02 டிசம்பர் 2017 அன்னதானம்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

அன்னதானம் (Annadhan)

வருடம்  : 2017

நாள் :02 டிசம்பர் 2017

நாட்கள் : தினந்தோறும் நடைபெறும் சேவை

நிகழ்வு : திருக்கார்த்திகை தீபம் - சிறப்பு அன்னதானம்

நடைபெற்ற இடம் : நித்யானந்தபீடம், திருவண்ணாமலை

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : நித்யானந்தபீடம், திருவண்ணாமலை

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : 50000 பக்தர்கள்

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் : நித்யானந்தபீடம், திருவண்ணாமலை (Kailaasa in Thiruvannaalai)

நிகழ்வினை நடத்தியவர் : சனாதன இந்து தர்மத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்

நிகழ்வின் விவரனை : திருவண்ணாமலையில் வருடம் தோறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றார்கள். அவ்வாறு வருகை தரும் பக்தர்களுக்கு திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்த பீடம் அன்னதானம் வழங்கும் சேவையை தொடர்ந்து செய்து வருகின்றது. அவ்வாறு 2017 ஆம் வருடம் அண்ணாமலையானை வலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க உள்ளதை மக்களுக்கு தெரிவிக்கும் செய்தியை தினபூமி நாளிதழ் டிசம்பர் மாதம் 2 தேதி வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வினை நித்யானந்த தியானபீடம், பெங்களூரு ஆதினமும் ஒருங்கிணைந்து செயல்படுத்துகிறது. ஈசனின் ஆணைக்கினங்க அவரை வலம் வரும் பக்தர்களுக்கு வருடத்தின் எல்லா நாட்களும், எல்லா வேளையும், எல்லோருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.


படங்கள்



அன்னதானம்_சாஸ்திர பிரமாணம்

"அன்னம் பஹூ குருவீத - தைத்திரிய உபநிடதம் அன்னத்தை அபரிமிதமாக உற்பத்தி செய்து, சேகரித்து, பகிர்ந்தளித்து வாழ வேண்டும் என்று தைத்திரிய உபநிடதம் கற்றுத் தருகிறது.

ததஸ்வான்னம் ததஸ்வான்னம் ததஸ்வான்னம் யுதிஷ்திரா 'அன்னம் அளி! அன்னம் அளி! அன்னம் அளி! யுதிஷ்திரா' - பகவான் ஶீ கிருஷ்ணர் யுதிஷ்திரனுக்கு தர்மத்தை போதித்தபொழுது தந்த அறிவுரை. ஆதாரம்: பவிஷ்யபுராணம்

குருக்ஷேத்திர போர் முடிந்ததும் யுதிஷ்திரர் தமது தம்பிமார்களுடன் அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்ம பிதாமஹரை சந்தித்து தர்மத்தை பற்றி உரையாற்றி, அவருடைய உபதேசம் பெற்றார். பீஷ்மர் அவருக்கு அளித்த உபதேசம் 25,000 ஸ்லோகங்களை கொண்டதாக இரண்டு பர்வங்களில் ( சாந்தி பர்வம், அனுசாஸன பர்வம்) வழங்கப்பட்டது. இதன் பிறகு இச்சாமிருத்யுவான பீஷ்மர் தம் உயிரை விடுபடுத்திக் கொண்டார் (தன் விருப்படி உயிர் பிரியும் நேரத்தை தீர்மானிக்கும் ஆற்றல்). பீர்மர் இறந்த துக்கம் தாளாமல் துயறுற்ற யுதிஷ்திரனுக்கு அஸ்வமேதயாகம் செய்ய சொல்லி அறிவுரை வழங்கினார் பகவான் ஶீ கிருஷ்ணர். யுதிஷ்திரர் தமக்கு தர்மத்தை உபதேசம் செய்ய வேண்டும் என்று பகவானிடம் பணிந்து கேட்டுக் கொண்டார். 1300 ஸ்லோகங்கள் கொண்ட வைஸ்ணவதர்மத்தை உபதேசித்தார் பகவான். இந்த பர்வத்தின் இறுதியில் யுதிஷ்திரர் பீஷ்மர் வழங்கிய உபதேசங்களின் சாரத்தையும் உபதேசம் செய்யுமாறு வேண்டினார். அப்போது பகவான் ஶீ கிருஷ்ணர் ' அன்னேன தார்யதே சர்வம் ஜகதேதாத்சராசரம்...அன்னதஹ ப்ராணதோ லோகே ப்ராணதஹ சர்வதோ பவேத். தஸ்மாத்தன்னம் விசேஷேன்ன தாத்தவ்யம் பூதிமிச்சாத்தா' என்றுரைத்தார்.

உலகிலுள்ள படைப்புகள் (உயிருள்ள மற்றும் உயிரற்ற) அனைத்தும் அன்னதாலேயே ஜீவிக்கின்றன. அன்னம் அளிப்பவர் ஜீவர்களுக்கு பிராணனை அளிக்கின்றார், அதனால் அவர் அனைத்தும் அளிப்பவராகிறார். அதனால் இவ்வுலகிலும் இதற்கு அப்பால் உள்ள உலகங்களிலும் மேன்மை பெற விழைபவர் சிறப்பாக அன்னம் வழங்க வேண்டும் என்று பீர்மர் வழங்கிய உபதேசத்தை சாரமாக கிருஷ்ண பரமாத்மா வழங்கினார்.

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் கைலாஸா'வின் நித்யானந்த அன்னாலயா மூலம் அனைத்து கைலாஸாவிலும் அன்னதான சேவை செய்து வருகிறார். வருடத்தின் அனைத்து நாட்களிலும் பரமசிவ பரம்பொருள் அருளிய பாக சாஸ்திரத்தின்படி இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்த பொருட்களால் சுத்த சாத்வீக உணவை அனைத்து வேளையும் அன்னமாக வழங்குகிறார். இயற்கை சீற்றங்களின்போது, திருவிழாக்கள் சமயத்தில் பகவானின் அருளாசியுடன் பக்தர்கள் அன்னதானம் வழங்குவதை சிறப்பாக செய்யப்படுகிறார்கள்."