைந்தார். எல்லா சிவத்தொண்டருக்கும் கோபம் வந்துத்தான் ஆகனும். வரவில்லை என்றால் அவர்கள் சிவத் தொண்டர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் பெருமானோ.. இது எனக்கும் அவருக்கும் உள்ள ீநசளழயெட சுநடயவழைளொைி ப்பா அதற்கெல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள்.. அதற்கெல்லாம் நீங்கள் கோபப்படாதீர்கள் நன்றாக புரிந்துகொள்ளுங்கள் இந்த மொத்த சுழ்நிலையையும் ஆராய வேண்டும். ஏயர்கோன் கலிக்காமர் கடும்கோபத்தோடு இருக்கின்றார்.. பெருமான்.. அந்தக் கோபத்தைத் தணித்து இருவரையும் இனிமையாக நட்பு பாராட்ட வேண்டும் என்று விரும்புகின்றார். உண்மையிலேயே சுந்தரர் செய்தது இன்னொரு சிவபக்தருக்கு நிச்சயமாக ஜீரணித்துக்கொள்ளக்கூடிய விஷயமல்ல. ஆனால் அந்த அவப்பெயர்கூட சுந்தரருக்கு வரக்கூடாது என்று நினைக்கின்றார். காரணம் என்னவென்று ஆழ்ந்து பாருங்கள்.. அந்த அளவிற்கு.. பெருமான் சுந்தரர் மீது நட்பு பாராட்டி.. பக்தி வைக்க, சிரத்தை வைக்க அன்பு செய்ய காரணம் என்ன? அப்படி என்ன செய்து விட்டார் சுந்தரர்? பெருமான் இப்படி ஓடி ஓடி கேட்டதையெல்லாம் செய்தது மட்டுமல்லாது கேட்டது கெட்டதாக இருந்தாலும் அதன் காரணத்திற்காக இவருக்கு பெயர்கூட கெட்டுவிடக்கூடாது என்று நினைக்கின்ற அளவிற்கு.. ஓடி ஓடி சுந்தரரை காக்க வேண்டிய அவசியம் என்ன பெருமானுக்கு..? இந்த இருவருடைய உறவின் நட்பையும் பாருங்கள்.. மொத்தக் கதையையும் படித்தால்தான் அது புரியும். ஒரு காலத்திலே தேவர்களும், அசுரர்களும் கடலைக்கடைந்து அமிர்தம் எடுப்பதற்காக கடலைக் கடைகிறார்கள்.. அப்பொது விஷம் வௌிப்படுகின்றது. அந்த கடைவதற்காக உபயோகப்படுத்திய பாம்பு, விஷத்தைக் கக்குகிறது. வாசுகி விஷத்தைக் கக்குகிறது. அந்த விஷத்தைப் பார்த்ததும் அசுரர்கள், தேவர்கள் எல்லோரம் விட்டுவிட்டு ஓடி விட்டார்கள். பிரச்சினை என்று வந்தவுடன் ஓடிப்போகின்ற கும்பல். பிரம்மா விஷ்ணு எல்லாரும்கூட ஓடிப்போய்விட்டார்கள். இந்த விஷத்திலிருந்து பூமியைக் காக்கவேண்டிய பொறுப்புடைய எம்பெருமான் அமர்ந்திருக்கின்றார். மீதி எல்லாம் ஓடிப்போய்விட்டார்கள். யாருமே இல்லைப் பக்கத்தில். அந்த சுழலிலும் தைரியத்தோடு, நெஞ்சுரத்தோடு எம்பெருமான் இருக்க.. ஒரு தீங்கும் வராது என்ற சிரத்தையோடு உடன் நின்றவர் ஆலால சுந்தரர். உண்மையிலேயே பிரச்சினை வந்தால் மாதிரியும், எல்லாமே அழிந்துபோய்விடுமோ என்கின்ற பயத்தையும் உருவாக்கி அந்த சுழ்நிலையைக் காட்டினால்தான், யார் யார் ஆலால சுந்தரர் என்று நமக்கேத் தெரியவரும். ஒரு காலத்தில் என்னிடம் போவது