அருணகிரிநாத சுவாமிகளின் அருளுரை

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

Description

மதுரை ஆதீனத்தில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் ஐந்து நாள் ஞானசம்பந்தர் குருபூஜை திருவிழா இந்த வருடம் ஜூன் 1 லிருந்து 5 - 2012 வரை வெகுசிறப்பாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 293 வது குருமஹாசன்னிதனமாக முடிசூட்டப்பட்டிருக்கும் ஸ்ரீ ல ஸ்ரீ பரமஹம்ச நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் ஞானசம்பந்தர் குருபூஜை திருவிழாவின் ஐந்தாம் நாள் 292வது குருமஹாசன்னிதனமாக திகழும் ஸ்ரீ ல ஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகளுக்கு கனகாபிஷேகம் செய்து வைத்தார். மேலும் அன்று மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில் இருந்து.. மருது பாண்டியர்களால் மதுரை ஆதீனத்திற்கு நான்கொடையாக வழங்கபட்ட வெள்ளி பல்லக்கில் ஆதீனத்தின் குருமூர்லவரன் திருஞானசம்பந்த பெருமான் ஊர்கலமாக ஆதீனத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவருடன் 63 நாயன்மார்களும் ஊர்கலமாக அழைத்து வரப்பட்டார்கள். இந்த பாரம்பரிய திருவிழாவில் நித்யானந்த தியானபீட பக்தர்களும் மதுரை ஆதீன அன்பர்களுமாக ஆயிரத்திற்கும், மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அன்று வந்திருந்த அத்துனை மக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Link to Video: