September 19 2019-Tamil

From Nithyanandapedia
Revision as of 19:04, 23 July 2020 by Gowtham (talk | contribs) (Created page with "==Title== Satsang from The Supreme Pontiff of Hinduism HDH Bhagavan Nithyananda Paramashivam in Tamil ==Link to Video== {{#evt: service=youtube |id=https://www.youtube.com/w...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

Title

Satsang from The Supreme Pontiff of Hinduism HDH Bhagavan Nithyananda Paramashivam in Tamil


Link to Video

Description

இன்று அருளிய தமிழ் சத்சங்கத்தின் சாரம் 19 -09- 2019 நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம், நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம், அஸ்மதாச்சார்ய பரியந்தாம் வந்தே குருபரம்பராம்.. உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.. இன்று நீங்கள் ஆழ்ந்து தியானிக்க வேண்டிய சத்தியம் எந்த சூழ்நிலையில் நீங்கள் வாழ்கின்றீர்கள் அதாவது, உங்களைச் சற்றி எந்தமாதிரி சூழல் நடக்கின்றது, அதற்கு நீங்கள் எப்படி பதிலளிக்கின்றீர்கள்.. என்பதை வைத்துதான் உங்களட வாழ்க்கை அமைகின்றது. நீங்கள் ஒரு தெளிவான நிம்மதியான ஆன்மீக வாழ்க்கையை உங்கள் வீட்டில் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்.. அப்பொழுது உங்கள் தெருவில் மது அருந்துகின்ற பார்டி நடத்துவது, அதிக ஒலி எழுப்பி சுற்றுச்சூழலின் அமைதியைக் குலைப்பார்கள். முதலில் நீங்கள் உங்களால் முடிந்த அளவிற் உங்களின் எதிர்ப்பை காட்டுவீர்கள். சில நாட்களில் எதிர்வினை ஆற்றுகின்ற பலம் இல்லாமல் உங்களுடைய உடலும் மனமும் சோர்வு அடையும் பொழுது உள்ளுக்குள் பலவீனமடைந்துவிடுவீர்கள். உங்கள் மீதும், நீங்கள் வாழ்கின்ற ஆன்மீக வாழ்க்கையின் மீதும் உங்களுக்கு இருக்கின்ற நம்பிக்கை குறைத்துவங்கிவிடும். உங்களை நீங்களே சந்தேகிக்கத் துவங்கிவிடுவீர்கள். இததான் அவர்களின் முதல் வெற்றி! உங்கள் உயிருக்குள் அனுப்பப்படும் இராட்சதர்களின் தூதுவன்தான் சுயசந்தேகம்! தழை வளர்ந்து பயிரின் உயிரை அழித்து விடுவது போன்றது.. சமூகத்தின் பயிர் - பிரபஞ்சத்தின உயிர் ஞான சத்தியங்களை உயிருக்கள் வாங்கி அதைத் தன் தினசரி வாழ்க்கையாக அமைத்துக்கொண்டவர்கள். இந்த உயிர் ஞான சத்தியங்களை தான் வாழ்ந்து உலகிற்கும் பரப்புபவர்கள் மிதுதான் சமூக விரோத கும்பல் தொடர்ந்து தன் தாக்குதலை நடத்தி அவர்களை அடியொடு அழிக்கின்றது. குண்டு வெடிக்கப்பட்டு, இரத்தம் சிந்தி, ஒருவரை ஒரு வெட்டி மடிந்தால்தான் போர், அதுதான் போர் என்று நீங்கள் நம்பிக்கொண்டிருந்தீர்களானால் அது பொய்! உள்ளுக்குள் பரமசிவக்ஞான சத்தியத்தை வாழ்ந்து அதை உலகிற்கு சொல்பவர்களை வாழவிடாமல், ஒரு இனத்திற்குள் உட்சிதைவு செய்து அவர்களை அடியோடு அழிக்க நினைப்பதும் போர்தான்! இந்த ராட்சதர்கள், ரௌடிகள் எப்போழுதும் ஒன்று சேர்ந்து ஒரே கட்சியாக இருப்பார்கள். ஆனால் சைவத்தை வாழுகின்ற, ஆன்மீகத்தை வாழுகின்ற இந்துக்கள் ஒன்றிணைவதற்கு இவர்கள் ஒன்று சேர்ந்து இந்த பரமசிவக்ஞான சத்தியங்களை ஒன்றாக வாங்கிக்கொள்வதற்கு இந்த இராட்சதர்கள் அனுமதித்ததே இல்லை! இந்துக்கள் ஒன்றாக இணைந்தாள் அவர்களுக்குள் ஒரு திங்-டாங்க் நிகழ அனுமதிப்பதே இல்லை! நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், மூலலிங்கத்தை அமைக்கும்பொழுமே அணிவேறைப் பிடிங்கி எரிந்துவிடுவது! மூல லிங்கம் வேறு - மூலவர் லிங்கம் வேறு....