ரொம்ப கயளாழைெ. இன்னொரு காலத்தில் என்னை எதிர்ப்பது ரொம்ப கயளாழைெ. குயளாழைெ -க்காக வந்தது கயளாழைெ-க்கா போவது அதற்குப்பெயர்தான் உயவ றயடம -என்று சொல்வது. குயளாழைெ -க்காக வந்தது குயளாழைெ-க்காக போய்விட்டது. அதுபோலத்தான். விஷம் திரண்டாலும் பெருமான் இருக்க ஒரு அழிவு வருமா? என்ற தைரியத்தோடு நின்றது மட்டுமல்லாம்.. பெருமான் கடைக்கண் உத்தரவைப் புரிந்துகொண்டு மொத்த விஷத்தையும் ஒன்றாய் உருட்டி, தன் கையில் தாங்கி.. அதன் பக்கத்தில் சென்றால் இறந்துவிடுவோமோ என்று விஷ்ணுவும்-பிரம்மாவும் கூட ஓடிப்போய்விட்டார்கள். ஆனால் தைரியமாகச் சென்று கைகளில் தாங்கித் திரட்டிக் கொண்டுவந்து பெருமானிடம் ஒப்படைத்தவர் ஆலால சுந்தரர். சோதனையின்போது உடன் இருந்தது மட்டுமல்லாமல், அதை சாதனை ஆக்குவதற்கு துணை நின்றதனால் ஆலால சுந்தரனுக்கு ஒரு துக்கமும் வராமல், ஒரு தீங்கும் வராமல் எம்பெருமான் காக்கின்றான். அதுதான் ஐயா நட்பின் இரகசியம். அதுதான் நட்பின் இரகசியம். "நீ செய்த அந்த ஒரு செயல் போதுமப்பா.. நீ என்ன வேண்டினாலும் அதைச் செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்.. என்று, என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்" என்று எம்பெருமானே உருகி.. எம்பெருமானே முடிவுசெய்த எம்பெருமானே நினைந்து.. எம்பெருமானே அன்பு செய்த சுந்தரமூர்த்திப் பெருமான். ஏயர்கோன் கலிக்காமருக்கும், இவருக்கும்.. சுந்தரருக்கு உண்மையில் எந்த கோபமும் வருத்தமும் இல்லை. ஆனால் ஏயர்கோன் கலிக்காமருக்கு வருத்தம், அந்த வருத்தம் காரணத்தோடு விளைந்த வருத்தம். பெருமான் எப்படியாது இந்த ஊடலை, பிணக்கை தீர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கின்றார். இந்த வருத்தம் தீர வேண்டும் பூரணத்துவம் வரவேண்டும் என்று நினைக்கின்றார். உடனே ஏயர்கோன் கலிக்காமருக்கு தீராத சுலை நோய் கொடுத்தார். கொடுத்தது மட்டுமல்லாது.. அவர் கனவிலே போய் "நம் வன்தொண்டன் சுந்தரன்தான் இதைத் தீர்த்து வைக்கின்ற ஒரே வழிதெரிந்தவன், அவன் தொட்டால் அவன் மாத்திரம்தான் இதற்குத் தீர்வு" என்று சொல்கிறார். சுந்தரர் கனவில் வந்து "அப்பா, போய் அவன் சுலை நோயை தீர்த்து வைத்து வா" என்று சொல்கிறார். இப்படியாவது இருவரையும் சேர்த்துவிடலாம் என்று. ஆனால் சில நேரத்தில் பக்தர்கள் பகவானை விட டீசபைாவ - ஆக இருக்கிறார்கள். ஏயர்கோன் கலிக்காமர் சொல்கிறார்.. "எம்பெருமானே! வழிவழியாய் உனக்கு அடிமையாய் இருக்கும் எங்களுக்கு, எனக்கு வந்த ஒரு வியாதியை, புதியவனாகிய சுந்தரன் வந்து தீர்ப்பதா? அவன் வந்து தொட்டு நான் நோய் தீர்ந்து வாழ வேண்டிய அவசியமே இல்லை" என்று உடைவாளை எடுத்து வயிற்றைக் கிழித்து இறந்துவிடுகின்றார். "உனக்கு ஒரு தீங்கு செய்து, உனக்கு ஒரு மாறு செய்த ஒருவன் தொட்டுத்தான் என் வயிறு சரியாக வேண்டும் என்றால்.. அந்த வியாதி தீர்ந்து அப்படி இந்த உடலில் வாழ்ந்து ஒரு தேவை எனக்கில்லை" என்று வயிற்றைக் கிழித்து இறந்துவிடுகின்றார் ஏயர்கோன் கலிக்காமன். பக்தியின் ஆழத்தைப் பாருங்கள். "நீயே சொன்னாலும் உனக்கு ஒரு தீங்கு செய்தவர்களை சும்மா விடமாட்டோம்.. நீயே மறுத்தாலும் உனக்கு ஒரு தீங்கு செய்தவரை மன்னிக்க மாட்டோம்".. பெருமானையே நடுநடுங்கச் செய்யும் பெரும் பக்தி. இதைக் கேள்விப்பட்டதும் சுந்தரமூர்த்தி நாயனார்.. ஐயோ! என்று அலறி அடித்து செல்கின்றார். சென்ற இடத்திலே ஏயர்கோன் கலிக்காமரின் உடல் வீழ்ந்துகிடப்தை, குருவாளால் வயிற்றைக் கிழித்துக்கொண்டு அவர் விழுந்துகிடப்பதைப் பார்க்கிறார். ஐயோ! ஒரு பக்தன் மனம் வருந்துகின்ற, சிவபக்தன் மனம் வருந்துகின்ற நிலைக்கு நாம் காரணமாகி விட்டோமே!.. நம் சுயநலத்திற்காக பெருமானை ஏவல் கொண்டது சரியா? அதைக் கண்டு வருந்தி இவருடைய வருத்தம் நியாயமானதுதானே..! என்று சுந்தரர் உருகுகின்றார். அந்த உருகுதலில் பூரணத்துவம் நடந்துவிடுகின்றது. நடந்தது மட்டுமல்லாமல், "இவர் உயிர்விடக் காரணமாக இருந்ததனால் இதே உடைவாளால் நானும் உயிர் விடுகிறேன்" என்று அதே உடைவாளை உருவி தன் வயிற்றைக் கிழித்துக்கொள்ள சுந்தரர் முயற்சிக்கின்றார். பெருமான் தோன்றி.. ஏயர்கோன் கலிக்காமருக்கு உயிர்கொடுத்து.. சுந்தரருக்குத் தடுத்தாட்கொண்டு அருள்கொடுத்து, இருவருக்கும் இருவருடைய பக்தியின் சிறப்பையும், இருவருடைய பக்தியின் வேறுபட்ட பரிமாணத்தையும் புரியவைத்துஇருவருக்குள்ளும் இனிமைத்தன்மையை நிலவச்செய்து மறைகின்றார். ஓலைகொண்டு கொடுத்த வரத்திற்காக தடுத்தாட்கொள்ள வந்து, பித்தா! என்று அவதூறு செய்யப்பட்டு.. ஓலை கிழித்தெறியப்பட்டு.. அப்பொழுதும் மனம் சளைக்காது, மூல ஓலை வெண்ணைநல்லூரில் உள்ளது என்று சொல்லி அங்கு அழைத்துச் சென்று தடுத்தாட்கொண்ட உண்மையைச் சொல்லி, பரவை நாச்சியாருக்கு தூது சென்று, இரண்டாவது ஒரு பெண் வேண்டும் என்று கேட்க சங்கிலி நாச்சிக்கும் தூது சென்று அவள் கேட்ட நிபந்தனையை விளக்கி, நிபந்தனையை புர்த்தி செய்வதற்கு ஞானத்தௌிவும் கொடுத்து, நிபந்தனை எப்படியாவது வௌியேற நினைத்த சுந்தரன் சங்கிலி நாச்சியாரை ஏமாற்றாத வண்ணம் சங்கிலி நாச்சியையும் காத்து, இதையும் மிறி சுந்தரன் கொடுத்த சத்தியத்தை மீறி இரு கண்களையும் இழந்தாலும் அதையும் பொறுத்து இரண்டு கண்ணையும் மீண்டும் கொடுத்து, இதெல்லாம் போக மீண்டும் பரவை நாச்சியாருக்கு தூது சென்று, அதை நாச்சியார் கேளாதபோது இரண்டாவதுமுறை தூது சென்று, இத்துனையும் செய்துவிட்டு இதெல்லாம் என்னை செய்ய வைத்ததற்காக மற்றவர்கள் உன்னைத் தவறாக நினைக்கவும் கூடாது என்று அந்தப் பிரச்சினையையும் தீர்த்து வைத்து, என்ன கேட்டாலும் செய்வேன் என்பது மட்டுமல்லாமல், செய்வது நான் என்பதனால் கெட்டபேர் கூட உனக்கு வந்துவிடக்கூடாது அதற்கும் நானே பொறுப்பென்று நினைத்து, இத்தனையும் பெருமான் செய்தததை அவர் கருணை என்று எண்ணி வியப்பதா? இத்துனையும் பெருமானையே செய்ய வைத்த சுந்தரரின் பக்தியின் சக்தி என்று எண்ணி வியப்பதா? இது சுந்தரரின் பக்தியின் சக்தியா? பெருமானின் கருணையா? பெருமானின் கருணை பொங்கும் கங்கைபோல. என்றென்றும் எப்போதும் எல்லோர் மீதும் உள்ளது. உண்மையில் இதை ஆழ்ந்து பார்த்தால் இதற்கு முக்கியமான காரணம் பெருமான் கருணை என்பதைவிட சுந்தரரின் பக்தியின் சக்தியே என்றுதான் நாம் முடிவெடுக்க வேண்டும். அந்த முடிவுக்குத்தான் நாம் வரவேண்டும் ஏனென்றால், அந்த முடிவுதான் நமக்குள்ளும் சக்தி தரும் பக்தியை உருவாக்க முடியும். பக்தி மூன்று விதம் உண்டு. தன்னைத் தானே தாழ்த்திக்கொள்வது பக்தி என்று நினைக்கின்ற மூட பக்தி. அடுத்து முக்தி தரும் பக்தி : முக்திக்காக பெருமானோ சம்பந்தம் வைத்துக்கொள்ளுதல். அடுத்து சக்தி தரும் பக்தி. திருநாவுக்கரசருக்கு இருந்தது முக்திதரும் பக்தி. சுந்தரமூர்த்திப் பெருமானுக்கு இருந்தது சக்தி தரும் பக்தி. சக்தி தரும் பக்தியை வாழ்வதுதான் சைவம். சுது வந்தபொழுது பெருமானை அழைத்துத் தீர்வுகண்டவர் நாவுக்கரசர். வாது செய்வதற்காக பெருமானை அழைத்து வெற்றிகண்டவர் ஞானசம்பந்தர். சுது வாது இரண்டும் செய்வதற்காக பெருமானை அழைத்து என்ன வேண்டுமோ அதை தன்போக்கிலேயே சாதித்துக்கொண்ட ஒரே பக்தர் தம்பிரான்தோழர் சுந்தரமூர்த்திப் பெருமான் மட்டுமே. இவர் மொத்த கதையும் படிச்சீங்கனான இவர் ஒருமுறைகூட பெருமான் விதிக்கு வணங்கவில்லை. தன்னுடைய மதிக்கு மட்டும்தான் பெருமானை வளைத்தார். தனக்கு என்னத்தேவையோ அதற்குப் பெருமானை வளைக்கின்ற பக்தியின் சக்தி. பெருமான் அப்பா பாத்துபண்ணு.. ம்ம்ம்.. இதைச் செய்! இதுதான் வேண்டும். சைவம் வாழ்ந்து பார்க்கவேண்டிய வாழ்வியல் தத்துவம். மனிதர்களே தமிழகமே வாருங்கள். சிவதீட்சையும் விஷேச தீட்சையும் ஏற்று சைவத்தை வாழுங்கள்.. சில பக்தர்கள் கேட்டிருக்காங்க..’’சைவத்தை வாழுதல்ன்னா என்ன சாமி இன்னும் தௌிவாச் சொல்லுங்களேன்?’’ இன்று நான் சொன்ன எல்லாக் கருத்துக்களின்சாரம், ஆழ்ந்து கேளுங்கள். சிந்தை முழுவதும் அனுபவப்பூர்வமாக உங்கள் உணர்வே இறைவன் இருக்கின்றான் அவன் எல்லா வல்லமையும் உடையவன் மட்டுமல்ல பெருங்கருணை பேரருள் சக்தி. நான் அவனைத் தெரிந்து அவன் மீது நம்பிக்கை வைப்பது மட்டுமல்ல. அவனுக்கும் என்னைத் தெரியும் அவனும் என்மீது நம்பிக்கை வைத்திருக்கின்றான். ஐயா.. அவன் உங்கள் மீது நம்பிக்கை வைக்காவிட்டால் உலகத்திலேயே மிக உயர்ந்த பரிசான ஞானகுருவை உங்கள் வாழ்க்கையில் அளித்திருக்கமாட்டான். பலபேருக்கு அவன் பொன் கொடுத்தான். பலபேருக்கு அவன் பெண் கொடுத்தான், பலபேருக்கு அவன் மண் கொடுத்தான் வெகு சிலருக்கே அவன் தன்னையே குருவாய்க் கொடுத்தான். தன்னையே உங்களுக்கு குருவாகக் கொடுத்த உடனே தெரிஞ்சிக்கோங்க நீங்க எல்லாம் னுளைவைெஉவழைெ டளைவல போயிட்டீங்க. வுைஉம பண்ணிட்டாரு. ீயளளஇ டிழசனநசியளளஇ குயடை டுளைவ ல இல்ல. னுளைவைெஉவழைெ டளைவ க்கு போயிருச்சு. பொன் கொடுத்தவர்கள்ல்லாம் ீயளள டளைவ ல இருக்கலாம் ஒருவேளை, பெண் பொன் கொடுத்தவர்கள்லாம் ஒருவேள 1 1ளவ உடயளள டளைவ ல இருக்கலாம். தன்னையே குருவாக குடுத்திருக்கிறார்னா னுளைவைெஉவழைனெ தாண்டி டளைவக்கு போய்ட்டீங்கய்யா நீங்க. குருவெனும் நிலையில் மட்டும், தானே வந்துமட்டும் அந்தத் திருப்பணியை பெருமான் செய்கின்றார். மத்த திருப்பணிகளுக்கெல்லாம் மத்த வேளைகளுக்கெல்லாம் அததுக்கு அததுக்கு ஆட்களை அனுப்புவார். இந்த குருவின் வேலையைச் செய்வதற்கு மட்டும் தானே வருகின்றார். அது ஒன்ன மட்டும் வேற யார்கிட்டையும் குடுக்கிறதில்ல. திருப்பெரும்பணி என்பதனால். திருப்பணி மட்டுமல்ல, பெரும்பணி மட்டுமல்ல திருப்பெரும்பணி என்பதனால். அது ஒன்றுக்கு மாத்திரம் தானே வருகின்றார். ஞானகுருவின் திருக்கண்ணில் பட்டவுடன் தெரிந்துகொள்ளுங்கள் உங்கள் பக்தியை அவன் ஏற்றுக்கொண்டான். உங்கள் தவத்தை ஏற்றுக்கொண்டான். உங்களையே ஏற்றுக்கொண்டான். நீங்கள் பெருமான் மீது வைத்திருக்கும் பக்தியும் அவர் உங்கள் பக்தியை ஏற்றுக்கொண்டு உங்களை கடைக்கண்ணால் பார்த்தருள்கின்றார் என்கின்ற தௌிவும் உங்களுக்குள் மலர்ந்து நீங்கள் வாழ்வதுதான் சைவம் எனும் வாழ்வில்முறை. இதுதான் சைவத்தின் சாரம்ங்கையா. வேற ஒன்னுமே இல்ல. இதுதான் சைவத்தின் சாரம். இது உங்களுக்குள்ள மலர்ந்தாபோதும் நீங்க செய்யற செயலெல்லம் சிவத்தொண்டாய் இருக்கும். தௌிவா ஒரு முடிவு பண்ணுங்க: அஞ்சுவதும் அடிபணிவதும் அப்பன் ஒருவனுக்கே! வணங்குவதும் வேலை செய்வதும் அவன் ஒருவனுக்கே! என் வாழ்வின் முதல் ஆள் அவனே! முதலளாலியும் அவனே! முதலும் அவனே! முதல் ஆளும் அவனே! முதலளாலியும் அவனே! வாழ்முதல் ஆகிய பொருளும் அவனே! வாழ்வின் முதலும் அவனே! வாழ்வின் முதல் ஆளும் அவனே! முதலாளிலியும் அவனே! அவனன்றி வேறு ஒருவருக்கு உழைப்பது இல்லை என்கிற முடிவுக்கு வந்தீங்கன்னாலே நீங்க செய்யற வேலை எல்லாம் தானாவே அவன் சேவை மயமாகவே மாறிவிடும் ஐயா! நீங்க வேற ஒன்னும் பண்ண வேண்டியதில்ல தானாகவே அவன் சேவை மயம் மாறிவிடும். செய்கின்ற எல்லாச் செயல்களும் தானாகவே அவன் சேவை மயமாக மாறிவிடும். சைவத்தை வாழ்வதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லம் மிக மிக மிக எளிமையான ஒன்று! வாருங்கள் சிவதீட்சை பெற்றுக்கொள்ளுங்கள். நவம்பர் 22 சிவதீட்சையும் டிசம்பர் 31 ஜனவரி 1,2,3 நான்கு நாட்களும் விஷேச தீட்சையும் சமய தீட்சையும். நவம்பர் 28 சமய தீட்சையும் டிசம்பர் 31 ஜனவரி 1,2,3 ஆகிய மூன்று நாட்களும் விஷேச தீட்சையும் அனுமதி இலவசம். சிவதீட்சைப் பெற்று சைவத்தை உங்கள் வாழ்வின் அனுபவமாக மாற்றிக்கொள்ளுங்கள். நினைத்தவுடன் நெஞ்சினிக்கும் வகையில் அடிவயிரே ஆனந்தத்தால் பொங்கும் அளவிற்கு அவன் கதையைக் குடியுங்கள். குருவோட வேலை என்னன்னாங்கையா இவர் நடத்துகிற வேலைகளை கண் முன் பார்த்தீர்களானால், அவன் நடத்திய திருவிளையாடல்கள் சத்தியம், ஏனென்றால் இது சாத்தியம் எனும்பொழுது அதுவும் சத்தியம்தான் என்று உங்களுக்குள் மலர வைப்பதுதான் குருவோட வேலைங்கையா. குருவின் அருகாமையில் வாழ்ந்தீர்களானால் பழம்பெரும் புராணங்களும் இதிகாசங்களும் பக்தர்களின் கதைகளும் எல்லாம் மீண்டும் உயிர்பெற்று உங்கள் கண் முன் உலவுவதைக் காணலாம். கண்ணாரக் கண்டு காதாரக்கேட்டு மனதார நினைத்து.. உணர்வே ஆர ஆனந்தித்து உயிரார உன்னதத்தில் திளைத்து சைவத்தை வாழ்வியலாய் வாழ்ந்திட வாருங்கள். அம்பலவானன் இன்னமும் ஆடிக்கொண்டுதான் இருக்கின்றான். தட்சிணாமூர்த்தி இன்னமும் தன் சாந்நித்யத்தின் மூலம் சத்தியத்தை ஆலமரத்தின் அடிநின்று சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றார். அன்னை மீனாட்சி அருகிருந்து சத்தியம் கேட்க வருவோர்க்கெல்லாம் அன்னமிட்டு, ஆதரித்து, அரவணைத்து, அன்னத்தோடு நித்யானந்தத்தையும் சேர்த்து அளித்துக்கொண்டுதான் இருக்கின்றாள். திருவிளையாடல் புராணமெல்லாம் சத்தியம். அது இன்றும் சாத்தியம். இது கதையல்ல.. கவிதையுமல்ல.. வாழ்வை வாழ்வதற்கான விதை. இது கதையல்ல.. கவிதையுமல்ல.. அகவிதை. வாழ்வை வாழ்வதற்கான அகவிதை. திருவிளையாடல் புராணமெல்லாம் கதையுமல்ல, கவிதையுமல்ல ஞான அகவிதை. இதை அகத்தில் விதைத்தால் பொங்கும் ஆனந்தத்தால் நீங்கள் வாழும் வாழ்க்கை நித்யானந்த மயமாய் நிறைந்திடும். சைவம் மலர்ந்திடும். நித்யான்நதம் நிறைந்து சிவபோதம் மலர்ந்து வாழ்கின்ற வாழ்வியலே சைவம். சைவத்தில் பெருமானை ஏதோ ஒரு தர்மத்தை நடத்துபவராக மட்டும் நாம் பார்ப்பதில்லை. ஜீவன் எந்நிலையில் இருக்கின்றதோ அந்நிலையில் இருந்தவாரு தன்னிலைக்குக் கொண்டுசெல்ல எல்லாப் பொறுப்புக்களையும் தானேற்று மூக்குத்தி முதல் முக்திவரை எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்று தினசரி வாழ்க்கையில் தினசரி வாழ்க்கையில் அனுபவித்து இரசித்து, வாழ்ந்து ருசிக்க வேண்டிய பரம்பொருளாய் சைவத்தில் மட்டும்தான் இறைவனை உணர இயலும். அத்வைதத்துல எல்லாம் சில கதையெல்லாம் சொல்லுவாங்க.. அரசனப் பார்த்து அரைகிலோ கத்திரிக்காயா கேட்ப.. வைரத்தையும் பொக்கிஷத்தையும் மட்டும் வாங்கிட்டுவாப்பா.. அப்ப கத்தரிக்காய்க்கு மட்டும் நாங்க வேற யாராவதா பாக்க முடியும். அதுவும் கத்திரிக்காயானாலும். வைரமானாலும் அப்பனிடம் மட்டும்தான் கேட்போம். ஆவன்தான் கொடுப்பான் என்பது சைவம். ஏனென்றால் அவனிடம் மறைக்க ஒன்றுமே இல்லை. உரைக்க மட்டுமே எல்லாம் உண்டு. மறைக்க ஒன்றுமே இல்லாம உரைக்க மட்டுமே உண்டு என்ற நெருக்கத்தை உணர்வது சைவத்தில் மட்டும்தான் சாத்தியம். இல்லைன்னா திருவொற்றியுர்ல போயி பெருமான் சந்நிதியில உக்காந்துட்டு...? பெருமானே.. ம் என்னப்பா? உன்ன பாக்க வந்தேன்.. அதான் பாத்துட்ல்ல? இல்ல வழில.. வழில ஏதாவது விபத்தா? இல்ல இல்ல.. சொல்லு.., எப்படி சொல்றதுன்னு யோசிக்கிறேன்.. நீ சொன்னபிறகு நான்தான் யோசிக்கனும் நீ சொல்லு.. சங்கிலி நாச்சியாரப் பார்த்தேன்.. பாத்துட்டியா? சுரி என்னபண்ணனும் சொல்லு? நல்லாருக்கா.. ரொம்ப முக்கியம்.. நான் தினந்தான் பாத்துட்டுருக்கேன் நீ சொல்லு.. பாத்து பக்குவமா பேசி.. ஏற்கனவே ஒன்னு பண்ணி வச்சி..? அது சரிபோ பாத்துக்கிறன் போ.. எந்த மதத்துலய்யா இந்த நெருக்கத்தை இறைவனோடு காணமுடியும். இது சைவத்திற்கே உரிய சிறப்பு மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம். மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம். மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம். நீங்கள் எல்லோரும் மேன்மைகொள் சைவ நீதியை வாழ்ந்து நித்யானந்த நிலையில் நிறைந்து, நித்யானந்தத்தில் கரைந்து நித்யானந்தமாகிட வாழ்த்துகின்றேன். ஆசீர்வதித்து முடிக்கின்றேன். நன்றி ஆனந்தமாக இருங்கள்.


Photos From The Day:


Nithyanandeshwara Brahmotsavam - Aarti to Soma Skanda Sacred Articles for Samaya Deeksha Homa http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_0079_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-temple-kalasham.JPG Nithyanandeshwara and Nithyanandeshwari Swayambu Lingam covered in golden kavacham made by Nithyananda Sacred Arts Univercity Boha Murthy of His Holiness Kapila Muni's Murthy Murthy of His Holiness Bhagavan Sri Nithyananda Paramashivam http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_0107_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-temple-nithyanandeshwara.JPG See the "ferocious" beauty of Lord Venkateshwara http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_0118_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-temple-venkateshwara.jpg Samaya Deeksha Program Blessings http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_0133_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-samaya-vishesha-deeksha-session-swamiji_0.JPG His Holiness blesses and energizes the special Samaya Deeksha malas http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_0137_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-samaya-vishesha-deeksha-session-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_0142_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-samaya-vishesha-deeksha-crowd-participant_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_0166_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-samaya-vishesha-deeksha-session-swamiji_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_0203_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-samaya-vishesha-deeksha-session-swamiji_0.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_0209_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-samaya-vishesha-deeksha-session-swamiji.JPG Participants also receive special puja kits for Vishesha Deeksha initiation http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_0334_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-samaya-vishesha-deeksha-session-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_0396_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-samaya-vishesha-deeksha-session-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_0493_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-samaya-vishvesha-deeksha-crowd-participant.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_0513_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-samaya-vishvesha-shiva-faces.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_0395_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-samaya-vishesha-deeksha-session-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_0590_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-samaya-vishesha-deeksha-session-swamiji.JPG Shivoham process! http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_0787_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-evening-tamil-satsang-adishaivam-crowd-participants.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_9861_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-evening-tamil-satsang-adishaivam-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_9883_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-evening-tamil-satsang-adishaivam-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_9871_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-evening-tamil-satsang-adishaivam-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_9901_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-evening-tamil-satsang-adishaivam-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_9913_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-evening-tamil-satsang-adishaivam-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_9970_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-evening-culturals-bharatanatyam.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_9950_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-evening-culturals-bharatanatyam.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_9955_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-evening-culturals-bharatanatyam.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_0795_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-ratham.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_0764_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-ratham-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_0746_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-ratham-swamiji.JPG http://nithyananda.org/sites/default/files/photo-gallery/2015-11nov-22nd-nithyananda-diary_IMG_0813_blr-adheenam-nithyanandeshwara-brahmotsavam-ratham_0.JPG


Photos Of The Day:

TEMPLE

SHIVA-DEEKSHA

Vishesha-Deeksha

VISHESHA-DEEKSHA-INITIATION

HDH-BLESSES-PARTICIPANTS-INTO-VISHESHA-DEEKSHA

PARTICIPANTS-BEING-BLESSED-INTO-VISHESHA-DEEKSHA-BY-HDH

RATHOTSAVAM

RATHOTSAVAM-FESTIVITIES